*🎯ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?*
*📖அல்குர்ஆன்
*وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ*
*"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.*
*திருக்குர்ஆன் 2:35*
*🔘திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121* ஆகிய வசனங்களில் *"ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்"* என்று கூறப்பட்டுள்ளது.
🔘 இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. *"சொர்க்கம்"* என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் *"ஜன்னத்"* என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
🔘 மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது. இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது.
🔘 திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதம் நபி சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
🔘 ஆதம் நபி பூமியில் படைக்கப்பட்டதாகத் *திருக்குர்ஆன் (2:30)* கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்;
🔘 அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந் நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 31-05-2017
*📖அல்குர்ஆன்
*وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ*
*"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.*
*திருக்குர்ஆன் 2:35*
*🔘திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121* ஆகிய வசனங்களில் *"ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்"* என்று கூறப்பட்டுள்ளது.
🔘 இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. *"சொர்க்கம்"* என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் *"ஜன்னத்"* என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
🔘 மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது. இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது.
🔘 திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதம் நபி சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
🔘 ஆதம் நபி பூமியில் படைக்கப்பட்டதாகத் *திருக்குர்ஆன் (2:30)* கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்;
🔘 அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந் நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: 31-05-2017