இறைவன் இயற்கை வளங்களை நிலம் முழுக்க பரப்பி வைத்திருக்கிறான். அறிவாற்றல் பெற்ற நாமே அதைச் சரியாகப் பகிர்ந்தளிக்கத் வேண்டும்.
வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். (அல்குர்ஆன் 50 : 09) என்கிறான் படைப்பாளன்.
வானத்திலிருந்து பொழியும் நீரே பூமியில் ஆறு, ஏரி, குளம், கிணறு, நிலத்தடி நீர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து நீர்களுக்குமான ஆதாரம். பெய்யும் மழை நிலத்தில் தங்கி நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. பூமிப் பரப்பில் தேங்கும் தண்ணீர் ஆவியாகி வானேறி மேகமாகி பல்கிக் பெருகி பெருமழையாக பூமிக்குத் திரும்பி நிலத்தை வளப்படுத்தி செழிக்க வைக்கிறது.
தண்ணீர் சேமிப்பு
“காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானிலிருந்து நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேமித்துவைப்போராய் இல்லை. (திருக்குர்ஆன் 15:22) அல்லாஹ் பூமியில் மழையை பொழியவைத்து ஆறுகளாக ஓடச் செய்கிறான். அதன் மூலம் நீராதாரங்கள் அனைத்திலும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அது அல்லாஹ்வின் ஏற்பாடு.
மனிதர்களும் தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மழை பெய்யாமலிருப்பது (மட்டும்) பஞ்சமில்லை. மாறாக, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதும் பஞ்சமாகும். இதை அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5563) பெய்யும் மழையை தேக்கி நிலத்தடி நீரை சேமிப்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறும் நீர் மேலாண்மையில் முதன்மையானது.
மழை நீரும், தேக்கி வைக்கப்படும் நீரும் மனிதர்களுக்கு மட்டும் உரியதல்ல! அனைத்து உயிரினங்களுக்கும் பங்குள்ளது. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும். (அல்குர்ஆன் 54:28.)
ஆற்றங்கரை உரிமை உள்ளவர் அனைவரும் நீரை அவர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். அது மற்ற உரிமைதாரர்களின் உரிமையை பறிக்காத வகையில் அமைய வேண்டும். அதுதான் நடுநிலையான சிறந்த ஒதுக்கீட்டு முறை என்று இஸ்லாம் கூறுகிறது.
'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2354)
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. அவர்களில் ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். (புகாரி 2358)
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), 'ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, 'இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?' என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, 'ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகுவிட்டு விடுங்கள்)' என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள். (புகாரி 2362 )
அடுத்து பொது இடத்தில் உள்ள நதி, ஆறு, நீரோடை, கடல், மழை மழையின் நீர் இதை வாங்கவோ விற்கவோ முடியாது என்பது இஸ்லாம் கூறும் நீர் உரிமை. ஏனெனில் தனிமனித தாகத்தை இலவசமாக தணிப்பது” இஸ்லாம் கூறும் அடிப்படை நீர் கொள்கை.
சேவைத் தொழில்களான கல்வி, மருத்துவம் - இவற்றோடு, தண்ணீரும் இன்று விற்பனைப் பொருளாக - மக்களைக் கசக்கிப் பிழியும் ஒன்றாக ஆகி வரும் சூழலில் இந்தக் கொள்கையை கவனத்தில் கொள்வது அவசியம்.
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பொதுவான நீரை யாரோ சிலர் மட்டும் சொந்தம் கொண்டாட, மற்ற அனைவரும் பணம் செலுத்தித் தங்களுடைய தாகத்தைத் தனித்துக்கொள்ளும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மக்களின் சொத்து என்ற குரல் மிகவும் மெல்லியதாகவே கேட்கிறது.
உணவையும், நீரையும் காசுக்கு விற்பதே பெரும்பாவம்” என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. யாத்ரீகர்களுக்கு இலவச உணவும், தங்குமிடமும் அளிப்பதற்காகவே அக்கால மன்னர்கள் வழியெங்கும் “அன்ன சத்திரங்கள்” அமைக்கப்பட்டது. இன்று அந்த அறம் வறண்டு போய்விட்டது.
இறுதியாக நீரை வீணாக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் நீர் கொள்கையில் முக்கியமானது. வீணாகும் ஒரு சொட்டு நீரை பார்க்கும் போதும் இத்தண்ணீருக்காக, எங்கேயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வர வேண்டும்... இது எதுவும் சிந்தனைக்கு வராதவர்கள் படைப்பாளன் அல்லாஹ்வின் எச்சரிக்கையை செவியேற்கட்டும்.
“உங்களின் தண்ணீர் பூமியினுள் போய்விட்டால், அப்போது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதைத் தெரிவியுங்கள் என (தூதரே!) கூறும்.” (திருக்குர்ஆன் 67:30)
நன்றி இணையம்
Monday, 30 October 2017
எது பகுத்தறிவு?
எது பகுத்தறிவு?
------கணியூர் நாஜி
-------------------------------------------------------------------
இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இல்லையே? என இன்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
இதனையே1966ம் ஆண்டு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கல்வி பயிலும்போது ஷைக் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் அவர்களிடம் கேட்டேன்.
அறிவிற்கு பொருத்தம் என்றால் எந்த அறிவிற்கு? என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். எந்த அறிவு என்றால் எனக்கு புரியவில்லையே என்றேன்.
அறிவிலும் பல அறிவு உண்டா? என்று சக மாணவர்கள் வியப்புடன் எங்கள் உரையாடலைக் கேட்டனர்.
