அல் அக்ஸா மஸ்ஜிதை இஸ்ரேலியர்களிடம் இருந்து கைபெற்றுவது பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் கடமை இல்லை உலக முஸ்லிம்களுடைய கடமை அல் அக்ஸா மஸ்ஜித் கண்டிப்பாக வெற்றி கொள்ளப்படும் இது நபியுடைய முன் அறிவிப்பு,
“தபூக் போரின் போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,
எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(வ) ஆதாரம்: புஹாரி- 3176
நபி(ஸல்) அவர்களது இந்த முன்னறிவிப்பு உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது. இந்த முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும் உறுதி செய்கின்றது.
உமர் (ரலி) காலத்தில் எதிரிகளிடம் இருந்து இந்த பள்ளியை மீட்டெடுத்தார்கள் திரும்பவும் இது எதிரிகளிடம் கையில் போய் விட்டது என்பது உலகம் அறிந்த உண்மை ஆனால் இறுதியில் முஸ்லிம்கள் கைப்பற்றுவார்கள் என்பது நபி(ஸல்) அவர்களுடைய முன் அறிவிப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது,
உமர் ஹத்தாப் (ரலி) அவர்கள் எப்படி எதிரிகளிடம் இருந்து இந்த பள்ளியை மீட்டார்களோ அதை போல் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் இருந்து உறுதியாக அல் அக்ஸா மஸ்ஜிதை மீட்பார்கள் அதற்காக இறைவனிடம் நாம் துஆ செய்வோம்.
அதே சமயத்தில் பாலஸ்தீனத்தை ஒட்டிய சிரியாவில் அவ்வப்போது சில கொடுரங்களை நம்மால் கேட்க முடிகிறது
மீடியா பல செய்திகளை மறைக்கிறது என்பதே உண்மை
அதே சமயத்தில் இணையதளத்தை என்பதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்றால் மிக வருத்தமாக உள்ளது நம் மக்களின் அதிபுத்திசாளிதனத்தை இதனை கொண்டுபார்க்க முடிகிறது, எப்படியென்றால்
சிராயாவில் போர் அங்குள்ள குழந்தைகள் கொல்லபடுகின்றார்கள்,
என்று ஒரு குழந்தை படத்தை மீடியா மூலம் முதலில் வெளியாகுமேயானால்
உடனே நம் மக்கள் நானும் குரல்கொடுக்கின்றேன் என்பதை போல் வாட்சப், முகநூல் இது போல சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைபடத்திற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தை வைத்து தானும் அவர்களுக்கு அதாவது பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவதாகவும், அல்லது ஆதரவாகவும், நாங்களும் தெரிவிக்கின்றோம் என்பதை போல் மனிதர்களின் பலஹீனத்தை பயன் படுத்துகிறார்கள்,
இதுபோல் உள்ளவர்கள் அவர்களின் மூடதனத்தை மட்டுமே பார்க்க முடிகிறது,
சிந்தியுங்கள் மக்களே
சிந்தியுங்கள்,
நீங்கள் அப்படி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அவர்களின் புகைப்படத்தை வைத்தால் சரியாகிவிடுமா
அது சரி எங்கேயோ நடக்கும் பிரச்சினையை நாங்கள் எப்படி சரிசெய்ய முடியும் ,
அதானால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்களின் புகைபடத்தை வைக்கின்றோம் என்று சிலரின் கருத்து,
ஆனால் இதனை நாம் சற்று சிந்திக்க வேண்டும் அப்படி நாம் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தை வைத்தால்
பிரச்சனை உடனே சரியாகி விடுமோ,
மூடராக இல்லாமல்
அல்லாவிடம் பிராத்திப்போம்,
பாலஸ்தீன பிரச்சனையோ,
அல்லது அதனை ஒட்டிய சிரியா நாட்டு பிரச்சனையோ
நாம் பிராத்திக்க வேண்டியது முதலில் அங்குள்ள கொடுரங்களை செய்பவர்களின் முஸ்ரிக்குகளுக்கு எதிராக சிறந்த கலீஃபாவை எங்களிடம் இருந்தே கொண்டு வா யா அல்லாஹ்
என்று பிராத்திப்போம்,
பாலஸ்தீன மக்களுக்காக, சிரியா மக்களுக்காக நாம் செய்ய வேண்டியது
அங்கு நடக்கும் கொடுரங்களை வைத்து நாம் அவர்களின் பரிதாபங்களை கொண்டு நாம்
அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டாம், அதற்கு பதிலாக அல்லாவிடம் துவா செய்வோம், நம்முடைய பிரார்த்தனையில் தான் உள்ளது பாலஸ்தீன, சிரியா , அல்அக்ஸாபள்ளிவாசல் வெற்றி
இது உலக முஸ்லிம்களின் வெற்றி
முஸ்ரிக்குகளிடம் இருந்து பெற வேண்டிய வெற்றி, இப்போது நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி முஸ்ரிக்குகளின் ஆட்சியே
உலக இஸ்லாமியர்களின் வெற்றியின் தொடக்கமே பாலஸ்தீன நாடுதான்
அதனாலே நாம் திரும்ப திரும்ப இந்த கட்டுரையின் முலம் சொல்ல வருவது இன்ஷா அல்லாஹ் ஒரு சிறந்த இஸ்லாமியராக நம் உம்மத்தில் இருந்தே
அதாவது உலக இஸ்லாமியரான மனிதர்களின் ஒருவராக மக்களுக்கு வேலை செய்யக் கூடிய பிரதிநிதி
பாலஸ்தீனத்தில் இருக்க வேண்டும்,
அப்படி ஒரு சிறந்த ஆட்சியாளர்
உலக இஸ்லாமியருக்கு இருக்குமேயானால்
இன்ஷாஅல்லாஹ் உலக இஸ்லாமியர்களுக்கு வெற்றிபாதையாக அமையும் இன்ஷா அல்லாஹ் இதற்காக
இதன் தொடர்ச்சியை படிப்பவர்கள்
அல்லாஹ்விடம் கேளுங்கள்,
முழு மனதளவில் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்).
முஹம்மது சலீம் - அமெரிக்கா.
Wednesday, 25 April 2018
Tuesday, 24 April 2018
ரமலானை வரவேற்போம் !!!
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும். அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிநடந்த முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!
