Wednesday, 31 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 12📓

*🎯ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?*

*📖அல்குர்ஆன்


*وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ*

*"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.*

*திருக்குர்ஆன்  2:35*

*🔘திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:22, 7:27, 20:121* ஆகிய வசனங்களில் *"ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்"* என்று கூறப்பட்டுள்ளது.

🔘 இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன. *"சொர்க்கம்"* என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் *"ஜன்னத்"* என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

🔘 மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது.  இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் *"ஜன்னத்"* எனக் கூறப்படுகிறது.

🔘 திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆதம் நபி சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.

🔘 ஆதம் நபி பூமியில் படைக்கப்பட்டதாகத் *திருக்குர்ஆன் (2:30)* கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்;

🔘 அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந் நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 31-05-2017

Tuesday, 30 May 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 3🌙

நோன்பு - 03


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

இஸ்லாத்தில் பிரார்த்தனையின் 
முக்கியத்துவமும் ஒழுக்கங்களும்!

========================
சந்தேகமின்றி ஒரு விசுவாசி, எல்லா நிலைகளிலும்
எங்கிருந்த போதிலும்
அவனுடைய இறைவனிடமே
பிரார்த்திக்க வேண்டும். அந்த
தூய்மையான இறைவன் தன்
அடியார்களுக்கு மிக சமீபத்தில்
இருக்கின்றான்.
உயர்வானவனாகிய அல்லாஹ் தன்
திருமறையில் இவ்வாறு
கூறுகின்றான்.
(நபியே!) என் அடியார்கள்
என்னைப்பற்றி உம்மிடம்
கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்,
பிரார்த்தனை செய்பவரின்
பிரார்த்தனைக்கு அவர்
பிரார்த்தித்தால்
விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்)
கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள்
நேர்வழியை அடைவார்கள்"
என்று கூறுவீராக. (அல்குர்ஆன்) 2: 186

இன்னும் உங்களுடைய இரட்சகன்
கூறுகிறான், "நீங்கள் என்னையே
அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்,
நான் உங்களு(டைய
பிரார்த்தனை)க்கு
பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே,
அத்தகையோர் அவர்கள்
இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்". (அல்-குர்ஆன் 40:60)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன்,
சங்கையானவன் அவனிடன்
இருகைகளையும் உயர்த்தினால்
(பிரார்த்தித்தால்)
அவ்விரண்டையும்
வெறுமையாக திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத
விஷயத்தில் எந்த ஒரு
முஸ்லிமாவது பிரார்த்தனை
செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை
கொடுக்காமலில்லை,
1. அவனின் பிரார்த்தனையை
உடன் ஏற்றுக் கொள்கின்றான்.
2. அல்லது (அப்பிரார்த்தனையை
ஏற்றுக் கொள்ளாமல்) அதனுடைய
நன்மையை மறுமைக்காக
சேகரித்து வைக்கின்றான்.
3. அல்லது அப்பிரார்த்தனையைப்
போன்று (அவனுக்கு
நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள்,
அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே
என்றனர். அதற்கு நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
அல்லாஹ்விடம் மிகவும் அதிகம்
இருக்கின்றது எனக்கூறினார்கள்.
ஆகவே வல்ல இறைவன்
அல்லாஹுவிடம் அதிகமதிகம்
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
குறிப்பாக பாவமன்னிப்புத் தேட
வேண்டும். அவன் நமது
பிரார்த்தனைகளை ஏற்று எங்களின் பாவங்களையும்
மன்னிப்பான்.
ஆனாலும், குறிப்பாக இங்கு கூறப்படும் நேரங்கள், நிலைகள்,
இடங்களில் பிரார்த்தனைகளை
அதிகமாக செய்ய வேண்டும்.
அதேபோன்று பிரார்த்தனை
செய்யும் முறைகளைப் பேணி நாமும் பிரார்த்தித்தால்
அல்லாஹ் நம் பிரார்த்தனைகளை
ஏற்றுக்கொள்வான்.

பிரார்த்தனை செய்யும் ஒழுக்கங்கள்.... 

1. தூய மனதோடு பிரார்த்தனை
செய்ய வேண்டும்.
2. பிரர்த்தனையைத் துவங்கும் போதும், முடிக்கும் போதும்
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நபி صلى الله عليه وسلم  அவர்கள் மீது
ஸலவாத்துக் கூறி
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
3. பதில் கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடும்,
உறுதியோடும் பிரார்த்தனை
செய்ய வேண்டும்.
4. அவசியத்தைக்கூறி
பிரார்த்திக்க வேண்டும்.
பிரார்த்தனையில்
அவசரப்படக்கூடாது. (அதாவது
அல்லாஹ்விடம் ஒன்றிரண்டு
முறைகள் பிரார்த்தனை செய்து,
கேட்டது
கிடைக்கவில்லையானால்,
அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை
கொண்டு, பிரார்த்தனையை
விட்டுவிடுவது கூடாது)

5. உள்ளச்சத்தோடு பிரார்த்திக்க
வேண்டும்.
6. சந்தோஷ நேரத்திலும், கஷ்ட
நேரத்திலும் பிரார்த்திக்க
வேண்டும்.
7. அல்லாஹ்வைத் தவிர வேறு
யாரிடமும் பிரார்த்திக்கக்
கூடாது.
8. தன் குடும்பம், பொருள், பிள்ளை
 மற்றும் தனக்கும்
கேடாக பிரார்த்தனை செய்யக் கூடாது.
9. சத்தத்தை மிகவும்
உயர்த்தாமலும் மிகவும்
குறைக்காமலும்
அவ்விரண்டிற்கும் மத்தியில்,
நடு நிலையோடு பிரார்த்தனை
செய்ய வேண்டும்.
10. செய்த பாவத்தை
மனப்பூர்வமாய் ஏற்று, அதற்காக
பிழை பொறுப்புத் தேடி,
அல்லாஹ் அவருக்கு அளித்த
அருட்கொடைகளை உளமாற
ஒப்புக்கொண்டு, அவற்றிற்காக
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த
வேண்டும்.
11. துஆச் செய்யும் போது அளவுக்கு
 மேல் சிரமத்தை
மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
12. தெளிவான உள்ளத்தோடும்
பயபக்தியோடும் அல்லாஹ்வின்
அருள் மீது நம்பிக்கை வைத்து, அவனது
 தண்டனையிலிருந்து
பயந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

13. மற்றவர்களின் பொருளை எடுத்து
 அல்லது அவர்களுக்கு
அநியாயம் செய்திருந்தால் அந்தப்
பொருட்களை உரியவர்களிடம்
திருப்பிக் கொடுத்து
அவர்களிடம் மன்னிப்புக்
கேட்டபின் அப்பாவத்திற்காக
தவ்பாச் செய்ய வேண்டும்.
14. (பிரார்த்திற்கும்
ஒவ்வொன்றையும்) மும்மூன்று
தடவை பிரார்த்திக்க வேண்டும்.
15. கிப்லாவை முன்னோக்க
வேண்டும்.
16. பிரார்த்தனை
செய்யும்போது கைகளை
உயர்த்த வேண்டும்.
17. முடியுமாக இருந்தால்
துஆச் செய்வதற்கு முன் ஒழுச்
செய்து கொள்ள வேண்டும்.
18. ஒழுக்கத்துடன்
அல்லாஹ்விடம் பிரார்த்தனை
செய்யவேண்டும். "துஆ" ஒரு
வணக்கம் என்பதாக நபி صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள்.
19. முதலில் தனக்காக
பிரார்த்தித்து பின்பு
மற்றவர்களுக்காக பிரார்த்திக்க
வேண்டும். (இறைவா! எனது
பாவங்களையும், இன்னாருடைய
பாவங்களையும் மன்னிப்பாயாக
என்று கேட்பது போல்).
20. அல்லாஹ்வின் அழகிய
திருநாமங்கள் மற்றும்
அவனுடைய உயர்ந்த பண்புகளைக்
கொண்டு அல்லது தான் செய்த
நல் அமல்களைக் கொண்டு
அல்லது உயிரோடு
வாழக்கூடிய நல்லவர்களிடம்
(தனக்காக) பிரார்த்தனை
செய்யும்படி கேட்டு
(இஸ்லாத்தில் வஸீலா
தேடுவதற்கு அனுமதிக்கப்பட்ட
இம்மூன்று வகைகளில் ஒன்றைக்
கொண்டு) அல்லாஹுவிடம்
உதவி (வஸீலா) தேடவேண்டும்.

21. உணவு, குடிபானங்கள்
அணியும் ஆடை இவைகள்
ஹலாலானவைகளாக இருக்க வேண்டும்.
22. பாவமான காரியங்களுக்காக
அல்லது இரத்த உறவுகளை
முறிப்பதற்காக பிரார்த்தனை
செய்யக் கூடாது.
23. பிரார்த்தனை செய்பவர்
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து
 பாவங்களிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக்
கொண்டவராக இருக்க வேண்டும்.

புனித ரமலான் காலங்களில் தங்கள் துஆக்களோடு எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்...

(இன்ஷா அல்லாஹ் தொடரும்... )

தொகுப்பு...

 S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 31-05-2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 2*🌙

நோன்பு - 02

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*ஆன்மீகப் போராட்டம்!*

========================

ஆன்மீக வளர்ச்சிக்கு
சிறப்பானதொரு ஏற்பாட்டை
நிச்சயித்த வாழ்வியல்
நெறியே இஸ்லாம். அதில்
முக்கியமானது ஐந்து நேரத் தொழுகையாகும.
அன்றாட
வாழ்க்கையின் ஒழுக்கம்
தொழுகையின் மூலம்
முறைப்படுத்தப்படுகிறது.

