நோன்பு - 02
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*ஆன்மீகப் போராட்டம்!*
========================
ஆன்மீக வளர்ச்சிக்கு
சிறப்பானதொரு ஏற்பாட்டை
நிச்சயித்த வாழ்வியல்
நெறியே இஸ்லாம். அதில்
முக்கியமானது ஐந்து நேரத் தொழுகையாகும.
அன்றாட
வாழ்க்கையின் ஒழுக்கம்
தொழுகையின் மூலம்
முறைப்படுத்தப்படுகிறது.
இறைவனுடன் அடியான் தனிப்பட்ட ரீதியில் நடத்தும்
உரையாடலே
தொழுகை.அது,
அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும்
ரப்புல் ஆலமீனுக்கு
சமர்ப்பிக்கப்படும்
புகழுரையாகும்.
‘என்னை நினைவு
கூர்வதற்காக தொழுங்கள்’
என்று புனித துவா
பள்ளத்தாக்கில் வைத்து
அல்லாஹ், மூஸா நபி عليه وسلم
அவர்களுக்கு
கட்டளையிட்டான்.
நிச்சயமாக நான்தான்
அல்லாஹ்!என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே,
என்னையே நீர் வணங்கும்,
என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை
நிலைநிறுத்துவீராக.
(அல்குர்ஆன் 20:14)
அல்லாஹ்வை குறித்த
நினைவு வாழ்க்கையை
வடிவமைக்க இரண்டு
முறையில் குர்ஆன் இந்த
வடிவமைப்பைக் குறித்து கூறுகிறது. முதலாவது,ஒரு மனிதனின் வணக்கங்களை
(இபாதத்) அடிப்படையற்ற
பாரம்பரியங்களில் இருந்து
விடுவித்து
இறைமார்க்கத்தில்
நிறுவுவதும், பொருளாதார
ஒழுக்கத்தை
முறைப்படுத்துவதுமாகும்.
இதுகுறித்து குர்ஆன்
கூறுகிறது:
ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய
தெய்வங்களை விட்டு
விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதை
விட்டுவிடுமாறும்
உம்முடைய தொழுகையா
உம்மை ஏவுகிறது?
(அல்குர்ஆன் 11:87)
இரண்டாவது, அனைத்து தீமைகள், மானக்கேடான
செயல்களை விட்டும்
தடுப்பது.
நிச்சயமாக தொழுகை
(மனிதர்களை)
மானக் கேடானவற்றையும்
தீமையையும் விட்டு
விலக்கும். (அல்குர்ஆன் 29:45)
அதாவது சிலவற்றை
ஏவுவதற்கும், சிலவற்றை
தடுப்பதற்கும் சக்தி பெற்ற
ஆன்மீக அதிகார மையமே
தொழுகை என்பதை
திருக்குர்ஆன் நமக்கு
கற்பிக்கிறது.அதுதான்
திக்ருல்லாஹ்வின்
உட்பொருள்.
மிகவும், வெகு ஜனமயமாக்கப்பட்ட
அன்றாட வாழ்வில் ஐந்து முறை கட்டாயமாகவும், அது
தவிர உபரியாகவும் (நஃபில்) நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ள
தொழுகையை வணக்கங்களின்
தலைமை பீடம் என்று
அழைக்கலாம்.
தொழுகைக்கு அடுத்து நமது வணக்க வழிபாடுகளின்
மிகவும் தீவிரமான
அனுபவமே நோன்பு.
தொழுகையின் சிறப்பு அதன் தொடர்ச்சியான
நிலையாகும்.
உடலையும்,
உள்ளத்தையும்
‘திக்ருல்லாஹ்’வில் கட்டிப் போடும் சக்தி நோன்புக்கு உண்டு.
அந்த சக்தியை
திருக்குர்ஆன் ‘தக்வா’ என்று கூறுகிறது.
குர்ஆன்
இறையச்சமுடையோருக்கு வழிகாட்டும்.
இபாதத் ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.
