السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -05
========================
மக்கத் திரு நகரில்.
‘இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத்
திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது” என்னும் ‘உம்முல் குரா” பல்கலைக் கழக அலங்கார வளைவு,
ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.
எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில்
இயம்பினானோ!
இறைவனை வணங்க, உலகின் முதல்
இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!
எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி صلى الله عليه وسلم
அவர்கள் பிறந்தார்களோ!
இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!
அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து
விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப்
படுகின்றன. கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக்
கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த
மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது
பாங்கொலி.
கணக்கிலடங்கா பள்ளிகளில்
காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும்
எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல்
செவிகளில் ஓர் உணர்வு. ‘பாலைகளில்,
காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில்,
சோலைகளில், தீவுகளில்,” இந்தப் பாங்கோசைக்
கேட்காத இடமில்லை இப்பாருலகில்.
இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு
மட்டுமே உரிய தனிச் சிறப்பு. மொழி
தெரிந்தவர் தெரியாதவர்
பொருள் புரிந்தவர் புரியாதவர்
எல்லோருக்கும் தெரியும், இது ‘அல்லாஹ்வை
வணங்க அனைவரும் வாருங்கள்” என விடுக்கும்
அழைப்பு.
நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை.
நானிலமெங்கும் உள்ள
பள்ளிவாசல்களில், நாள் தவறாமல்
நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள்
ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக்
கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு
மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும்.
ஒவ்வொரு தொழுகைக்கும்
அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம்
முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக்
கொண்டே இருக்கும்.
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்!
புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல்
வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன்
நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம்
பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப்
பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள்
தொழுவதற்குச் சமம்.திருக் கஃபாவை
உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால
கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு
வந்திருக்கிறது.
இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால்,
மிகப்பிரம்மாண்டமான அளவில் விரிவு
படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன்,
அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ
முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத்
தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப்
பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை
அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும்
பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள்
எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும்
தூய்மைப் படுத்திக் கொண்டே
இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் மையப்
பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது
தான் கஃபா!
ஃபா என்னும் முதல் இறையாலயம்!
(இறை வணக்கத்திற்கென)
மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல்
ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில்
உள்ளதுதான், அது பரக்கத்து (பாக்கியம்)
மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும்
நேர்வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 3:96)
கஃபா. சொல்லுக்கடங்காத
புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க,
உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட
இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120
கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம்
ஆண்டுகளாக அத்தனை புயல்களையும்
மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால்
அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும்,
அல்லாஹ்வின் அருள் இல்லம். அந்த
ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும்,
பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை
நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)
ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக
இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14
நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள்
நடந்த பின்பும், அது இன்றளவும்
அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை
அழிக்க வந்த போது ‘அபாபீல்” என்னும்
சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை
அழகாக எடுத்தியம்புகின்றது.
அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும்,
எதிரிகளிடமிருந்தும், இயற்கையின்
தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர்
அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக்
கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள்
காண்கின்றனர். களிப் பேருவகைக்
கொள்கின்றனர். கற்பனையில் கூடக்
கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல
விரிகின்றன.
இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர்
உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில்
சொல்வதானால், ‘உச்சியைப் பிடித்து
ஒரு உலுக்கு உலுக்குகிறது.
“இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க
இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப்
பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு
வதற்கென்றே தனியாக ஒரு
தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு நாள்: 26-07-2017
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -05
========================
மக்கத் திரு நகரில்.
‘இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத்
திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது” என்னும் ‘உம்முல் குரா” பல்கலைக் கழக அலங்கார வளைவு,
ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.
எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில்
இயம்பினானோ!
இறைவனை வணங்க, உலகின் முதல்
இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!
எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி صلى الله عليه وسلم
அவர்கள் பிறந்தார்களோ!
இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!
அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து
விட்டனர். மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப்
படுகின்றன. கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக்
கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த
மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது
பாங்கொலி.
கணக்கிலடங்கா பள்ளிகளில்
காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும்
எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல்
செவிகளில் ஓர் உணர்வு. ‘பாலைகளில்,
காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில்,
சோலைகளில், தீவுகளில்,” இந்தப் பாங்கோசைக்
கேட்காத இடமில்லை இப்பாருலகில்.
இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு
மட்டுமே உரிய தனிச் சிறப்பு. மொழி
தெரிந்தவர் தெரியாதவர்
பொருள் புரிந்தவர் புரியாதவர்
எல்லோருக்கும் தெரியும், இது ‘அல்லாஹ்வை
வணங்க அனைவரும் வாருங்கள்” என விடுக்கும்
அழைப்பு.
நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை.
நானிலமெங்கும் உள்ள
பள்ளிவாசல்களில், நாள் தவறாமல்
நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள்
ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக்
கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு
மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும்.
ஒவ்வொரு தொழுகைக்கும்
அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம்
முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக்
கொண்டே இருக்கும்.
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்!
புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே
கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல்
வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன்
நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம்
பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப்
பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள்
தொழுவதற்குச் சமம்.திருக் கஃபாவை
உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால
கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு
வந்திருக்கிறது.
இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால்,
மிகப்பிரம்மாண்டமான அளவில் விரிவு
படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன்,
அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ
முடியும். கட்டிடக் கலையின் சகல விதமானத்
தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப்
பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை
அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும்
பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள்
எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும்
தூய்மைப் படுத்திக் கொண்டே
இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் மையப்
பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது
தான் கஃபா!
ஃபா என்னும் முதல் இறையாலயம்!
(இறை வணக்கத்திற்கென)
மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல்
ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில்
உள்ளதுதான், அது பரக்கத்து (பாக்கியம்)
மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும்
நேர்வழியாகவும் இருக்கிறது. (திருக் குர்ஆன் 3:96)
கஃபா. சொல்லுக்கடங்காத
புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க,
உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட
இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120
கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம்
ஆண்டுகளாக அத்தனை புயல்களையும்
மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால்
அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும்,
அல்லாஹ்வின் அருள் இல்லம். அந்த
ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும்,
பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை
நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 2:125)
ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக
இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14
நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள்
நடந்த பின்பும், அது இன்றளவும்
அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை
அழிக்க வந்த போது ‘அபாபீல்” என்னும்
சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை
அழகாக எடுத்தியம்புகின்றது.
அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும்,
எதிரிகளிடமிருந்தும், இயற்கையின்
தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான். கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர்
அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக்
கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள்
காண்கின்றனர். களிப் பேருவகைக்
கொள்கின்றனர். கற்பனையில் கூடக்
கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல
விரிகின்றன.
இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது.
மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர்
உணர்வு. பன்னூலாசிரியர் ஆசுஆ அப்துற்றஹீம் அவர்கள் பாணியில்
சொல்வதானால், ‘உச்சியைப் பிடித்து
ஒரு உலுக்கு உலுக்குகிறது.
“இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க
இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப்
பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு
வதற்கென்றே தனியாக ஒரு
தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங் குடி.
பதிவு நாள்: 26-07-2017
No comments:
Post a Comment