இறைவனுடன் அடியான் தனிப்பட்ட ரீதியில் நடத்தும்
உரையாடலே
தொழுகை.அது,
அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும்
ரப்புல் ஆலமீனுக்கு
சமர்ப்பிக்கப்படும்
புகழுரையாகும்.
‘என்னை நினைவு
கூர்வதற்காக தொழுங்கள்’
என்று புனித துவா
பள்ளத்தாக்கில் வைத்து
அல்லாஹ், மூஸா நபி عليه وسلم
அவர்களுக்கு
கட்டளையிட்டான்.
நிச்சயமாக நான்தான்
அல்லாஹ்!என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே,
என்னையே நீர் வணங்கும்,
என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை
நிலைநிறுத்துவீராக.
(அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வை குறித்த
நினைவு வாழ்க்கையை
வடிவமைக்க இரண்டு
முறையில் குர்ஆன் இந்த
வடிவமைப்பைக் குறித்து கூறுகிறது. முதலாவது,ஒரு மனிதனின் வணக்கங்களை
(இபாதத்) அடிப்படையற்ற
பாரம்பரியங்களில் இருந்து
விடுவித்து
இறைமார்க்கத்தில்
நிறுவுவதும், பொருளாதார
ஒழுக்கத்தை
முறைப்படுத்துவதுமாகும்.
இதுகுறித்து குர்ஆன்
கூறுகிறது:
ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய
தெய்வங்களை விட்டு
விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதை
விட்டுவிடுமாறும்
உம்முடைய தொழுகையா
உம்மை ஏவுகிறது?
(அல்குர்ஆன் 11:87)

இரண்டாவது, அனைத்து தீமைகள், மானக்கேடான
செயல்களை விட்டும்
தடுப்பது.
நிச்சயமாக தொழுகை
(மனிதர்களை)
மானக் கேடானவற்றையும்
தீமையையும் விட்டு
விலக்கும். (அல்குர்ஆன் 29:45)
அதாவது சிலவற்றை
ஏவுவதற்கும், சிலவற்றை
தடுப்பதற்கும் சக்தி பெற்ற
ஆன்மீக அதிகார மையமே
தொழுகை என்பதை
திருக்குர்ஆன் நமக்கு
கற்பிக்கிறது.அதுதான்
திக்ருல்லாஹ்வின்
உட்பொருள்.
மிகவும், வெகு ஜனமயமாக்கப்பட்ட
அன்றாட வாழ்வில் ஐந்து முறை கட்டாயமாகவும், அது
தவிர உபரியாகவும் (நஃபில்) நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ள
தொழுகையை வணக்கங்களின்
தலைமை பீடம் என்று
அழைக்கலாம்.

தொழுகைக்கு அடுத்து நமது வணக்க வழிபாடுகளின்
மிகவும் தீவிரமான
அனுபவமே நோன்பு.
தொழுகையின் சிறப்பு அதன் தொடர்ச்சியான
நிலையாகும்.
உடலையும்,
உள்ளத்தையும்
‘திக்ருல்லாஹ்’வில் கட்டிப் போடும் சக்தி நோன்புக்கு உண்டு.
அந்த சக்தியை
திருக்குர்ஆன் ‘தக்வா’ என்று கூறுகிறது.
குர்ஆன்
இறையச்சமுடையோருக்கு வழிகாட்டும்.

இபாதத் ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள் இறைவனையே
வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்)
உடையோராகலாம்.
 (அல்பகரா:21),

நோன்பு ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.

2:183. ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)
நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
 (அல்பகரா:183).

குர்ஆன், இபாதத், நோன்பு இவை ஒன்றோடு ஒன்று
பிணைந்துள்ளன. மூன்றின் நோக்கமும்
இறையச்சமுடையவர்களை
உருவாக்குவதே.

குர்ஆனுக்கும், இபாதத்திற்கும்
இடையேயான உறவு என்ன?
இபாதத் என்றால் என்ன?
என்பதற்கான விளக்கமே குர்ஆன்.
குர்ஆனின் கூற்றின்படி
வாழ்க்கையை
அல்லாஹ்வுக்கு
அர்ப்பணிப்பதே
இபாதத்.
அல்லாஹ்வின்
முன்னால் சுஜூத் செய்வதும்,
அல்லாஹ்வின் கட்டளைப்படி
ஆதமுக்கு சுஜூது
செய்வதும் அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத். ஜும்ஆ தினமான
வெள்ளிக் கிழமையன்று
வியாபார ஸ்தாபனங்கள்,
விவசாய நிலங்கள், கல்வி சாலைகள், தொழிற் கூடங்களில் இருந்தெல்லாம்
வெளியேறி மஸ்ஜிதுக்கு வருவது அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத்.
அதைப் போலவே
வெள்ளிக்கிழமை ஜும்ஆ
தொழுகையை நிறைவேற்றி விட்டு வியாபார
ஸ்தாபனங்கள், விவசாய
நிலங்கள், கல்வி சாலைகள்,
தொழிற்கூடங்களுக்கு
சென்று மீண்டும் தமது
பணியை தொடருவதும்
அல்லாஹ்விற்கு செய்யும்
இபாதத்தே. வாழ்க்கையின்
அனைத்து பகுதிகளையும்
தொடும் இந்த இபாதத்திற்கு
நம்மை தகுதியுடையவர்களாக
மாற்றுகிறது குர்ஆன்.

 அந்த குர்ஆனை மனிதனுக்கு
அளிப்பதற்காக அல்லாஹ்
தேர்ந்தெடுத்த மாதமே
ரமலான். குர்ஆன்,
வானிலிருந்து பூமிக்கு
அருளப்பட்ட மாதம்
என்பதாலேயே ரமலானில்
நோன்பு நோற்பது
கடமையாக்கப்பட்டுள்ளது.
ரமலான், அல்குர்ஆனின் மாதம்.
ரமலானில் நோன்பு
என்பது குர்ஆனிய
வாழ்க்கையை
பயிற்றுவிப்பதற்கான ஆன்மீக
நிகழ்ச்சி.அதாவது
வாழ்க்கையை முழுவதும்
இபாதத்தாக மாற்றுவதற்கான
பயிற்சி.குர்ஆனின் மூலம், இபாதத்தின் ஊடே, நோன்பின்
மூலம் மனிதன் அடையும்
உன்னத பதவியே ’முத்தக்கீன்
(இறையச்சமுடையவர்)’.

யார் முத்தக்கீன்? என்று கேள்வி
எழுப்பினால், வாழ்க்கையை
அல்லாஹ்விற்கு சமர்ப்பணம்
செய்தவர் என்பதே சரியான விடை. அல்லாஹ்விற்கு
என்னை சமர்ப்பணம் செய்ய நான்
தயார்’ என்பதை ஒரு மாத கால
வாழ்க்கையின் மூலம்
நோன்பாளி
பிரகடனப்படுத்துகிறார்.
அல்லாஹ்வின்
கட்டளைகளுக்கு ஏற்ப வாழ நான் தயார்’ என்பதுதான்
நோன்பின் பிரகடனம்.ஹலால்-
ஹராம்களை தீர்மானிக்கும்
அல்லாஹ்வின் அதிகாரத்தை
நோன்பாளி உயர்த்திப்
பிடிக்கிறார்.அந்த
அதிகாரத்திற்கு ஏற்ப
வாழ்க்கையை
ஒழுங்குப்படுத்துவதே தக்வா.
‘ஃபஜ்ர் முதல் சூரியன்
மறையும் வரை நான் நீர் அருந்தமாட்டேன்! உணவு
சாப்பிடமாட்டேன்! உடலுறவில்
ஈடுபட மாட்டேன்’ – ஏன்? அல்லாஹ் எனக்கு அவற்றை
தடை
செய்திருக்கிறான்.
ஆகையால் நான் அவற்றையெல்லாம்
செய்யமாட்டேன். அல்லாஹ்
தடை செய்தவை மட்டுமே
தடுக்கப்பட்டவை என்பதை
அங்கீகரிக்கும் மனரீதியான
பக்குவமே தக்வா. அல்லாஹ்
அனுமதித்தவை மட்டுமே எனது விருப்பத்திற்குரியவை
என்ற நிலைப்பாடே தக்வா.

சூரியன் மறைந்துவிட்டால்
என்னால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.உணவு
சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற தனது பலகீனத்தை
வெளிப்படுத்தும் முகமாக நோன்பை திறப்பதற்காக
அவசரப்படுகிறானே அவனே
இறைவனின்
விருப்பத்திற்குரியவன்.
அதுவல்லாமல், சூரியன் மறைந்த
பிறகும் எனக்கு நோன்பு
இருப்பதற்கான உடல்
ஆரோக்கியம்
இருக்கிறது.
ஆகையால்,
இன்னும் சற்றும் நேரம் கழித்து
நோன்பை திறக்கலாம் என்ற எண்ணமோ, செய்கையோ தக்வா
அல்ல.
நோன்பு ஆன்மீக ரீதியான
போராட்டம்.ஆன்மீக
போராட்டத்தில் வெற்றி
பெறுவதே இதர
போராட்டங்களிலெல்லாம் வெற்றியை உறுதி
செய்வதற்கான
அத்தியாவசியமான முன் நிபந்தனை.நோன்பு நோற்று
முத்தக்கீனாக மாறியவரின்
செயல்திட்டம், அடுத்த நோன்பு வரை காத்திருப்பது
அல்ல.தொடர் முயற்சியின்
ஊடே வாழ்க்கை என்ற போராட்ட
களத்தில் தீவிரமாக களமிறங்கி
செயலாற்றி
முன்னேறுவதாகும்.

போராட்டக்களத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர்
கொள்கிறோம். சவால்களை
எழுப்புவோரெல்லாம் நம்மை
அடிமைப்படுத்த அழைப்பு
விடுக்கின்றார்கள்.
அப்பொழுதெல்லாம்
‘அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடிபணிய
மாட்டேன்’ என்ற உறுதியை
நமது உள்ளங்களில்
ஏற்படுத்துவதே நோன்பு.

சர்வதேச முதலாளித்துவ
சக்திகள், மத புரோகிதம்,
இந்துத்துவா பாசிச சக்திகள்,
ஊடக ஆதிக்க சக்திகள் நம்மை
அடிமைப்படுத்த
முயற்சிக்கின்றனர். உலகியல்
பேராசைக்கு அடிமையான
நமது உடல் நம்மை
அடிமைப்படுத்த
காத்திருக்கிறது. வணிக நுகர்வு
லாபிகள் ஆடம்பர,
ஆரவாரங்களின் மூலம் நம்மை
அடிபணிய வைக்க
முயற்சிக்கின்றனர். பல்வேறு
சவால்களால் சுற்றி
வளைக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை என்ற
 போராட்டக் களத்தில்
 சஞ்சலமில்லாமல்
உறுதியாக நிற்க வேண்டும் என்ற
 புரட்சிகரமான
லட்சியத்தை நோன்பு
பிரகடனப்படுத்துகிறது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 30-05-2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 1

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 1*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*மன மாற்றம் தரும் மாண்பான நோன்பு!*

========================

இஸ்லாமிய உறவுகளே எம்மிடம்
வந்திருக்கும் ரமலான் மனிதனிடம்
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக
பலவிதமான ஏற்பாடுகளை
செய்திருக்கின்றது, அதனால் இந்த
ரமலான் மாதத்தை அல்லாஹ்வின்
அருளுக்குறிய மாதம் என்கின்றோம்.
உண்மையில்  இந்த ரமலான் மாதத்தை
பயன்படுத்தி வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்தாதவன் ஒரு துர்ப்பாக்கியம்
பிடித்தவனே. எனவே மாற்றத்தை ஏற்காத மனிதனிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த படைத்தவன் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கும்
முன்னேற்பாடுகளை இந்த
கட்டுரையினூடாக நோக்குவோம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு
முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர்
ஆகலாம். 2:183.