மனிதர்களே! நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள் இறைவனையே
வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்)
உடையோராகலாம்.
(அல்பகரா:21),
நோன்பு ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.
2:183. ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)
நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
(அல்பகரா:183).
குர்ஆன், இபாதத், நோன்பு இவை ஒன்றோடு ஒன்று
பிணைந்துள்ளன. மூன்றின் நோக்கமும்
இறையச்சமுடையவர்களை
உருவாக்குவதே.
குர்ஆனுக்கும், இபாதத்திற்கும்
இடையேயான உறவு என்ன?
இபாதத் என்றால் என்ன?
என்பதற்கான விளக்கமே குர்ஆன்.
குர்ஆனின் கூற்றின்படி
வாழ்க்கையை
அல்லாஹ்வுக்கு
அர்ப்பணிப்பதே
இபாதத்.
அல்லாஹ்வின்
முன்னால் சுஜூத் செய்வதும்,
அல்லாஹ்வின் கட்டளைப்படி
ஆதமுக்கு சுஜூது
செய்வதும் அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத். ஜும்ஆ தினமான
வெள்ளிக் கிழமையன்று
வியாபார ஸ்தாபனங்கள்,
விவசாய நிலங்கள், கல்வி சாலைகள், தொழிற் கூடங்களில் இருந்தெல்லாம்
வெளியேறி மஸ்ஜிதுக்கு வருவது அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத்.
அதைப் போலவே
வெள்ளிக்கிழமை ஜும்ஆ
தொழுகையை நிறைவேற்றி விட்டு வியாபார
ஸ்தாபனங்கள், விவசாய
நிலங்கள், கல்வி சாலைகள்,
தொழிற்கூடங்களுக்கு
சென்று மீண்டும் தமது
பணியை தொடருவதும்
அல்லாஹ்விற்கு செய்யும்
இபாதத்தே. வாழ்க்கையின்
அனைத்து பகுதிகளையும்
தொடும் இந்த இபாதத்திற்கு
நம்மை தகுதியுடையவர்களாக
மாற்றுகிறது குர்ஆன்.
அந்த குர்ஆனை மனிதனுக்கு
அளிப்பதற்காக அல்லாஹ்
தேர்ந்தெடுத்த மாதமே
ரமலான். குர்ஆன்,
வானிலிருந்து பூமிக்கு
அருளப்பட்ட மாதம்
என்பதாலேயே ரமலானில்
நோன்பு நோற்பது
கடமையாக்கப்பட்டுள்ளது.
ரமலான், அல்குர்ஆனின் மாதம்.
ரமலானில் நோன்பு
என்பது குர்ஆனிய
வாழ்க்கையை
பயிற்றுவிப்பதற்கான ஆன்மீக
நிகழ்ச்சி.அதாவது
வாழ்க்கையை முழுவதும்
இபாதத்தாக மாற்றுவதற்கான
பயிற்சி.குர்ஆனின் மூலம், இபாதத்தின் ஊடே, நோன்பின்
மூலம் மனிதன் அடையும்
உன்னத பதவியே ’முத்தக்கீன்
(இறையச்சமுடையவர்)’.
யார் முத்தக்கீன்? என்று கேள்வி
எழுப்பினால், வாழ்க்கையை
அல்லாஹ்விற்கு சமர்ப்பணம்
செய்தவர் என்பதே சரியான விடை. அல்லாஹ்விற்கு
என்னை சமர்ப்பணம் செய்ய நான்
தயார்’ என்பதை ஒரு மாத கால
வாழ்க்கையின் மூலம்
நோன்பாளி
பிரகடனப்படுத்துகிறார்.
அல்லாஹ்வின்
கட்டளைகளுக்கு ஏற்ப வாழ நான் தயார்’ என்பதுதான்
நோன்பின் பிரகடனம்.ஹலால்-
ஹராம்களை தீர்மானிக்கும்
அல்லாஹ்வின் அதிகாரத்தை
நோன்பாளி உயர்த்திப்
பிடிக்கிறார்.அந்த
அதிகாரத்திற்கு ஏற்ப
வாழ்க்கையை
ஒழுங்குப்படுத்துவதே தக்வா.
