நோன்பு - 27
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*5000 ஆண்டுகள் வாழ ஆசையா?*
========================
மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்பும்போது அவன் வாழும் 60 ஆண்டுக்குள்
5000 ஆண்டுகள் வாழ்ந்த பேற்றை, இறைவனைப்
பணிந்து வாழும் தவப்பேற்றை அடைய முடியும் என இஸ்லாம் கூறுகிறது.
“இறைத்தூதர் அவர்களே! உங்களைப் பின்பற்றி வாழும் எங்கள் வாழ்க்கையோ மிகக் குறுகிய
காலம். ஆனால் முன்னர் வாழ்ந்த
இறைத்தூதர்களின் காலமோ 900 வருடங்களுக்கு
மேல். ஆகவே இந்த குறுகிய காலத்தில் நிறைந்த நன்மைகள் செய்யும் வாய்ப்பு
எங்களுக்கு உண்டா?” என முஹம்மது நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு
நபியவர்கள் இந்த ரமலான் மாதத்தை
சுட்டிக்காட்டி விளக்கம் தந்தார்கள்....
உடலையும் மனதையும் புடம்போடும் நோன்பு
ரமலான் என்ற அரபுச் சொல்லின்
பொருள் “சுட்டெரித்தல்”.
பொன்னைப் புடம் போடுவதன் மூலம்
அதிலுள்ள கசடுகள் தனியாகப் பிரிந்து
சொக்கத் தங்கம் கிடைக்கிறது. அதுபோல்
ரமலான் நோன்பு நன்மையை தீமையிலிருந்து
பிரித்தெடுக்கிறது.
இம்மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு
முன்பு தொடங்கி, மாலை சூரியன்
மேற்கில் சாயும்போது நிறைவடைகிறது. இந்த நோன்பால், உடலுக்குச் சக்தியைத் தரும் சர்க்கரை
அளவு குறைவடைந்து மனித உடல் உறுப்புக்கள்
அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கண், காது, மூக்கு, வாய், மெய் என
ஐம்புலன்களும் அவற்றிற்கான முக்கிய பணியை மட்டும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உடல் இயங்குகிறது.
ஆகவே, கண் பார்க்க வேண்டியதை மட்டும்
பார்க்கிறது; காது கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறது; மூக்கு எதை முகர வேண்டியதை மட்டும்
முகருகிறது; வாய் பேச, சுவைக்க வேண்டியதை மட்டும் செய்கிறது; மெய்யாகிய
இந்த உடல் உணர வேண்டிய சுகத்தை மட்டும் உணருகிறது. அதற்கு மேல் அது எதையும் செய்யாத கட்டு திட்டத்திற்கு வருகிறது.
நோன்பு நம்மை எச்சரிக்கிறது
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்தால்
அங்கே வண்ண வண்ண நிறங்களில்
குளிர்பானங்கள் குலுங்கி வரவேற்கின்றன.
ஆனால் நோன்பு, ‘நீ நோன்பாளி உன்னை
இறைவன் பார்க்கிறான்’ என எச்சரிக்கிறது.
ஆம்! உடல் பசித்திருக்கும்போது மனிதனின்
ஐம்புலங்களுக்கும் ஒரு நிறைவு.
இப்போது அவனது ஆறாம் அறிவான
பகுத்தறிவு விழித்துக்கொள்ள, அவன் தன்னைப் பற்றி சிந்திக்க, அதன் மூலம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி தியானிக்க
ஆரம்பிக்கின்றான். இறைநெருக்கமும்
அதனால் அச்சமும் பெறுகின்றான்.
இதனைப் பின்வரும் குர்ஆன் வசனங்கள்
விளக்குகின்றன.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்
வாழ்ந்த மக்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்
விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள்
இறையச்சம் உள்ளவர் ஆகலாம்’ என்கிறது
குர்ஆன் (2:183).
மனிதனை அவனது அதிகப்படியான
இச்சைகளிலிருந்தும் அதனால் ஏற்படும்
அனைத்துத் தீமைகளிலிருந்தும் அதன் காரணமாக அவன் போய்ச்சேர வேண்டிய நரகத் தீயிலிருந்தும் பாதுகாக்கிறது.
அதனால் ‘நோன்பு ஒரு கேடயம்' என்கிறது ஒரு நபிமொழி.
பொழுது சாய்கிறது.
தொழுகைக்கான அழைப்போசை கேட்கிறது.
ஒரு நோன்பாளி ஒரு மிடறுத் தண்ணீர், ஒரு
பேரீச்சை பழத்துண்டைக் கொண்டு நோன்பு
திறக்கிறார். உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவுகிறது.
உற்சாகம் ஊடுருவுகிறது. காய்ந்துபோன
செடியின் வேரில் நீர் விழுந்ததும் அதன்
இலைகளும் கிளைகளும் பசுமையாகி நிமிர்ந்து
நின்று நமக்கு நன்றி சொல்வதைப் போல
ஒரு நோன்பாளிக்குள் ‘ஒரு மிடறு தண்ணீர், ஒரு பேரீச்சைப்
பழத்துண்டுக்கு இத்தனை மகிமையா?