ரமலான் பாக்கியம் நிறைந்த மாதமாகும். அதில்தான் அல்குர்ஆன் இறங்கியது. அது புனித புனிதமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறங்கியது. அவ்விரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். ரமலான் வந்தால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகவாயில்கள் மூடப்படுகின்றன. ரமலானை நபி (ஸல்) அவர்கள் பல வருடங்கள் சந்தித்து அதன் சிறப்பையும், மகிமையையும் அடைந்து கொள்ள பலவழிமுறைகளை தனது சமுதாய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்கள். அவற்றை ஒரு முஸ்லிம் அறிந்து செயல்படுவதால் நிச்சயமாக ரமளானின் பாக்கியத்தை அடைந்தவனாக ஆகுவான்,
2:185.ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
ரமலானின் நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் சேர்க்கப்பட்டிருப்பதை சிறுபிராயத்திலேயே ஒரு முஸ்லிம் போதிக்கப்படுவது பெரியவனாகிய பின்பு அந்தக்கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். சிறு பருவத்தில் நோன்பு நோற்கும் பழக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதை நோற்கும் பருவ வயதெல்லையை அடைந்த பின்னால் அதைப் பாழடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு பாழடிக்கின்றான். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பதைப் பொய்ப்பிக்கின்ற இந்தத் தீய நடைமுறையை வெளிச்சூழல்களில் இருந்தே அவன் கற்றுக் கொள்கின்றான். ஆரம்ப காலங்களில் பட்டினி கிடந்து நோன்பு நோற்ற சின்னஞ் சிறுசுகளின் பட்டியலில் இவனும் ஒருவனாக இருந்தான் என்பதை நினைக்கின்ற போது அல்லாஹ்வின் கடமையில் எவ்வளவு குறை செய்கின்றான் என்று சிந்தித்துப்பாருங்கள்.
ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் கடமையாக நோன்பு நோற்று வந்தனர், ஸஹாபாப் பெண்கள் அதை நோற்றதோடு தமது குழந்தைகளையும் நோன்பு பிடிக்கச் செய்தார்கள். பசியினால் கதறும் போது பஞ்சினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைக் கொடுத்து நோன்பு திறக்கும் நேரம் வரும் வரை அவர்களது கவனத்தை திசைத் திருப்பிவிடுவார்கள் என்ற செய்தியை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண்கின்றோம். இவ்வாறான நிலை நம்மிடமும், நமது குழந்தைகளிடமும் வருவதற்கு என்ன முயற்சி செய்துள்ளோம் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
யார் இறை நம்பிக்கையுடனும், நன்மை நாடியும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).
புனித லைலத்துல் கத்ரின் துஆ: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! புனித லைலத்துல் கத்ரை (அதன் அடையாளங்களைக் கொண்டு) நான் அறியும் தருணத்தில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் ? என வினவியபோது
'அல்லா ஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ '
பொருள்:-அல்லாஹ்வே! நீ (பாவங்களை) மன்னிப்பவன். என்னை மன்னித்து விடுவாயாக! என பிரார்த்தனை செய்வாயாக என்று பதிலளித்தார்கள் (ஆதாரம்: திர்மிதி).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடை வள்ளலாக இருந்தார்கள். ரமலான் மாதத்தில் அதிகமதிகம் வாரிவழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அது முடியும் வரையும் சந்திப்பார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள். (புகாரி).
உடலும் உள்ளம் நலம் பெறும் மாதம்
இயற்கை மருத்துவத்தில் உண்ணாமை என்பது மருத்துவம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
டாக்கர்: சூ கூறுகிறார் உணவில்லாததால் இறந்து விட்டவர்களை விட வேண்டாத வேளையில் உணவுண்டு இறந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று அவர் ஆராய்ந்து கூறுகிறார் முப்பது நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனம் தவறான கருத்தாகும்.
உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர்: ஹக்ஸ்ஸி சில மண் புழுக்களை வைத்து ஆராய்ச்சி செய்தனர் அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார் ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒரு வேளை உணவையும் மறு வேளை பட்டினியாக வளர்த்து வந்தார் தொடர்ந்து உணவை சாப்பிட்ட மண் பழு அழிந்துவிட்டன ஆனால் ஒரு வேளை உணவும் மறு வேளை பட்டினியாகவும் சாப்பிட்ட மண் புழு நீன்ட நாட்கள் வாழ்ந்தது என்று தனது ஆய்வில் கூறுகிறார்.
பேராசிரியர்: சைல்டு இளமையோடு இருப்பதற்க்கு நோன்பு உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்
ரமலான் காலங்களில் செய்யவேண்டிய முக்கியமான செயல்கள்:
'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)இ திர்மிதி 761)
பாவ மன்னிப்பு தேடுதல், இமாம் ஜமாத்துடன் ஐந்து நேரத் தொழுதல, குர்ஆன் ஓதுதல, தராவீஹ் தொழுதுதல், தஹஜ்ஜத் தொழுதல், ஒற்றுமையாக இருத்தல, தஸ்பீஹ் செய்தல், குடும்பத்தார்களுக்கு உதவி செய்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல், உம்ரா செய்ய செல்லுதல், ஜாகத் உரியவர்க்கு முறையாக கொடுத்தல், நோன்பு திறக்க ஏழை எளியவருக்கு உதவி செய்தல், நன்மையை செய்ய பிற மக்களுக்கு உபதேசம் செய்தல், ஆர்வம் மூட்டுதல், உலக முஸ்லீம்களுக்காக துஆ செய்தல், இஃதிக்காப் இருத்தல்.
ரமலான் காலங்களில் செய்யகூடாத முக்கியமான செயல்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!. என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால். நான் நோன்பாளி!. என்று அவர் சொல்லட்டும்! மு'ம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான், தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் .(நூல்: புஹாரி)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லா';வுக்கு எந்தத் தேவையுமில்லை!'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். .(நூல்: புஹாரி)
பொய் பேசுதல், பாவம் செய்தல், தொழுகை விடுதல், வீண் பேச்சுக்கள் பேசுதல், சன்டையில் ஈடுபடுதல், தொலைக்காட்சி பார்த்தல், அதைப் பற்றி பேசுதல், காரணயில்லாமல் நோன்பை விடுதல், புறம் பேசுதல், ஹரமான சம்பாத்தியம், ஹராமான உணவு சாப்பிடுதல், ஆடம்பரமான ஆடைகள் வாங்குதல், அண்ணிய பெண்களோடு பேசுதல், அண்ணியப் பெண்களைந் பார்த்தல், இரவு நேரங்களில் வீண் விளையாட்டுகள்.
