Wednesday, 24 May 2017

திருக்குர் ஆனில் அறிவியல் - தேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்
#தேனில்_உள்ள_இரகசியங்கள்_தேனை_விடத்_தித்திப்பானவை.
.
“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது #அதில்_மனிதர்களுக்கு_பிணி_தீர்க்க_வல்ல #சிகிச்சை_உண்டு. நிச்சயமாக இதிலும் #சிந்தித்துணரும் #மக்களுக்கு_ஓர்_அத்தாட்சி_இருக்கிறது.
(அல்குர்ஆன் 16:69)
.
அதே போல் உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருக்க தேனீக்களின் #தேனில் உங்களுக்கு நிவாரணம் இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல இறை வேதத்தால் மட்டுமே முடியும். தேன்களின் பயன்பாட்டை மருத்துவர்களின் வாயிலாக அறிவோம்.
.
சைனாவில் 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேனீ வளர்ப்பு சம்பந்தமாக ஒரு மிகப் பெரிய கருத்தரங்கு ஒரு வாரம் நடைபெற்றது. இதில் பேசிய அமெரிக்க ஆய்வாளர்கள் தேனீயிடமிருந்து கிடைக்கும் ராயல் ஜெல்லி, மகரந்தம், தேனீக்களின் பிசின் போன்ற அனைத்துமே மனிதனின் #பல_நோய்களை_குணமாக்கக்_கூடியது என்றார்.
.
ரொமேனியன் மருத்துவர் 'நான் 2094 நோயாளிகளுக்கு தேனை முக்கியமாக மருந்தாக உபயோகித்தேன். அதில் 2002 பேர் பூரண குணமடைந்தனர்' என்றார்.
.
போலந்து மருத்துவர்கள் தங்களது கூறியதாவது 'தேனீக்களின் மூலம் மூல நோய், தோல் பிரச்னைகள், பெண்களுக்கான பல நோய்கள் போன்றவற்றை தேனை முக்கிய மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளோம்.' என்றனர்.
.
#தேனை_எப்படிப்_பயன்படுத்தலாம் ?
தலைவலிக்குத் தைலமாக, இடுப்புவலி மூட்டுவலிக்கு மசாஜ் ஆயிலாக, கண்வலிக்குச் சொட்டு மருந்தாக, சளி இருமலுக்கு டானிக்காக, அடிபட்ட காயம், தீக்காயம், சொறி சிரங்கு, செப்டிக்கான புண்களுக்கு ஆய்ன்ட்மெட்டாக, (வடு கூட தெரியாமல் ஆறிவிடும்), பல் துலக்க பேஸ்ட்டாக, ப்ரடுக்கு ஜாமாக, பாலிலும் டீயிலும் சர்க்கரையாக, குளிர்ந்த நீரில் கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்தால் கோலாவாக, முகப்பொலிவுக்கு ஃபேசியல் கிரீமாக இப்படிப் பல பல வழிகளில் பயன்படுத்தலாம்.
.
#நம்பமுடியவில்லையோ ?
தேன் ஒரு anti-septic, anti-oxidant, anti-inflammatory, anti-biotic, anti-fungal, anti-bacterial, pre-biotic மருத்துவ குணங்கள் கொண்ட அதிசய திரவம். அதேசமயம் சுவையான பானமும் கூட. நோயின் வேர்ப்பகுதிக்குச் சிகிச்சை செய்கிற தன்மையும், கிருமிகள் தொடர்ந்து தாக்காமல் அவற்றைக் கொல்கிற ஆற்றலும் தேனுக்கு உண்டு.
.
இத்தாலியின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சுமார் 395 பக்கங்களில் வெளியிட்டுள்ள Value added products from beekeeping நூலில் நிறைய ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் உள்ளன. கண்ணில் புரையோடினால் ஆயிரக்கணக்கில் செலவழித்து அறுவை சிகிச்சை செய்கிறோம். இந்நூலிலோ பக்கம் 25 ல் தேனை நேரடியாகச் சொட்டு மருந்துபோல் விடச் சொல்கிறார்கள்.
.
அமெரிக்காவில் தேனைப் பல வியாதிகளுக்கும் சிகிச்சை செய்கிற அப்பிதெரபி (Apitherapy) பயிலரங்குகளை நடத்தி வருகிற ராஸ் கான்ராடு எனும் ஆய்வாளர். அவருடைய புத்தகங்கள் பிரபலம். www.dancingbeegardens.com அவரின் இணையதளம். அவரே தேன் பண்ணையும் வைத்திருக்கிறார். தேனை அவர் வருணிக்கும்போது சொல்வார், ‘a first-aid kit in a jar’ முதலுதவிப் பெட்டி ஒரு புட்டியில் அடங்கிவிட்டது.
.
#தேனை_எதனுடன்_சேர்த்து_உண்டால்_என்ன_பலன்_கிடைக்கும்?
1. இரவில் பாலில் தேன் கலந்து குடித்தால், இதயம் பலம் பெறும்.
2. பழச்சாறுடன் கலந்து குடித்தால் நல்ல சக்தி கிடைக்கும்.
3.மாதுளைச் சாறுடன் குடித்தால் புது ரத்தம் உண்டாகும்.
4.எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
5.இதையே வெறும் வயிற்றில் செய்தால் உடல் பருமன் குறையும்.
6.நெல்லிக்காய் சாருடன் கலந்து குடித்தால் இன்சுலின் சுரக்கும்.
7.ஆரஞ்சுப் பழத்துடன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
8.குடிபோதையில் உள்ளவனுக்குச் சிறிது சிறிதாக தேனைக் கொடுத்தால் போதை தெளியும்.
9.பேரீத்தம்பழத்தைப் பாலில் காய்ச்சி தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகும்.
10.தேங்காய்ப் பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.
11.இளநீருடன் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.
12.இஞ்சியுடன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
13.கேரட்டுடன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
14.தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
15.தேனையும் இலவங்கப் பட்டைத்தூளையும் கலந்து உண்டால் ஏராளமான நோய்கள் குணமாகும்.
16. காலையில் வெதுவெதுப்பான நீருடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்.


No comments:

Post a Comment