நோன்பு - 25
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*குடும்ப உறவுகளை புதப்பிப்போம்!*
========================
ரமழான் மாதத்தினை நோன்பு நோற்று, நற்கிரியைகளை
மேற்கொண்டு,அதனை சிறப்பிக்கும் சகல
செயற்பாடுகளிலும் முஸ்லிம் பெருமக்கள் தம்மை
ஈடுபடுத்திக் கொண்டிரிக்கின்றார்கள். பாவங்களை சுட்டெரிக்கும் மாதமாக ரமழான் இருப்பதனால் அதிகமாக நன்மையான
காரியங்களைச் செய்து இறைவனிடம்
பிரார்த்தனைகள் மூலம் அவனின் நெருக்கத்தினை
பெறுவற்காக இம்மாதத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இம்மாதத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பது மிகப்
பிரதான கடமையாகும்.நோன்பு நோற்பதன் மூலமே அதனை
சிறப்பித்தவர்கள் பட்டியலில் அல்லாஹ்
மனிதர்களைச் சேர்த்துக்
கொள்கின்றான்.
பின்வருமாறு
அல்லாஹ் கூறிக் காட்டுவதன் மூலம் நோன்பு நோற்பதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம்.
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில
குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால்
(அந்நாட்களில்) எவரேனும்
நோயாளியாகவோ,
அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.எனினும் (கடுமையான
நோய்,முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப்
பரிகாரமாக “ஃபித்யாவாக” -ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக்
கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது –
ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை
அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே
உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(2:184)
சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு,நரகத்தின்
வாயல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்
விலங்கிடப்பட்டிருக்கும் இம்மாதத்தின் நோன்பினை அரிய
சந்தர்ப்பமாகக் கொண்டு முடிந்தளவு
வணக்க செயற்பாடுகளினாலும், மற்றும்
நற்கிரியைகளினாலும் அலங்கரித்து அல்லாஹ்வை
நெருங்கி நன்மைகளைப் பெற
ஒவ்வொருவரும் முனைப்புக் காட்ட வேண்டும்
என்பதை மேற்படி வசனம் எடுத்துக் கூறுகின்றது.
நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடும் எமது
சகோதரர்கள் இப்புனித மாதத்தில் குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்தல்
அவசியமாகும்.
ரமழானில் குடும்ப உறவினர்களின் உறவைப் பேணி
நடப்பதன் மூலமாக எம்மால்
மேற்கொள்ளப்படும் அனைத்து நற்கிரியைகளும்
அல்லாஹ்விடம் கணக்கிடப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்படும்.
மனிதர்கள் நன்மையினை நாடி மேற்கொள்கின்ற
செயற்பாடுகள் அனைத்தும்
அல்லாஹ்விடத்தில் சென்றடைய வேண்டும்
என்பது எதிர் பார்ப்பாகும்.இதற்கு குடும்ப உறவுகளைப் பேணி நடத்தல் முக்கியமாக்
கொள்ளப்படுகின்றது.
இன்றைய உலகில் குடும்ப உறவுகள் சுருங்கி தானும்,தனது வேலையும் என்ற நிலைமை அதிகரித்து
வருகின்றது. உறவுகளை மரணத்தின் போதாவது
புதுப்பித்துக் கொண்டவர்கள் அதனைக் கூட செய்ய முடியாத தன்மை மனிதர்களிடையே
வளர்ந்து வருகின்றது.
இஸ்லாம் குடும்ப உறவினைப் பேணி நடப்பதன்
முக்கியத்துவத்தினை வலிவுறுத்திக் கூறுகின்றிக்
காட்டுவதை பின்வருமாறு நோக்க முடியும்.
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற)
இஸ்ராயீல் மக்களிடத்தில், ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது,
(உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,
அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்
நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்
அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை
முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள் ,ஸகாத்தையும்
ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று
உறுதிமொழியை வாங்கினோம். ஆனால்
உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து)
புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள்
புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் (2:83).
ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என்னை
சுவர்க்கத்திற்கு கொண்டு
செல்லக்கூடிய ஒரு “அமலை” அறிவித்துத்
தருமாறு கேட்டார் அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் : “அல்லாஹ்விற்கு
இணைவைக்காது அவனை நீ வணங்கி,தொழுகையினை நிறைவேற்றி, ஸகாத் கொடுத்து குடும்ப உறவுகளை சேர்ந்து நடப்பதன்
மூலம் சுவர்க்கம் நுழைவாய்” (ஆதாரம் :புஹாரி).
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உறவுகள்
அர்ஷில் தொங்கிக் கொண்டு யார்
என்னை சேர்ந்து நடந்தாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்
கொள்வான், மேலும் யார் என்னை
துண்டித்து வாழ்ந்தாரோ அல்லாஹ் அவனை
விட்டும் துன்டித்து விடுவான் என்று கூறிக்
கொண்டிருக்கும்” (ஆதாரம்: முஸ்லிம்)
மேலே சொல்லப்பட்டுள்ள அல் குர்ஆன்,மற்றும் ஹதீஸ் வசனங்கள் குடும்ப உறவின்
முக்கியத்துவத்தினையும்,அவர்களின் உறவின் மூலமே
சுவர்க்கம் செல்வதற்கான வாய்ப்பு
இருப்பதையும் எமக்குத் தெளிவு படுத்துகின்றன.
இந்த வகையில் எமது சமூக அமைப்பிலுள்ள
குடும்பங்களின் உறவுகள் பேணப்படும் முறைமையினை
எடுத்துக் காட்டாக பின்வருமாறு நோக்க முடியும்.
தந்தை வழி,தாய் வழி உறவு முறைகள், மற்றும் திருமண
உறவு முறை என மூன்று வகையான குடும்ப உறவு
முறைகள் சமூகத்தில் உள்ளன.
அதில் தாய்,தந்தை வழி உறவினர்களுடன் உள்ள
தொடர்புகளைப் பார்க்கும் போது அவை பரஸ்பர உறவுகள் மூலம் புதுப்பிக்கப்படுவதையும், காலம் செல்லச் செல்ல குடும்பத்
தொடர்புகள் தாய் வழி உறவினர்களுடன்
சுருங்கி தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகள் விசேட வைபவங்களுடன்
மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ளதையும் பெரும்பாலும் கண்டு கொள்ளலாம்.
சில போது தந்தை வழி உறவினை மறந்த நிலைமையில்
உள்ளனர் என்று சொன்னாலும்
மிகையாகாது.
நவீன காலத்தில் சகல உறவினர்களையும் மறந்து தானும்
தனது குடும்பமும் என்ற நிலைமை
சமூகத்தினர்களிடையே அதிகரித்திருக்கின்றது. சகோதர,
சகோதரிகளுக்கிடையிலான உறவு பாதிப்புற்று
ஆரோக்கியமற்றிருக்கின்றது. தாய், தந்தையர்களை
கவனியாது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற உதவாத
பிள்ளைகளையும், சில கிராமங்களில்
திருமண வைபவங்களின் போது தந்தையினை அழைக்கக் கூடாது
என்று நிபந்தனை இடுகின்றவர்களையும்
காணலாம்.
திருமண பந்தத்தின் மூலம் இரு குடும்பங்கள் இணைந்து,
அதனால் புதிய முகங்களும்,புதிய உறவுகளும்
கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கப்பெற்ற
உறவினர்கள் தூரமாகி செல்லும் நிலைமையினை
குடும்பங்களில் அவதானிக்கின்றோம். திருமணத்திற்கு
முன்பு உச்சத்தினை எட்டிய திருமணத்தின் மூலமான
உறவுகள் திருமணத்திற்குப்பிறகு இருந்த தடம்
தெரியாமல் திசை மாறும் நிலைமை குடும்ப
உறவினர்களிடையே நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றது.