✍நஜ்முத்தீன்
( காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தீனியாத் ஆசிரியர் )
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ் இணையம்.
ஆஸிஃபாவிற்கு நீதி வேண்டும்!
இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற கஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தின் அமைதியான ரஸானா கிராமத்தைச் சார்ந்த 8 வயது ஆசிபா தனது குடும்பத்தினரின் குதிரைகள மேய்ப்பதற்காக மதியம் வெளியே சென்றாள். 2 மணியளவில் அவளை மற்றவர்கள் பார்த்துள்ளனர். 4 மணிக்கு அவளை காணவில்லை; குதிரைகள் வீடு திரும்பின. அவள் வரவில்லை. 2018 ஜனவரி 10 ம் தேதி அவளுடைய தந்தை முஹம்மது யூசுப், ஹீரா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சிறுமியை காணோம் என ஜம்மு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்ற போது 8 வயது சிறுமி என்றும் பாராமல் அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்றார்களாம் காவல்துறையினர்
குற்றவாளிகளுல் இருவர் சிறுமியின் குதிரைகளை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். பிறகு அவளுக்கு காணாமல் போன குதிரைகளை பிடித்து தருவதாக கூறி காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட சிறுமியை, காட்டில் வைத்து வன்புணர்வு செய்த பதின் வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான். அது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின் வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்தில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் திரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டாள்
பதின் வயது சிறுவன் ஒருவன் முதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி காவல் துறை அதிகாரி வரை அச்சிறுமியை கற்பழித்துள்ளனர். ஒரு சிறுமியிடம் தங்களது ஆண்மையை காட்டிய அந்த மனித மிருகங்கள் இறுதியில் அவளை கொலை செய்து வெளியே வீசியுள்ளனர்.
ஜனவரி 17, 2018 அன்று ஆசிபாவின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. தலை சிதைக்கப் பட்ட நிலையில் அவளுடைய உடல் கிடந்தது. பல்வேறு முறைகளில் அவளை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதற்கான அடையாளங்கள் அவளுடைய பிஞ்சு உடலில் இருந்தன.
மகளின் உடலைப் பார்த்துக் கதறிய தாய் “ எனது மகளின் உதடு கருத்திருந்த்து. அவளது கண்கள் பிடுங்கப்பட்டிருந்தன. இத்தகைய் ஒரு கோலத்தில் எனது மகளைப் பார்க்க நேர்ந்ததே என்று கதறியதாக அல்ஜஸீரா கூறுகிறது.
இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் .
பெண்ணை காணவில்லை என்ற புகாரை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியும் குற்றுயிராக கிடந்த சிறுமியை கற்பழித்திருக்கிறார்.
சிறுமியின் கொலைக்குப் பிறகு நடந்தவை கொடூரமானவை .
பிணக்கூறாய்வில் அச்சிறுமியின் உயிரற்ற உடலில் குளோனாசிபம் (Clonazepam) இருந்தது கண்டறியப்பட்டது. வன்புணர்வுக்கும் கொலை செய்யப்படுவதற்கும் முன்னர் அச்சிறுமிக்கு மயக்க மருந்து தரப்பட்டிருந்தது கூறாய்வு செய்த மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரால் பல நாட்களாக அச்சிறுமி ஒரு வழிபாட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந் திருக்கலாமென தடயவியற்சான்றுகள் பரிந்துரைக்கின்றன. வழிபாட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட முடிக்கற்றைகள் அப்பெண்ணின் முடியோடு ஒத்துள்ளதும் கண்டறியப்பட்டது. ஆசிபா பலமுறை பல்வேறு நபர்களால் வன்புணரப் பட்டிருப்பதாகவும் சாகும்வரை கழுத்து நெறிக்கபட்டிருப்பதாகவும், தலையில் கனமான கல்லால் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தடயவியற்சான்றுகள் கூறுகின்றன
தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசியிருக்கிறார்கள். வழக்கு பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள்.
ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு`இந்து' கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது' என்று போராட்டங்கள் வெடிக்கின்றன.
பிடிபி - பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டனர்.
குற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள்தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நட்த்தினார்கள்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை கதுவா மாவட்ட வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்தனர்,
உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்திச் சென்றனர்,
ஆனால் சிறுமியின் படுகொலை விவகாரம் நான்கு மாதங்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்த பிறகு உலகம் விழித்துக் கொண்டது. உலகளாவிய அளவில் சிறுமி கொல்லப்பட்டதற்கான கண்டன்ங்களும் இதற்கு பின்னாள் இருக்கிற பாஜக கட்சியினரின் மீதான விமர்சனங்களும் பெருகி உள்ளன.
நாடு சர்வதேச அரங்கின் முன் தலை குனிந்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவர்கள் அழுகிறார்கள் மீடியாக்களில் பிரபலங்கள் செய்தியை வாசிக்கிற போதே அழுகிறார்கள். இது மன்னிக்கப்பட முடியாத குற்றம் என அனைவரும் எழுதவும் பேசவும் செய்கிறார்கள்.
இந்த கோடூர கற்பழிப்புக்கும் படுகொலைக்கும் காரணம் என்ன யார் என்பது விரிவாக அலசப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவந்தது. காரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். எனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், இந்தச் சிறுமி.
ஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில் தனது குடும்பத்தினரின் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்தவளை கிராமத்து கோயில் வைத்து கற்பழித்து கொலை செய்யும் துணிச்சல் இந்த அடிப்படையிலேயே இந்தக் குழுவினருக்கு ஏற்பட்டது என்று சாதாரணமாக இந்தப் படுகொலைக்கான காரணத்தை பேசி விட்டு பலரும் நகர்ந்து விடுகின்றனர்.
அப்படியானால் இந்தப் படுகொலை ஒரு சில காம வெறி பிடித்தவர்களால நடைப்பெற்ற அக்கிரம்ம் அல்ல.
திட்டமிட்டு ஜம்மு பிராந்த்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் ஒரு பெரும் திட்ட்த்தின் ஒரு அங்கமே இது.
இந்த திட்ட்த்தை வகுத்தவர்கள் ஒரு சிலரோ ஒரு கிராமத்தினரோ அல்ல,
இந்த திட்ட்த்தை வகுத்துக் கொடுத்த்து ஆர் எஸ் எஸ் அமைப்பு. அதனை அரசியல் பிரிவான பாஜக் கட்சி.
