Saturday, 22 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் 04

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾


உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்!

========================

ஹஜ்ஜின் வகைகள்!

ஹஜ் கடமையை மூன்று வகையாக
நிறைவேற்றலாம்.
1.ஹஜ்ஜை மட்டும்
நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல்.
(இது இப்ராத் எனப்படும்)
2.ஹஜ்ஜுடன் உம்ரா என்னும்
கடமையையும் சேர்த்து ஒரே
இஹ்ராமில் நிறைவேற்றுதல்.(இது
கிரான் எனப்படும்)
3.முதலில் உம்ராவுக்காக இஹ்ராம்
அணிந்து அதை
நிறைவேற்றியவுடன் மக்காவில்
தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம்
வந்ததும், மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை
நிறைவேற்றுதல்.(இது தமத்துவ் எனப்படும்)

இஹ்ராம் உடையுடுத்திய ஏந்தலர்கள்!

ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித
மக்காவுக்கு வரும்போது
ஒவ்வொரு வழியிலும் ஒரு எல்லையை நபி صلى الله عليه وسلم  அவர்கள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த எல்லைக்கு ‘மீக்காத்” என்று பெயர்.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வருபவர்கள், இந்த எல்லையை
அடையும் போது ‘இஹ்ராம்” உடை
அணிந்து தான் நுழைய வேண்டும். ஆகாய மார்க்கமாக வருபவர்கள்,
‘மீக்காத்” எல்லையைக் கடந்தே
வரவேண்டியிருப்பதால், புறப்படும்
இடத்திலிருந்தே குளித்து இஹ்ராம் அணிந்து வந்து
விடுகின்றனர்.
கடல் மார்க்கமாக, கப்பலில் வருபவர்கள், ‘மீக்காத்” எல்லையை
அடையும் போது, கப்பல் நிறுத்தப்
பட்டு அறிவிப்பு செய்யப் படுகின்றது. ஹாஜிகள் கப்பலிலேயே குளித்து இஹ்ராம் உடை அணிந்து தயாராகி
விடுகின்றனர்.
தரை மார்க்கமாக வருபவர்கள், அவரவர்
வரும் வழியில் உள்ள ‘மீக்காத்” எல்லையில் குளித்து இஹ்ராம்
அணிய வசதியாக, ஒவ்வொரு ‘மீக்காத்” எல்லையிலும், பல
நூற்றுக் கணக்கில், நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கட்டப் பட்டு,
வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
உள் நாட்டிலிருந்தும், அண்டை
நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜின் நாட்களுக்கு
முன்னதாகவே புனித
மக்காவுக்கு வரும் ஹாஜிகள் இந்த
எல்லையை அடைந்ததும் குளித்து
இஹ்ராம் உடை தரித்து, முதலில்
உம்ராச் செய்வதற்கு
தயாராகின்றனர்.
எல்லையைக் கடந்து வரும் எல்லோரும் இது வரை
அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைக்
களைந்து ‘இஹ்ராம்” என்னும் இரு வெண் துணிகளை ஆண்கள்
அணிந்துக் கொள்கின்றனர். (பெண்கள்
அவரவர் வழக்கமாக உடுத்தும் உடைகளை உடுத்திக் கொள்ளலாம்)

நபி صلى الله عليه وسلم  அவர்கள் இஹ்ராமுக்காக
தையல் இல்லாத ஆடையை
அணிந்ததை நான் பார்த்துள்ளேன்.
மேலும் (இஹ்ராமுக்கு முன்னால்)
குளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைத்
பின் தாபித் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (760)

இஹ்ராம் உடையை
அணிந்தவர்களாக
இவ்வுலக இன்பங்களைத்
துறந்தவர்களாக
நித்திய வாழ்க்கையை
நினைத்தவர்களாக
இறை பக்தியை இதயத்தில்
தேக்கியவர்களாக
இறைவனின் அருளுக்கு
ஏங்கியவர்களாக
ஈருலக நற்பேற்றுக்கு
இறைஞ்சியவர்களாக
இறைவனிடம் இரு கரம் ஏந்தியவர்களாக
புறப்பட்டு விட்டனர், புண்ணிய
சீலர்கள், புனித மக்காவை நோக்கி!

