Sunday, 16 July 2017

*சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு​ - 3


*சுன்னாவை பாதுகாப்பதில்   சஹாபாக்களின் பங்கு​*

*PART 3*

*அல்குர்ஆனும் அல்ஹதீஸும் வாழ்வின் அடிப்படைகள் என்ற வகையில் இவ்விரண்டும் முழுவடிவில் நபி (ஸல்) அவர்கள் காலத்திலே பாதுகாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப் பட்டது. மதீனா நகரம் “தாருல் ஹிஜ்ரா” என்று அழைக்கப்பட்டது போலவே  “தாருஸ் ஸூன்னா” சுன்னா நடைமுறைப்படுத்தப்பட்ட இடம் எனவும் சஹாபாக்களால் அழைக்கப் பட்டது.(நூல்: புகாரி 7323)*

*நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அவர்களது மறைவுக்குப் பின்னும் சுன்னாவை எழுதி பாதுகாத்தது போல் அந்த சுன்னாவை மக்களிடத்தில் எத்திவைப்பதிலும் கூடுதல் கவனமும் அச்சமும் கொண்டார்கள்.*

*நபியவர்களின் வார்த்தைகளை அறிவிக் கும் போது கூடுதல் குறைகள் ஏற்படுமாயின் அவை மார்க்கத்தை மாற்றிவிடக்கூடியவை என்று மிகவும் அஞ்சி தங்களுடைய பொறுப் பை கவனமாக மேற்கொண்டார்கள்.*

*அல்லாஹ்வின் தூதரின் செய்திகளை எத்திவைப்பது அருளுக்குரிய காரியம் என்பதை புரிந்து செயல்பட்டார்கள். அவர்களது பேணு தலையும் பற்றையும் பின்வருமாறு விளங்கிக் கொள்ளமுடியும்.நபி (ஸல்) அவர்களின் மறை வுக்குப் பின் ஹதீஸ்களை மக்களிடையில் அறி விப்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் நடந்து கொண்டார்கள்.*

*எனது பேச்சை (ஹதீஸை) செவியுற்று மனனமிட்டு பேணிக் காத்து மற்றவருக்கு எத்தி வைக்கின்ற மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) (நூல்: இப்னு மாஜா 230 திர்மிதி 2658)*

*என்னைப் பற்றிய ஒரு செய்தியையாவது எத்திவைத்து விடுங்கள் என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அம்ரு(ரலி), நூல்: புகாரி)*

*அல்லாஹ்வின் அருளுக்குரிய இப்பணி யை மேற்கொள்வதில் சஹாபாக்கள் தங்களால் முடிந்தவரை ஈடுபட்டார்கள். தாங்கள் கற்றுக் கொண்ட  ஹதீஸ்களை எத்திவைப்பதிலும் பள்ளிவாசல்களில் போதனைகள் செய்து வகுப்புக்கள் நடாத்துவதிலும்  பல பகுதிகளுக் கும் பயணங்கள் மேற்கொண்டும் தங்களை விட கூடு தலாக ஹதீஸ்களை தெரிந்து வைத்தி ருக்கின்றவர்களை கண்டறிந்து ஹதீஸ்களை பெற்றுக் கொள்வதிலும் நபித்தோழர்கள் கூடு தல் கவனம் செலுத்தினார்கள்.*

*ஜாபிர் (ரலி) அவர்கள் தனக்கு தெரியாத ஒரு ஹதீஸை ஷாம் பிரதேசத்திலுள்ள ஒரு நபித்தோழர் தெரிந்து வைத்துள்ளார் என்பதை அறிந்து அந்த ஹதீஸைப் பெற்றுக் கொள்வ தற்கு ஒரு மாதகால பிரயாணத்தை மேற் கொண்டு அந்த ஹதீஸை பெற்றுக் கொண்டு வந்தார்கள். (நூல்: அதபுல் முப்ரத்)*

*அபூ அய்யூபில் அன்ஸாரி (ரலி) அவர்கள் ஒரு ஹதீஸை பெற்றுக் கொள்வதற்காக மதீனாவி லிருந்து எகிப்துக்குப் பயண மானார்கள். (நூல்: பைஹகீ)*

*அப்துல்லாஹ் இப்னு புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்:*

*மதீனா வைச் சேர்ந்த நபித் தோழர்களில் ஒருவர் எகிப்திலுள்ள புழாலாஹ் இப்னு உபைத் (ரலி) என்ற நபித் தோழரை சந்திக்க பயணமானார். அந்நபித் தோழரை கண்டு மகிழ்ந்த புழாலாஹ் (ரலி) அவர்கள் அவ ரை அன்புடன் வரவேற்றார். “நான் உங்களை சந்திப்பதற்காக இங்கு வரவில்லை. நானும் நீங்களும் நபி(ஸல்) அவர்கள் சொல்ல ஒரு ஹதீஸை செவியுற்றோம். அது பற்றிய அறிவு உங்களிடம் உள்ளது அதனை தெரிந்து கொண்டு போகவே வந்தேன்” என அந்நபித் தோழர் கூறினார். (நூல்: தாரமி, பாகம்.01 பக்கம் 468.)*

*இன்ஷா அல்லாஹ் தொடரும்......*

No comments:

Post a Comment