இந்நிலையில் குடும்ப உறவினர்களிடையே
அன்பும்,பிணைப்பும் அற்றுப் போனமைக்கான காரணம்
யாது ? அதனை வளர்ப்பதற்கான வழிமுறைகள்
என்ன? சிறந்த குடும்ப உறவின் பன்புகள் யாவை?
போன்ற கேள்விகளுக்கான தெளிவினைப் பெற
முயற்சிக்கலாம்.
குடும்ப பிணைப்பு உறவினர்களிடையே குறைந்து
போனமைக்கான காரணத்தினை எடுத்துக்காட்டாக
பின்வருமாறு சுட்டிக் காட்ட முடியும். குடும்ப உறவினை
பேணி நடப்பது பற்றிய போதிய
அறிவில்லாமை,மார்க அறிவில் பலவீனமான
நிலைமை, பணத்தாலும், பதவியாலும் பெருமையினை
வெளிப்படுத்துதல், பெற்றோர் தமது குடும்ப
உறவினர்களுடன் உறவைப் பேணாமையினால்
பிள்ளைகள் அதை தொடர்கின்ற நிலைமை , குடும்ப
உறவினர்களிடையே வெறுப்புணர்வினை
வெளிப்படுத்திய பார்வை, சந்திப்பதில் நீண்ட இடைவெளி ,உறவினர் நலனில் விருப்பினை
வெளிப் படுத்தாமை, பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுதல்
சொத்து பங்கீட்டில் நீதம் பேணாமை,
உறவினர்கள் விடயத்தில் பொறுமை
இழத்தல் ,பொறாமை, மற்றும் தீய
எண்ணம் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
மேற்சொல்லப்பட்ட பல
காரணங்களினால் குடும்பத்தினரிடையே பிளவுகள்
ஏற்பட்டு இரத்த உறவினர்கள் பகைமையினையும்,
குரோதத்தினையும் வெளிப்படுத்தி வருடக்
கணக்காக வாழ்ந்து வருகின்றமையினைக்
காண்கின்றோம்.
இந்நிலைமை மாற்றப்பட்டு, குடும்ப உறவினர்களுடன்
உறவினை புதுப்பித்துக் கொள்ள சகலரும்
முயற்சித்தல் அவசியமாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள்
சொன்னார்கள் “நிச்சயமாக ஆதமுடைய
மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை இரவும் என் மீது எடுத்துக்
காண்பிக்கப்படும் அதில் குடும்ப உறவுகளை
துண்டித்து வாழ்வோரின் செயற்பாடுகள்
அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாது” (ஆதாரம்: அஹமத்)
விட்டுக் கொடுப்பு, விருந்தளித்தல்,
நோயாளிகளை சந்தித்தல், வாழ்த்துக்களை பரிமாறிக்
கொள்ளல், தர்மங்களைச் செய்தல்,
வயதில் மூத்தவர்களை மதித்தல்,
உறவினர்களுக்கிடையிலுள்ள பிணக்குகளை
சீ்ர்செய்தல், அவர்களுக்காக பிரார்தித்தல்,
வீடுகளை தரிசித்தல் போன்ற பல செயற்படுகளில்
ஈடுபடுவதன் மூலம் உறவுகளை புதுப்பித்துக்
கொள்ள முயற்சிக்கலாம்.
குடும்ப உறவுகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய
கவனம் செலுத்துதல்
அவசியமாகும்.தமது உறவினர்கள் பற்றி
பிள்ளைகளுக்கு அறிவூட்டி, அவர்களது உறவின்
முக்கியத்துவத்தினைக் கூறி வழிப்படுத்தல் வேண்டும். மேலும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளில்
தலையிட்டு சமரசம் செய்து வைத்தல் அவர்கள் மீதுள்ள
பொறுப்பாகும். அவ்வாறு
இல்லாவிட்டால் சிறிய பிரச்சினைகள்
பிற்காலத்தில் பெரிதாகி பகைமையினை ஏற்படுத்தி விடும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “எவர்
அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி
இருக்கின்றாரோ அவர் தனது குடும்ப உறவினர்களுடன்
சேர்ந்து நடக்கட்டும்”. இந்த ஹதீஸ் குடும்ப
உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது ஈமானிய
பன்பாகும் என்பதை மிகத் தெளிவாக எமக்கு சொல்லித் தருகின்றது.