மீள ஒலிக்கிறது ‘தல்பிய்யா”
முழக்கம், முன்னை விட பன்மடங்கு
உயர்ந்த தொணியில்.
லப்பைக் அல்லாஹும்ம
லப்பைக்லப்பைக் லா ஷரீக்க லக
லப்பைக்இன்னல் ஹம்த வந் நிஃமத்த லக வல் முல்க்
லா ஷரீக்க லக்.
‘என்னிடம் ஜிப்ரீல் عليه السلام வந்து
தல்பிய்யாவின் போதும், இஹ்ராம்
கட்டும் போதும், உரத்த குரலில்
கூறுமாறு என் தோழர்களுக்குக்
கட்டளையிடக் கூறினார்கள்” என நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறினார்கள்.
 ஸாயிப் رضي الله عنه
 ஆதாரம்: திர்மிதி (759)

மக்காவை நோக்கி வரும் மாபெரும்
 சாலைகளில் வாகனங்கள் அசுர
 வேகத்தில் பறக்கின்றன.
வாகனங்களின் வேகத்தை விட,
வந்திருப்போரின் இதயத்தின் வேகம்
இப்போது அதிகம்.
மக்காவை நோக்கி வரும் அனைத்து
பிரதான சாலைகளிலும் மக்கா நகர எல்லைக்கு
 வெளியே
பரிசோதனை மையங்கள் அமைக்கப்
பட்டுள்ளன. அனைத்து
வாகனங்களும் நிறுத்தப் பட்டு
அனைவரும் ஹஜ்ஜை
நிறைவேற்றுவதற்கு முறையான அனுமதி
 பெற்றுள்ளனரா? என
பரிசோதிக்கப் படுகின்றனர்.
சமீப காலம் வரை உள்
நாட்டிலிருந்தும் அண்டை
நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக
 ஹஜ்ஜுக்கு வருபவர்கள்
அவரவர் தம் சொந்த வாகனங்களில்
வந்து கொண்டிருந்தனர். இதனால்
மக்கா நகரின் சாலைகளில் போக்கு
வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
மக்கா நகரப் போக்கு வரத்துத் துறை
 சகல வசதிகளையும்
செய்திருந்தாலும் கூட,
பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே
 சமயத்தில் மக்காவின் உள்ளே நுழைந்தால்
 கட்டுப் படுத்துவது
கடினமானக் காரியம் அல்லவா?
எனவே சில ஆண்டுகளுக்கு
முன்பு, சவூதி அரசு ஒரு புதிய ஏற்பாட்டை
 நடை முறைக்குக்
கொண்டு வந்தது. அதன்படி மக்கா
நகர எல்லைக்கு வெளியே ஒவ்வொரு
 வழியிலும் ‘கார்
நிறுத்துமிடங்கள்” அமைத்து சிறிய
 வாகனங்கள் அனைத்தும்
இங்கேயே நிறுத்திவிட ஏற்பாடு
செய்யப் பட்டது.

இந்தக் கார் நிறுத்துமிடங்களில்
அனைத்து சிறிய வாகனங்களும்
வரிசை வரிசையாக ஒரு ஒழுங்கு
முறையுடன் நிறுத்தப் பட்டு,
உரிமையாளர்களுக்கு அடையாள
அட்டை வழங்கப் படுகின்றது.
ஹஜ்ஜின் அனைத்து
செயல்களையும் முடித்து விட்டு
இங்கு வந்து, தமது அடையாள
அட்டையைக் காண்பித்து
உரிமையாளர்கள் தங்கள்
வாகனங்களை எடுத்துச் செல்ல
வேண்டும்.
இந்தத் தீவுத் திடல் முழுவதும்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கார்கள் மயம். உலகின் அனைத்து
நாட்டுத் தயாரிப்புக் கார்களும்,
அனைத்து மாடல்களும், இங்கே
அணிவகுத்து நிறுத்தப்
பட்டிருக்கும் அழகே அழகு.
இந்த இடத்திற்கு அப்பால், பெரிய
வாகனங்கள் பேருந்துகள் மட்டுமே
அனுமதிக்கப்படும். சிறிய
வாகனங்களில் வந்து  தங்களது
வாகனங்களை இங்கே
நிறுத்தியவர்கள்  இங்கிருந்து
புறப்படும் அரசுப் பேருந்துகளில்
மக்காவை நோக்கிப்
பயணிக்கின்றனர்.
மீண்டும்
தொடங்குகிறது பயணம்!
மீள ஒலிக்கிறது
 தல்பிய்யா முழக்கம்!
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லாஷரீக்க லக லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல்
முல்க்
லா ஷரீக்க லக்.

இன்ஷா அல்லாஹ் இன்னும்  தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 22-07-2017

No comments:

Post a Comment