Sunday, 16 July 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள்-19📓

🎯காளைக் கன்றை வணங்கிய இஸ்ரவேலர்


📖அல்குர்ஆன்
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ

"என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கு இழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்! இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*

திருக்குர்ஆன்  2:54

 🔘இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக *"தூர்"* மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரிஎன்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி *காளைக் கன்றின் சிற்பத்தை உருவாக்கினான்.

🔘 மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. *"இது தான் கடவுள்; மூஸா வழி மாறிச் சென்று விட்டார்"* எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். *(பார்க்க திருக்குர்ஆன் 20:96)

🔘 அதிலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

🔘 மூஸா நபி அவர்கள் அதைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள். *(பார்க்க திருக்குர்ஆன் 20:89, 20:97)*

🔘 நமது அறிவுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை நம்மிடம் ஒருவர் செய்து காட்டி நம்மை ஏமாற்ற முயலலாம். அது போன்ற நேரங்களில் அதை மட்டும் அடிப்படையாக வைத்து அவருக்கு அனைத்தும் இயலும் என்று நாம் நம்பி விடக் கூடாது.

🔘 இதில் ஏதோ தந்திரம் உள்ளது எனப் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஒன்றிரண்டு செயல்களைச் செய்பவர் மற்ற அனைத்து விஷயங்களிலும் நம்மைப் போலவே மனிதராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

🔘 உண்ணுகிறார்; பருகுகிறார்; மல ஜலம் கழிக்கிறார்; நோய் வாய்ப்படுகிறார்; முதுமையடைகிறார் என்பன போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு அவரது பலவீனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
20:97 வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய பாடம் இது தான்.

🚫(பார்க்க: திருக்குர்ஆன் 2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 17-07-2017

No comments:

Post a Comment