அதனால் தான் அக்கட்சியை சேர்ந்த இரு எம் எல் ஏ க்கள் கற்பழித்தவர்களுக்கு ஆதரவாக தேசியக் கொடியின் பின்னணியோடு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்;
எனவே இக்குற்றத்திற்கு காரணமானவர்கள் இந்த 8 பேர் மட்டுமல்ல. ஆர் எஸ் எஸ் , பாஜக அது முன்னெடுத்துச் செல்லும் இந்துத்துவா சித்தாந்தம் இம்மூன்றுமே இத்தகைய கொடுமைக்கு காரணமாகும்.
இந்துச் சித்தாந்த வாதிகளுக்கு இப்படுகொலை ஒரு பொருட்டாக தெரியவில்லை என்பதை நடப்புகள் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும்,
ஒரு செய்தியை கவனியுங்கள்
ஆசிபா படுகொலை குறித்துக் கேரளத்தின் பலரிவட்டம் கோட்டக் மகிந்திரா வங்கிக் கிளையில் பணியாற்றிய விஷ்ணு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அவளைக் கொன்றது நல்லது, இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான மனித வெடிகுண்டாக மாறியிருப்பாள் எனப் பதிவிட்டுள்ளார்.
மனிதத் தன்மையற்ற இந்தக் கருத்துக்கு நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்த்தன காரணமாக அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வங்கி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்த்தால் கோட்டக் மகிந்திரா வங்கி. விஷ்ணுவைப் பணியில் இருந்து நீக்கியுள்ளனர் என்ற போதும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் ஒரு சித்தாந்தம் நாடு முழுவதும் பரப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
எனவே ஆசிபா வழக்கை ஆராயும் நீதிமன்றங்கள் இந்தப் பின்னணி குறித்து தெளிவாக ஆராய்ந்து மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்ய நினைக்கும் சக்திகள் விசயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.
இல்லை எனில் இந்தியா நரமாமிசப் பேர்வழிகள் தேசம் என்ற பழிச் செல் நிலைத்து விடும்.
8 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இஸ்லாம் இத்தகைய குற்றவாளிகள் கல்லால் எறிந்து கொல்லப் பட வேண்டும் என்பது மட்டுமல்ல அவர்கள் செய்த குற்ற்ச் செயல்களின் அளவுக்கு அந்தக் கொலை தண்டனையை கூட கடுமையாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
உரைனா குற்றவாளிகளை நபி நாயகம் (ஸல்) அவர்கள் மாறு கால் மாறு கை வாங்கி கண்களை தோண்டி கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்திய தேசம் பெண்களைப் பாதுகாப்பதற்காக பலியானவர்களின் வரலாறுகளை ஏராளாம கொண்ட தேசம்.
புதுக்கோட்டைக்கு அருகே காட்டுபாவா என்ற பெயரில் ஒரு தர்கா உள்ளது, அங்கு அடங்கியிருப்பவர் ஒரு சமூகப் போராளி முஸ்லிம் பெரியவர்.
அப்போதைய அரசனின் மகன் காமுகன், பெண்களை வேட்டையாடுபவனாக இருந்தான். ஒரு முறை ஒரு பெண்ணை கெடுக்க முயற்சித்த போது அரசனின் மகன் என்றும் பாராமல் அவனை எதிர்த்து அப்பெரியவர் போரிட்டார். அதில் அவர் கொல்லப் பட்டார். இப்போதும் அங்கு அவருடைய இரத்தம் காயாமல் இருக்கிறது என இந்துக்களே நம்புகிறார்கள்.
அதே போல வள்ளியூருக்கு பக்கத்தில் ஆத்தங்கரை செல்லும் வழியில் ஆள் யார் என அறியப்படாத ஒரு கப்ரு இருக்கிறது, அதை இந்துக்கள் அல்லாஹ் சாமி என்று அழைக்கிறார்கள். அவரும் அங்கிருந்த ஒரு காமுகனிடம் இருந்து இந்துப் பெண்களை காப்பாற்றுகிற சண்டையில் பலியானவர் என்று வரலாறு சொல்கிறார்கள்.
அஜ்மீரில் அடங்கியிருக்கிற காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி ரஹ் அவர்கள் ராஜபுத்திர இளரவரசரின் மனைவியை சதிக் கொடுமையிலிருந்து காப்பாற்றினார் என்ற வரலாறு பிரசித்தி பெற்றது,
இந்தியா இத்தகைய பெண்ணினப் பாதுகாவலர்களின் தேசம்.
அது இப்படி மத்த்தின் பெயரால் மக்களைப் பிளக்க மாபாதக செயல்களில் ஈடுபடுவோரின் தேசமாக மாறிப் போனது நம் காலத்தில் நாம் சந்திக்க நேர்ந்த பெரும் அவலம்.
வல்ல நாயன் இந்தச் சீரழிவுகளிலிருந்து நாட்டு மக்களை விரைவாக காப்பாற்றுவானாக!
இந்திய ஜனாதிபதி ஆசிபாவின் படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் தேசத்தின் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இருவரும் பதவி என்கிற முகமூடிக்குள் அமர்ந்து இந்த வார்த்தைகளை சொல்லக் கூடாது , மனிதர்களாக தமது கடமையை நிறைவேற்ற முழு மனதோடு முன்வரவ் வேண்டும்.
இந்தக் குற்றவாளிகளை மட்டுமல்ல அதற்கு பின்னே இருந்த சித்தாந்தத்தையும் சித்தாத வாதிகளையும் சட்ட்த்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
நன்றி - இணையம்.
காவிரி பிரச்சனைக்கு இஸ்லாம் கூறும் தீர்வு!!!
இனம் மொழி பிரதேசம் போன்ற உணர்வூகள் தூண்டப்படுவதன் காரணமாகவே காவிரி உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன.
இந்த உணர்வுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு நியாயமான விதிமுறைகளை வகுத்து கொண்டு அந்த விதிமுறைகளை உறுதியுடன் நடைமுறைப்படுத்தினால் காவிரி பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்பட்டு விடும்.
இஸ்லாம் இதற்கு நியாயமான பல விதிமுறைகளை வகுத்தளித்துள்ளது
தண்ணீர் யாருக்கும் சொந்தமானது அல்ல . அது அனைவருக்கும் பொதுவானது என்பது அதில் முதலாவது விதி.
