Thursday, 25 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 9📓


*🎯திருக்குர்ஆன் வழி கெடுக்காது*

*📖அல்குர்ஆன்

*إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا ۚ فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۖ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا ۚ وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ*

 *கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏகஇறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.*

*திருக்குர்ஆன்  2:26*

 *🔘இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்"* என்று கூறப்பட்டுள்ளது. சிலர் *"இவ்வேதத்தின் மூலம்"* என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர்.

🔘 இது அறியாமையாகும். ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் *"இதன் மூலம் வழிகெடுப்பான்'* என்று அல்லாஹ் கூறுகிறான்.

🔘 எனவே *"இதன் மூலம்'* என்ற சொற்றொடருக்கு *"இவ்வுதாரணத்தின் மூலம்'* என்று பொருள் கொள்வதே சரியாகும்.

*🔘 "இதன் மூலம்'* என்ற சொற்றொடருக்கு *"வேதத்தின் மூலம்'* என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

🔘 மேலும் வழிகாட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழிகெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 25-05-2017

No comments:

Post a Comment