அறிவை பற்றி விளக்கும் முன் நீங்கள் எல்லோரும் அவரவர்க்குப் பிடித்தமான பழம் என்னவென்று கூறுங்கள் என்று ஹளரத் அவர்கள் கேட்டார்கள். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை குறிப்பிட அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்ட ஹளரத் அவர்கள் இறுதியில் சொன்னார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை விரும்புவதாக சொன்னீர்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்புவதற்கு ஒவ்வொரு காரணத்தை சொல்வீர்கள் இல்லையா? இப்பொழுது ஒருவர் என்னிடம் பழங்களில் சிறந்தது எது ? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
நான் ஆப்பிள் என்று சொன்னால் மற்ற பழங்களை விரும்புகிறவருக்கு இந்த பதில் திருப்தியாக இராதது மட்டுமல்ல இதென்ன ஹலரத் சொல்வது அறிவிற்கு பொருத்தமாக இல்லையே? இன்ன பழமல்லவா சிறந்த பழம் என்று தான் விரும்பும் பழத்தைச் சொல்வார்.
ஏன்?
ஏற்கனவே, ஒன்றை பற்றி முடிவெடுத்து தன் மூளையில் பதிவு செய்த பின் மற்றொன்றைப் பார்க்கும் பார்வையும் சிந்திக்கும் முறையும் வேறுபட்டு விடுகின்றன. அவன் விரும்பும் பாதையிலேயே அவனின் அறிவும் வேலை செய்யும்.
ஒரு விஷயம் சரியா ? தவறா? என அறிய விரும்புகிறவன் திறந்த மனத்துடன் அதை ஆராய வேண்டும். அப்பொழுது தான் அவனறிவு தன் இயல்பான தன்மையுடன் சிந்திக்கும் நல்லமுடிவு எடுக்கும். அவ்வாறன்றி, வேறொன்றை தன் இதயத்தில் நிரப்பி அவன் சிந்திக்கும் பொழுது அவன் அறிவு நோய் வாய்ப்பட்டு விடுகிறது. அவன் சிந்திக்கும் முறையும் வேறுபட்டுவிடுகிறது.
அவ்வாறே, இஸ்லாத்தின் சகல அம்சங்களும் “ஸலிமான அக்ல்” நோய்வாய்ப்படாத நல்லறிவுடன் சிந்திப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டங்கள் சிறந்தவையாக அறிவுக்கு பொருத்தமானவையாகத் தெரியும்.
எனவே தான் உலகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் மற்ற மதத்தினை ஒப்பிட்டு நோக்கி பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே எனக் கூறியுள்ளனர்.
ஆனால், குர்ஆன் கூறுவது போன்று உள்ளத்தில் நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இராது” என்று விளக்கம் தந்தார்கள்.
மவ்லானா அஷ்ரஃப் அலிதானவி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்,
“மனிதர்கள் பகுத்தறிவு பகுத்தறிவு என்கிறார்கள் இது வரை யாரும் பகுத்தறிவிற்கு விளக்கம் தரவேயில்லை. எந்த ஒன்று அவர்களின் கண்ணிற்கு புலப்படவில்லையோ அவர்களின் சிந்தனைக்கு எட்டவில்லையோ அவைகள் எல்லாம் பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்வார்கள்.
குழந்தை பிறப்பது எப்படி என்பதை தெரியாத ஒருவன் தன் தாயாரிடம் நான் எப்படி எங்கிருந்து வருகிறேன் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தன் ஒட்டிய வயிற்றை சுட்டி காட்டி இங்கிருந்து தான் வந்தாய் என்று சொனால் அவன் நம்புவானா?
எந்த பகுத்தறிவும் புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம் உடலில் குழந்தை உருவாவது. ஆனால், அது நித்தம் நித்தம் நடை பெறுவதால் அதை ஒரு அற்புதம் என்று யாரும் சிந்திப்பதில்லை.
எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஒரு சிறு விந்து துளி இன்னொரு ஜீவன் வழியாக குறைந்த எடை உள்ள கருப்பப்பைக்குள் நுழைந்து கர்ப்பப்பையை விட அதிக எடையுள்ள ஒரு ஜீவனை உருவாக்கிறது என்றால் பகுத்தறிவு ஏற்று கொள்ளுமா? அது ஏன் என்று எந்த பகுத்தறிவாளனால் அறிவுப்பூர்வமாக சொல்ல முடியுமா?
சிலருக்கு ஏன் குழந்தை பிறப்பதில்லை ?சிலருக்கு ஏன் ஆண் குழந்தை மட்டும் பிறக்கிறது ? என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இருக்கிறதா ?
ஏன் எப்படி என்று கேட்டால் அது ஒரு இயற்கையின் வினோதம் என்று சொல்லி விட்டு போய்விடுவான். விஞ்ஞானம் எப்படி என்பதற்கு தான் விளக்கம் தந்திருக்கிறதே தவிர ஏன் என்பதற்கு இதுவரையிலும் விளக்கம் தரவில்லை. எனவே, மனிதன் தன் அறிவிற்கு எட்டாததை பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்லுகிறான். அவனது அறிவிற்கு எட்டாவிட்டாலும் நித்தம் நித்தம் நடக்கின்ற பல அற்புதங்களை அவன் பகுத்தறிவிற்கு ஏற்றது என்று சொல்லுகிறான்.”
குர்ஆனும் ஹதீஸும் எதை சொல்லுகிறதோ அதை ஏற்று கொள்கின்றவன் தான் உண்மையான பகுத்தறிவாளன்,
“ஹதீஸே குத்ஸி” யில் அல்லாஹ் முதல் முதலில் அறிவை படைத்தான். அதை பார்த்து முன்னால் வா என்றான் அது முன்னாள் வந்தது. பின்னால் போ என்றான் அது பின்னால் போனது.
இதற்கு ஹளரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். “ இந்த ஹதிஸ் சொல்வது என்னவென்றால் அறிவுள்ளவன் அல்லாஹ் ஏவியதை செயல்படுத்துவான் அல்லாஹ் தடுத்ததை விலக்கி கொள்வான் “
தேவ்பந்த் தாருல் உலூம் பல் கலை கழக நிறுவனர் காஸிம் நாநூத்தவி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் தன் மாணவர்களுடன் உரையாடி கொண்டிருக்கின்ற பொழுது “நபிகள் நாயகம்சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தங்கத்தை ஆண்களுக்கு ஏன் ஹராமாக்கினார்கள்? அதற்கு காரணம் என்ன? என்று ஒருவர் கேட்டார்.