எனவே ஈமானை அதிகரித்து நன்மைகளைப் பெறும்
இம்மாதத்தில் தூரமாகிப் போயுள்ள குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்து ஈமானிய
பன்புள்ளவர்களாக வாழ முயற்சித்தல் எல்லோர்
மீதுமுள்ள கடமையாகும்.
செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே
உறவுகளும் வாடிவிடும்.
அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு
வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும்.
அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள்
சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் போதும். விலகி
செல்கிறார் என்று தோன்றும்போதே நாம்
இன்னும் நெருக்கமாக முயல வேண்டும்.
ஒரு மரத்திலிருந்து இலட்சக்கணக்கில் தீக்குச்சிகள்
செதுக்கலாம். அதேவேளை இலட்சோபலட்ச
மரங்களை தீ வைத்துக் கொளுத்தவும் ஒரு
தீக்குச்சியே போதும். உறவுகளும் அப்படித்தான்.
பிடிக்காத ஒரு வார்த்தையால்தான் சேர்ந்து இருந்த உறவுகள் பிரிந்து விடுகிறது. இறுதியில்..
அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதில்லை. அங்கே
கண்டால் இங்கேயே முகம் திருப்புவோம்.
காலங்கள் கடந்துவிட்டால்.. "எதற்காக
சண்டையிட்டோம்” என்பதுகூட மறந்துவிடுகிறது.
ஆனாலும் உறவாட மனம் வருவதில்லை.
ஒரு தொலைபேசி அழைப்பும், புன்னகையுடன் ஒரு
உரையாடலும் போதும் வெறுப்பு நெருப்பை
அணைக்க.. ஆனாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு தயக்கம். ஒரு ஸலாம் போதும் அனைத்தையும்
முடிவுக்குக்கொண்டு
வர.. ஆனாலும் ஏனோ
வீண் பிடிவாதம்.
இறைத் தூதராக வந்தபோது நபி صلى الله عليه وسلم அவர்களை
உறவுகள் வெறுத்தனர். ஒதுங்கினர்..
ஒதுக்கினர். ஆனால் நபிகளார் விடவில்லை..
அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களிடம்
பேசினார்கள்:
"என் அருமை இரத்தபந்த உறவுகளே..! உலகமே
உங்களுக்கு தீயவழி காட்டினாலும்.. ஒருபோதும்
நான் உங்களுக்கு தீயவழி காட்டமாட்டேன்.
அருமை உறவுகளே! நான் கொண்டுவந்த
சத்திய மார்க்கத்தை ஏற்பதும் ஏற்காமல்
இருப்பதும் உங்கள் விருப்பம். ஆயினும் நமக்கிடையே
இருக்கும் இரத்த பந்த உறவை ஏன்
துண்டிக்கின்றீர்கள்..?. வாருங்கள் உறவைப்
பேணுவோம்!”
மறந்துவிட வேண்டாம் உலகில்.. " உறவு
இல்லாவிட்டால் துறவு..!”. மறுமையிலோ உறவைத்
துண்டித்து வாழ்ந்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில்
யாரிடமெல்லாம் உறவு விட்டுப் போயிருக்கிறதோ
அவர்களிடமெல்லாம்
போன் செய்து உறவுகளைப் புதுப்பித்துக்
கொள்ளுங்கள்.
கருணையாளன் அல்லாஹ் அளப்பரிய அருள் புரிவான்
புரிவான் உங்கள் மீது!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 21-06-2017.
