மதியூகி மனைவி
--------- அரபி சிறுகதை
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
-----------------------------------
முன்கோபி முஸ்தபா தனது மனைவி முஃமினாவிற்கு முதல் தலாக் சொன்னான்.
(முதல் தலாக் சொன்னால் மனைவி மூன்று மாதம் காத்திருப்பில் இருப்பார்.அந்நாட்களில் மனைவிக்கான பராமரிப்பு செலவு கணவனின் பொருப்பாகும். மூன்று மாதங்களுக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி மனைவியை இணைத்துக் கொள்ளலாம். அவ்விதம் இணையவில்லை எனில் அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு ஏற்பட்டுவிடும். அவர்கள் விரும்பினால் வேறு நபரை திருமணம் செய்துகொள்ளலாம்.)
இப்பொழுது முஸ்தபாவிற்கும்,முஃமினவிற்குமிடையே நடைபெறும் உரையாடலைப் பார்ப்போம்
முஸ்தபா: முஃமினா! உன்னை முதல் தலாக் விட்டுட்டேன்.
நீ உன் பொருட்களை எடுத்துக்கொண்டு உன் அம்மா வீட்டுக்குப்போ!
முஃமினா: முதல் தலாக்குதானே! நான் என் வீட்டிக்கெல்லாம் போகமாட்டேன். என் இத்தா காலம் முடியும் வரை இங்கே தான் இருப்பேன். எனக்காகும் பராமரிப்பு செலவு உங்கள் பொருப்பு.
முஸ்தபா: உனக்கு வெட்காமாயில்லை. தலாக் விட்ட கணவன் வீட்டிலேயே இருப்பேன் என்கிறாய். உனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுத்தரவில்லையா?
முஃமினா: அப்படி சொல்லாதீங்க! அல்லாஹ்வை விட ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பவர் யார்?.
தலாக் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா?
يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا
"நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
(அல்குர்ஆன் : 65:1)
எனவே அல்லாஹ்வின் ஆணைப்படி நான் வீட்டை விட்டும் வெளியேற மாட்டேன்.
குர்ஆன் வசனத்தை கேட்டவுடன் ஒன்றும் மறுத்துப் பேச முடியாத முஸ்தபா கோபமாக அந்த இடத்தை விட்டும் அகன்றான்.
முஃமினா எதுவுமே நடக்காதது போல தனது வீட்டு வேலைகளை கவனித்ததுடன் எப்பொழுதும் போல தன்னை அலங்கரித்துக் கொண்டு
முஸ்தபா வெளியே செல்லும்போதும் வீட்டினுள் நுழையும்போதும் அவன் பார்வை படும் இடத்தில் அமர்ந்து கொள்வாள்.
சில நாட்கள் சென்றன. ஒருநாள் முஃமினா,முஸ்தபா அவளுக்கு திருமண பரிசாக வாங்கித்தந்த அவனுக்கும் மிகவும் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு அவன் வெளியே செல்லும்பொழுது அவன் எதிரே கடந்து சென்றாள்.
எவ்வளவு முயன்றும் முஸ்தபாவால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் வீ்ம்புடன் வெளியே சென்ற முஸ்தபாவால் தன் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
கடந்த காலங்களில் முஃமினாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அவன் கண் முன் வந்து சென்றது.
அவள் மேல் உள்ள கோபம் தணிந்து பழைய காதல் மிகைத்தது.
பணிகளை வேகமாக முடித்த முஸ்தபா வீட்டிற்கு விரைந்து வந்தான். முஃமினாவை அன்புடன் அணைத்தான்.
அவர்களுக்குள் உண்டான பிரச்சனை முடிவிற்கு வந்தது.
சில மாதங்கள் ஓடின.
ஓர் இரவு கடுமையான பசியுடன் வீட்டிற்கு வந்தான். இரவு உணவு தயாராகவில்லை. கோபம் தலைக்கேறிய முஸ்தபா நீ ஒரு முஃமீனான பெண்ணா?.
ஒரு கணவனுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்ய தெரியாதா?? நீ என்ன கற்றிருக்கிறாய்? என்று கத்த ஆரம்பித்தான்.