இறைவனின் எத்தனை அருட்கொடைகளை
நாம் அனுபவித்திருக்கிறோம்’ என்ற
நன்றியுணர்வு அவனுள் மேலோங்குகிறது. பிறர் பசியும் இந்த நோன்புகாலத்தில் தான்
உணரப்படுகிறது. ஆம் கஞ்சனும்
வள்ளலாகும் சமயம்தான் இந்த
ரமலான் நோன்புக்காலம்.
ஆகவே இத்தனை சிறப்புக்களைக்
கொண்ட இந்த ரமலானை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழும் 60 ஆண்டுகளில் 5000
ஆண்டுகள் வாழ்ந்த தவ வாழ்வைப்
பெறுவோம்.
(83×60= 4,980
ஒரு ஆண்டு இடம் பெறும் லைலதுல் கத்ரில் 83 ஆண்டு நன்மைகள் எனில்..
60 ஆண்டுகளில் 4980 ஆண்டுகளின் வணங்கிய நன்மைகள் கிடைக்கின்றன. )
அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று
குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும்
ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி
மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின்
நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின்
நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத் தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல்
கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய
சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு
நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை
நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின்
இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும். நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த
ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம்
பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே
நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம்
நாடியுள்ளோமா? அதற்காக முறையாக முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய
பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம்
பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு
பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி صلى الله عليه وسلم அவர்கள் விரும்பிய
வழியில் முயல வேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான்
மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’
இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ رضي الله عنه அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள்
ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு
சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப்
பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில்
வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில்
உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார்
இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க
விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப்
இருக்கட்டும். (முஸ்லிம்)
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக்
கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்;
தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும்
ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும்
விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற
வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல
வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள்
பள்ளியில் ‘இஃதிகாப்’ இருந்ததைப் போல்
இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில்
நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு
முறையேனும் (ஸுன்னத்தான) இந்த
‘இஃதிகாப்’ இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால்
நாட்டம் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : எவர்
துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும்
லைலத்துல் கத்ரைப்
பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா
துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம்.
அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை
மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும்
குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது
பொன்னான நேரத்தை இவற்றைவிடவும்
அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின்
தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள்,
வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை
வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும்
மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக
அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள்
பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல்
கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும்
தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது.
அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும்
இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க
வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின்
முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை
முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து
நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே
தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து
இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல
அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை
பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும்
நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும்
நரகமீட்சி பெரும் விதத்தில் துவா
செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப்
பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*5000 ஆண்டுகள் வாழ ஆசையா?*
========================
மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்பும்போது அவன் வாழும் 60 ஆண்டுக்குள்
5000 ஆண்டுகள் வாழ்ந்த பேற்றை, இறைவனைப்
பணிந்து வாழும் தவப்பேற்றை அடைய முடியும் என இஸ்லாம் கூறுகிறது.
“இறைத்தூதர் அவர்களே! உங்களைப் பின்பற்றி வாழும் எங்கள் வாழ்க்கையோ மிகக் குறுகிய
காலம். ஆனால் முன்னர் வாழ்ந்த
இறைத்தூதர்களின் காலமோ 900 வருடங்களுக்கு
மேல். ஆகவே இந்த குறுகிய காலத்தில் நிறைந்த நன்மைகள் செய்யும் வாய்ப்பு
எங்களுக்கு உண்டா?” என முஹம்மது நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு
நபியவர்கள் இந்த ரமலான் மாதத்தை
சுட்டிக்காட்டி விளக்கம் தந்தார்கள்....
உடலையும் மனதையும் புடம்போடும் நோன்பு
ரமலான் என்ற அரபுச் சொல்லின்
பொருள் “சுட்டெரித்தல்”.
பொன்னைப் புடம் போடுவதன் மூலம்
அதிலுள்ள கசடுகள் தனியாகப் பிரிந்து
சொக்கத் தங்கம் கிடைக்கிறது. அதுபோல்
ரமலான் நோன்பு நன்மையை தீமையிலிருந்து
பிரித்தெடுக்கிறது.
இம்மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு
முன்பு தொடங்கி, மாலை சூரியன்
மேற்கில் சாயும்போது நிறைவடைகிறது. இந்த நோன்பால், உடலுக்குச் சக்தியைத் தரும் சர்க்கரை
அளவு குறைவடைந்து மனித உடல் உறுப்புக்கள்
அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கண், காது, மூக்கு, வாய், மெய் என
ஐம்புலன்களும் அவற்றிற்கான முக்கிய பணியை மட்டும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உடல் இயங்குகிறது.
ஆகவே, கண் பார்க்க வேண்டியதை மட்டும்
பார்க்கிறது; காது கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறது; மூக்கு எதை முகர வேண்டியதை மட்டும்
முகருகிறது; வாய் பேச, சுவைக்க வேண்டியதை மட்டும் செய்கிறது; மெய்யாகிய
இந்த உடல் உணர வேண்டிய சுகத்தை மட்டும் உணருகிறது. அதற்கு மேல் அது எதையும் செய்யாத கட்டு திட்டத்திற்கு வருகிறது.