‘ஃபஜ்ர் முதல் சூரியன்
மறையும் வரை நான் நீர் அருந்தமாட்டேன்! உணவு
சாப்பிடமாட்டேன்! உடலுறவில்
ஈடுபட மாட்டேன்’ – ஏன்? அல்லாஹ் எனக்கு அவற்றை
தடை
செய்திருக்கிறான்.
ஆகையால் நான் அவற்றையெல்லாம்
செய்யமாட்டேன். அல்லாஹ்
தடை செய்தவை மட்டுமே
தடுக்கப்பட்டவை என்பதை
அங்கீகரிக்கும் மனரீதியான
பக்குவமே தக்வா. அல்லாஹ்
அனுமதித்தவை மட்டுமே எனது விருப்பத்திற்குரியவை
என்ற நிலைப்பாடே தக்வா.
சூரியன் மறைந்துவிட்டால்
என்னால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.உணவு
சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற தனது பலகீனத்தை
வெளிப்படுத்தும் முகமாக நோன்பை திறப்பதற்காக
அவசரப்படுகிறானே அவனே
இறைவனின்
விருப்பத்திற்குரியவன்.
அதுவல்லாமல், சூரியன் மறைந்த
பிறகும் எனக்கு நோன்பு
இருப்பதற்கான உடல்
ஆரோக்கியம்
இருக்கிறது.
ஆகையால்,
இன்னும் சற்றும் நேரம் கழித்து
நோன்பை திறக்கலாம் என்ற எண்ணமோ, செய்கையோ தக்வா
அல்ல.
நோன்பு ஆன்மீக ரீதியான
போராட்டம்.ஆன்மீக
போராட்டத்தில் வெற்றி
பெறுவதே இதர
போராட்டங்களிலெல்லாம் வெற்றியை உறுதி
செய்வதற்கான
அத்தியாவசியமான முன் நிபந்தனை.நோன்பு நோற்று
முத்தக்கீனாக மாறியவரின்
செயல்திட்டம், அடுத்த நோன்பு வரை காத்திருப்பது
அல்ல.தொடர் முயற்சியின்
ஊடே வாழ்க்கை என்ற போராட்ட
களத்தில் தீவிரமாக களமிறங்கி
செயலாற்றி
முன்னேறுவதாகும்.
போராட்டக்களத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர்
கொள்கிறோம். சவால்களை
எழுப்புவோரெல்லாம் நம்மை
அடிமைப்படுத்த அழைப்பு
விடுக்கின்றார்கள்.
அப்பொழுதெல்லாம்
‘அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடிபணிய
மாட்டேன்’ என்ற உறுதியை
நமது உள்ளங்களில்
ஏற்படுத்துவதே நோன்பு.
சர்வதேச முதலாளித்துவ
சக்திகள், மத புரோகிதம்,
இந்துத்துவா பாசிச சக்திகள்,
ஊடக ஆதிக்க சக்திகள் நம்மை
அடிமைப்படுத்த
முயற்சிக்கின்றனர். உலகியல்
பேராசைக்கு அடிமையான
நமது உடல் நம்மை
அடிமைப்படுத்த
காத்திருக்கிறது. வணிக நுகர்வு
லாபிகள் ஆடம்பர,
ஆரவாரங்களின் மூலம் நம்மை
அடிபணிய வைக்க
முயற்சிக்கின்றனர். பல்வேறு
சவால்களால் சுற்றி
வளைக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை என்ற
போராட்டக் களத்தில்
சஞ்சலமில்லாமல்
உறுதியாக நிற்க வேண்டும் என்ற
புரட்சிகரமான
லட்சியத்தை நோன்பு
பிரகடனப்படுத்துகிறது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 30-05-2017
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*ஆன்மீகப் போராட்டம்!*
========================
ஆன்மீக வளர்ச்சிக்கு
சிறப்பானதொரு ஏற்பாட்டை
நிச்சயித்த வாழ்வியல்
நெறியே இஸ்லாம். அதில்
முக்கியமானது ஐந்து நேரத் தொழுகையாகும.