*சுவன வாயில்கள் திறக்கப்படுவதும்*
*நரக வாயில்கள்  மூடப்படுவதும்*

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:  ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன,
ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன
(புஹாரி:1899, முஸ்லிம்)

சுவன வாயில்கள்
திறக்கப்படுவதென்றால் அதன் அர்த்தம்
என்ன, அதில் மனித சமூகத்திற்கு என்ன
நன்மை இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்தால்!சுவனத்தின்
சூழாக இருப்பது மனித உள்ளங்கள்
செய்வதை கஷ்டமாக நினைக்கும் வணக்க
வழிபாடுகளே,'
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
சுவனம் (மனிதனால்) வெறுக்கப்பட்ட
(வணக்கங்களை) சூழக்
கொண்டிருக்கின்றது, நரகம் (மனித
உள்ளங்கள்) விரும்பும்
(பாவங்களால்)சூழப்பட்டிருக்கின்றது.
(முஸ்லிம்: 2822)
எனவே சுவன வாயில்கள் திறப்பதன்
மூலம் சுவனத்திற்கு இட்டுச்செல்லும்
வணக்க வழிபாடுகளை செய்வதில்
மனிதனுக்கு வித்தியாசமான ஆசை
பிறந்துவிடுகின்றது. இது சாதாரண
முஸ்லிமின் வாழ்வில்
வெளிப்படையாகவே தென்படும்
ரமலான்  மாதம் வந்துவிட்டால்!

 சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்;
ரமழானுக்கு முன்னுள்ள 11
மாதகாலத்திலும் பர்ளான
தொழுகைகளை தொழாத மனிதன்
ரமலான் மாதம் வந்தவுடன் தொழ
ஆரம்பித்து விடுவதும், ஒரு ரக்அத்
வித்ரையேனும் ஏனைய காலங்களில்
தொழாதவன் இம்மாதத்தில் இரவுத்
தொழுகையில் ஆர்வம் காட்டுவதும்,
சுபஹ் தொழுகைக்கே
விழித்தெழுவதை கஷ்டமாக
நினைக்கும் ஒரு மனிதன் சுபஹுடைய
பாங்குக்கு அரை
மணித்தியாளத்திற்கு முன்னரே ஸஹர்
உணவுக்காக எழும்பிவிடுவதும்,
ஸகாத் என்ற கடமையையே
நிறைவேற்றாத மனிதர்களெல்லாம்
ஸகாத்தையும் கொடுத்து, சதகாவும்
செய்வதும் மிகச்
சிறந்த எடுத்துக்
காட்டுகளாகும்.

நரகின் வாயில்களை மூடுவதன் மூலம்
பாவங்களில் வெறுப்பை
ஏற்படுத்துகின்றான் எம்மைப் படைத்த
ரப்பு அல்லாஹ். பவங்களே நரகை
சூழ்ந்திருக்கின்றன,
(முன்னால்
கூறப்பட்ட ஹதீஸில் வந்திருப்பது
போன்று)அதனால் தான் 11 மாத
காலங்களிலும் பாவத்தில்
மூழ்கியிருக்கும் ஒரு முஸ்லிம் எந்த
பாவங்களையெல்லாம் விட முடியாது என்று
நினைக்கின்றானோ அவற்றையெல்லாம்
ரமலான்  காலத்தில்
விட்டுவிடுகின்றான். இதுவே ரமலான் மனித குலத்திற்கு செய்யும் பெரும் நன்மையாகும்.
ஒரு சில
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்;
11மாத காலமும் புகைத்தல் பழக்கத்தில்
மூழ்கியுள்ள மனிதன் ரமலான் காலத்தில் 14 மணித்தியாளங்களை
புகைத்தலின்றி கழிக்கின்றான்,

படங்களையும் நாடகங்களையும்
பார்ப்பதில் இன்பம் காணும் மனிதன்
ரமலான் காலத்தில் அதற்கும்
விடுமுறை அளிக்கின்றான்.
சண்டை பிடிப்பவர்களும் கூட இம்மாதம்
வந்துவிட்டால் சண்டைகளை
விலக்கிவைக்கும் அளவுக்கு
மாறிவிடுவது மிகப் பெரும் எடுத்துக் காட்டுகளாகும்.

எனவே எம்மிடம் வந்திருக்கும்
ரமழானை வணக்கங்கள் மூலம்
அலங்கரித்து நல்லவற்றை செய்வதற்கும்,
பாவங்களை விட்டொதுங்கி
நல்லவர்களாக மாறுவதற்கும் எம்மை
பழக்குவோமாக!!.

*அல்லாஹ்வுக்காக ஹலாலை*
*விடவைப்பதன் மூலம் பயிற்சி!*

நோன்பு என்றால் ஹலாலான
உண்வையும், பானத்தையும்,
விட்டுவிடுவதோடு, ஹலாலான
மனைவியை இல்லறத்தில் ஈடுபடாமல்
ஒதுங்கியிருப்பதுமே.
இந்தப் பயிற்சியே எம்மிடம் பெரும்
மாற்றத்தை கொண்டுவரப்
போதுமானது.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: யார் பொய் பேச்சையும், பொய்யான
நடவடிக்கைகளையும்
விடவில்லையோ அவன் உணவையும்,
பானத்தையும் விடுவதில்
அல்லாஹ்வுக்கு எந்தத்
தேவையுமில்லை. (புஹாரி:1903)

எனவே; அல்லாஹ்வுக்காக ஹாலாலை
விடும் நாம் அவனுக்காக ஹராமான,
பாவமான, ஷிர்க்கான, பித்அத்தான
எல்லாக் காரியங்களையும் விட்டு விடுவதன் மூலம் ரமலான் மாத
நோன்பு எம்மிடம் எதிர்பார்க்கும்
நோக்கத்தை அடைந்து கொள்ள முயற்சிப்போம்....

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்.... ♻)

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 30-05-2017

Monday, 29 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 11📓

*🎯மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?*

*📖அல்குர்ஆன்

*وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ*

*"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.*

*திருக்குர்ஆன்  2:34*

🔘முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என *திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72* ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

 🔘இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு *பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை.
இது குறித்துத் தெளிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

🔘முதலில் *ஸஜ்தா* என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்ப்போம். *(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத்* போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன.

🔘ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

🔘 தொழுகையைக் குறிப்பிட *"ஸலாத்"* என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும்.

🔘இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு *"ஸலாத்"* என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

*🔘"ஸவ்ம்"* என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் *"கட்டுப்படுத்திக் கொள்ளுதல்"* என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

🔘இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர்சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது. இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.

*🔘நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள்* ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது *"ஸஜ்தா"* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

🔘 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. *"நன்றாகப் பணியுதல்"* என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் *"ஸஜ்தா"* எனக் குறிப்பிடப்பட்டன.

🔘அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் *"நன்றாகப் பணியுதல்"* என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

🔘 நீங்கள் இவ்வூரில் *ஸஜ்தாச்* செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்! *(திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161)* இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் *"ஸஜ்தா"* என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும்.

🔘 இஸ்லாமிய வழக்கில் உள்ள *"ஸஜ்தா"*வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.

🔘 மனிதர்கள் மட்டுமின்றி *சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை* உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு *ஸஜ்தாச்* செய்கின்றன என்று திருக்குர்ஆன் *22:18* வசனம் கூறுகிறது.

🔘 இவற்றுக்கு *முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது.* குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. *மலைகளோ, மரங்களோ* இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு *ஸஜ்தாச்* செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

*🔘சூரியன், சந்திரன், நட்சத்திரம்* ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும்.

🔘 மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும். இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள் செய்து வருகின்றன.

🔘இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும். மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.

*🔘 திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49* ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம்.

🔘வானவர்கள்
ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.

🔘 வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று இல்லை.

🔘 சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் *"ஜிப்ரீல்"* என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார்.

*🔘 வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. (பார்க்க திருக்குர்ஆன் 35:1)* எனவே, வானவர்களை நம்மைப் போல் கருத முடியாது. எவ்வாறு அவர்களால் பணிவை வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.

🔘 நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது.

🔘 காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர். *"பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்"* என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை.

🔘மாறாகத் தடை விதித்துள்ளனர். *இரவு, பகல், சூரியன், சந்திரன்* ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. *சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்!* அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! *(திருக்குர்ஆன் 41:37)*

 🔘படைக்கப்பட்டவற்றுக்கு *ஸஜ்தாச் செய்யக் கூடாது.* படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.

*🔘முஆத் (ரலி), ஸல்மான் (ரலி)* போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர். *(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)*

🔘இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல் படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம்.

🔘 ஆனால் அவர்களின் *கால்களில் விழுவதையும்,* அவர்களுக்கு *ஸஜ்தாச் செய்வதையும்* இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 30-05-2017

Sunday, 28 May 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻

🌟🌟🌟🌟29-5-17🌟🌟🌟🌟

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

" அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
"

   📚 அல்குர்ஆன்  67:15

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 " பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்."

🎭அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா(ரலி)

📓நூல்:
ஸஹீஹ் புகாரி -102

🌟💥🔥🌟🔥💥🌟🔥💥🌟💥

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 10📓

பலவீனங்களை விட்டும் தூய்மையானவன்

*📖அல்குர்ஆன்

*قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ*

*"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர்கள் கூறினர்.*

*திருக்குர்ஆன்  2:32*

🔘தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் *ஸுப்ஹான்* என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. *ஸுப்ஹான்* என்றால் தூய்மை என்பது பொருள்.

🔘 நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், *அழுக்கு அசுத்தம்* போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் *ஸுப்ஹான்* என்பது அதைவிட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.

*🔘 "கடவுள் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்என்பதே *ஸுப்ஹான்* என்பதன் பொருளாகும்.

*🔘 "தூக்கம், இயலாமை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்"* என்பது இதன் பொருளாகும்.

🔘 இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது. *அழுக்கு, அசுத்தம்* போன்றவற்றி லிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.

 *🚫(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29)*

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 29-05-2017

ரமலானின் சிறப்புகள் - 2

 💜 *ரமலானின் சிறப்புகள்

🌐 *ரமலான் மாதத்தின் சிறப்புகளாக அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் கூறுவதாவது*

6. *நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.*

📘நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

7. ஷைத்தான் களுக்கு விலங்கிடப் படுகின்ற மாதம்.*

📘ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்’.  நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

8.  *நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.*

📘‘…நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)
மற்றொரு அறிவிப்பில் ‘ஒரு வானவர் அழைக்கிறார்’ என்று வந்துள்ளது.