அவரை நோக்கி முறைத்த ஹளரத் அவர்கள் நபி ஸல்லலாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது உன் அறிவிற்கு ஏற்றால் தான் நீ கடைப்பிடிப்பாயா? நீ மூஃமினாக இருந்தால் நபி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவுடன் அவர், தவ்பா தவ்பா என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.
அதன்பின் மாணவர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு தங்கம் ஹராம்? என்று கேட்டார்கள். ஹளரத் அவர்கள் சில விளக்கங்களை சொன்னார்கள்.
அதை கேட்ட மாணவர்கள், இந்த விளக்கத்தை அந்த சகோதர ரிடத்திலும் சொல்லியிருக்கலாமே ஏன் நீங்கள் அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு ஹளரத் அவர்கள், அல்லாஹ்வும் ரஸூலும் ஒரு சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் நமக்கு தெரியாத பல காரணங்கள் இருக்கும். சிலவற்றை நாமாக யூகித்து சில விளக்கங்களை தருகிறோம். அல்லாஹ் அதற்காகத்தான் அந்த சட்டத்தை இறக்கினான் என சொல்ல முடியாது ஆழமான மார்க்க அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் விதித்த கடமைக்கு இது தான் காரணம் என்று ஒருவன் சொல்ல அதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டால் மற்றொரு திறமையான பேச்சாற்றல் உள்ள ஒருவர் அந்த விளக்கத்தை தவறு என்று நிருபித்தால் அல்லாஹ் வகுத்த அந்த சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே, அல்லாஹ் சொன்னான், நபி சொல்லியிருக்கிறார்கள் அதனால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு முஃமீன் சொல்வது தான் உறுதியான ஈமானின் வெளிப்பாடாகும். “ என்றார்கள்.
நான் லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரில் ஓதும் பொழுது ஒரு பட்டம் பெரும் மாணவர் ஜும்மாவில் தொழுகையின் சிறப்பை பற்றி பேசினார் “ தொழுகை உடற்பயிற்சி செய்வது போன்றாகும் என்று சொல்லி ஸுப்ஹு, லுஹர், அஸர், மஃரிப், இஷா என்று ஒவ்வொரு வக்து தொழுகையும் எப்படி உடற்பயிற்சி ஆகிறது என்று சொல்லி விளக்கினார்.
தொழுகை முடிந்து மதரஸாவிற்கு வந்த பொழுது மதரசாவின் வாயிலில் அமர்ந்து இருந்த அல்லாமா அமானி ஹளரத் அவர்கள் இன்று ஜும்மாவில் என்ன பயான் செய்தாய்?
உடல்நலத்திற்காக தான் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கினான் என்பதை போன்று உன் பேச்சு இருந்தது. அப்படியானால், ஒருவன் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனவே நான் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னால் உன்னிடம் பதில் இருக்கிறதா?அது போன்று சிலர் பசியின் கொடுமையை அறிவதற்காக தான் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று பேசுவார்கள். அப்படியானால் பசியால் வாடும் ஏழைகளுக்கு நோன்பு கடமையில்லையா?.
எனவே, நாம் பேசும் பொழுது அல்லாஹ்வின் கட்டளையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதை ஏற்று தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்படி ஏற்று செயல் படும் பொழுது இந்த உலகத்தில் உடலுக்கும் அது நன்மை பயக்கும் என்ற ரீதியில் தான் நாம் பேசவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
என் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை என்றால் ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஒரு முஸ்லிம் சொல்வதற்கும் இறைவன் இருப்பது ,மறுமை என்பதெல்லாம் எங்கள் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை எனவே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லும் நாத்திக வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ?
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
------கணியூர் நாஜி
-------------------------------------------------------------------
இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இல்லையே? என இன்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.
இதனையே1966ம் ஆண்டு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கல்வி பயிலும்போது ஷைக் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் அவர்களிடம் கேட்டேன்.
அறிவிற்கு பொருத்தம் என்றால் எந்த அறிவிற்கு? என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். எந்த அறிவு என்றால் எனக்கு புரியவில்லையே என்றேன்.
அறிவிலும் பல அறிவு உண்டா? என்று சக மாணவர்கள் வியப்புடன் எங்கள் உரையாடலைக் கேட்டனர்.
அறிவை பற்றி விளக்கும் முன் நீங்கள் எல்லோரும் அவரவர்க்குப் பிடித்தமான பழம் என்னவென்று கூறுங்கள் என்று ஹளரத் அவர்கள் கேட்டார்கள். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை குறிப்பிட அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்ட ஹளரத் அவர்கள் இறுதியில் சொன்னார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை விரும்புவதாக சொன்னீர்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்புவதற்கு ஒவ்வொரு காரணத்தை சொல்வீர்கள் இல்லையா? இப்பொழுது ஒருவர் என்னிடம் பழங்களில் சிறந்தது எது ? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
நான் ஆப்பிள் என்று சொன்னால் மற்ற பழங்களை விரும்புகிறவருக்கு இந்த பதில் திருப்தியாக இராதது மட்டுமல்ல இதென்ன ஹலரத் சொல்வது அறிவிற்கு பொருத்தமாக இல்லையே? இன்ன பழமல்லவா சிறந்த பழம் என்று தான் விரும்பும் பழத்தைச் சொல்வார்.
ஏன்?
ஏற்கனவே, ஒன்றை பற்றி முடிவெடுத்து தன் மூளையில் பதிவு செய்த பின் மற்றொன்றைப் பார்க்கும் பார்வையும் சிந்திக்கும் முறையும் வேறுபட்டு விடுகின்றன. அவன் விரும்பும் பாதையிலேயே அவனின் அறிவும் வேலை செய்யும்.