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*குடும்ப உறவுகளை புதப்பிப்போம்!*
========================
ரமழான் மாதத்தினை நோன்பு நோற்று, நற்கிரியைகளை
மேற்கொண்டு,அதனை சிறப்பிக்கும் சகல
செயற்பாடுகளிலும் முஸ்லிம் பெருமக்கள் தம்மை
ஈடுபடுத்திக் கொண்டிரிக்கின்றார்கள். பாவங்களை சுட்டெரிக்கும் மாதமாக ரமழான் இருப்பதனால் அதிகமாக நன்மையான
காரியங்களைச் செய்து இறைவனிடம்
பிரார்த்தனைகள் மூலம் அவனின் நெருக்கத்தினை
பெறுவற்காக இம்மாதத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இம்மாதத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பது மிகப்
பிரதான கடமையாகும்.நோன்பு நோற்பதன் மூலமே அதனை
சிறப்பித்தவர்கள் பட்டியலில் அல்லாஹ்
மனிதர்களைச் சேர்த்துக்
கொள்கின்றான்.
பின்வருமாறு
அல்லாஹ் கூறிக் காட்டுவதன் மூலம் நோன்பு நோற்பதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம்.
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில
குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால்
(அந்நாட்களில்) எவரேனும்
நோயாளியாகவோ,
அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.எனினும் (கடுமையான
நோய்,முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப்
பரிகாரமாக “ஃபித்யாவாக” -ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக்
கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது –
ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை
அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே
உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(2:184)
சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு,நரகத்தின்
வாயல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்
விலங்கிடப்பட்டிருக்கும் இம்மாதத்தின் நோன்பினை அரிய
சந்தர்ப்பமாகக் கொண்டு முடிந்தளவு
வணக்க செயற்பாடுகளினாலும், மற்றும்
நற்கிரியைகளினாலும் அலங்கரித்து அல்லாஹ்வை
நெருங்கி நன்மைகளைப் பெற
ஒவ்வொருவரும் முனைப்புக் காட்ட வேண்டும்
என்பதை மேற்படி வசனம் எடுத்துக் கூறுகின்றது.
நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடும் எமது
சகோதரர்கள் இப்புனித மாதத்தில் குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்தல்
அவசியமாகும்.
ரமழானில் குடும்ப உறவினர்களின் உறவைப் பேணி
நடப்பதன் மூலமாக எம்மால்
மேற்கொள்ளப்படும் அனைத்து நற்கிரியைகளும்
அல்லாஹ்விடம் கணக்கிடப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்படும்.
மனிதர்கள் நன்மையினை நாடி மேற்கொள்கின்ற
செயற்பாடுகள் அனைத்தும்
அல்லாஹ்விடத்தில் சென்றடைய வேண்டும்
என்பது எதிர் பார்ப்பாகும்.இதற்கு குடும்ப உறவுகளைப் பேணி நடத்தல் முக்கியமாக்
கொள்ளப்படுகின்றது.
இன்றைய உலகில் குடும்ப உறவுகள் சுருங்கி தானும்,தனது வேலையும் என்ற நிலைமை அதிகரித்து
வருகின்றது. உறவுகளை மரணத்தின் போதாவது
புதுப்பித்துக் கொண்டவர்கள் அதனைக் கூட செய்ய முடியாத தன்மை மனிதர்களிடையே
வளர்ந்து வருகின்றது.
இஸ்லாம் குடும்ப உறவினைப் பேணி நடப்பதன்
முக்கியத்துவத்தினை வலிவுறுத்திக் கூறுகின்றிக்
காட்டுவதை பின்வருமாறு நோக்க முடியும்.
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற)
இஸ்ராயீல் மக்களிடத்தில், ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது,
(உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,
அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்
நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்
அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை
முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள் ,ஸகாத்தையும்
ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று
உறுதிமொழியை வாங்கினோம். ஆனால்
உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து)
புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள்
புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் (2:83).
ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என்னை
சுவர்க்கத்திற்கு கொண்டு
செல்லக்கூடிய ஒரு “அமலை” அறிவித்துத்
தருமாறு கேட்டார் அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் : “அல்லாஹ்விற்கு
இணைவைக்காது அவனை நீ வணங்கி,தொழுகையினை நிறைவேற்றி, ஸகாத் கொடுத்து குடும்ப உறவுகளை சேர்ந்து நடப்பதன்
மூலம் சுவர்க்கம் நுழைவாய்” (ஆதாரம் :புஹாரி).
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உறவுகள்
அர்ஷில் தொங்கிக் கொண்டு யார்
என்னை சேர்ந்து நடந்தாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்
கொள்வான், மேலும் யார் என்னை
துண்டித்து வாழ்ந்தாரோ அல்லாஹ் அவனை
விட்டும் துன்டித்து விடுவான் என்று கூறிக்
கொண்டிருக்கும்” (ஆதாரம்: முஸ்லிம்)
மேலே சொல்லப்பட்டுள்ள அல் குர்ஆன்,மற்றும் ஹதீஸ் வசனங்கள் குடும்ப உறவின்
முக்கியத்துவத்தினையும்,அவர்களின் உறவின் மூலமே
சுவர்க்கம் செல்வதற்கான வாய்ப்பு
இருப்பதையும் எமக்குத் தெளிவு படுத்துகின்றன.
இந்த வகையில் எமது சமூக அமைப்பிலுள்ள
குடும்பங்களின் உறவுகள் பேணப்படும் முறைமையினை
எடுத்துக் காட்டாக பின்வருமாறு நோக்க முடியும்.
தந்தை வழி,தாய் வழி உறவு முறைகள், மற்றும் திருமண
உறவு முறை என மூன்று வகையான குடும்ப உறவு
முறைகள் சமூகத்தில் உள்ளன.
அதில் தாய்,தந்தை வழி உறவினர்களுடன் உள்ள
தொடர்புகளைப் பார்க்கும் போது அவை பரஸ்பர உறவுகள் மூலம் புதுப்பிக்கப்படுவதையும், காலம் செல்லச் செல்ல குடும்பத்
தொடர்புகள் தாய் வழி உறவினர்களுடன்
சுருங்கி தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகள் விசேட வைபவங்களுடன்
மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ளதையும் பெரும்பாலும் கண்டு கொள்ளலாம்.
சில போது தந்தை வழி உறவினை மறந்த நிலைமையில்
உள்ளனர் என்று சொன்னாலும்
மிகையாகாது.
நவீன காலத்தில் சகல உறவினர்களையும் மறந்து தானும்
தனது குடும்பமும் என்ற நிலைமை
சமூகத்தினர்களிடையே அதிகரித்திருக்கின்றது. சகோதர,
சகோதரிகளுக்கிடையிலான உறவு பாதிப்புற்று
ஆரோக்கியமற்றிருக்கின்றது. தாய், தந்தையர்களை
கவனியாது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற உதவாத
பிள்ளைகளையும், சில கிராமங்களில்
திருமண வைபவங்களின் போது தந்தையினை அழைக்கக் கூடாது
என்று நிபந்தனை இடுகின்றவர்களையும்
காணலாம்.
திருமண பந்தத்தின் மூலம் இரு குடும்பங்கள் இணைந்து,
அதனால் புதிய முகங்களும்,புதிய உறவுகளும்
கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கப்பெற்ற
உறவினர்கள் தூரமாகி செல்லும் நிலைமையினை
குடும்பங்களில் அவதானிக்கின்றோம். திருமணத்திற்கு
முன்பு உச்சத்தினை எட்டிய திருமணத்தின் மூலமான
உறவுகள் திருமணத்திற்குப்பிறகு இருந்த தடம்
தெரியாமல் திசை மாறும் நிலைமை குடும்ப
உறவினர்களிடையே நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றது.