9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.*

📘‘நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

10. *லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.*

📘ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி – 722)

11 *முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.*
📘‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 619)

12. *தக்வா பயிற்சிக்குரிய மாதம்.*

📘‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்’. (அல்குர்ஆன் 2:184)

13. *அருள் செய்யப்பட்ட மாதம்.*
📘‘அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

*மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக.ஆமீன்.*

பதிவு நாள்: 28-05-2017

Saturday, 27 May 2017

ரமலானின் சிறப்புகள் - 1

 💜 *ரமலானின் சிறப்புகள்(1/2)*

🌐 *வர இருகின்ற ரமலான் மாதத்தின் சிறப்புகளாக அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் கூறுவதாவது*

1. *திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.*

ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾

‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன் 2 : 185)

2.  *நோன்புக்குரிய மாதம்.*

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

அல்லாஹ் சொல்கிறான்:

﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾

‘ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் 2 : 185)

3. *சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ

‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,

..... وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ…

‘..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.

*அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்*

மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.

4. *வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء ..…

‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)

வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:

﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾

‘வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும’; – (அல்குர்ஆன் 78 : 19)

ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

5. *அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ …..

‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.

🌷🌷🌷.தொடரும்.🌷🌷

பதிவு நாள்: 27-05-2017

Friday, 26 May 2017

நரகில் வழங்கப்படும் தண்டனைகளில் சில

*நரகம்*


*தண்டனைகள்*

நரகில் கொடுக்கப்படும் பல வகையான தண்டணைகளில் சில :

*விலங்கிடப்படுதல்:*

அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 40:71,72

*நெருப்பால் ஆன ஆடை*

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

திருக்குர்ஆன் 22:19,20

*கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்:*

‘அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!(என வானவர்களிடம் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 44:47,48

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

திருக்குர்ஆன் 22:19,20

*வெப்பம்:*

அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

திருக்குர்ஆன் 56:42-44

அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்!’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆன் 9:81

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

திருக்குர்ஆன் 78:24,25

*குளிர்ச்சி கிடையாது:*

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 78:21-24

*சூடு போடப்படும்:*

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்)

திருக்குர்ஆன் 9:35

*உள்ளத்தை தாக்கும் நெருப்பு:*

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

திருக்குர்ஆன் 104:5-9

*புரட்டிப் போடப்படுவார்கள்:*

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33:66

*மேலும் கீழும் வேதனை:*

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான்.

திருக்குர்ஆன் 29:55

*கருகும் தோல்கள்:*

நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:56

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 23:104

*சம்மட்டி அடி:*

அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.

திருக்குர்ஆன் 22:21

*கூச்சலும் அலறலும்:*

கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.

திருக்குர்ஆன் 11:106

*வேதனை குறையாது:*

அவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.

திருக்குர்ஆன் 43:75

*குறைந்த பட்ச தண்டணை:*

“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 311

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”

திருக்குர்ஆன் 2:201

Thursday, 25 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 9📓


*🎯திருக்குர்ஆன் வழி கெடுக்காது*

*📖அல்குர்ஆன்

*إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ*

 *கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏகஇறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.*

*திருக்குர்ஆன்  2:26*

 *🔘இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்"* என்று கூறப்பட்டுள்ளது. சிலர் *"இவ்வேதத்தின் மூலம்"* என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர்.

🔘 இது அறியாமையாகும். ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் *"இதன் மூலம் வழிகெடுப்பான்'* என்று அல்லாஹ் கூறுகிறான்.

🔘 எனவே *"இதன் மூலம்'* என்ற சொற்றொடருக்கு *"இவ்வுதாரணத்தின் மூலம்'* என்று பொருள் கொள்வதே சரியாகும்.

*🔘 "இதன் மூலம்'* என்ற சொற்றொடருக்கு *"வேதத்தின் மூலம்'* என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

🔘 மேலும் வழிகாட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழிகெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 25-05-2017

மதியூகி மனைவி -அரபி சிறுகதை

மதியூகி மனைவி
--------- அரபி சிறுகதை
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
-----------------------------------
         முன்கோபி முஸ்தபா தனது மனைவி முஃமினாவிற்கு முதல் தலாக் சொன்னான்.
(முதல் தலாக் சொன்னால் மனைவி மூன்று மாதம் காத்திருப்பில் இருப்பார்.அந்நாட்களில் மனைவிக்கான பராமரிப்பு செலவு கணவனின் பொருப்பாகும். மூன்று மாதங்களுக்குள்  எவ்வித நிபந்தனையுமின்றி மனைவியை இணைத்துக் கொள்ளலாம். அவ்விதம் இணையவில்லை எனில் அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு ஏற்பட்டுவிடும். அவர்கள் விரும்பினால் வேறு நபரை திருமணம் செய்துகொள்ளலாம்.)

    இப்பொழுது முஸ்தபாவிற்கும்,முஃமினவிற்குமிடையே நடைபெறும் உரையாடலைப் பார்ப்போம்

 முஸ்தபா:  முஃமினா! உன்னை முதல் தலாக் விட்டுட்டேன்.
நீ உன் பொருட்களை எடுத்துக்கொண்டு உன் அம்மா வீட்டுக்குப்போ!

முஃமினா: முதல் தலாக்குதானே! நான் என் வீட்டிக்கெல்லாம் போகமாட்டேன். என் இத்தா காலம் முடியும் வரை இங்கே தான் இருப்பேன். எனக்காகும் பராமரிப்பு செலவு உங்கள் பொருப்பு.

முஸ்தபா: உனக்கு வெட்காமாயில்லை. தலாக் விட்ட கணவன் வீட்டிலேயே இருப்பேன் என்கிறாய். உனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுத்தரவில்லையா?

  முஃமினா: அப்படி சொல்லாதீங்க! அல்லாஹ்வை விட ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பவர் யார்?.
தலாக் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா?
يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌  وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ‌  لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌  وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌  وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ‌  لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا‏ 
 "நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
(அல்குர்ஆன் : 65:1)

 எனவே அல்லாஹ்வின் ஆணைப்படி நான் வீட்டை விட்டும் வெளியேற மாட்டேன்.

   குர்ஆன் வசனத்தை கேட்டவுடன் ஒன்றும் மறுத்துப் பேச முடியாத முஸ்தபா கோபமாக அந்த இடத்தை விட்டும் அகன்றான்.

முஃமினா எதுவுமே நடக்காதது போல தனது வீட்டு வேலைகளை கவனித்ததுடன் எப்பொழுதும் போல  தன்னை அலங்கரித்துக் கொண்டு
முஸ்தபா வெளியே செல்லும்போதும் வீட்டினுள் நுழையும்போதும்  அவன் பார்வை படும் இடத்தில் அமர்ந்து கொள்வாள்.

   சில நாட்கள் சென்றன. ஒருநாள் முஃமினா,முஸ்தபா அவளுக்கு திருமண பரிசாக வாங்கித்தந்த அவனுக்கும் மிகவும் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு அவன் வெளியே செல்லும்பொழுது அவன் எதிரே கடந்து சென்றாள்.
எவ்வளவு முயன்றும் முஸ்தபாவால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் வீ்ம்புடன் வெளியே சென்ற முஸ்தபாவால் தன் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.

கடந்த காலங்களில் முஃமினாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அவன் கண் முன் வந்து சென்றது.

அவள் மேல் உள்ள கோபம் தணிந்து பழைய காதல் மிகைத்தது.
பணிகளை வேகமாக முடித்த முஸ்தபா வீட்டிற்கு விரைந்து வந்தான். முஃமினாவை அன்புடன் அணைத்தான்.
அவர்களுக்குள் உண்டான பிரச்சனை முடிவிற்கு வந்தது.

சில மாதங்கள் ஓடின.
ஓர் இரவு கடுமையான பசியுடன் வீட்டிற்கு வந்தான். இரவு உணவு தயாராகவில்லை. கோபம் தலைக்கேறிய முஸ்தபா நீ ஒரு முஃமீனான பெண்ணா?.
ஒரு கணவனுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்ய தெரியாதா?? நீ என்ன கற்றிருக்கிறாய்? என்று கத்த ஆரம்பித்தான்.

முஃமினா பொறுமையுடன் சொன்னாள் : என்ன முஃமீன் நீங்கள்? அதிகமான எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் சொல்லிருக்கிறதே. ஒரு முஃமீனை பற்றி நல்லெண்ணம் கொள்ளக்கூடாதா?.உன் சகோதரனிடத்தில் ஏதேனும் குறை கண்டால் அந்த தவறுக்கு ஏதேனும் ஒரு சரியான காரணம் இருக்கும் என்று நினைப்பது தான் ஒரு முஃமீனுக்கு அழகு என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரவு உணவு தாமதமாவதற்கு எதாவது ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று உங்கள் மனைவியை பற்றி நினைக்க கூடாதா? என்று கூறினாள்.

இப்படியெல்லாம் பேசி உன் தப்பை மறைகக பார்க்காதே. எனக்கு சாப்பாடு வேண்டாம். வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வெளியே சென்றுவிட்டான்.

வெளியே சென்று திரும்பிய முஸ்தபாவிற்கு கோபம் தணியவில்லை.

 படுக்கையறைக்கு சென்ற முஸ்தபா வழக்கமாக படு்க்கும் கட்டிலில் படுக்காமல் கட்டிலின் கீழே விரிப்பு விரித்து படுத்துக் கொண்டான். முஃமீனா வழக்கமாக படுக்கும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

ஒரு வாரம் கடந்தும் முஸ்தபாவின் கோபம் குறையவில்லை.

       உம்மை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்ட முஃமீனா முஸ்தபா அலுவலகம் முடித்து வீட்டிற்கு திரும்பும் வேளையில் அவனுக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து வைத்துவிட்டு அவன் வருவதற்கு முன்பே படுக்கையறைக்கு சென்றாள்.

 வழக்கமாக அணியும் ஆடையை விட சற்று மெல்லிய ஆடையை அணிந்துக் கொண்டாள். மனங்கவர் வாசனையை பூசிக் கொண்டாள். மங்கலாக ஒளி தரும் விளக்கை ஏற்றி வைத்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

    இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த முஸ்தபாவிற்கு
அங்கிருந்த சூழ்நிலை அவனுக்கு ஒருவகையான மயக்கத்தைத் தந்தது.
சமாளித்துக்கொண்டு கட்டிலுக்கீழே படுத்துக்கொண்டான்.

    தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்த முஃமினா  வேண்டுமென்றே இடப்புறமாகவும்,வலப்புறமாகவும் திரும்பி திரும்பி படுத்தாள்.

ஒவ்வொரு முறையும் அவள் திரும்பி படுக்கும் போதெல்லாம் அவள்  பூசியிருந்த வாசனை திரவியத்தின் நெடி முஸ்தபாவின் நாசியைத் தாக்கி அவன் உணர்வைத் தூண்டியது. மனதை கட்டுப்படுத்த இயலாமல் எழுந்து கட்டிலில் முஃமினாவின் அருகே படுத்துக்கொண்டான்.