ஒரு விஷயம் சரியா ? தவறா? என அறிய விரும்புகிறவன் திறந்த மனத்துடன் அதை ஆராய வேண்டும். அப்பொழுது தான் அவனறிவு தன் இயல்பான தன்மையுடன் சிந்திக்கும் நல்லமுடிவு எடுக்கும். அவ்வாறன்றி, வேறொன்றை தன் இதயத்தில் நிரப்பி அவன் சிந்திக்கும் பொழுது அவன் அறிவு நோய் வாய்ப்பட்டு விடுகிறது. அவன் சிந்திக்கும் முறையும் வேறுபட்டுவிடுகிறது.
அவ்வாறே, இஸ்லாத்தின் சகல அம்சங்களும் “ஸலிமான அக்ல்” நோய்வாய்ப்படாத நல்லறிவுடன் சிந்திப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டங்கள் சிறந்தவையாக அறிவுக்கு பொருத்தமானவையாகத் தெரியும்.
எனவே தான் உலகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் மற்ற மதத்தினை ஒப்பிட்டு நோக்கி பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே எனக் கூறியுள்ளனர்.
ஆனால், குர்ஆன் கூறுவது போன்று உள்ளத்தில் நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இராது” என்று விளக்கம் தந்தார்கள்.
மவ்லானா அஷ்ரஃப் அலிதானவி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்,
“மனிதர்கள் பகுத்தறிவு பகுத்தறிவு என்கிறார்கள் இது வரை யாரும் பகுத்தறிவிற்கு விளக்கம் தரவேயில்லை. எந்த ஒன்று அவர்களின் கண்ணிற்கு புலப்படவில்லையோ அவர்களின் சிந்தனைக்கு எட்டவில்லையோ அவைகள் எல்லாம் பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்வார்கள்.
குழந்தை பிறப்பது எப்படி என்பதை தெரியாத ஒருவன் தன் தாயாரிடம் நான் எப்படி எங்கிருந்து வருகிறேன் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தன் ஒட்டிய வயிற்றை சுட்டி காட்டி இங்கிருந்து தான் வந்தாய் என்று சொனால் அவன் நம்புவானா?
எந்த பகுத்தறிவும் புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம் உடலில் குழந்தை உருவாவது. ஆனால், அது நித்தம் நித்தம் நடை பெறுவதால் அதை ஒரு அற்புதம் என்று யாரும் சிந்திப்பதில்லை.
எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஒரு சிறு விந்து துளி இன்னொரு ஜீவன் வழியாக குறைந்த எடை உள்ள கருப்பப்பைக்குள் நுழைந்து கர்ப்பப்பையை விட அதிக எடையுள்ள ஒரு ஜீவனை உருவாக்கிறது என்றால் பகுத்தறிவு ஏற்று கொள்ளுமா? அது ஏன் என்று எந்த பகுத்தறிவாளனால் அறிவுப்பூர்வமாக சொல்ல முடியுமா?
சிலருக்கு ஏன் குழந்தை பிறப்பதில்லை ?சிலருக்கு ஏன் ஆண் குழந்தை மட்டும் பிறக்கிறது ? என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இருக்கிறதா ?
ஏன் எப்படி என்று கேட்டால் அது ஒரு இயற்கையின் வினோதம் என்று சொல்லி விட்டு போய்விடுவான். விஞ்ஞானம் எப்படி என்பதற்கு தான் விளக்கம் தந்திருக்கிறதே தவிர ஏன் என்பதற்கு இதுவரையிலும் விளக்கம் தரவில்லை. எனவே, மனிதன் தன் அறிவிற்கு எட்டாததை பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்லுகிறான். அவனது அறிவிற்கு எட்டாவிட்டாலும் நித்தம் நித்தம் நடக்கின்ற பல அற்புதங்களை அவன் பகுத்தறிவிற்கு ஏற்றது என்று சொல்லுகிறான்.”
குர்ஆனும் ஹதீஸும் எதை சொல்லுகிறதோ அதை ஏற்று கொள்கின்றவன் தான் உண்மையான பகுத்தறிவாளன்,
“ஹதீஸே குத்ஸி” யில் அல்லாஹ் முதல் முதலில் அறிவை படைத்தான். அதை பார்த்து முன்னால் வா என்றான் அது முன்னாள் வந்தது. பின்னால் போ என்றான் அது பின்னால் போனது.
இதற்கு ஹளரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். “ இந்த ஹதிஸ் சொல்வது என்னவென்றால் அறிவுள்ளவன் அல்லாஹ் ஏவியதை செயல்படுத்துவான் அல்லாஹ் தடுத்ததை விலக்கி கொள்வான் “
தேவ்பந்த் தாருல் உலூம் பல் கலை கழக நிறுவனர் காஸிம் நாநூத்தவி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் தன் மாணவர்களுடன் உரையாடி கொண்டிருக்கின்ற பொழுது “நபிகள் நாயகம்சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தங்கத்தை ஆண்களுக்கு ஏன் ஹராமாக்கினார்கள்? அதற்கு காரணம் என்ன? என்று ஒருவர் கேட்டார்.
அவரை நோக்கி முறைத்த ஹளரத் அவர்கள் நபி ஸல்லலாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது உன் அறிவிற்கு ஏற்றால் தான் நீ கடைப்பிடிப்பாயா? நீ மூஃமினாக இருந்தால் நபி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவுடன் அவர், தவ்பா தவ்பா என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.
அதன்பின் மாணவர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு தங்கம் ஹராம்? என்று கேட்டார்கள். ஹளரத் அவர்கள் சில விளக்கங்களை சொன்னார்கள்.