அன்றாட
வாழ்க்கையின் ஒழுக்கம்
தொழுகையின் மூலம்
முறைப்படுத்தப்படுகிறது.
இறைவனுடன் அடியான் தனிப்பட்ட ரீதியில் நடத்தும்
உரையாடலே
தொழுகை.அது,
அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும்
ரப்புல் ஆலமீனுக்கு
சமர்ப்பிக்கப்படும்
புகழுரையாகும்.
‘என்னை நினைவு
கூர்வதற்காக தொழுங்கள்’
என்று புனித துவா
பள்ளத்தாக்கில் வைத்து
அல்லாஹ், மூஸா நபி عليه وسلم
அவர்களுக்கு
கட்டளையிட்டான்.
நிச்சயமாக நான்தான்
அல்லாஹ்!என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே,
என்னையே நீர் வணங்கும்,
என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை
நிலைநிறுத்துவீராக.
(அல்குர்ஆன் 20:14)
அல்லாஹ்வை குறித்த
நினைவு வாழ்க்கையை
வடிவமைக்க இரண்டு
முறையில் குர்ஆன் இந்த
வடிவமைப்பைக் குறித்து கூறுகிறது. முதலாவது,ஒரு மனிதனின் வணக்கங்களை
(இபாதத்) அடிப்படையற்ற
பாரம்பரியங்களில் இருந்து
விடுவித்து
இறைமார்க்கத்தில்
நிறுவுவதும், பொருளாதார
ஒழுக்கத்தை
முறைப்படுத்துவதுமாகும்.
இதுகுறித்து குர்ஆன்
கூறுகிறது:
ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய
தெய்வங்களை விட்டு
விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படி செலவு செய்வதை
விட்டுவிடுமாறும்
உம்முடைய தொழுகையா
உம்மை ஏவுகிறது?
(அல்குர்ஆன் 11:87)
இரண்டாவது, அனைத்து தீமைகள், மானக்கேடான
செயல்களை விட்டும்
தடுப்பது.
நிச்சயமாக தொழுகை
(மனிதர்களை)
மானக் கேடானவற்றையும்
தீமையையும் விட்டு
விலக்கும். (அல்குர்ஆன் 29:45)
அதாவது சிலவற்றை
ஏவுவதற்கும், சிலவற்றை
தடுப்பதற்கும் சக்தி பெற்ற
ஆன்மீக அதிகார மையமே
தொழுகை என்பதை
திருக்குர்ஆன் நமக்கு
கற்பிக்கிறது.அதுதான்
திக்ருல்லாஹ்வின்
உட்பொருள்.
மிகவும், வெகு ஜனமயமாக்கப்பட்ட
அன்றாட வாழ்வில் ஐந்து முறை கட்டாயமாகவும், அது
தவிர உபரியாகவும் (நஃபில்) நிறைவேற்ற பணிக்கப்பட்டுள்ள
தொழுகையை வணக்கங்களின்
தலைமை பீடம் என்று
அழைக்கலாம்.
தொழுகைக்கு அடுத்து நமது வணக்க வழிபாடுகளின்
மிகவும் தீவிரமான
அனுபவமே நோன்பு.
தொழுகையின் சிறப்பு அதன் தொடர்ச்சியான
நிலையாகும்.
உடலையும்,
உள்ளத்தையும்
‘திக்ருல்லாஹ்’வில் கட்டிப் போடும் சக்தி நோன்புக்கு உண்டு.
அந்த சக்தியை
திருக்குர்ஆன் ‘தக்வா’ என்று கூறுகிறது.
குர்ஆன்
இறையச்சமுடையோருக்கு வழிகாட்டும்.
இபாதத் ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.
மனிதர்களே! நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள் இறைவனையே
வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்)
உடையோராகலாம்.