        இதற்காகவே காத்திருந்த முஃமினா சிரித்துக்கொண்டே குறும்பாக கேட்டாள்;  நான் அறிந்தவரை  எல்லாப் பொருட்களும் பூவிஈர்ப்பின் காரணமாக மேலே இருந்து கீழே விழும் , ஆனால், இங்கே ஒன்று கீழே  இருந்து மேலே வந்திருக்கிறதே என்றாள்.

  "கட்டிலிலிருக்கும சக்திவாய்த காந்தத்தின்  முன் புவி ஈர்ப்பு சக்தி தோற்றுவிட்டது" என்ற முஸ்தபா,  நமது நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
"    "இவ்வுலகமனைத்தும் மகிழச்சியைத் தருபவை, இவ்வுலகின் மகிழ்ச்சியைத் தருவதில் மிகச்சிறந்தவள் ஸாலிஹான மனைவி  என உண்மையைத்தான் சொல்லியுள்ளார்கள். உன்னைப்போன்று அழகும்,அறிவும், பொறுமையும், நற்குணமும் நிறைந்த மனைவி அமைந்தால் ஆண்கள் ஏன் விவாகரத்து செய்கிறார்கள் என்றான்.
        அரபு  சிறுகதை .தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி

Wednesday, 24 May 2017

தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும்

தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும்

தன்மீதான அதீத நம்பிக்கை ஆபத்தானது. அதனால் சில வெற்றிகள் கிடைத்தாலும் அதிகஅளவு ஆபத்துகளையே அது தன்னுள் கொண்டுள்ளது. அதனால் கிடைக்கும் சில வெற்றிகள் தன்னம்பிக்கையுடையவர்களை கர்வத்தில் ஆழ்த்திவிடுகின்றன. தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

உற்சாக மூடர்கள், மக்களின் ஏளனத்துக்கு ஆளானவர்கள், மக்களின் இரக்கப்பார்வைக்கு உள்ளாகும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் இவ்வகையான அதீத தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தம் கௌரவத்தை நிலைநாட்டும்பொருட்டு சாகச மனப்பான்மையுடன் பெரும்பெரும் காரியங்களில் அவர்கள் துணிவாக இறங்கிவிடுகிறார்கள்.

எதார்த்தத்தை கருத்தில்கொள்ளாமல் ஒருவித சாகச மனப்பான்மையுடன் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயல்கள் பெரும்பாலும் வெற்றியைத் தருவதில்லை. அவர்கள் மீண்டும் எழமுடியாதஅளவு பெரும் இழப்புகளையே ஏற்படுத்துகின்றன.

இஸ்லாம் ஒரு மனிதனிடம் இறைநம்பிக்கையைத்தான் ஏற்படுத்துகிறது, அவன்மீதான நம்பிக்கையை அல்ல. ‘இறைவனின் உதவியின்றி உங்களால் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே இறைஉதவியை வேண்டியவர்களாக, எதிர்பார்த்தவர்களாக களத்தில் இறங்குங்கள். வெற்றி உங்களைக் கர்வத்தில் ஆழ்த்திவிடக்கூடாது; தோல்வி உங்களை விரக்தியில் தள்ளிவிடக்கூடாது’ என்கிறது அது.

இறைநம்பிக்கை ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற நேர்மறையான சிந்தனையை நம்பிக்கையாளனிடம் ஏற்படுத்தி அவனை முன்னோக்கிச் செலுத்துகிறது. வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் அது அவனது மனநிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.

தன்னம்பிக்கை இறைநம்பிக்கைக்கு மாறானது. “இவையனைத்தும் என் அறிவின், என் முயற்சியின், என் திறமையின் வெளிப்பாடு” என்று ஒரு மனிதன் கூறுவதை இஸ்லாம் வெறுக்கிறது. அது இறைவனின் அருட்கொடையை உணராத நன்றிகெட்ட ஒரு மனிதனின் கூற்று என்கிறது.

மக்கா வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்கள் எதிரிகளைவிட அதிக எண்ணிக்கையினராக இருந்தபோதிலும் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவினார்கள். அந்த யுத்தத்தை விமர்சித்து இறக்கப்பட்ட பின்வரும் இறைவசனத்தைப் பாருங்கள்:

“அல்லாஹ் உங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிபுரிந்துள்ளான். ஹுனைன் போர் நடைபெற்ற நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களை பூரிப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. பூமியானது விசாலமானதாக இருந்தும் உங்களுக்கு சுருங்கிவிட்டிருந்தது. நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள். பின்னர் தன் தூதர்மீதும் நம்பிக்கையாளர்கள்மீதும் அல்லாஹ் அமைதியை அருளினான். நீங்கள் காணாத படைகளையும் இறக்கி நிராகரிப்பாளர்களைத் தண்டித்தான். இதுவே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.” (9:25,26)

இஸ்லாம், இப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் ஏற்படுத்த விரும்புகிறது.

இந்திய பிரிவினைவாதத்திற்கு யார் காரணம் தொடர் - 3

1923ல் வாரணாசியில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தரைமையில் இந்துமகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல். அதன் முக்கியக் குறிக்கோள் இந்தியா இந்துக்களுக்கே; வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை. என்பதே இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. 1924-ல் லாஹுரில் ரங்கிலா ராஜா (கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் இஸ்லாமியர்களைப் போற்றும் முஹம்மது நபி அவர்களைத் தரக் குறைவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நிலை

    இவ்விதம் இந்துமதத் தலைவர்களில் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917ல் இருந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்.?

    இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா சாஹிப் அவர்கள் முதலில் இரு நாடு எனும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப் பூர்வமாக இணைந்தார். அதுவரை அவர் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாலமாக இருந்தார். The ambassador of Hindu-Muslim Unity” என்று சரோஜினி நாயுடுவால் பரப்பப்பட்டவர், 1933-ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பற்றிக் குறிப்பிட்ட பொழுது An Impossible Dream’ நடைபெற இயலா கனவு என்றார் ஜின்னா.

    1906 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக் 1940 ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தவில்லை, 1945, 1946-ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.

    ஏன் கேட்டார் தனி நாடு ?

     தனிநாடுக் கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட். லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.

    “பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.

    வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆணாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார். (Quoted in a Short History of India and Pakistan).

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கலவி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)

    இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940-ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.

நேருவின் பேட்டியால் நிலை மாறியது :

    ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946-ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6-ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940-ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.

    “நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

    மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலைத் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

R.S.S-யை நோக்கி ஒரு கேள்வி?

    இன்று இந்தியாவைத் துண்டாடிய பாவிகள் என முஸ்லிம்களைக் குற்றஞ்சாட்டிப் பிரச்சாரம் செய்யும் R.S.S அன்று என்ன செய்தது? இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என இந்து மகாசபையினர் பேசினார்களே; பிரிக்கலாம் என இராஜாஜி அவர்கள் ஆலோசனை வழங்கினார்களே; பிரிக்கவேக் கூடாது என பிடிவாதம் செய்த காந்தியை வல்லபாய் படேல் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தாரே; இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்த பொழுது R.S.S என்ன செய்தது? இன்று பாரதமாதாவை துண்டாடிய பாவிகள் என நீலிக்கண்ணீர் வடிப்போர் அன்று பிரிவினைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனரா? இல்லையே ஏன்?

    முஸ்லிம் லீக்கை, ஜின்னாசாஹிபை. காயிதேமில்லத்தை, முஸ்லிம்களைப் பிரிவினை வாதிகள் எனச் சாடுவோர் பிரிவினைக்கு முதலில் வித்திட்ட லஜ்பத்ராயை, பண்டிட் மாளவியாவை ஆதரித்த இராஜாஜியை, பட்டேலை பிரிவினை வாதிகள் எனச் சொல்வது இல்லையே ஏன்?

    இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்; விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர்.

சற்று சிந்தியுங்கள்!

    * மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?

    * பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.

   * இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.

    * முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.

   * இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

    எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை. மேற்கொண்டு உண்மை நிலையை அறிய விரும்புகிறோர் H.M. Sreevai partition of India : legend and Reality என்ற நூலையும், The Dialogue Between Hindus and Muslim என்ற நூலையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

                                                                நன்றி,

  கணீயூர் நாஜி நீடுரி

இஸ்லாமிய விளக்க மையம்

கிரசன்ட் நிலையம்

89-டீ எஸ்.பி. கோயில் தெரு

சிதம்பரம்- 608 001.

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ

1, வலது புறமாகச் சாய்ந்து படுத்த பின்
ُ قَالَ اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

அல்லாஹும்ம ஃகலக்(த்)த நப்(F)ஸீ, வஅந்(த்)த தவப்பா(F)ஹா, ல(க்)க மமா(த்)துஹா வமஹ்யாஹா, இன் அஹ்யை(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா, வஇன் அமத்தஹா ப(F)ஃக்பி(F)ர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஆபி(F)யா..என்று ஓத வேண்டும்.

இதன் பொருள் :- இறைவா! நீயே என் ஆத்மாவைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றுகிறாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதை உயிர் வாழச் செய்தால் அதனைக் காத்தருள். அதை நீ மரணிக்கச் செய்தால் அதை மன்னித்து விடு! இறைவா! உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 4887

2, வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.

اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنْ الْفَقْرِ
அல்லாஹும்ம ரப்ப(B)ஸ் ஸமாவா(த்)தி வரப்ப(B)ல் அர்ளி, வரப்ப(B)ல் அர்ஷில் அளீம், ரப்ப(B)னா வரப்ப(B) குல் ஷையின், பா(F)(க்)கல் ஹப்பி(B) வன்னவா, வமுன்ஸிலத் தவ்ரா(த்)தி வல் இஞ்சீ வல் பு(F)ர்கான், அவூது பி(B)(க்)க மின் ஷர்ரி குல் ஷையின் அன்(த்)த ஆஃகிதுன் பி(B)னாஸிய(த்)திஹி, அல்லாஹும்ம அன்(த்)தல் அவ்வலு ப(F)லைஸ கப்ல(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் ஆஃகிரு ப(F)லைஸ ப(B)ஃத(க்)க ஷைவுன், வஅன்(த்)தள் ளாஹிரு ப(F)லைஸ ப(F)வ்க(க்)க ஷைவுன், வஅன்(த்)தல் பா(B)த்தினு ப(F)லைஸ தூன(க்)க ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ப(F)க்ரி

இதன் பொருள்:- இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்கள் இறைவனே! ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே! தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே! தவ்ராத்தையும் இஞ்சீலையும் குர்ஆனையும் அருளியவனே! ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் குடுமி உன் கையில் தான் உள்ளது. இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை. எங்கள் கடனைத் தீர்ப்பாயாக! வறுமையை அகற்றி எங்களைச் செல்வந்தர்களாக்குவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 4888

3, படுக்கையை உதறி விட்டு கீழ்க்காணும் துஆவையும் ஓதலாம்.
بِاسْمِكَ رَبِّ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ


பி(B)ஸ்மி(க்)க ரப்பீ(B), வளஃது ஜன்பீ(B) வபி(B)(க்)க அர்ப(F)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(F)ஸீ ப(F)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா பி(B)மா தஹ்ப(F)ளு பி(B)ஹி இபா(B)த(க்)கஸ் ஸாஹீன்.