முஃமினா பொறுமையுடன் சொன்னாள் : என்ன முஃமீன் நீங்கள்? அதிகமான எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் சொல்லிருக்கிறதே. ஒரு முஃமீனை பற்றி நல்லெண்ணம் கொள்ளக்கூடாதா?.உன் சகோதரனிடத்தில் ஏதேனும் குறை கண்டால் அந்த தவறுக்கு ஏதேனும் ஒரு சரியான காரணம் இருக்கும் என்று நினைப்பது தான் ஒரு முஃமீனுக்கு அழகு என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரவு உணவு தாமதமாவதற்கு எதாவது ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று உங்கள் மனைவியை பற்றி நினைக்க கூடாதா? என்று கூறினாள்.
இப்படியெல்லாம் பேசி உன் தப்பை மறைகக பார்க்காதே. எனக்கு சாப்பாடு வேண்டாம். வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வெளியே சென்றுவிட்டான்.
வெளியே சென்று திரும்பிய முஸ்தபாவிற்கு கோபம் தணியவில்லை.
படுக்கையறைக்கு சென்ற முஸ்தபா வழக்கமாக படு்க்கும் கட்டிலில் படுக்காமல் கட்டிலின் கீழே விரிப்பு விரித்து படுத்துக் கொண்டான். முஃமீனா வழக்கமாக படுக்கும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் கடந்தும் முஸ்தபாவின் கோபம் குறையவில்லை.
உம்மை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்ட முஃமீனா முஸ்தபா அலுவலகம் முடித்து வீட்டிற்கு திரும்பும் வேளையில் அவனுக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து வைத்துவிட்டு அவன் வருவதற்கு முன்பே படுக்கையறைக்கு சென்றாள்.
வழக்கமாக அணியும் ஆடையை விட சற்று மெல்லிய ஆடையை அணிந்துக் கொண்டாள். மனங்கவர் வாசனையை பூசிக் கொண்டாள். மங்கலாக ஒளி தரும் விளக்கை ஏற்றி வைத்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த முஸ்தபாவிற்கு
அங்கிருந்த சூழ்நிலை அவனுக்கு ஒருவகையான மயக்கத்தைத் தந்தது.
சமாளித்துக்கொண்டு கட்டிலுக்கீழே படுத்துக்கொண்டான்.
தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்த முஃமினா வேண்டுமென்றே இடப்புறமாகவும்,வலப்புறமாகவும் திரும்பி திரும்பி படுத்தாள்.
ஒவ்வொரு முறையும் அவள் திரும்பி படுக்கும் போதெல்லாம் அவள் பூசியிருந்த வாசனை திரவியத்தின் நெடி முஸ்தபாவின் நாசியைத் தாக்கி அவன் உணர்வைத் தூண்டியது. மனதை கட்டுப்படுத்த இயலாமல் எழுந்து கட்டிலில் முஃமினாவின் அருகே படுத்துக்கொண்டான்.
இதற்காகவே காத்திருந்த முஃமினா சிரித்துக்கொண்டே குறும்பாக கேட்டாள்; நான் அறிந்தவரை எல்லாப் பொருட்களும் பூவிஈர்ப்பின் காரணமாக மேலே இருந்து கீழே விழும் , ஆனால், இங்கே ஒன்று கீழே இருந்து மேலே வந்திருக்கிறதே என்றாள்.
"கட்டிலிலிருக்கும சக்திவாய்த காந்தத்தின் முன் புவி ஈர்ப்பு சக்தி தோற்றுவிட்டது" என்ற முஸ்தபா, நமது நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
" "இவ்வுலகமனைத்தும் மகிழச்சியைத் தருபவை, இவ்வுலகின் மகிழ்ச்சியைத் தருவதில் மிகச்சிறந்தவள் ஸாலிஹான மனைவி என உண்மையைத்தான் சொல்லியுள்ளார்கள். உன்னைப்போன்று அழகும்,அறிவும், பொறுமையும், நற்குணமும் நிறைந்த மனைவி அமைந்தால் ஆண்கள் ஏன் விவாகரத்து செய்கிறார்கள் என்றான்.
அரபு சிறுகதை .தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
--------- அரபி சிறுகதை
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
-----------------------------------
முன்கோபி முஸ்தபா தனது மனைவி முஃமினாவிற்கு முதல் தலாக் சொன்னான்.