(அல்பகரா:21),
நோன்பு ஒருவரை
இறையச்சமுடையோராக மாற்றும்.
2:183. ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)
விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)
நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
(அல்பகரா:183).
குர்ஆன், இபாதத், நோன்பு இவை ஒன்றோடு ஒன்று
பிணைந்துள்ளன. மூன்றின் நோக்கமும்
இறையச்சமுடையவர்களை
உருவாக்குவதே.
குர்ஆனுக்கும், இபாதத்திற்கும்
இடையேயான உறவு என்ன?
இபாதத் என்றால் என்ன?
என்பதற்கான விளக்கமே குர்ஆன்.
குர்ஆனின் கூற்றின்படி
வாழ்க்கையை
அல்லாஹ்வுக்கு
அர்ப்பணிப்பதே
இபாதத்.
அல்லாஹ்வின்
முன்னால் சுஜூத் செய்வதும்,
அல்லாஹ்வின் கட்டளைப்படி
ஆதமுக்கு சுஜூது
செய்வதும் அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத். ஜும்ஆ தினமான
வெள்ளிக் கிழமையன்று
வியாபார ஸ்தாபனங்கள்,
விவசாய நிலங்கள், கல்வி சாலைகள், தொழிற் கூடங்களில் இருந்தெல்லாம்
வெளியேறி மஸ்ஜிதுக்கு வருவது அல்லாஹ்விற்கு
செய்யும் இபாதத்.
அதைப் போலவே
வெள்ளிக்கிழமை ஜும்ஆ
தொழுகையை நிறைவேற்றி விட்டு வியாபார
ஸ்தாபனங்கள், விவசாய
நிலங்கள், கல்வி சாலைகள்,
தொழிற்கூடங்களுக்கு
சென்று மீண்டும் தமது
பணியை தொடருவதும்
அல்லாஹ்விற்கு செய்யும்
இபாதத்தே. வாழ்க்கையின்
அனைத்து பகுதிகளையும்
தொடும் இந்த இபாதத்திற்கு
நம்மை தகுதியுடையவர்களாக
மாற்றுகிறது குர்ஆன்.
அந்த குர்ஆனை மனிதனுக்கு
அளிப்பதற்காக அல்லாஹ்
தேர்ந்தெடுத்த மாதமே
ரமலான். குர்ஆன்,
வானிலிருந்து பூமிக்கு
அருளப்பட்ட மாதம்
என்பதாலேயே ரமலானில்
நோன்பு நோற்பது
கடமையாக்கப்பட்டுள்ளது.
ரமலான், அல்குர்ஆனின் மாதம்.
ரமலானில் நோன்பு
என்பது குர்ஆனிய
வாழ்க்கையை
பயிற்றுவிப்பதற்கான ஆன்மீக
நிகழ்ச்சி.அதாவது
வாழ்க்கையை முழுவதும்
இபாதத்தாக மாற்றுவதற்கான
பயிற்சி.குர்ஆனின் மூலம், இபாதத்தின் ஊடே, நோன்பின்
மூலம் மனிதன் அடையும்
உன்னத பதவியே ’முத்தக்கீன்
(இறையச்சமுடையவர்)’.
யார் முத்தக்கீன்? என்று கேள்வி
எழுப்பினால், வாழ்க்கையை
அல்லாஹ்விற்கு சமர்ப்பணம்
செய்தவர் என்பதே சரியான விடை. அல்லாஹ்விற்கு
என்னை சமர்ப்பணம் செய்ய நான்
தயார்’ என்பதை ஒரு மாத கால
வாழ்க்கையின் மூலம்
நோன்பாளி
பிரகடனப்படுத்துகிறார்.
அல்லாஹ்வின்
கட்டளைகளுக்கு ஏற்ப வாழ நான் தயார்’ என்பதுதான்
நோன்பின் பிரகடனம்.ஹலால்-
ஹராம்களை தீர்மானிக்கும்
அல்லாஹ்வின் அதிகாரத்தை
நோன்பாளி உயர்த்திப்
பிடிக்கிறார்.அந்த
அதிகாரத்திற்கு ஏற்ப
வாழ்க்கையை
ஒழுங்குப்படுத்துவதே தக்வா.