இதன் பொருள்:- என் இறைவனே! உன் பெயரால் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன் பெயரால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு அருள் புரிவாயாக! கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக! ஆதாரம்: புகாரி 5845

4, பி(B)ஸ்மில்லாஹ்
எனக் கூறி படுக்கையை உதறி விட்டு வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு பின் வரும் துஆவை ஓதலாம்.
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

ஸுப்(B)ஹான(க்)கல்லாஹும்ம ரப்பீ(B), பி(B)(க்)க வளஃது ஜன்பீ(B), வபி(B)(க்)க அர்ப(F)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(F)ஸீ ப(F)ஃக்பி(F)ர் லஹா, வஇன் அர்ஸல்(த்)தஹா ப(F)ஹ்ப(F)ள்ஹா பி(B)மா தஹ்ப(F)ளு பி(B)ஹி இபாத(க்)கஸ் ஸாஹீன்.

இதன் பொருள்:- என் இறைவனே! அல்லாஹ்வே நீ தூயவன். உன்னால் தான் எனது உடலைச் சாய்க்கிறேன். (படுக்கிறேன்) உன்னால் தான் அதை உயர்த்துகிறேன். (எழுகிறேன்) என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதை மன்னிப்பாயாக. கைப்பற்றாது அதை நீ விட்டு வைத்தால் உனது நல்லடியார்களைப் பாதுகாப்பது போல் அதையும் பாதுகாப்பாயாக!
ஆதாரம்: முஸ்லிம் 4889

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை.

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை.

எனது பெயர் ஜனாஸா!  நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார். நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன்.

எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.  ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.  எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது. அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.

 நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.  இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா! அதாவது, இறந்த உடல்! எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன். என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை. குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்? குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன.?

என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!  இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.  ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.  ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.

இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும். ஆதலால் தயாராக தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.  (சூரா ஆல இம்ரான் 3:185)

உள்ளச்சத்தோடு நமது தொழுகை

தொழுகையில் உள்ளச்சத்தை வழியுறுத்தும் வசனங்கள்:
“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.” (23: 1, 2).

உள்ளச்சம் உடையவர்களுக்கு இது இழகுவான காரியம்:
“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்;லாஹ்விடம் உதவி தேடுங்கள், எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.” (2: 45).

உள்ளச்சத்துடன் நிற்றல்:
“தொழுகைகளை குறிப்பாக நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள், தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.” (2: 238).

முதலில் உயர்த்தப்படுவது “உள்ளச்சம்”:
அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தோம், அப்போது அல்லாஹ்வின் தூதர் தனது பார்வையை வானை நோக்கி உயர்த்தியவர்களாக “இது மனிதர்களிலிருந்து கல்வி பரிக்கப்படும் காலமாகும், எது வரையெனில் அதிலிருந்து எதையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு, அப்போது ஸியாதிப்னு லபீதுல் அன்ஸாரீ (ரலி) அவர்கள், எவ்வாறு கல்வி பரிக்கப்படும் நாம் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் போது, நமது மனைவிமார்களுக்கு, பிள்ளைகளுக்கு அதை ஓதிக்காட்டும் போது என வினவினார். ஸியாதே! உமது தாய் மண்ணைக்கவ்வட்டும், நான் உம்மை மதீனாவின் கல்விமான்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தேன், இந்த தவ்ராத்தும், இன்ஜீலும் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இருந்தும் அவர்களுக்கு அது ஏற்படுத்திய பயன் என்ன? என அல்லாஹ்வின் தூதர் கேட்டார். ஜுபைர் குறிப்பிடுகிறார்: உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்களை சந்தித்து உமது சகோதரர் அபூதர்தா கூறுவதை செவிமடுக்கவில்லையா? என்று அவர் கூறியதை நான் அவருக்கு அறிவித்த போது அபூதர்தா கூறியது உண்மை தான் என அவர் கூறினார். நீர் விரும்பினால் முதலில் உயர்த்தப்படும் கல்வியை நான் உமக்கு அறிவிக்கின்றேன் என அவர்கூறிவட்டு, அது தான் உள்ளச்சம். எந்த அளவுக்கெனில் மஸ்ஜிதுக்கு கூட்டுத் தொழுகைக்கு வருபவர்களில் உள்ளச்சமுடையவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு நிலமை மோசமடையும்” (திர்மிதி).

தொழுகைக்காக ஒருவர் முறையாக தன்னைத் தயார் படுத்துதல்:
இது பல அம்சங்களைக் கொண்டாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் ஸஃப் பை வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.

1-பாங்கிற்கு உளத்தூய்மையுடன் பதில் கூறுவதன் மூலம் தொழுகைக்கு தயாராகுதல்:
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது அதை கேட்கும் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். முஅத்தின் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறும் போது அஷஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறுவார். பின்பு முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறும் போது, அஷஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறுவார் பிறகு ஹய்யஅலஸ் ஸலாத், ஹய்யஅலல்பஃலாஹ் எனக்கூறும் போது லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனக்கூறுவார். பின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். பின் லா இலாஹ் இல்லல்லாஹ் எனக்கூறும் போது இவர் தனது உள்ளத்தால் உளத்தூய்மையுடன் லா இலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.” (முஸ்லிம்).

பாங்கைத் தொடர்ந்து துஆ ஓதுதல்:
“எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு ரழீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதிர் ரஸுலன் வபில் இஸ்லாமி தீனன்”

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை, முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் ஏற்றுக்கொண்டேன்) என்று கூறுவாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீவக்காஸ் (ரலி), (முஸ்லிம்).

எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்:

اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَه
பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!) என்று கூறுவாரோ அவருக்கு நாளை மறுமையில் எனது ஷபாஃஅத் உறுதியாகி விட்டது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), புஹாரி).

அழகான முறையில் வுழூச் செய்வது:
அம்ரிப்னு ஸஈத் இப்னுல் ஆஸ் தனது தந்தை பாட்டன் வழியாக அறிவிக்கின்றார்: “நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்த போது, அவர்கள் வுழூ செய்வதற்கு தண்ணீரை கொண்டுவருமாறு சொன்னார்கள், பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்: எந்த ஒரு முஸ்லிமாவது கடமையான தொழுகைக்கு அழகான முறையில் வுழுச் செய்து, உள்ளச்சத்துடன், அதன் ருகூவைப் பேணியவராக தொழுவாரானால் அவர் முன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அவை அமைந்து விடும், பெரும் பாவங்களை தவிர்த்து, இவ்வாறு காலம் முழுக்க நடந்து கொண்டிருக்கும்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).

அப்துல்லாஹ் இப்னு ஸுனாபிஹிய் கூறுகிறார், அபூ முஹம்மத் வித்ர் தொழுகை கடமையென கூறிய போது, அபூ முஹம்மத் கூறியது பொய்யாகும் எனக் கூறிய உபாததிப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன், அல்லாஹ் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கியிருக்கின்றான், எவர் அதன் வுழூவை அழகாகச் செய்து, குறிப்பிட்ட நேரத்தல் அந்தத் தொழுகைகளையும் நிறைவேற்றி, அதன் ருகூவையும் முழுமையாக செய்து, அதில் உள்ளச்சத்தையும் பேணுவாரானால் அல்லாஹ்விடத்தில் அவரை மன்னிப்பதற்குரிய ஒரு உறுதி மொழி இருக்கின்றது. எவர் அவ்வாறு செய்யவில்லையோ அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த  ஒரு உறுதி மொழியும் இல்லை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான்” (அபூதாவுத்).

மிஸ்வாக் பல் துலக்குதலின் மூலம் தயாராகுதல்:
எனது சமூகத்திற்கு, அல்லது மனிதர்களுக்கு சிரமம் இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்வதை நான் கட்டளையிட்டிருப்பேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி).

பள்ளிக்குச் செல்கின்ற போது ஓதும் துஆ:
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا.
“நாயனே! என் இதயத்தில் ஒளியையும், என் நாவில் ஒளியையும், என் செவியில் ஒளியையும், என் பார்வையில் ஒளியையும், எனக்குப்பின்னால் ஒளியையும், எனக்கு முன்னால் ஒளியையும், எனக்கு மேலால் ஒளியையும், எனக்கு கீழால் ஒளியையும், ஏற்படுத்துவாயாக, யா அல்லாஹ் எனக்கு ஒளியை அருள்வாயாக!” (ஆதாரம்:- முஸ்லிம்).
“நான் நபியவர்கள் கூறக் கேட்டேன் “எவர் தொழுகைக்காக முழுமையாக வுழூச் செய்து, பின் கடமையான தொழுகைக்கு நடந்து சென்று, மக்களுடன், அல்லது ஜமாஅத்தாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றினால் அவரது முன்னுன்டான பாவங்கள் மன்னிக்கப்படும்” என உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

உள்ளம், உடல் இரண்டும் தொழுகையில்:
உக்பதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாம் முறை வைத்து ஒட்டகைகளை மேய்ப்பவர்களாக இருந்தோம். எனது முறை வந்த போது நான் அவைகளை மேய்த்துவிட்டு இரவானதும் ஓய்வெடுக்க திரும்பிவிட்டேன். நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உரை நிகழ்திக் கொண்டிருந்தார்கள், அப்போது அவர்கள் கூறிய செய்தி: எந்த ஒரு முஸ்லிமாவது அழகான முறையில் வுழூச் செய்து, பிறகு எழுந்து தனது முகத்தையும், உள்ளத்தையும் நிலை நிறுத்தியவராக இரண்டு ரக்அத்துகள் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும். எவ்வளவு சிறப்பான ஒரு விடயம் இது? என்று நான் கூறினேன், அப்போது அங்கிருந்த ஒருவர் இதற்கு முன் கூறியது இதை விட அழகானதாகும் என்று நான் அவரை பார்த்ததேன், அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அவர் என்னை நோக்கி நீர் சிறிது நேரத்திற்கு முன்பாக வந்ததை நான் பார்த்தேன். நீர் வருவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் சொன்ன செய்தி தான் எவரொருவர்

நிறைவாக வுழூச் செய்து பின்னர் :

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُஎன்று கூறுகின்றாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயலினூடாக சுவர்க்கம் நுழையலாம் என்பதாகும். (முஸ்லிம்).