அதை கேட்ட மாணவர்கள், இந்த விளக்கத்தை அந்த சகோதர ரிடத்திலும் சொல்லியிருக்கலாமே ஏன் நீங்கள் அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு ஹளரத் அவர்கள், அல்லாஹ்வும் ரஸூலும் ஒரு சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் நமக்கு தெரியாத பல காரணங்கள் இருக்கும். சிலவற்றை நாமாக யூகித்து சில விளக்கங்களை தருகிறோம். அல்லாஹ் அதற்காகத்தான் அந்த சட்டத்தை இறக்கினான் என சொல்ல முடியாது ஆழமான மார்க்க அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் விதித்த கடமைக்கு இது தான் காரணம் என்று ஒருவன் சொல்ல அதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டால் மற்றொரு திறமையான பேச்சாற்றல் உள்ள ஒருவர் அந்த விளக்கத்தை தவறு என்று நிருபித்தால் அல்லாஹ் வகுத்த அந்த சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே, அல்லாஹ் சொன்னான், நபி சொல்லியிருக்கிறார்கள் அதனால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு முஃமீன் சொல்வது தான் உறுதியான ஈமானின் வெளிப்பாடாகும். “ என்றார்கள்.
நான் லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரில் ஓதும் பொழுது ஒரு பட்டம் பெரும் மாணவர் ஜும்மாவில் தொழுகையின் சிறப்பை பற்றி பேசினார் “ தொழுகை உடற்பயிற்சி செய்வது போன்றாகும் என்று சொல்லி ஸுப்ஹு, லுஹர், அஸர், மஃரிப், இஷா என்று ஒவ்வொரு வக்து தொழுகையும் எப்படி உடற்பயிற்சி ஆகிறது என்று சொல்லி விளக்கினார்.
தொழுகை முடிந்து மதரஸாவிற்கு வந்த பொழுது மதரசாவின் வாயிலில் அமர்ந்து இருந்த அல்லாமா அமானி ஹளரத் அவர்கள் இன்று ஜும்மாவில் என்ன பயான் செய்தாய்?
உடல்நலத்திற்காக தான் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கினான் என்பதை போன்று உன் பேச்சு இருந்தது. அப்படியானால், ஒருவன் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனவே நான் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னால் உன்னிடம் பதில் இருக்கிறதா?அது போன்று சிலர் பசியின் கொடுமையை அறிவதற்காக தான் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று பேசுவார்கள். அப்படியானால் பசியால் வாடும் ஏழைகளுக்கு நோன்பு கடமையில்லையா?.
எனவே, நாம் பேசும் பொழுது அல்லாஹ்வின் கட்டளையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதை ஏற்று தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்படி ஏற்று செயல் படும் பொழுது இந்த உலகத்தில் உடலுக்கும் அது நன்மை பயக்கும் என்ற ரீதியில் தான் நாம் பேசவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
என் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை என்றால் ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஒரு முஸ்லிம் சொல்வதற்கும் இறைவன் இருப்பது ,மறுமை என்பதெல்லாம் எங்கள் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை எனவே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லும் நாத்திக வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ?
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6 اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7 صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
தஜ்ஜால்
☄☄☄☄☄☄☄☄☄
*பெயர் : தஜ்ஜால்*
*புனைப்பெயர் : மஸீஹ் தஜ்ஜால்*
*குடும்பம் : குழந்தை பிறக்காத மலடன்*
*தோன்றும் காலம் : இறுதி நாளின் சமீபம்*
*தோன்றும் இடம் : மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக்,* *சிரியா*
*நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான்* *(ஆப்கானிஸ்தான்)* *என்னும்*
*பகுதியில்.*
*அவனது இனம் : யூத இனம்*
*வாழும் காலத்தின் அளவு : நாற்பது நாட்கள்*
*விளக்கம் : அவன்* *வாழும் நாற்பது நாளில் ஒரு நாள் ஒரு வருடம்*
*போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,* *மற்றொரு நாள்*
*ஒரு வாரம் போன்றும் இருக்கும். மீதமுள்ள* *நாட்கள் சாதாரண*
*நாட்களைப் போன்றும் இருக்கும் .*
*அவனது தோற்றம் :*
*1. திடகாத்திரமான இளைஞன்,* *சிவப்பானவன் .*
*2. மரக்கிளை போன்று அடர்த்தியான சுருட்டை முடி உடையவன் .*
*3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண் நிலை குத்திய நிலையில்*
*பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன் .*
*4. குட்டையானவன், குண்டானவன் .*
*5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்*
*கொண்டவன்.*
*6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்*
*அவன் பிரவேசிக்கும்* *இடம் ; மக்கா, மதீனா,தூர் சீனா மலை,*
*பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு* *இடங்களைத் தவிர உலகின்*
*அனைத்து பகுதிகளும்.*
*அவனது அதிசய வித்தைகள் ;*
*1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான்*
*2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும் வைத்திருப்பான் .*
*3. மலை போன்ற ரொட்டிகளை* *(உணவுப்பொருட்களை)*
*வைத்திருப்பான்.*
*4. மழை பொழிய வைப்பான்.*
*5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட*
*நோய்களை குணப்படுத்துவான்.*
*6. ஒருவனை ஒரு முறை மட்டும்* *கொன்று விட்டு*
*மீண்டும்* *உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய இயலாது)*
*7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்*
*கொழுக்க வைப்பான்.*
*8. பூமியில் புதையல் உள்ள இடங்களை*
*அறிந்திருப்பான்.*
*அவனது கொள்கை :* *தானே இறைவன் என வாதிட்டு, மக்களை ஈமான்*
*கொள்ளச் செய்வது.*
*அவனது மரணம் :*
*இஸ்ரேலின் தலைநகரான* *டெல்அவிவ்வுக்கு அருகில் உள்ள*
*லுத்து என்னும் இடத்தில் வைத்து மர்யம் (அலை)* *அவர்களின் மகன்*
*ஈஸா நபி அவர்கள்* *அவனைக் கொல்வார்கள்.*
*சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள்,* *தினமும்*
*உங்களின்* *தொழுகையில் அல்லாஹ்விடம்* *தஜ்ஜாலின் தீங்கில்*
*இருந்து பாதுகாப்பு* *தேடுங்கள்*
*அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.*
☄☄☄☄☄☄☄☄☄☄
*பெயர் : தஜ்ஜால்*
*புனைப்பெயர் : மஸீஹ் தஜ்ஜால்*
*குடும்பம் : குழந்தை பிறக்காத மலடன்*
*தோன்றும் காலம் : இறுதி நாளின் சமீபம்*
*தோன்றும் இடம் : மதீனா நகரின் கீழ்த்திசையில் ஈராக்,* *சிரியா*
*நாடுக்களுக்கிடையே உள்ள குரஸான்* *(ஆப்கானிஸ்தான்)* *என்னும்*
*பகுதியில்.*
*அவனது இனம் : யூத இனம்*
*வாழும் காலத்தின் அளவு : நாற்பது நாட்கள்*
*விளக்கம் : அவன்* *வாழும் நாற்பது நாளில் ஒரு நாள் ஒரு வருடம்*
*போன்றும், இன்னொரு நாள் ஒரு மாதம் போன்றும்,* *மற்றொரு நாள்*
*ஒரு வாரம் போன்றும் இருக்கும். மீதமுள்ள* *நாட்கள் சாதாரண*
*நாட்களைப் போன்றும் இருக்கும் .*
*அவனது தோற்றம் :*
*1. திடகாத்திரமான இளைஞன்,* *சிவப்பானவன் .*
*2. மரக்கிளை போன்று அடர்த்தியான சுருட்டை முடி உடையவன் .*
*3. ஒரு கண் ஊனமுற்று, மற்றொரு கண் நிலை குத்திய நிலையில்*
*பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன் .*
*4. குட்டையானவன், குண்டானவன் .*
*5.அதிக இடைவெளி உள்ள கால்களைக்*
*கொண்டவன்.*
*6. நெற்றியில் காஃபீர் என எழுதப்பட்டவன்*
*அவன் பிரவேசிக்கும்* *இடம் ; மக்கா, மதீனா,தூர் சீனா மலை,*
*பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு* *இடங்களைத் தவிர உலகின்*
*அனைத்து பகுதிகளும்.*
*அவனது அதிசய வித்தைகள் ;*
*1. பொய்யான சுவனம் நரகம் வைத்திருப்பான்*
*2. சுவையான நீர் நதிகளும் நெருப்பு நதிகளும் வைத்திருப்பான் .*
*3. மலை போன்ற ரொட்டிகளை* *(உணவுப்பொருட்களை)*
*வைத்திருப்பான்.*
*4. மழை பொழிய வைப்பான்.*
*5. பிறவிக் குருடு மற்றும் வெண்குஷ்ட*
*நோய்களை குணப்படுத்துவான்.*
*6. ஒருவனை ஒரு முறை மட்டும்* *கொன்று விட்டு*
*மீண்டும்* *உயிர்ப்பிப்பான்(மறுமுறை செய்ய இயலாது)*
*7. மேய செல்லும் கால்நடைகளை ஒரே பகலில்*
*கொழுக்க வைப்பான்.*
*8. பூமியில் புதையல் உள்ள இடங்களை*
*அறிந்திருப்பான்.*
*அவனது கொள்கை :* *தானே இறைவன் என வாதிட்டு, மக்களை ஈமான்*
*கொள்ளச் செய்வது.*
*அவனது மரணம் :*
*இஸ்ரேலின் தலைநகரான* *டெல்அவிவ்வுக்கு அருகில் உள்ள*
*லுத்து என்னும் இடத்தில் வைத்து மர்யம் (அலை)* *அவர்களின் மகன்*
*ஈஸா நபி அவர்கள்* *அவனைக் கொல்வார்கள்.*
*சகோதரர்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள்,* *தினமும்*
*உங்களின்* *தொழுகையில் அல்லாஹ்விடம்* *தஜ்ஜாலின் தீங்கில்*
*இருந்து பாதுகாப்பு* *தேடுங்கள்*
*அல்லாஹ் நம்மை பாதுகாப்பான்.*
☄☄☄☄☄☄☄☄☄☄
Wednesday, 11 October 2017
பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்!
"திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன் (அல் குர்ஆன் 24 : 27)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
''நபி (ஸல்) அவர்கள் ஒரு சபைக்கு வந்தாலோ அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய முற்பட்டாலோ அனுமதி கேட்டு ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''
நூல் : புகாரி (6244)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்''
அறிவிப்பவர் : அபூ ஸயீத்(ரலி) நூல் : புகாரி (6245)
நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன்.
அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நான் ''நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதைவிரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல் : புகாரி (6250)
பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது அவர் மீது நீங்கள் சிறுகல்லைச் சுண்டி எறிய அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி(6902)
ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது.
அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது '' என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.
(அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்கவேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது '' என்று கூறினார்கள். நூல் : புகாரி (6901)
பதிவு நாள்: 12-10-2017.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்!
"திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன் (அல் குர்ஆன் 24 : 27)
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
''நபி (ஸல்) அவர்கள் ஒரு சபைக்கு வந்தாலோ அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய முற்பட்டாலோ அனுமதி கேட்டு ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''
நூல் : புகாரி (6244)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்''
அறிவிப்பவர் : அபூ ஸயீத்(ரலி) நூல் : புகாரி (6245)
நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன்.
அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள்.
அதற்கு நான் ''நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதைவிரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல் : புகாரி (6250)
பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது அவர் மீது நீங்கள் சிறுகல்லைச் சுண்டி எறிய அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி(6902)
ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது.
அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது '' என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.
(அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்கவேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது '' என்று கூறினார்கள். நூல் : புகாரி (6901)
பதிவு நாள்: 12-10-2017.
Tuesday, 10 October 2017
பெற்றோரின் சிறப்பு.
பெற்றோரின் சிறப்பு.
-----------------------------------
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்றார். “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை“ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி :
அன்பர்களே...
