Monday, 24 July 2017

சுலைமான் நபி வரலாறு தொடர் - 3

அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக போர் தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி, 'அரசர்கள் ஒரு நகரத்தினுள் படையெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்' என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.

அவள் பல பரிசுப் பொருட்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு அனுப்பினாள். ஆனால் அவர்கள் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்களை நேரில் சந்திக்க புறப்பட்டாள்.

==அரசியின் அரியாசனம்==

பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிப்பட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர்? என்று சுலைமான் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
ஜின்களில் பலம் பொருந்திய 'இப்ரித்' அதற்கு முன்வந்தது. நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன் என்று கூறியது.

ஆனால் இறைவேதத்தின் ஞானத்தை பெற்றிருந்த ஒருவர், உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள் அதை உங்களிடம் கொண்டு வருவேன் என்று கூறினார்.

அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் சந்தோசமடைந்தார்கள். அதனால் அவர்கள் பெருமை கொள்ளவில்லை.

இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும். நான் நன்றியுடன் இருக்கிறேனா அல்லது மாறு செய்கிறேனா என்று இறைவன் என்னை சோதிக்கிறான். எவன் ஒருவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே நன்மையாகும். எவன் மாறு செய்கின்றானோ அது அவனுக்கே இழப்பாகும். ஏனென்றால் என் இறைவன் எவரிடத்தும் தேவைப்படாதவன், கண்ணியம் மிக்கவன் என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.

No comments:

Post a Comment