அழகான முறையில் தன்னை அழங்கரித்தவராக செல்லல் ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7: 31).

மஸ்ஜிதை நோக்கி வரும் போது அமைதியாக வருதல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழுச் செய்து பிறகு தொழுகையை நாடியவராக மஸ்ஜிதுக்கு வருவாரானால், விரல்களைப் பின்னிக்கொண்டு, கோர்த்துக்கொண்டு வர வேண்டாம். தொழுகைக்கு வர நாடினால் அவர் தொழுகையில் இருப்பவர் போல் தான்” (திர்மிதி).

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை நிலை நாட்டப்பட்டு விட்டால் நீங்கள் விரைந்தோடி வரவேண்டாம் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாருங்கள். நீங்கள் அடைந்தால் தொழுங்கள், தவறினால் தவறியதை நிறைவேற்றுங்கள். தொழுகைக்காக வரும் ஒருவர் தொழுகையில் இருப்பவர் தான்” (ஆதாரம்:- புஹாரி).

வலது காலை முன்வைத்தவராக மஸ்ஜிதுக்குள் நுழைதல்:
அல்லாஹ்வின் தூதர் அனைத்துக் காரியங்களிலும் வலதை முற்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புஹாரி).

நம்முடைய தொழுகையை உள்ளச்சத்தோடு தொழக் கூடிய பாக்கியத்தை அல்லாஹ் நல்குவானாக.

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.


யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.                        
                                                            நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் தத்துவமும்:

நாம் நோற்கும் ஒவ்வொரு நோன்புக்கும் 10 நன்மைகள் என்ற‌ அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிட‌க் கூடாது. அதன் சிறப்புகளையும் அளப்பரிய நன்மைகளையும் உணர்ந்து அவற்றை அடைய விரும்பியவர்கள் நோற்றுக்கொள்ளலாம்.

ஆறு நோன்புக்கு ஆதாரமில்லையா?

இந்த ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில‌ர் கூறுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                            அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி);  நூல்: தாரிமி (இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)

எப்போது நோற்கவேண்டும்?

ஆறு நோன்புகளை பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்பதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
                          அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி);   நூல்:முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான கருத்தாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, வரக்கூடிய‌ ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பிக்கவேண்டும் என்றோ, அதை ஆறு நாட்களும் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்றோ கூறப்படவில்லை.

ரமலானைத் தொடர்ந்துதான் ஆறு நாட்கள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று அப்படியே வைத்துக் கொண்டாலும், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது.  ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.  இதில் "ரமலானைத் தொடர்ந்து" என்ற கருத்து அடிபட்டுப் போகின்றது.  ஒரு நாள் விடுபட்டு விட்டால்கூட‌ அது ரமலானின் தொடர்ச்சியாக ஆகாது.  மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். நபி(ஸல்)அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் எனக்கூறினார்களே தவிர, ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில்தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம். ஆக, (ஈதுல் பித்ர்) பெருநாள் முடிந்து மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டுமென்பதே அவசியமில்லை. ஆனால் "ஷவ்வாலில்" என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதம் முடிவதற்குள் அந்த ஆறு நோன்புகளையும் வைத்து விட வேண்டும்.

அதாவது ஆறு நோன்புகளை நோற்கக்கூடிய ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப ஷவ்வால் மாத கால எல்லைக்குள் அந்த நோன்புகளை நோற்றுவிடவேண்டும். இதையே மேற்கண்ட‌ ஹதீஸ்களும் கூறுகின்றன‌. எனவே, இந்த‌ நோன்புகளை தொடர்ச்சியாக பிடிக்கவேண்டுமென்றோ அல்லது மாதத்தின் ஆரம்பப் பகுதியில்தான் பிடிக்கவேண்டுமென்றோ இல்லை என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்கவேண்டும் எனும்போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோ அந்த நாட்களில் நோற்க இயலாமல் போகும் மற்றவர்களோ அந்த நன்மையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர் ஆனில் அறிவியல் - தேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்
#தேனில்_உள்ள_இரகசியங்கள்_தேனை_விடத்_தித்திப்பானவை.
.
“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது #அதில்_மனிதர்களுக்கு_பிணி_தீர்க்க_வல்ல #சிகிச்சை_உண்டு. நிச்சயமாக இதிலும் #சிந்தித்துணரும் #மக்களுக்கு_ஓர்_அத்தாட்சி_இருக்கிறது.
(அல்குர்ஆன் 16:69)
.
அதே போல் உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க தேனீக்களின் #தேனில் உங்களுக்கு நிவாரணம் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல இறை வேதத்தால் மட்டுமே முடியும். தேன்களின் பயன்பாட்டை மருத்துவர்களின் வாயிலாக அறிவோம்.
.
சைனாவில் 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேனீ வளர்ப்பு சம்பந்தமாக ஒரு மிகப் பெரிய கருத்தரங்கு ஒரு வாரம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க ஆய்வாளர்கள் தேனீயிடமிருந்து கிடைக்கும் ராயல் ஜெல்லி, மகரந்தம், தேனீக்களின் பிசின் போன்ற அனைத்துமே மனிதனின் #பல_நோய்களை_குணமாக்கக்_கூடியது என்றார்.
.
ரொமேனியன் மருத்துவர் 'நான் 2094 நோயாளிகளுக்கு தேனை முக்கியமாக மருந்தாக உபயோகித்தேன். அதில் 2002 பேர் பூரண குணமடைந்தனர்' என்றார்.
.
போலந்து மருத்துவர்கள் தங்களது கூறியதாவது 'தேனீக்களின் மூலம் மூல நோய், தோல் பிரச்னைகள், பெண்களுக்கான பல நோய்கள் போன்றவற்றை தேனை முக்கிய மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளோம்.' என்றனர்.
.
#தேனை_எப்படிப்_பயன்படுத்தலாம் ?
தலைவலிக்குத் தைலமாக, இடுப்புவலி மூட்டுவலிக்கு மசாஜ் ஆயிலாக, கண்வலிக்குச் சொட்டு மருந்தாக, சளி இருமலுக்கு டானிக்காக, அடிபட்ட காயம், தீக்காயம், சொறி சிரங்கு, செப்டிக்கான புண்களுக்கு ஆய்ன்ட்மெட்டாக, (வடு கூட தெரியாமல் ஆறிவிடும்), பல் துலக்க பேஸ்ட்டாக, ப்ரடுக்கு ஜாமாக, பாலிலும் டீயிலும் சர்க்கரையாக, குளிர்ந்த நீரில் கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்தால் கோலாவாக, முகப்பொலிவுக்கு ஃபேசியல் கிரீமாக இப்படிப் பல பல வழிகளில் பயன்படுத்தலாம்.
.
#நம்பமுடியவில்லையோ ?
தேன் ஒரு anti-septic, anti-oxidant, anti-inflammatory, anti-biotic, anti-fungal, anti-bacterial, pre-biotic மருத்துவ குணங்கள் கொண்ட அதிசய திரவம். அதேசமயம் சுவையான பானமும் கூட. நோயின் வேர்ப்பகுதிக்குச் சிகிச்சை செய்கிற தன்மையும், கிருமிகள் தொடர்ந்து தாக்காமல் அவற்றைக் கொல்கிற ஆற்றலும் தேனுக்கு உண்டு.
.
இத்தாலியின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சுமார் 395 பக்கங்களில் வெளியிட்டுள்ள Value added products from beekeeping நூலில் நிறைய ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் உள்ளன. கண்ணில் புரையோடினால் ஆயிரக்கணக்கில் செலவழித்து அறுவை சிகிச்சை செய்கிறோம். இந்நூலிலோ பக்கம் 25 ல் தேனை நேரடியாகச் சொட்டு மருந்துபோல் விடச் சொல்கிறார்கள்.
.
அமெரிக்காவில் தேனைப் பல வியாதிகளுக்கும் சிகிச்சை செய்கிற அப்பிதெரபி (Apitherapy) பயிலரங்குகளை நடத்தி வருகிற ராஸ் கான்ராடு எனும் ஆய்வாளர். அவருடைய புத்தகங்கள் பிரபலம். www.dancingbeegardens.com அவரின் இணையதளம். அவரே தேன் பண்ணையும் வைத்திருக்கிறார். தேனை அவர் வருணிக்கும்போது சொல்வார், ‘a first-aid kit in a jar’ முதலுதவிப் பெட்டி ஒரு புட்டியில் அடங்கிவிட்டது.
.
#தேனை_எதனுடன்_சேர்த்து_உண்டால்_என்ன_பலன்_கிடைக்கும்?
1. இரவில் பாலில் தேன் கலந்து குடித்தால், இதயம் பலம் பெறும்.
2. பழச்சாறுடன் கலந்து குடித்தால் நல்ல சக்தி கிடைக்கும்.
3.மாதுளைச் சாறுடன் குடித்தால் புது ரத்தம் உண்டாகும்.
4.எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
5.இதையே வெறும் வயிற்றில் செய்தால் உடல் பருமன் குறையும்.
6.நெல்லிக்காய் சாருடன் கலந்து குடித்தால் இன்சுலின் சுரக்கும்.
7.ஆரஞ்சுப் பழத்துடன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
8.குடிபோதையில் உள்ளவனுக்குச் சிறிது சிறிதாக தேனைக் கொடுத்தால் போதை தெளியும்.
9.பேரீத்தம்பழத்தைப் பாலில் காய்ச்சி தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகும்.
10.தேங்காய்ப் பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.
11.இளநீருடன் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.
12.இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
13.கேரட்டுடன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
14.தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
15.தேனையும் இலவங்கப் பட்டைத்தூளையும் கலந்து உண்டால் ஏராளமான நோய்கள் குணமாகும்.
16. காலையில் வெதுவெதுப்பான நீருடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்.