தேவைக்கு மேல் இருக்கும் தண்ணீரை விற்க கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்தனர் . ஆதாரம் : முஸ்லீம் (2925)
அடுத்ததாக தண்ணீர் ஓடும் பாதையில் (ஆறுகளில், வாய்க்கால்களில்) யார் அருகில் இருக்கிறார்க்ளோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது விதி .ஆதாரம் : புகாரி (2360)
ஆற்றுக்கு அருகில் உள்ளவர்கள் பயன்படுத்தியது போக மீதியை தான் மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆயிரம் ஏக்கர் நிலத்தை பயிரிடும் அளவுக்கு தான் தண்ணீர் இருக்கிறது என்று வைத்து கொள்வோம் .
அனைவரும் உரிமை கொண்டாடி பத்தாயிரம் ஏக்கருக்கு பரவலாக விநியோகம் செய்ய முடிவெடுத்தால் அனைத்தும் பாழாகி போய் விடும். அந்த தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் போய் விடும் .
எனவே இருக்கும் தண்ணீரை மதிப்பிட்டு அதை எத்தனை ஏக்கருக்கு பயன்படுத்த முடியும் எனக் கணக்கிட்டு தண்ணீருக்கு அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்த அளவுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி .
தண்ணீர் உபரியாக இருக்கும் போது தேவையை விட அதிகமாக இருக்கும்போது தொலைவில் உள்ளவர்களுக்கு தடை செய்தால் அது கடுமையான குற்றம் என்று இஸ்லாம் கூறுகிறது .
நியாய தீர்ப்பு நாளில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசமாட்டான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் . அவர்களில் உபரி நீரை மற்றவர்களுக்கு தடுத்தவனும் ஒருவன் எனக் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி 2369, 7446,)
உபரி நீரை மற்றவர்களுக்கு தடை செய்யாதீர்கள் என்று கடுமையான உத்தரவையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். ஆதாரம் : (2353, 2354,)
காவிரியில் பல வருடங்களுக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்பது கர்நாடகத்தின் நிலையாக உள்ளது .
கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதவிட்டாலும் திறந்து விட்டே ஆக வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலையாக இருக்கிறது .
இந்த நிலை மாறினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் .
தமிழன், கன்னடன், என்ற உணர்வுகளை மறந்து தண்ணீரின் அளவையும் தேவையையும் மதிப்பிட்டு தண்ணீரை விநியோகம் செய்ய அதிகாரம் படைத்த நியாயமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இந்த நிலையை தயவு தாட்சணயமின்றி நடைமுறைப்படுத்தினால் , ஓடும் தண்ணீர் குறித்த எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் ...
இன்ஷா அல்லாஹ் .
நன்றி - இணையம்.
Monday, 23 April 2018
சீரழிக்கப்படும் கல்லூரி மாணவ, மாணவியர்களும் காரணிகளும்
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
தற்கால படிப்பறிவும் மனிதனை பண்படுத்தவில்லை என்பதற்க்கு அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி எனும் விபச்சார புரோக்கர் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலமும் மற்றும் அவர் மாணவிகளிடம் பேசிய கீழ்நிலை உரையாடலின் ஆடியோ பதிவும் சான்றாகி விட்டது
மதிப்பெண் மீதும் வசதி வாய்ப்புகளின் மீதும் ஏழ்மைநிலையில் உள்ள தனது மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை தூண்டி அரசியல் கழிசடைகளுக்கும் பணம் படைத்தோருக்கும் அடிமைகளாக்கி விபச்சாரியாக்கும் தந்திரத்தை பேராசிரியை நிர்மலாதேவி கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வந்தது தற்போது ஊர்ஜிதமாகிவிட்டது
குறிப்பிட்ட சில கல்லூரி மாணவிகள் விபச்சார புரோக்கர் பேராசிரியை நிர்மலா தேவியின் வண்டவாளத்தை தற்போது தண்டவாளம் ஏற்றி உள்ளார்கள் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் பேராசிரியை நிர்மலாதேவியின் வலையில் எத்தனை மாணவிகள் சிக்கி தனது கற்பை விற்பனை செய்திருப்பார்கள் என்பதும் அவைகளை மூடி மறைத்திருப்பார்கள் என்பதும் சிந்திப்போருக்கு அறிய முடியும்.
ஆடம்பரத்தின் மீதும் உலக கல்வியின் மதிப்பெண் மீதும் பொதுவாகவே இளம் பெண்களுக்கு அதிகமான ஈர்ப்பு இருப்பதால் தான் நிர்மலாதேவி போன்ற பெண் விபச்சாரி புரோக்கர்கள் தங்கள் வாழ்வை பொருளாதாரத்தால் வளப்படுத்தி கொள்கின்றனர்.
மாணவிகளையே விபச்சாரத்திற்க்கு பேராசிரியை நிர்மலாதேவி துணிச்சலாக விலை பேசுகிறார் என்றால் அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் எந்தளவுக்கு ஒழுக்கம் கெட்டவராக இருப்பார் என்பது புலனாகிறது.
அதனால் தான் நிர்மலாதேவியின் கணவனும் கூட அவரை பிரிந்து வாழ்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.
சாதா நிலை பேராசிரியையாக இருக்கும் நிர்மலாதேவியும் துவக்கத்தில் ஒழுக்கமுள்ளவராகவே இருந்திருப்பார்.
அவருடைய படிக்கும் பருவத்தில் அவரிடம் யாரோ செய்த மூளை சலவையும் அவருடைய பதவி மோகமும் தான் நிர்மலாதேவியை மற்றும் அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இன்றைக்கு இந்த அவமானத்தில் தள்ளி உள்ளது.
படிப்பின் மீதும் பட்டத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் பிள்ளைகளை கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அந்த பிள்ளைகளின் நடவடிக்கைகள் மற்றும் நட்புகளை இதர தொடர்புகளை அன்றாடம் கவனிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
ஒழுக்கத்தை கடை பிடிக்காது படிக்கும் படிப்புகளும் அதன் மூலம் வாங்கும் பட்டங்களும் பதவிகளும் குப்பைக்கு சமமானவை என்பதை பேராசிரியை நிர்மலிதேவியின் அவமானம் இன்றைய பெற்றோர்களுக்கு படிப்பினை பாடமாக அமைய வேண்டும்.
குறிப்பாக கல்லூரிகளில் உறவினர்களின் கண்காணிப்பில் இல்லாது தங்கி படிக்கும் மாணவ மாணவியர்களில் பலர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் அசிங்கத்திற்க்கும் ஆபாசத்திற்க்கும் அடிமைகளாகி வருகின்றனர்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்களை பெற்றுள்ள பல குடும்ப பெண்கள் கல்லூரிகளில் படிக்கும் பல இளைஞர்களை காமத்தால் மயக்கி சீரழிப்பதும் சென்னை மற்றும் பெருநகரங்களில் சாதாரணமாகி வருகிறது.
இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது சுதந்திரம் எனும் போர்வையில் கட்டுப்பாடு இல்லாத உரிமைகள் தான் என்பதை சமுதாயம் உணர வேண்டும்.
عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي
உங்கள் வயிறுகள் மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனஇச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்
என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத் அஹ்மத்
நட்புடன் J .இம்தாதி
பெற்றோர்களின் கவனத்திற்கு
இந்த-பதிவு முக்கியமானது.!*
1. ஆணோ,பெண்ணோ,எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch","bad touch"எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்.
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!.
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!.
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினமும் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!.
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!.
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும்,. அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்!. பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள். சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்றது....
இன்ஷா அல்லாஹ் ...
குழந்தைகள் நலனை (அக்கரையோடு) பேணிப்பாதுகாப்போம்........
1. ஆணோ,பெண்ணோ,எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch","bad touch"எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்.
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!.
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!.
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினமும் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!.
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!.
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும்,. அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்!. பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள். சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்றது....
இன்ஷா அல்லாஹ் ...
குழந்தைகள் நலனை (அக்கரையோடு) பேணிப்பாதுகாப்போம்........
Friday, 20 April 2018
மார்ச் 2018 வெற்றியாளர்கள்
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் மார்ச் மாதம் 2018 வெற்றியாளர்கள்:
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇ராஜா முஹம்மது - கட்டுமாவடி 107
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
💰 இரண்டாம் பரிசு💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 106
அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை மாவட்டம்) 106
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது முஸ்தபா -சென்னை 106
அப்துல் பாசித் - காயல்பட்டணம் 106
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
❇❇ சிறப்பு பரிசு ❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 106
நெய்னா முஹம்மது அலி -ஜெகதாப்பட்டினம் 106
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 106
சுல்தான் - திருநெல்வேலி 106
பீர் முஹம்மது - திருநெல்வேலி 105
நஜ்முதின் - கூத்தாநல்லூர் 104
பதுருசமான் - கீழக்கரை 103
முஹம்மது ஹனிபா - சேலம் 103
இரண்டாவது குழுமத்தில்உள்ள சகோதரர்கள்:
தாஜுதீன் - B. மேட்டூர் 101
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🎁🎁🎁 ஊக்க பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ளா நபர்கள்
1. மஹதி -திருச்சி 100
2. அஜாருதீன் - கும்பகோணம் 97
3. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் 96
4. ரம்ஜான் - திருநெல்வேலி 94
5. ஷேக் ஷஃபி - துபாய் 87
6. காதர் உசேன் - மலேசியா 83
7. அப்துல் காதர் - திருநெல்வேலி 81
8. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி 55
9. அபூ தல்ஹா - திருநெல்வேலி 51
10. பீர் முஹம்மது - ராஜகிரி 42
11. சாதிக் - சவுதி 40
12. அப்பாஸ் அலி - சென்னை 40
13. ஜாகிர் உசேன் - சென்னை 31
14. நூர் முகமது அஜீஸ் - சிவகாசி 26
15. முகம்மது ஆசிக் - வழுத்தூர் 18
16. முகம்மது இம்ரான் -நாமக்கல் 18
இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:
17. முஹம்மது ஷஃபி -வெள்ளையபுரம் 69
18. அஹமது புகாரி - சென்னை 67
19. அஜ்மல் - திருநெல்வேலி 52
20. அலி கான் - பரங்கிப்பேட்டை 24
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..
"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்
பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
பரிசளிப்பினுடைய விவரம்:
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1. முதல் பரிசு 900 ₹ மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி மூன்றாம் பாகம் (அல்லது)முஸ்லிம் மூன்றாம் பாகம்(1நபருக்கு)
2. இரண்டாம் பரிசு 450₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு300₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
4. சிறப்பு பரிசு200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
6. ஊக்கப் பரிசு20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
கியாமத் நாளை நோக்கியின் மார்ச் மாதம் 2018 வெற்றியாளர்கள்:
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇ராஜா முஹம்மது - கட்டுமாவடி 107
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
💰 இரண்டாம் பரிசு💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 106
அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை மாவட்டம்) 106
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
🚏 மூன்றாம் பரிசு🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது முஸ்தபா -சென்னை 106
அப்துல் பாசித் - காயல்பட்டணம் 106
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
❇❇ சிறப்பு பரிசு ❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 106
நெய்னா முஹம்மது அலி -ஜெகதாப்பட்டினம் 106
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 106
சுல்தான் - திருநெல்வேலி 106
பீர் முஹம்மது - திருநெல்வேலி 105
நஜ்முதின் - கூத்தாநல்லூர் 104
பதுருசமான் - கீழக்கரை 103
முஹம்மது ஹனிபா - சேலம் 103
இரண்டாவது குழுமத்தில்உள்ள சகோதரர்கள்:
தாஜுதீன் - B. மேட்டூர் 101
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🎁🎁🎁 ஊக்க பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ளா நபர்கள்
1. மஹதி -திருச்சி 100
2. அஜாருதீன் - கும்பகோணம் 97
3. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் 96
4. ரம்ஜான் - திருநெல்வேலி 94
5. ஷேக் ஷஃபி - துபாய் 87
6. காதர் உசேன் - மலேசியா 83
7. அப்துல் காதர் - திருநெல்வேலி 81
8. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி 55
9. அபூ தல்ஹா - திருநெல்வேலி 51
10. பீர் முஹம்மது - ராஜகிரி 42
11. சாதிக் - சவுதி 40
12. அப்பாஸ் அலி - சென்னை 40
13. ஜாகிர் உசேன் - சென்னை 31
14. நூர் முகமது அஜீஸ் - சிவகாசி 26
15. முகம்மது ஆசிக் - வழுத்தூர் 18
16. முகம்மது இம்ரான் -நாமக்கல் 18
இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:
17. முஹம்மது ஷஃபி -வெள்ளையபுரம் 69
18. அஹமது புகாரி - சென்னை 67
19. அஜ்மல் - திருநெல்வேலி 52
20. அலி கான் - பரங்கிப்பேட்டை 24
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..
