Wednesday, 25 April 2018

அல் அக்ஸாவை மீட்போம் - 12

அல் அக்ஸா மஸ்ஜிதை இஸ்ரேலியர்களிடம் இருந்து கைபெற்றுவது பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் கடமை இல்லை உலக முஸ்லிம்களுடைய கடமை அல் அக்ஸா மஸ்ஜித் கண்டிப்பாக வெற்றி கொள்ளப்படும் இது நபியுடைய முன் அறிவிப்பு,

“தபூக் போரின் போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக்கொள் என்று கூறிவிட்டு,
எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக்(வ) ஆதாரம்: புஹாரி- 3176

நபி(ஸல்) அவர்களது இந்த முன்னறிவிப்பு உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது. இந்த முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்களது தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும் உறுதி செய்கின்றது.

உமர் (ரலி) காலத்தில் எதிரிகளிடம் இருந்து இந்த பள்ளியை மீட்டெடுத்தார்கள் திரும்பவும் இது எதிரிகளிடம் கையில் போய் விட்டது என்பது உலகம் அறிந்த உண்மை ஆனால் இறுதியில் முஸ்லிம்கள் கைப்பற்றுவார்கள் என்பது நபி(ஸல்) அவர்களுடைய முன் அறிவிப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது,

உமர் ஹத்தாப் (ரலி) அவர்கள் எப்படி எதிரிகளிடம் இருந்து இந்த பள்ளியை மீட்டார்களோ அதை போல் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் இருந்து உறுதியாக அல் அக்ஸா மஸ்ஜிதை மீட்பார்கள் அதற்காக இறைவனிடம் நாம் துஆ செய்வோம்.
அதே சமயத்தில் பாலஸ்தீனத்தை ஒட்டிய சிரியாவில் அவ்வப்போது சில கொடுரங்களை நம்மால் கேட்க முடிகிறது
மீடியா பல செய்திகளை மறைக்கிறது என்பதே உண்மை
அதே சமயத்தில் இணையதளத்தை என்பதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்றால் மிக வருத்தமாக உள்ளது நம் மக்களின் அதிபுத்திசாளிதனத்தை இதனை கொண்டுபார்க்க முடிகிறது, எப்படியென்றால்
சிராயாவில் போர் அங்குள்ள குழந்தைகள் கொல்லபடுகின்றார்கள்,
என்று ஒரு குழந்தை படத்தை மீடியா மூலம் முதலில் வெளியாகுமேயானால்
உடனே நம் மக்கள் நானும் குரல்கொடுக்கின்றேன் என்பதை போல் வாட்சப், முகநூல் இது போல சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைபடத்திற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தை வைத்து தானும் அவர்களுக்கு அதாவது பாதிக்கபட்டவர்களுக்கு உதவுவதாகவும், அல்லது ஆதரவாகவும், நாங்களும் தெரிவிக்கின்றோம் என்பதை போல் மனிதர்களின் பலஹீனத்தை பயன் படுத்துகிறார்கள்,
இதுபோல் உள்ளவர்கள் அவர்களின் மூடதனத்தை மட்டுமே பார்க்க முடிகிறது,
சிந்தியுங்கள் மக்களே
சிந்தியுங்கள்,
நீங்கள் அப்படி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அவர்களின் புகைப்படத்தை வைத்தால் சரியாகிவிடுமா
அது சரி எங்கேயோ நடக்கும் பிரச்சினையை நாங்கள் எப்படி சரிசெய்ய முடியும் ,
அதானால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்களின் புகைபடத்தை வைக்கின்றோம் என்று சிலரின் கருத்து,
ஆனால் இதனை நாம் சற்று சிந்திக்க வேண்டும் அப்படி நாம் பாதிக்கப்பட்டவர்களின்  புகைப்படத்தை வைத்தால்
பிரச்சனை உடனே சரியாகி விடுமோ,
மூடராக இல்லாமல்
அல்லாவிடம் பிராத்திப்போம்,
பாலஸ்தீன பிரச்சனையோ,
அல்லது அதனை ஒட்டிய சிரியா நாட்டு பிரச்சனையோ
நாம் பிராத்திக்க வேண்டியது முதலில் அங்குள்ள கொடுரங்களை செய்பவர்களின் முஸ்ரிக்குகளுக்கு எதிராக சிறந்த கலீஃபாவை எங்களிடம் இருந்தே கொண்டு வா யா அல்லாஹ்
என்று பிராத்திப்போம்,
பாலஸ்தீன மக்களுக்காக, சிரியா மக்களுக்காக நாம் செய்ய வேண்டியது
அங்கு நடக்கும் கொடுரங்களை வைத்து நாம் அவர்களின் பரிதாபங்களை கொண்டு நாம்
 அவர்களின் புகைப்படத்தை வைக்க வேண்டாம், அதற்கு பதிலாக அல்லாவிடம் துவா செய்வோம், நம்முடைய பிரார்த்தனையில் தான் உள்ளது பாலஸ்தீன, சிரியா , அல்அக்ஸாபள்ளிவாசல் வெற்றி
இது உலக முஸ்லிம்களின் வெற்றி
முஸ்ரிக்குகளிடம் இருந்து பெற வேண்டிய வெற்றி, இப்போது நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி முஸ்ரிக்குகளின் ஆட்சியே
உலக இஸ்லாமியர்களின் வெற்றியின் தொடக்கமே பாலஸ்தீன நாடுதான்
அதனாலே நாம் திரும்ப திரும்ப இந்த கட்டுரையின் முலம் சொல்ல வருவது இன்ஷா அல்லாஹ் ஒரு சிறந்த இஸ்லாமியராக நம் உம்மத்தில் இருந்தே
அதாவது உலக இஸ்லாமியரான மனிதர்களின் ஒருவராக மக்களுக்கு வேலை செய்யக் கூடிய பிரதிநிதி
பாலஸ்தீனத்தில் இருக்க வேண்டும்,
அப்படி ஒரு சிறந்த ஆட்சியாளர்
உலக இஸ்லாமியருக்கு இருக்குமேயானால்
இன்ஷாஅல்லாஹ் உலக இஸ்லாமியர்களுக்கு வெற்றிபாதையாக அமையும் இன்ஷா அல்லாஹ் இதற்காக
இதன் தொடர்ச்சியை படிப்பவர்கள்
அல்லாஹ்விடம் கேளுங்கள்,
முழு மனதளவில் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்).

முஹம்மது சலீம் - அமெரிக்கா.

No comments:

Post a Comment