(முதல் தலாக் சொன்னால் மனைவி மூன்று மாதம் காத்திருப்பில் இருப்பார்.அந்நாட்களில் மனைவிக்கான பராமரிப்பு செலவு கணவனின் பொருப்பாகும். மூன்று மாதங்களுக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி மனைவியை இணைத்துக் கொள்ளலாம். அவ்விதம் இணையவில்லை எனில் அவர்களுக்கிடையே நிரந்தர பிரிவு ஏற்பட்டுவிடும். அவர்கள் விரும்பினால் வேறு நபரை திருமணம் செய்துகொள்ளலாம்.)
இப்பொழுது முஸ்தபாவிற்கும்,முஃமினவிற்குமிடையே நடைபெறும் உரையாடலைப் பார்ப்போம்
முஸ்தபா: முஃமினா! உன்னை முதல் தலாக் விட்டுட்டேன்.
நீ உன் பொருட்களை எடுத்துக்கொண்டு உன் அம்மா வீட்டுக்குப்போ!
முஃமினா: முதல் தலாக்குதானே! நான் என் வீட்டிக்கெல்லாம் போகமாட்டேன். என் இத்தா காலம் முடியும் வரை இங்கே தான் இருப்பேன். எனக்காகும் பராமரிப்பு செலவு உங்கள் பொருப்பு.
முஸ்தபா: உனக்கு வெட்காமாயில்லை. தலாக் விட்ட கணவன் வீட்டிலேயே இருப்பேன் என்கிறாய். உனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுத்தரவில்லையா?
முஃமினா: அப்படி சொல்லாதீங்க! அல்லாஹ்வை விட ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பவர் யார்?.
தலாக் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா?
يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا
"நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
(அல்குர்ஆன் : 65:1)
எனவே அல்லாஹ்வின் ஆணைப்படி நான் வீட்டை விட்டும் வெளியேற மாட்டேன்.
குர்ஆன் வசனத்தை கேட்டவுடன் ஒன்றும் மறுத்துப் பேச முடியாத முஸ்தபா கோபமாக அந்த இடத்தை விட்டும் அகன்றான்.
முஃமினா எதுவுமே நடக்காதது போல தனது வீட்டு வேலைகளை கவனித்ததுடன் எப்பொழுதும் போல தன்னை அலங்கரித்துக் கொண்டு
முஸ்தபா வெளியே செல்லும்போதும் வீட்டினுள் நுழையும்போதும் அவன் பார்வை படும் இடத்தில் அமர்ந்து கொள்வாள்.
சில நாட்கள் சென்றன. ஒருநாள் முஃமினா,முஸ்தபா அவளுக்கு திருமண பரிசாக வாங்கித்தந்த அவனுக்கும் மிகவும் பிடித்த ஆடையை அணிந்து கொண்டு அவன் வெளியே செல்லும்பொழுது அவன் எதிரே கடந்து சென்றாள்.
எவ்வளவு முயன்றும் முஸ்தபாவால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் வீ்ம்புடன் வெளியே சென்ற முஸ்தபாவால் தன் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை.
கடந்த காலங்களில் முஃமினாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அவன் கண் முன் வந்து சென்றது.
அவள் மேல் உள்ள கோபம் தணிந்து பழைய காதல் மிகைத்தது.
பணிகளை வேகமாக முடித்த முஸ்தபா வீட்டிற்கு விரைந்து வந்தான். முஃமினாவை அன்புடன் அணைத்தான்.
அவர்களுக்குள் உண்டான பிரச்சனை முடிவிற்கு வந்தது.
சில மாதங்கள் ஓடின.
ஓர் இரவு கடுமையான பசியுடன் வீட்டிற்கு வந்தான். இரவு உணவு தயாராகவில்லை. கோபம் தலைக்கேறிய முஸ்தபா நீ ஒரு முஃமீனான பெண்ணா?.
ஒரு கணவனுக்கு செய்ய வேண்டிய பணிகளை ஒழுங்காக செய்ய தெரியாதா?? நீ என்ன கற்றிருக்கிறாய்? என்று கத்த ஆரம்பித்தான்.