இந்நிலையில் குடும்ப உறவினர்களிடையே
அன்பும்,பிணைப்பும் அற்றுப் போனமைக்கான காரணம்
யாது ? அதனை வளர்ப்பதற்கான வழிமுறைகள்
என்ன? சிறந்த குடும்ப உறவின் பன்புகள் யாவை?
போன்ற கேள்விகளுக்கான தெளிவினைப் பெற
முயற்சிக்கலாம்.
குடும்ப பிணைப்பு உறவினர்களிடையே குறைந்து
போனமைக்கான காரணத்தினை எடுத்துக்காட்டாக
பின்வருமாறு சுட்டிக் காட்ட முடியும். குடும்ப உறவினை
பேணி நடப்பது பற்றிய போதிய
அறிவில்லாமை,மார்க அறிவில் பலவீனமான
நிலைமை, பணத்தாலும், பதவியாலும் பெருமையினை
வெளிப்படுத்துதல், பெற்றோர் தமது குடும்ப
உறவினர்களுடன் உறவைப் பேணாமையினால்
பிள்ளைகள் அதை தொடர்கின்ற நிலைமை , குடும்ப
உறவினர்களிடையே வெறுப்புணர்வினை
வெளிப்படுத்திய பார்வை, சந்திப்பதில் நீண்ட இடைவெளி ,உறவினர் நலனில் விருப்பினை
வெளிப் படுத்தாமை, பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுதல்
சொத்து பங்கீட்டில் நீதம் பேணாமை,
உறவினர்கள் விடயத்தில் பொறுமை
இழத்தல் ,பொறாமை, மற்றும் தீய
எண்ணம் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
மேற்சொல்லப்பட்ட பல
காரணங்களினால் குடும்பத்தினரிடையே பிளவுகள்
ஏற்பட்டு இரத்த உறவினர்கள் பகைமையினையும்,
குரோதத்தினையும் வெளிப்படுத்தி வருடக்
கணக்காக வாழ்ந்து வருகின்றமையினைக்
காண்கின்றோம்.
இந்நிலைமை மாற்றப்பட்டு, குடும்ப உறவினர்களுடன்
உறவினை புதுப்பித்துக் கொள்ள சகலரும்
முயற்சித்தல் அவசியமாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள்
சொன்னார்கள் “நிச்சயமாக ஆதமுடைய
மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை இரவும் என் மீது எடுத்துக்
காண்பிக்கப்படும் அதில் குடும்ப உறவுகளை
துண்டித்து வாழ்வோரின் செயற்பாடுகள்
அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாது” (ஆதாரம்: அஹமத்)
விட்டுக் கொடுப்பு, விருந்தளித்தல்,
நோயாளிகளை சந்தித்தல், வாழ்த்துக்களை பரிமாறிக்
கொள்ளல், தர்மங்களைச் செய்தல்,
வயதில் மூத்தவர்களை மதித்தல்,
உறவினர்களுக்கிடையிலுள்ள பிணக்குகளை
சீ்ர்செய்தல், அவர்களுக்காக பிரார்தித்தல்,
வீடுகளை தரிசித்தல் போன்ற பல செயற்படுகளில்
ஈடுபடுவதன் மூலம் உறவுகளை புதுப்பித்துக்
கொள்ள முயற்சிக்கலாம்.
குடும்ப உறவுகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய
கவனம் செலுத்துதல்
அவசியமாகும்.தமது உறவினர்கள் பற்றி
பிள்ளைகளுக்கு அறிவூட்டி, அவர்களது உறவின்
முக்கியத்துவத்தினைக் கூறி வழிப்படுத்தல் வேண்டும். மேலும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளில்
தலையிட்டு சமரசம் செய்து வைத்தல் அவர்கள் மீதுள்ள
பொறுப்பாகும். அவ்வாறு
இல்லாவிட்டால் சிறிய பிரச்சினைகள்
பிற்காலத்தில் பெரிதாகி பகைமையினை ஏற்படுத்தி விடும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “எவர்
அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி
இருக்கின்றாரோ அவர் தனது குடும்ப உறவினர்களுடன்
சேர்ந்து நடக்கட்டும்”. இந்த ஹதீஸ் குடும்ப
உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது ஈமானிய
பன்பாகும் என்பதை மிகத் தெளிவாக எமக்கு சொல்லித் தருகின்றது.
