Sunday, 28 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 10📓

பலவீனங்களை விட்டும் தூய்மையானவன்

*📖அல்குர்ஆன்

*قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ*

*"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர்கள் கூறினர்.*

*திருக்குர்ஆன்  2:32*

🔘தூய்மையானவன் எனத் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த இடத்தில் *ஸுப்ஹான்* என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. *ஸுப்ஹான்* என்றால் தூய்மை என்பது பொருள்.

🔘 நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், *அழுக்கு அசுத்தம்* போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் *ஸுப்ஹான்* என்பது அதைவிட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.

*🔘 "கடவுள் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்என்பதே *ஸுப்ஹான்* என்பதன் பொருளாகும்.

*🔘 "தூக்கம், இயலாமை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய் தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்"* என்பது இதன் பொருளாகும்.

🔘 இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது. *அழுக்கு, அசுத்தம்* போன்றவற்றி லிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.

 *🚫(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29)*

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 29-05-2017

No comments:

Post a Comment