நோன்பு நம்மை எச்சரிக்கிறது
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்தால்
அங்கே வண்ண வண்ண நிறங்களில்
குளிர்பானங்கள் குலுங்கி வரவேற்கின்றன.
ஆனால் நோன்பு, ‘நீ நோன்பாளி உன்னை
இறைவன் பார்க்கிறான்’ என எச்சரிக்கிறது.
ஆம்! உடல் பசித்திருக்கும்போது மனிதனின்
ஐம்புலங்களுக்கும் ஒரு நிறைவு.
இப்போது அவனது ஆறாம் அறிவான
பகுத்தறிவு விழித்துக்கொள்ள, அவன் தன்னைப் பற்றி சிந்திக்க, அதன் மூலம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி தியானிக்க
ஆரம்பிக்கின்றான். இறைநெருக்கமும்
அதனால் அச்சமும் பெறுகின்றான்.
இதனைப் பின்வரும் குர்ஆன் வசனங்கள்
விளக்குகின்றன.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்
வாழ்ந்த மக்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்
விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள்
இறையச்சம் உள்ளவர் ஆகலாம்’ என்கிறது
குர்ஆன் (2:183).
மனிதனை அவனது அதிகப்படியான
இச்சைகளிலிருந்தும் அதனால் ஏற்படும்
அனைத்துத் தீமைகளிலிருந்தும் அதன் காரணமாக அவன் போய்ச்சேர வேண்டிய நரகத் தீயிலிருந்தும் பாதுகாக்கிறது.
அதனால் ‘நோன்பு ஒரு கேடயம்' என்கிறது ஒரு நபிமொழி.
பொழுது சாய்கிறது.
தொழுகைக்கான அழைப்போசை கேட்கிறது.
ஒரு நோன்பாளி ஒரு மிடறுத் தண்ணீர், ஒரு
பேரீச்சை பழத்துண்டைக் கொண்டு நோன்பு
திறக்கிறார். உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவுகிறது.
உற்சாகம் ஊடுருவுகிறது. காய்ந்துபோன
செடியின் வேரில் நீர் விழுந்ததும் அதன்
இலைகளும் கிளைகளும் பசுமையாகி நிமிர்ந்து
நின்று நமக்கு நன்றி சொல்வதைப் போல
ஒரு நோன்பாளிக்குள் ‘ஒரு மிடறு தண்ணீர், ஒரு பேரீச்சைப்
பழத்துண்டுக்கு இத்தனை மகிமையா?
இறைவனின் எத்தனை அருட்கொடைகளை
நாம் அனுபவித்திருக்கிறோம்’ என்ற
நன்றியுணர்வு அவனுள் மேலோங்குகிறது. பிறர் பசியும் இந்த நோன்புகாலத்தில் தான்
உணரப்படுகிறது. ஆம் கஞ்சனும்
வள்ளலாகும் சமயம்தான் இந்த
ரமலான் நோன்புக்காலம்.
ஆகவே இத்தனை சிறப்புக்களைக்
கொண்ட இந்த ரமலானை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழும் 60 ஆண்டுகளில் 5000
ஆண்டுகள் வாழ்ந்த தவ வாழ்வைப்
பெறுவோம்.
(83×60= 4,980
ஒரு ஆண்டு இடம் பெறும் லைலதுல் கத்ரில் 83 ஆண்டு நன்மைகள் எனில்..
60 ஆண்டுகளில் 4980 ஆண்டுகளின் வணங்கிய நன்மைகள் கிடைக்கின்றன. )
அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று
குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும்
ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி
மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின்
நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின்
நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத் தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல்
கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய
சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு
நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை
நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின்
இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும். நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த
ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம்
பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே
நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம்
நாடியுள்ளோமா? அதற்காக முறையாக முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய
பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம்
பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு
பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி صلى الله عليه وسلم அவர்கள் விரும்பிய
வழியில் முயல வேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான்
மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’
இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ رضي الله عنه அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள்
ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு
சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப்
பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில்
வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில்
உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார்
இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க
விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப்
இருக்கட்டும். (முஸ்லிம்)
ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக்
கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்;
தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும்
ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும்
விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற
வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல
வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள்
பள்ளியில் ‘இஃதிகாப்’ இருந்ததைப் போல்
இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில்
நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு
முறையேனும் (ஸுன்னத்தான) இந்த
‘இஃதிகாப்’ இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால்
நாட்டம் கொள்ளவேண்டும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : எவர்
துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும்
லைலத்துல் கத்ரைப்
பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா
துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம்.
அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை
மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும்
குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது
பொன்னான நேரத்தை இவற்றைவிடவும்
அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின்
தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள்,
வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை
வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும்
மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக
அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள்
பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல்
கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும்
தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது.
அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும்
இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க
வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின்
முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை
முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து
நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே
தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து
இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல
அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை
பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும்
நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும்
நரகமீட்சி பெரும் விதத்தில் துவா
செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப்
பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.