முஃமினா பொறுமையுடன் சொன்னாள் : என்ன முஃமீன் நீங்கள்? அதிகமான எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று குர்ஆன் சொல்லிருக்கிறதே. ஒரு முஃமீனை பற்றி நல்லெண்ணம் கொள்ளக்கூடாதா?.உன் சகோதரனிடத்தில் ஏதேனும் குறை கண்டால் அந்த தவறுக்கு ஏதேனும் ஒரு சரியான காரணம் இருக்கும் என்று நினைப்பது தான் ஒரு முஃமீனுக்கு அழகு என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இரவு உணவு தாமதமாவதற்கு எதாவது ஒரு நல்ல காரணம் இருக்கும் என்று உங்கள் மனைவியை பற்றி நினைக்க கூடாதா? என்று கூறினாள்.
இப்படியெல்லாம் பேசி உன் தப்பை மறைகக பார்க்காதே. எனக்கு சாப்பாடு வேண்டாம். வெளியே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வெளியே சென்றுவிட்டான்.
வெளியே சென்று திரும்பிய முஸ்தபாவிற்கு கோபம் தணியவில்லை.
படுக்கையறைக்கு சென்ற முஸ்தபா வழக்கமாக படு்க்கும் கட்டிலில் படுக்காமல் கட்டிலின் கீழே விரிப்பு விரித்து படுத்துக் கொண்டான். முஃமீனா வழக்கமாக படுக்கும் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் கடந்தும் முஸ்தபாவின் கோபம் குறையவில்லை.
உம்மை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்ட முஃமீனா முஸ்தபா அலுவலகம் முடித்து வீட்டிற்கு திரும்பும் வேளையில் அவனுக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து வைத்துவிட்டு அவன் வருவதற்கு முன்பே படுக்கையறைக்கு சென்றாள்.
வழக்கமாக அணியும் ஆடையை விட சற்று மெல்லிய ஆடையை அணிந்துக் கொண்டாள். மனங்கவர் வாசனையை பூசிக் கொண்டாள். மங்கலாக ஒளி தரும் விளக்கை ஏற்றி வைத்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த முஸ்தபாவிற்கு
அங்கிருந்த சூழ்நிலை அவனுக்கு ஒருவகையான மயக்கத்தைத் தந்தது.
சமாளித்துக்கொண்டு கட்டிலுக்கீழே படுத்துக்கொண்டான்.
தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்த முஃமினா வேண்டுமென்றே இடப்புறமாகவும்,வலப்புறமாகவும் திரும்பி திரும்பி படுத்தாள்.
ஒவ்வொரு முறையும் அவள் திரும்பி படுக்கும் போதெல்லாம் அவள் பூசியிருந்த வாசனை திரவியத்தின் நெடி முஸ்தபாவின் நாசியைத் தாக்கி அவன் உணர்வைத் தூண்டியது. மனதை கட்டுப்படுத்த இயலாமல் எழுந்து கட்டிலில் முஃமினாவின் அருகே படுத்துக்கொண்டான்.
இதற்காகவே காத்திருந்த முஃமினா சிரித்துக்கொண்டே குறும்பாக கேட்டாள்; நான் அறிந்தவரை எல்லாப் பொருட்களும் பூவிஈர்ப்பின் காரணமாக மேலே இருந்து கீழே விழும் , ஆனால், இங்கே ஒன்று கீழே இருந்து மேலே வந்திருக்கிறதே என்றாள்.
"கட்டிலிலிருக்கும சக்திவாய்த காந்தத்தின் முன் புவி ஈர்ப்பு சக்தி தோற்றுவிட்டது" என்ற முஸ்தபா, நமது நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
" "இவ்வுலகமனைத்தும் மகிழச்சியைத் தருபவை, இவ்வுலகின் மகிழ்ச்சியைத் தருவதில் மிகச்சிறந்தவள் ஸாலிஹான மனைவி என உண்மையைத்தான் சொல்லியுள்ளார்கள். உன்னைப்போன்று அழகும்,அறிவும், பொறுமையும், நற்குணமும் நிறைந்த மனைவி அமைந்தால் ஆண்கள் ஏன் விவாகரத்து செய்கிறார்கள் என்றான்.
அரபு சிறுகதை .தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
No comments:
Post a Comment