காலமெல்லாம் நமக்காக உபகாரமாக மட்டுமே வாழ்ந்த , வாழுகிற, இன்ஷாஅல்லாஹ் இனியும் வாழவிருக்கிற
நம் தாய் தந்தையிடம் நாம் எவ்வாறு உறவாடுகிறோம்.
அழகிய முறையில் உறவாடுகிறவர்கள்
ஈருலகிலும் நற்பாக்கியம் பெற்றவர்கள்.
பெற்றோரில் ஒருவரை இழந்து ஒருவரை மட்டும் பெற்றுக்கொண்டோர்
இருவரிடமும் காட்டவேண்டிய அன்பை,உபசரிப்பை,மரியாதையை,
பணிவிடையை மிஞ்சியிருக்கும்[ தாயோ, தந்தையோ] அந்த ஒருவரிடம் பெரும்பாக்கியம் என்று
மொத்தத்தையும் காட்டுங்கள்
அருளாலன் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.
தயவுசெய்து சிந்திப்போம்..
இழந்த பின் அவர்கள் செய்த உபகாரத்தை நினைத்து வருந்துவதில் என்ன பலன் இருக்கப்போகிறது
இருக்கும்போதே அவர்களை மதிப்போமே,
அளவுகடந்த அன்போடு நடந்துகொள்வோமே
அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோமே
அவர்களுக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திப்போமே.
ரப்பனா ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸஃகீரா..
😭😭😭😭😭😭😭😭😭😭
Monday, 9 October 2017
What's Taqwa? #தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?
What's Taqwa?
#தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?
Taqwa is not only in our manners..
#இறையச்சம் என்பது நம்முடைய செயலில் மட்டும் வெளிப்படுவது அல்ல.
Taqwa is not just about looking islamic...
#இறையச்சம் என்பது இஸ்லாமின் அடிப்படையில் இவர் இருக்கிறாரா என்று பார்ப்பதில் மாத்திரம் இல்லை.
Taqwa is not about sporting a beard or wearing a Hijab...
#இறையச்சம் என்பது தாடி வைப்பதிலும், பர்தா அணிவதிலும் மாத்திரமல்ல.
Taqwa is not appearance
#இறையச்சம் என்பது தோற்றத்தை வைத்து தீர்மானிப்பதல்ல.
BUT
#மாறாக
Taqwa is when you miss a single prayer, you feel uneasy the whole day...
#இறையச்சம் என்பது ஒரு நேர தொழுகையை நீ விடும் போது,உன்னுடைய உள்ளத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதில் உள்ளது.
Taqwa is when you speak a lie , your instinct feels bad..
#இறையச்சம் என்பது நீ ஒரு பொய் சொல்லும்போது உன் உள்ளத்தை உருட்டுவதில் உள்ளது.
Taqwa is the guilt that follows when u hurt someone knowingly or unknowingly.
#இறையச்சம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒருவரை நீ புண்படுத்தியிருந்தால் உன் உள்ளம் துன்பப்படுவதில் உள்ளது.
Taqwa is the shame and regret that follows a sin you did knowing fully well about it's stand in the sight of Allah,
#இறையச்சம் என்பது அல்லாஹ் தடுத்த பாவமான காரியத்தை செய்தால், அல்லாஹ்விற்கு முன்பாக நிற்க வேண்டுமே என்ற அச்சத்தில் வெட்கப்படுவதில் உள்ளது.
Taqwa is when you cannot sleep the whole night after disobeying or disrespecting your parents
#இறையச்சம் என்பது உன் பெற்றோருக்கு மாறு செய்து விட்டால் இரவில் தூங்க முடியாமல் வேதனைப்படுவதில் உள்ளது.
Taqwa is to cry in the depths of night fearing none but the one above the Arsh.
#இறையச்சம் என்பது இரவில் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் கண்ணீர் சிந்துவதில் உள்ளது.
Taqwa is the fear that refrains us from sinning even when we are alone and nobody is looking...
#இறையச்சம் என்பது வெளிப்படையான, அந்தரங்கமான வாழ்க்கையில் யார் என்னைப் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான்,என்று அஞ்சி பாவம் செய்யாமல் வாழ்வதில் உள்ளது.
Taqwa is the guts and the will to please Allah, even when the whole world is hell bent on displeasing Him...
#இறையச்சம் என்பது உலகமே பாவத்தின் பக்கம் அழைத்தாலும், அல்லாஹ்விற்காக பாவங்களை விட்டு விலக கூடிய துணிவில் உள்ளது.
Taqwa is to wear that beard and Hijab for the sole reason of pleasing Our Creator and to keep it as per sunnah....
#இறையச்சம் என்பது தாடி வைப்பதும் பர்தா அணிவதும் என் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு மட்டும் தான் இதை செய்கிறேன் என்பதில் உள்ளது.
Taqwa is to stay happy and smiling even after knowing this world is a prison for believers...
#இறையச்சம் என்பது இந்த உலகம் இறைவிசுவாசிகளுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும் என்று தெரிந்தும் புன்னகையுடனும், சந்தோஷத்துடன் வாழ்வதில் உள்ளது.
Taqwa is the good manners and character that loving and fearing Allah brings in us...
#இறையச்சம் என்பது நல்ல பண்புகளையும், நற்குணத்தையும், மனிதர்களை நேசிக்கின்ற சுபாவம் போன்ற நற்செயல்களில் உள்ளது.
Taqwa is the struggle to better yourself according to Islam with each passing day...
#இறையச்சம் ஒவ்வொரு நாளையும் இஸ்லாம் உனக்கு கற்றுத் தந்த ஒழுகத்தில் வாழ்வதில் உள்ளது.
Taqwa IS ALL ABOUT WHAT LIES IN THE HEART.
#இறையச்சம் உன் உள்ளம் ஒரு பாவமான காரியத்தை தவறு என்று உணர்த்துவதில் உள்ளது.
_And if this heart is filled with proper *Taqwa*, then actions automatically follow..._
#இறையச்சம் உன் உள்ளத்தை தூய்மை படுத்திவிட்டால் உன் முழு வாழ்க்கையும் தூய்மையாகி விடும் இன்ஷா அல்லாஹ்..
