Tuesday, 30 May 2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 1

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 1*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*மன மாற்றம் தரும் மாண்பான நோன்பு!*

========================

இஸ்லாமிய உறவுகளே எம்மிடம்
வந்திருக்கும் ரமலான் மனிதனிடம்
மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக
பலவிதமான ஏற்பாடுகளை
செய்திருக்கின்றது, அதனால் இந்த
ரமலான் மாதத்தை அல்லாஹ்வின்
அருளுக்குறிய மாதம் என்கின்றோம்.
உண்மையில்  இந்த ரமலான் மாதத்தை
பயன்படுத்தி வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்தாதவன் ஒரு துர்ப்பாக்கியம்
பிடித்தவனே. எனவே மாற்றத்தை ஏற்காத மனிதனிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த படைத்தவன் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கும்
முன்னேற்பாடுகளை இந்த
கட்டுரையினூடாக நோக்குவோம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு
முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர்
ஆகலாம். 2:183.

*சுவன வாயில்கள் திறக்கப்படுவதும்*
*நரக வாயில்கள்  மூடப்படுவதும்*

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:  ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன,
ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன
(புஹாரி:1899, முஸ்லிம்)

சுவன வாயில்கள்
திறக்கப்படுவதென்றால் அதன் அர்த்தம்
என்ன, அதில் மனித சமூகத்திற்கு என்ன
நன்மை இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்தால்!சுவனத்தின்
சூழாக இருப்பது மனித உள்ளங்கள்
செய்வதை கஷ்டமாக நினைக்கும் வணக்க
வழிபாடுகளே,'
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
சுவனம் (மனிதனால்) வெறுக்கப்பட்ட
(வணக்கங்களை) சூழக்
கொண்டிருக்கின்றது, நரகம் (மனித
உள்ளங்கள்) விரும்பும்
(பாவங்களால்)சூழப்பட்டிருக்கின்றது.
(முஸ்லிம்: 2822)
எனவே சுவன வாயில்கள் திறப்பதன்
மூலம் சுவனத்திற்கு இட்டுச்செல்லும்
வணக்க வழிபாடுகளை செய்வதில்
மனிதனுக்கு வித்தியாசமான ஆசை
பிறந்துவிடுகின்றது. இது சாதாரண
முஸ்லிமின் வாழ்வில்
வெளிப்படையாகவே தென்படும்
ரமலான்  மாதம் வந்துவிட்டால்!

 சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்;
ரமழானுக்கு முன்னுள்ள 11
மாதகாலத்திலும் பர்ளான
தொழுகைகளை தொழாத மனிதன்
ரமலான் மாதம் வந்தவுடன் தொழ
ஆரம்பித்து விடுவதும், ஒரு ரக்அத்
வித்ரையேனும் ஏனைய காலங்களில்
தொழாதவன் இம்மாதத்தில் இரவுத்
தொழுகையில் ஆர்வம் காட்டுவதும்,
சுபஹ் தொழுகைக்கே
விழித்தெழுவதை கஷ்டமாக
நினைக்கும் ஒரு மனிதன் சுபஹுடைய
பாங்குக்கு அரை
மணித்தியாளத்திற்கு முன்னரே ஸஹர்
உணவுக்காக எழும்பிவிடுவதும்,
ஸகாத் என்ற கடமையையே
நிறைவேற்றாத மனிதர்களெல்லாம்
ஸகாத்தையும் கொடுத்து, சதகாவும்
செய்வதும் மிகச்
சிறந்த எடுத்துக்
காட்டுகளாகும்.

நரகின் வாயில்களை மூடுவதன் மூலம்
பாவங்களில் வெறுப்பை
ஏற்படுத்துகின்றான் எம்மைப் படைத்த
ரப்பு அல்லாஹ். பவங்களே நரகை
சூழ்ந்திருக்கின்றன,
(முன்னால்
கூறப்பட்ட ஹதீஸில் வந்திருப்பது
போன்று)அதனால் தான் 11 மாத
காலங்களிலும் பாவத்தில்
மூழ்கியிருக்கும் ஒரு முஸ்லிம் எந்த
பாவங்களையெல்லாம் விட முடியாது என்று
நினைக்கின்றானோ அவற்றையெல்லாம்
ரமலான்  காலத்தில்
விட்டுவிடுகின்றான். இதுவே ரமலான் மனித குலத்திற்கு செய்யும் பெரும் நன்மையாகும்.
ஒரு சில
எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்;
11மாத காலமும் புகைத்தல் பழக்கத்தில்
மூழ்கியுள்ள மனிதன் ரமலான் காலத்தில் 14 மணித்தியாளங்களை
புகைத்தலின்றி கழிக்கின்றான்,

படங்களையும் நாடகங்களையும்
பார்ப்பதில் இன்பம் காணும் மனிதன்
ரமலான் காலத்தில் அதற்கும்
விடுமுறை அளிக்கின்றான்.
சண்டை பிடிப்பவர்களும் கூட இம்மாதம்
வந்துவிட்டால் சண்டைகளை
விலக்கிவைக்கும் அளவுக்கு
மாறிவிடுவது மிகப் பெரும் எடுத்துக் காட்டுகளாகும்.

எனவே எம்மிடம் வந்திருக்கும்
ரமழானை வணக்கங்கள் மூலம்
அலங்கரித்து நல்லவற்றை செய்வதற்கும்,
பாவங்களை விட்டொதுங்கி
நல்லவர்களாக மாறுவதற்கும் எம்மை
பழக்குவோமாக!!.

*அல்லாஹ்வுக்காக ஹலாலை*
*விடவைப்பதன் மூலம் பயிற்சி!*

நோன்பு என்றால் ஹலாலான
உண்வையும், பானத்தையும்,
விட்டுவிடுவதோடு, ஹலாலான
மனைவியை இல்லறத்தில் ஈடுபடாமல்
ஒதுங்கியிருப்பதுமே.
இந்தப் பயிற்சியே எம்மிடம் பெரும்
மாற்றத்தை கொண்டுவரப்
போதுமானது.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: யார் பொய் பேச்சையும், பொய்யான
நடவடிக்கைகளையும்
விடவில்லையோ அவன் உணவையும்,
பானத்தையும் விடுவதில்
அல்லாஹ்வுக்கு எந்தத்
தேவையுமில்லை. (புஹாரி:1903)

எனவே; அல்லாஹ்வுக்காக ஹாலாலை
விடும் நாம் அவனுக்காக ஹராமான,
பாவமான, ஷிர்க்கான, பித்அத்தான
எல்லாக் காரியங்களையும் விட்டு விடுவதன் மூலம் ரமலான் மாத
நோன்பு எம்மிடம் எதிர்பார்க்கும்
நோக்கத்தை அடைந்து கொள்ள முயற்சிப்போம்....

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்.... ♻)

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 30-05-2017

No comments:

Post a Comment