‘ஃபஜ்ர் முதல் சூரியன்
மறையும் வரை நான் நீர் அருந்தமாட்டேன்! உணவு
சாப்பிடமாட்டேன்! உடலுறவில்
ஈடுபட மாட்டேன்’ – ஏன்? அல்லாஹ் எனக்கு அவற்றை
தடை
செய்திருக்கிறான்.
ஆகையால் நான் அவற்றையெல்லாம்
செய்யமாட்டேன். அல்லாஹ்
தடை செய்தவை மட்டுமே
தடுக்கப்பட்டவை என்பதை
அங்கீகரிக்கும் மனரீதியான
பக்குவமே தக்வா. அல்லாஹ்
அனுமதித்தவை மட்டுமே எனது விருப்பத்திற்குரியவை
என்ற நிலைப்பாடே தக்வா.
சூரியன் மறைந்துவிட்டால்
என்னால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.உணவு
சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற தனது பலகீனத்தை
வெளிப்படுத்தும் முகமாக நோன்பை திறப்பதற்காக
அவசரப்படுகிறானே அவனே
இறைவனின்
விருப்பத்திற்குரியவன்.
அதுவல்லாமல், சூரியன் மறைந்த
பிறகும் எனக்கு நோன்பு
இருப்பதற்கான உடல்
ஆரோக்கியம்
இருக்கிறது.
ஆகையால்,
இன்னும் சற்றும் நேரம் கழித்து
நோன்பை திறக்கலாம் என்ற எண்ணமோ, செய்கையோ தக்வா
அல்ல.
நோன்பு ஆன்மீக ரீதியான
போராட்டம்.ஆன்மீக
போராட்டத்தில் வெற்றி
பெறுவதே இதர
போராட்டங்களிலெல்லாம் வெற்றியை உறுதி
செய்வதற்கான
அத்தியாவசியமான முன் நிபந்தனை.நோன்பு நோற்று
முத்தக்கீனாக மாறியவரின்
செயல்திட்டம், அடுத்த நோன்பு வரை காத்திருப்பது
அல்ல.தொடர் முயற்சியின்
ஊடே வாழ்க்கை என்ற போராட்ட
களத்தில் தீவிரமாக களமிறங்கி
செயலாற்றி
முன்னேறுவதாகும்.
போராட்டக்களத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர்
கொள்கிறோம். சவால்களை
எழுப்புவோரெல்லாம் நம்மை
அடிமைப்படுத்த அழைப்பு
விடுக்கின்றார்கள்.
அப்பொழுதெல்லாம்
‘அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அடிபணிய
மாட்டேன்’ என்ற உறுதியை
நமது உள்ளங்களில்
ஏற்படுத்துவதே நோன்பு.
சர்வதேச முதலாளித்துவ
சக்திகள், மத புரோகிதம்,
இந்துத்துவா பாசிச சக்திகள்,
ஊடக ஆதிக்க சக்திகள் நம்மை
அடிமைப்படுத்த
முயற்சிக்கின்றனர். உலகியல்
பேராசைக்கு அடிமையான
நமது உடல் நம்மை
அடிமைப்படுத்த
காத்திருக்கிறது. வணிக நுகர்வு
லாபிகள் ஆடம்பர,
ஆரவாரங்களின் மூலம் நம்மை
அடிபணிய வைக்க
முயற்சிக்கின்றனர். பல்வேறு
சவால்களால் சுற்றி
வளைக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை என்ற
போராட்டக் களத்தில்
சஞ்சலமில்லாமல்
உறுதியாக நிற்க வேண்டும் என்ற
புரட்சிகரமான
லட்சியத்தை நோன்பு
பிரகடனப்படுத்துகிறது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 30-05-2017
No comments:
Post a Comment