"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்
பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
பரிசளிப்பினுடைய விவரம்:
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் "இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
1. முதல் பரிசு 900 ₹ மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி மூன்றாம் பாகம் (அல்லது)முஸ்லிம் மூன்றாம் பாகம்(1நபருக்கு)
2. இரண்டாம் பரிசு 450₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
3. மூன்றாம் பரிசு300₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
4. சிறப்பு பரிசு200₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)
5. ஆறுதல் பரிசு100₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
6. ஊக்கப் பரிசு20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
Thursday, 19 April 2018
குர்ஆனிய தலைமுறைதான் இன்றையத் தேவை...!
🕌மதீனத்துப் பள்ளிவாசல் மக்கள் திரளால் நிறைந்திருந்தது.
📢ஒரு முக்கிய அறிவிப்புக்காக மக்கள் அழைக்கப்பட்டிருக்க, கலீஃபா உமர்(ரலி) அவர்கள் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! நபிகளாரின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த மஹ்ர் தொகையை விட அதிகமாக எவரும் வாங்கக் கூடாது. மீறி வாங்கினீர்களெனில் கூடுதலாக வாங்கப்பட்ட தொகையைப் பறித்து அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்துவிடுவேன்’ என்று அறிவிக்கின்றார்.
👉உடனே மிம்பரிலிருந்து இறங்கி பள்ளிவாசலலை விட்டு வெளியே வர யத்தனிக்கின்றார்.
🤶🏻அப்போது அவருடைய வழியை மறிக்கின்ற வகையில் நிற்கின்றார் ஒரு மூதாட்டி. ‘அமீருல் முஃமினீன் - நம்பிக்கையாளர்களின் தலைவரே! எதனைப் பின்பற்றி நடக்க வேண்டும்? நீர் பிறப்பிக்கின்ற சட்டத்தையா? இறைவனின் வாக்கையா?’ என்று உரத்தக் குரலில் தட்டிக் கேட்கின்றார், அந்த மூதாட்டி.*
👍🏽ஒரே ஒரு கணம் கூட தாமதிக்காமல், ‘இறைவாக்கைத்தான் பின்பற்ற வேண்டும். அதிலென்ன சந்தேகம்? என்ன சொல்ல வருகின்றீர்?’ என வினவுகின்றார், உமர்(ரலி).
‘💰இறைவனே ‘நீங்கள் அவளுக்குப் பணக் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும்கூட’ என்று குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்ற போது, மஹ்ராக எந்தவிதமான வரையறையும் இல்லாமல் குவியல் குவியலாகப் பணத்தைத் தரலாம் என இறைவன் அனுமதித்திருக்கின்றபோது, எந்த அடிப்படையில் மஹ்ர் தொகைக்கு வரையறையை விதிக்கின்றீர்கள்?’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் கேட்கின்றார், அந்த மூதாட்டி.
✅உமர்(ரலி) உடனே மீண்டும் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! மஹ்ர் தொகையை அதிகமாக நிர்ணயிப்பதை நான் தடை செய்திருந்தேன். அதனை நீக்குகின்றேன். நீங்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மஹ்ர் தொகையை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அறிவித்தார்.
----
👩🏽இந்த வரலாற்று நிகழ்வை நாம் அனைவருமே நிறைய தடவை கேட்டிருப்போம். படித்திருப்போம். பொதுவாக இஸ்லாம் தருகின்ற கருத்துச் சுதந்திரத்தை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வு முன்னுதாரணமாகச் சொல்லப்படும். இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமும் கண்ணியமும் தந்திருக்கின்றது என்பதற்குச் சான்றாகவும் இந்த நிகழ்வு முன் வைக்கப்படும்.
☝🏽அவற்றையும் தாண்டி இந்த நிகழ்வு தருகின்ற செய்தி ஒன்று உண்டு. அது நீங்களும் நானும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இன்றையக் காலத்தில் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.
🤝🏼அதுதான் குர்ஆனுடனான தொடர்பு.
👤👥அந்தக் காலத்தில் மக்கள் அனைவருமே குர்ஆனுடன் ஆழமான, நெருக்கமான, உறுதியான தொடர்பு வைத்திருந்தார்கள். இதனால் அரசாங்கம் ஒரு சட்டத்தைப் பிறப்பிக்கின்ற போது உடனுக்குடன் குர்ஆனிய வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறைச் சுட்டிக்காட்ட அவர்களால் முடிந்தது.
🤶🏻ஒரு சாதாரண மூதாட்டியே குர்ஆனை மேற்கோள் காட்டித் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு அவர்கள் குர்ஆனுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தார்கள்.
☝🏽அத்தகைய குர்ஆனிய சமூகமும் குர்ஆனிய தலைமுறையும்தாம் இன்றையத் தேவை...!
அல்லாஹ் அருள் செய்வானாக...!
- அஜீஸ் லுத்புல்லாஹ்
📢ஒரு முக்கிய அறிவிப்புக்காக மக்கள் அழைக்கப்பட்டிருக்க, கலீஃபா உமர்(ரலி) அவர்கள் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! நபிகளாரின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த மஹ்ர் தொகையை விட அதிகமாக எவரும் வாங்கக் கூடாது. மீறி வாங்கினீர்களெனில் கூடுதலாக வாங்கப்பட்ட தொகையைப் பறித்து அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்துவிடுவேன்’ என்று அறிவிக்கின்றார்.
👉உடனே மிம்பரிலிருந்து இறங்கி பள்ளிவாசலலை விட்டு வெளியே வர யத்தனிக்கின்றார்.
🤶🏻அப்போது அவருடைய வழியை மறிக்கின்ற வகையில் நிற்கின்றார் ஒரு மூதாட்டி. ‘அமீருல் முஃமினீன் - நம்பிக்கையாளர்களின் தலைவரே! எதனைப் பின்பற்றி நடக்க வேண்டும்? நீர் பிறப்பிக்கின்ற சட்டத்தையா? இறைவனின் வாக்கையா?’ என்று உரத்தக் குரலில் தட்டிக் கேட்கின்றார், அந்த மூதாட்டி.*
👍🏽ஒரே ஒரு கணம் கூட தாமதிக்காமல், ‘இறைவாக்கைத்தான் பின்பற்ற வேண்டும். அதிலென்ன சந்தேகம்? என்ன சொல்ல வருகின்றீர்?’ என வினவுகின்றார், உமர்(ரலி).