அல் அக்ஸாவை மீட்போம் தொடர் - 4

அல்லாவின் சாந்தியும்
சமாதானமும்
நம் அனைவரின் மீதும்
நிலவட்டுமாக

தமிழக இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்
அல்அக்ஸாவை மீட்போம் தொடர்சியாக
4வது மாத இதழாக இத்தொடரில்  பார்ப்போம்
உலகில் உள்ள முக்கிய முதல் மூன்று புனிதத்தலங்கள்
மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவி மற்றும் ஜெருசலத்தில்
(பாலஸ்தீனத்தில்)
பெயர் மாற்றம் இஸ்ரேல் உள்ள மஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

மஸ்ஜித் அல் ஹராம்,
மஸ்ஜித் அந்நபவி இந்த இரண்டு பள்ளி வாசலும்
உலக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சொந்தம்

ஆனால் பைத்துல்முகத்தஸ் எனும்
மஸ்ஜித் அல்அக்ஸா
யூதர்களின் ஒருபிரிவினர்களானவர்களின் கட்டுபாட்டில் உள்ளது
அங்குவாழும் நம் போன்ற உறவுகளான பாலஸ்தீன இஸ்லாமிய சகோதர்கள் தினந்தோறும் மஸ்ஜிதுல் அல்அக்ஸாவிற்கு தொழுகை தொழுவுவதற்கு விடாமல் துன்புறுத்தபடுகிறார்கள்,
தீவிரவாதத்தை இஸ்ரேலிய யூதஇராணுவம் மேற்கொண்டு அதேபகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் மீது மீடியாவின் துணைகொண்டு மற்றவர்கள் பார்வையில்
பாலஸ்தீன இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகள் என்பதை போல் மற்ற உலகநாடுகளை நம்பவைக்கிறார்கள்,
ஏன் என்றால் இந்த மீடியாக்கள் என்பது இஸ்ரேலியர்களின் கண்டுபிடிப்பு
ஆக இந்த மீடியாக்களின்
முழுகட்டுபாடு இவர்களின் பிடியில்தான் உள்ளது,
ஆக பொருளாதாரம்
அடிப்படையில் வங்கி,இது அனைத்துமே இஸ்ரேல் என்ற பெயர் கொண்ட நாடு (குறிப்பு)பாலஸ்தீனம் என்ற நாட்டின் பெயரை 1948 to 1950இல்
முழுவதுமாக அனைத்துமே இஸ்ரேல் என்று இந்த யூதர்களின் ஒரு பிரிவினர்களானவர்கள் மாற்றிவிட்டார்கள்.
உலகில் உள்ள அனைத்து பொருளாதாரமும் இவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் எதற்காகவெனில் இந்த உலகை ஆள
தஜ்ஜாலிடம் ஒப்படைபதற்காக,
ஆனால் அதேசமயத்தில்
பாலஸ்தீனநாடு
பெயர்மாற்றம் (இஸ்ரேலில்)
உள்ள பைத்துல்முகத்தஸ் எனும்
அல்அக்ஸா பள்ளிவாசலுக்காக
அங்கு வாழும் ஒவ்வொரு இஸ்லாமிய நம் உறவுகள் உயிரை தியாகம் செய்கின்றார்கள்
அல்லா இவர்களுக்கு
மறுமைநாளில் இன்ஷா அல்லா பாக்கியம்பொருந்தியவர்களாக ஆக்கட்டும்,
ஆக இப்படிபட்ட சூழ்நிலையில் மற்ற உலக நாடுகளில் உள்ள முஹம்மத் ரசூல் (அலைஸ்லம் )
உம்மத்தவர்களாகிய இஸ்லாமியர்கள் நாம் தான் அல்அக்ஸாவை மீட்கவேண்டும்,
இன்ஷா அல்லா மீட்போம்,
ஆனால் இன்றைய சமயத்தில் நாம் பைத்துல்முகத்தஸ் எனும் அல்அக்ஸா பள்ளிவாசலை
மறந்துவிட்டுஇருக்கின்றோம்.

எப்படி அல்அக்ஸாவை மீட்கலாம்
ரோட்டில் நின்றுகொண்டு அந்த அந்த நாட்டு அரசாங்கத்திடம் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் என்ற பெயரில் மீடியாவிற்காகவா?
என்றால் வெற்றி கிடைத்துவிடுமா?

நம்மால் என்ன செய்ய முடியும்?
நம்மால் எப்படி செய்ய முடியும்?
எப்படி பைத்துல் முகத்தஸ் எனும் அல்அக்ஸாவை உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக்குவது எப்படி?
அல்அக்ஸாவை மீட்பதற்காகவே பல இயக்கங்கள் உள்ளது,
அதில் உலக பார்வைக்கு
யூதர்கள் ஏற்படுத்திய இயக்கங்களும் கலந்துள்ளது,
ஆனால் சில இயக்கங்கள் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உண்மையான மும்மீன்களாக
நபி முஹம்மத் ரசூல் (அலைஸ்லம்)
உண்மையான உம்மத்தாகியவர்கள்
சில இயக்கங்களாக பாலஸ்தீனத்தில் போராடி வருகின்றார்கள்,
ஆனாலும் அல்அக்ஸா வெற்றி பெற நீண்ட நாட்கள் இழுத்துகொண்டு சென்றுஇருக்கின்றது,
அதற்கு காரணம் அல்லாவை தவிர யாராலும் அறிய முடியாது
மறைவானவற்றை அல்லாவே அறிவான்,

ஆனாலும் நாம் அல்அக்ஸாவிற்காக என்ன செய்யலாம்?
எப்படி செய்யலாம்?
பைத்துல்முகத்தஸ் எனும் அல்அக்ஸா யாருக்காக?
எதற்காக?

அல்லாவின்
நினைவுகள் பெறுவதற்காகவும்
வரலாற்றில் மிக முக்கியாகவும்
அல்குர்ஆனில்
அநேக இடங்களில்
பைத்துல்முகத்தஸை சுற்றி பல அற்புதமான நிகழ்வுகளை நிகழ்ந்தவையாக
நாம் அர்த்தங்களுடன்
அல்குர்ஆனில் படிப்போமேயானால்
நன்றாக விளங்கும்,
அதற்கு உதராணமாக இன்றும் பாலஸ்தீனத்தில் அல்அக்ஸா இருக்கின்றது.

ஆக அல்அக்ஸா பள்ளிவாசலுக்கு எப்படி உலக இஸ்லாமியர்கள்
மக்கா,மதினா
செல்வதை போல்
புனித பயணமாக
பாலஸ்தீனம் பெயர் மாற்றம்(இஸ்ரேல்)லில்
உள்ள பைத்துல் முகத்தஸுக்கு எந்த வித யூத தடையின்றி
எப்படி செல்வது?எப்படி வெல்வது?

அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக
இஸ்லாமிய தூய மார்கத்தில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்கள் எண்ணத்தில் தான் உள்ளது,
நாம் ஒவ்வொருவரும்
தான் காரணம்
பிறரை பற்றி குறை கூறும் நாம் நம்மை பற்றி யோசிப்பதில்லை,
நாம் எதற்காக படைக்கபட்டோம்
எதற்காக வாழ்கிறோம்
என்றால் அல்லாவின் முழு நினைவுகள் பெறுவதற்காக
அதாவது
அல்லாவை வணங்குவதற்காக

 அல்லா இட்ட 5 கடமையாக நோன்பு மாதங்களில்
நாம் நன்முறையில்
நோன்புகள் வைக்கின்றோம்
அதே சமயத்தில் பாலஸ்தீன நம் இஸ்லாமிய
உறவுகள்
நோன்புமாத சமயத்தில்தான்
அதிகமாக பைத்துல்முகத்தஸ்காக
இஸ்ரேலிய யூத இராணுவத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள்
என்பது எத்தனை பேருக்கு தெரியும்,
நம் வீட்டில் நாம் மட்டும் நோன்பு வைத்து
ரமலான் மகிழ்வாக கொண்டாடி வரும் அதே நேரத்தில் ,
அதே சமயத்தில்
பாலஸ்தீனத்தில் இருக்கும் நம் இஸ்லாமிய உறவுகள்
ரமலான் தினம் அன்று கூட
பைத்துல்முகத்தஸுக்கு
தொழுவுவதற்கு அனுமதி வழங்குவதில்லை இந்த இஸ்ரேலியர்கள்,
அதாவது ஒரு குறிபிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தொழுவுவதற்கு அனுமதி வழங்குவார்கள்
காரணம் உலக பார்வைக்கு மீடியா மூலம்
இஸ்ரேல் எனும் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்ற பொய்யை மற்ற உலக நாடுகளுக்கு தெரிவிப்பதற்காக தான்,

நம்மால் என்ன செய்ய முடியும் பைத்துல்முகத்தஸ்காக?

நம் தொழுகையில் எத்தனையோ நம் நலனிற்காக அல்லாவிடம் துவாவை கேட்டுள்ளோமே,
அத்துடன் நாம் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு தொழுகையிலும் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸாவிற்கா

அதாவது ஒரு
நிய்யத்👇

("யா அல்லா
அல்அக்ஸாபள்ளிவாசலுக்கு
உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தமாக்குவாயாக,
உலக இஸ்லாமியர்கள் எந்தவித யூத தடையின்றி அல்லாவை வணங்குவதற்காக பைத்துல்முகத்தஸுக்கு
புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டும்")

என்ற நிய்யத்தாக நாம் தொழுகையில் கேட்போமேயானால்
இன்ஷா அல்லா கூடிய விரைவில் பைத்துல்முகத்துஸ் உலக இஸ்லாமியர்களுக்கு
சொந்தம்.

இஸ்லாமிய உறவுகளே
இதே நிய்யத்தாக
நாம் அனைவரும்  ஒரே எண்ணத்தில் நாம் ஜமாத்தோடு ஒன்றினைந்து
இதற்காக சிறப்பு தொழுகை நடத்தினால்
இன்ஷா அல்லா
நபி முஹம்மத் ரசூல் (அலைஸ்லம்)
உம்மத்தாகியவர்கள்
உலக இஸ்லாமியர்களுக்கு
"அல்லா"
வெற்றியை
வழங்குவானாக,
நம்மால் செய்ய முடிந்தது
முயற்சி மட்டுமே
அந்த முயற்சி கூட அல்லாவிடமே
முயற்சிபோம்,
பிறகு வெற்றி,தோல்வி
என்பது அவன் செயல்.

நாம் இதை விட்டுவிட்டு ரோட்டில் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்திடம் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்களை மீடியாவிற்காக தெரிவித்துகொண்டு இருக்கின்றோம்
இப்படி செய்தால்
நமக்கு வெற்றி
கிடைத்ததா?

நாம் செய்யும் தவறு கண்டனங்கள் என்ற பெயரில் ஒன்றுபடுவதை போல்

யாரிடம் கேட்கவேண்டுமோ
மறந்து விடுகிறோம்
அதாவது அல்லாவிடம் கேட்க மறந்துவிடுகிறோம்,

ஆக பைத்துல்முகத்தஸ்காக
நாம் வாழ்நாளில் ஒரு முறை ஜமாத்தோடு ஒன்று சேர்ந்து மேலே சொல்லப்பட்ட நிய்யத்தை நாம் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரே எண்ணங்களோடு
அல்லாவிடம் கேட்போமேயானல்
இன்ஷா அல்லா
"அல்லா "நமக்கு வெற்றியை வழங்குவானாக
ஆமின்.
இந்த சிறப்புதொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணங்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
வாட்சப் எண்:+14083342099
அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.