எனவே ஈமானை அதிகரித்து நன்மைகளைப் பெறும்
இம்மாதத்தில் தூரமாகிப் போயுள்ள குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்து ஈமானிய
பன்புள்ளவர்களாக வாழ முயற்சித்தல் எல்லோர்
மீதுமுள்ள கடமையாகும்.
செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே
உறவுகளும் வாடிவிடும்.
அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு
வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும்.
அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள்
சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் போதும். விலகி
செல்கிறார் என்று தோன்றும்போதே நாம்
இன்னும் நெருக்கமாக முயல வேண்டும்.
ஒரு மரத்திலிருந்து இலட்சக்கணக்கில் தீக்குச்சிகள்
செதுக்கலாம். அதேவேளை இலட்சோபலட்ச
மரங்களை தீ வைத்துக் கொளுத்தவும் ஒரு
தீக்குச்சியே போதும். உறவுகளும் அப்படித்தான்.
பிடிக்காத ஒரு வார்த்தையால்தான் சேர்ந்து இருந்த உறவுகள் பிரிந்து விடுகிறது. இறுதியில்..
அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதில்லை. அங்கே
கண்டால் இங்கேயே முகம் திருப்புவோம்.
காலங்கள் கடந்துவிட்டால்.. "எதற்காக
சண்டையிட்டோம்” என்பதுகூட மறந்துவிடுகிறது.
ஆனாலும் உறவாட மனம் வருவதில்லை.
ஒரு தொலைபேசி அழைப்பும், புன்னகையுடன் ஒரு
உரையாடலும் போதும் வெறுப்பு நெருப்பை
அணைக்க.. ஆனாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு தயக்கம். ஒரு ஸலாம் போதும் அனைத்தையும்
முடிவுக்குக்கொண்டு
வர.. ஆனாலும் ஏனோ
வீண் பிடிவாதம்.
இறைத் தூதராக வந்தபோது நபி صلى الله عليه وسلم அவர்களை
உறவுகள் வெறுத்தனர். ஒதுங்கினர்..
ஒதுக்கினர். ஆனால் நபிகளார் விடவில்லை..
அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களிடம்
பேசினார்கள்:
"என் அருமை இரத்தபந்த உறவுகளே..! உலகமே
உங்களுக்கு தீயவழி காட்டினாலும்.. ஒருபோதும்
நான் உங்களுக்கு தீயவழி காட்டமாட்டேன்.
அருமை உறவுகளே! நான் கொண்டுவந்த
சத்திய மார்க்கத்தை ஏற்பதும் ஏற்காமல்
இருப்பதும் உங்கள் விருப்பம். ஆயினும் நமக்கிடையே
இருக்கும் இரத்த பந்த உறவை ஏன்
துண்டிக்கின்றீர்கள்..?. வாருங்கள் உறவைப்
பேணுவோம்!”
மறந்துவிட வேண்டாம் உலகில்.. " உறவு
இல்லாவிட்டால் துறவு..!”. மறுமையிலோ உறவைத்
துண்டித்து வாழ்ந்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில்
யாரிடமெல்லாம் உறவு விட்டுப் போயிருக்கிறதோ
அவர்களிடமெல்லாம்
போன் செய்து உறவுகளைப் புதுப்பித்துக்
கொள்ளுங்கள்.
கருணையாளன் அல்லாஹ் அளப்பரிய அருள் புரிவான்
புரிவான் உங்கள் மீது!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 21-06-2017.

No comments:
Post a Comment