‘💰இறைவனே ‘நீங்கள் அவளுக்குப் பணக் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும்கூட’ என்று குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்ற போது, மஹ்ராக எந்தவிதமான வரையறையும் இல்லாமல் குவியல் குவியலாகப் பணத்தைத் தரலாம் என இறைவன் அனுமதித்திருக்கின்றபோது, எந்த அடிப்படையில் மஹ்ர் தொகைக்கு வரையறையை விதிக்கின்றீர்கள்?’ என்று நறுக்குத் தெறித்தாற்போல் கேட்கின்றார், அந்த மூதாட்டி.
✅உமர்(ரலி) உடனே மீண்டும் மிம்பரில் ஏறுகின்றார். ‘மக்களே! மஹ்ர் தொகையை அதிகமாக நிர்ணயிப்பதை நான் தடை செய்திருந்தேன். அதனை நீக்குகின்றேன். நீங்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மஹ்ர் தொகையை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அறிவித்தார்.
----
👩🏽இந்த வரலாற்று நிகழ்வை நாம் அனைவருமே நிறைய தடவை கேட்டிருப்போம். படித்திருப்போம். பொதுவாக இஸ்லாம் தருகின்ற கருத்துச் சுதந்திரத்தை உணர்த்துவதற்காக இந்த நிகழ்வு முன்னுதாரணமாகச் சொல்லப்படும். இஸ்லாம் பெண்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமும் கண்ணியமும் தந்திருக்கின்றது என்பதற்குச் சான்றாகவும் இந்த நிகழ்வு முன் வைக்கப்படும்.
☝🏽அவற்றையும் தாண்டி இந்த நிகழ்வு தருகின்ற செய்தி ஒன்று உண்டு. அது நீங்களும் நானும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இன்றையக் காலத்தில் பெரிதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தி.
🤝🏼அதுதான் குர்ஆனுடனான தொடர்பு.
👤👥அந்தக் காலத்தில் மக்கள் அனைவருமே குர்ஆனுடன் ஆழமான, நெருக்கமான, உறுதியான தொடர்பு வைத்திருந்தார்கள். இதனால் அரசாங்கம் ஒரு சட்டத்தைப் பிறப்பிக்கின்ற போது உடனுக்குடன் குர்ஆனிய வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தவறைச் சுட்டிக்காட்ட அவர்களால் முடிந்தது.
🤶🏻ஒரு சாதாரண மூதாட்டியே குர்ஆனை மேற்கோள் காட்டித் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு அவர்கள் குர்ஆனுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்தார்கள்.
☝🏽அத்தகைய குர்ஆனிய சமூகமும் குர்ஆனிய தலைமுறையும்தாம் இன்றையத் தேவை...!
அல்லாஹ் அருள் செய்வானாக...!
- அஜீஸ் லுத்புல்லாஹ்
மஹ்ரமான பெண்கள் பட்டியல்
மஹ்ரமான பெண்கள் பட்டியல்
========= ======== ======
1.அம்மா
2.தாதிமா
3.நன்னீமா
4.குப்பீமா
5.காலாமா/பெரியம்மா
6.அக்கா/தங்கச்சி
7. மனைவி
8. மாமியார்
9.மகள்
10. அக்கா/தங்கச்சியின் மகள்
11.அண்ணன் மகள்
12. பேத்தி
(மகன் வழி
மற்றும்
மகள் வழி )
13. மருமகள்
14. பால்குடி தாய்
15. பால்குடி அக்கா,
தங்கை.
இன்னும் இருவர்
16. தன் தந்தையின் மனைவி
( தன் அம்மா அல்லாத இன்னொரு மனைவி)
17. தன் மனைவியின் மகள்
( வேறொரு கணவன் மூலம் பிறந்தவள்)
நாம் மஹ்ரமாக நினைக்கின்ற
உண்மையில்
அவர்கள்
மஹ்ரம் அல்ல
அவர்கள் யார்?
##############
1. சின்த்தா மகள்
2. பெருத்தா மகள்
3. காலாமா மகள்
4. பெரியம்மா மகள்
5. தன் மாமாவின் மனைவி ( மம்மாணி)
❌❌❌❌❌❌❌
இவர்கள்
மஹ்ரம் இல்லை.
🚑🚑🚑🚑🚑
அபாயமான பெண்கள்
அதாவது
மரணம் போன்ற
மஹ்ரமே அல்லாதவர்கள்
அவர்கள் யார்
Danger list
மஹ்ரமே இல்லை
6. தன் மனைவியின் அக்கா, தங்கச்சி
7. தன் அண்ணன், தம்பி மனைவி
இவர்கள் மஹ்ரம் இல்லை
அல்லாஹ்
தீன் படி
நடக்க
அருள்
புரிவானாக!
ஆமீன் !
- அ.அப்துல்லா பாகவி
========= ======== ======
1.அம்மா
2.தாதிமா
3.நன்னீமா
4.குப்பீமா
5.காலாமா/பெரியம்மா
6.அக்கா/தங்கச்சி
7. மனைவி
8. மாமியார்
9.மகள்
10. அக்கா/தங்கச்சியின் மகள்
11.அண்ணன் மகள்
12. பேத்தி
(மகன் வழி
மற்றும்
மகள் வழி )
13. மருமகள்
14. பால்குடி தாய்
15. பால்குடி அக்கா,
தங்கை.
இன்னும் இருவர்
16. தன் தந்தையின் மனைவி
( தன் அம்மா அல்லாத இன்னொரு மனைவி)
17. தன் மனைவியின் மகள்
( வேறொரு கணவன் மூலம் பிறந்தவள்)
நாம் மஹ்ரமாக நினைக்கின்ற
உண்மையில்
அவர்கள்
மஹ்ரம் அல்ல
அவர்கள் யார்?
##############
1. சின்த்தா மகள்
2. பெருத்தா மகள்
3. காலாமா மகள்
4. பெரியம்மா மகள்
5. தன் மாமாவின் மனைவி ( மம்மாணி)
❌❌❌❌❌❌❌
இவர்கள்
மஹ்ரம் இல்லை.
🚑🚑🚑🚑🚑
அபாயமான பெண்கள்
அதாவது
மரணம் போன்ற
மஹ்ரமே அல்லாதவர்கள்
அவர்கள் யார்
Danger list
மஹ்ரமே இல்லை
6. தன் மனைவியின் அக்கா, தங்கச்சி
7. தன் அண்ணன், தம்பி மனைவி
இவர்கள் மஹ்ரம் இல்லை
அல்லாஹ்
தீன் படி
நடக்க
அருள்
புரிவானாக!
ஆமீன் !
- அ.அப்துல்லா பாகவி
Subscribe to:
Posts (Atom)