_And the sweetness of these actions is so much better.._
இறையச்சம் என்பதை தெளிவாக உணரும்போது தான் அதன் சுவையை உணரமுடியும்.
_Remind, for reminder benefits the believers
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
(அல்குர்ஆன் : 51:55)
பதிவு நாள்: 10-10-2017
Sunday, 8 October 2017
உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே
உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே😢
உன்னுடைய இத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது😢
👨👩👧👦👥👤உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்
1.உனது ஆடைகளை களைவர்
2.குளிப்பாட்டுவர்
3.கபன் அணிவிப்பர்
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்
5.கப்ர் என்ற புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்வர்
6.உனது ஜனாஸாவிற்கு வரும் பலர்
உன்னை அடக்கம் செய்வதில் அவர்களின் அமல்களை வீணாக்கி விடுவர்
மற்றும் சிலர் உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள்
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
உன்னுடைய திறப்புகள்
புத்தகங்கள்
பைகள்
செருப்புகள்
ஆடைகள்
👉உன்னுடைய குடும்பத்தில் தீன் இருந்தால் அவைகளை சதகா செய்துவிடுவார்கள்
👉உறுதியாக விளங்கிக்கொள்
👉உனது பிரிவால் உலகம் கவலை படாது
👉பொருளாதாரம் தடைப்படாது
👉உன்னுடைய உத்தியோகத்தின் கதிரைக்கு வேறொருவர் வருவார்
👉உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்
😢அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்
😢நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரே!!!!!
எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்
👉உன்னைப் பற்றிய கவலை 3பங்காக்கப்படும்
1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்🗣
பாவம்😢
2.நன்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்
😐😐😐😐😐😐😐😐😐
மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்
😢மறுமை😢
உன்னை விட்டும் நீங்கியது
1.அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி
😐😐😐😐😐😐😐😐😐
உனது கப்ரிற்கு எதனை தயாரித்து வைத்துள்ளாய்
👇👇👇👇👇👇👇👇👇
இவ்விடயங்களில் ஆசை வை
1.பர்ழு தொழுகை
2.நபில் தொழுகை
3.இரகசிய தர்மம்
4.நல்ல செயல்கள்
5.தஹஜ்ஜுத்
✍✍✍✍✍✍✍
ஞாபகப்படுத்துவது முஃமினுக்கு பிரயோஜனம் அளிக்கும்
👨👩👧👦👥👤உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்
1.உனது ஆடைகளை களைவர்
2.குளிப்பாட்டுவர்
3.கபன் அணிவிப்பர்
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்
5.கப்ர் என்ற புதிய வீட்டிற்கு அழைத்துச் செல்வர்
6.உனது ஜனாஸாவிற்கு வரும் பலர்
உன்னை அடக்கம் செய்வதில் அவர்களின் அமல்களை வீணாக்கி விடுவர்
மற்றும் சிலர் உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள்
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
உன்னுடைய திறப்புகள்
புத்தகங்கள்
பைகள்
செருப்புகள்
ஆடைகள்
👉உன்னுடைய குடும்பத்தில் தீன் இருந்தால் அவைகளை சதகா செய்துவிடுவார்கள்
👉உறுதியாக விளங்கிக்கொள்
👉உனது பிரிவால் உலகம் கவலை படாது
👉பொருளாதாரம் தடைப்படாது
👉உன்னுடைய உத்தியோகத்தின் கதிரைக்கு வேறொருவர் வருவார்
👉உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்
😢அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்
😢நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரே!!!!!
எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்
👉உன்னைப் பற்றிய கவலை 3பங்காக்கப்படும்
1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்🗣
பாவம்😢
2.நன்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்
😐😐😐😐😐😐😐😐😐
மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்
😢மறுமை😢
உன்னை விட்டும் நீங்கியது
1.அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி
😐😐😐😐😐😐😐😐😐
உனது கப்ரிற்கு எதனை தயாரித்து வைத்துள்ளாய்
👇👇👇👇👇👇👇👇👇
இவ்விடயங்களில் ஆசை வை
1.பர்ழு தொழுகை
2.நபில் தொழுகை
3.இரகசிய தர்மம்
4.நல்ல செயல்கள்
5.தஹஜ்ஜுத்
✍✍✍✍✍✍✍
ஞாபகப்படுத்துவது முஃமினுக்கு பிரயோஜனம் அளிக்கும்
Wednesday, 4 October 2017
எது வணக்கம்.?
எது வணக்கம்.?
அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.
கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை ஆண்டவன் படைத்தான்?
என்ற சந்தேகமும் எழும்.
உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?
வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?
ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...
மாறாக....
ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உண்மையை உரக்கச் சொல்லும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!
இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவந்திழுக்குமே தவிர,
வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் அல்ல!
"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை”
-அல்குர்ஆன் 51:56
அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.
கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை ஆண்டவன் படைத்தான்?
என்ற சந்தேகமும் எழும்.
உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?
வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?
ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?
எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...
மாறாக....
ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உண்மையை உரக்கச் சொல்லும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...
இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!
இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவந்திழுக்குமே தவிர,
வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் அல்ல!
"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை”
-அல்குர்ஆன் 51:56
Tuesday, 3 October 2017
பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் ரலியல்லாஹூ அன்ஹா
பொறுமையால் சுவர்க்கம் நுழைந்த உம்மு சுபைர் ரலியல்லாஹூ அன்ஹா
தனது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத பலரைப் பார்த்திருக்கிறோம்....!!
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவை உடனடியாக நீங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.....!!
இப்படிப்பட்டவர்களுக்கு படிப்பினையாக இஸ்லாமிய வரலாற்றில் மிக அழகான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளது....!!!
பொறுமையிழந்து இறைவனை மறந்து மாறு செய்யும் மக்களுக்கு மிகவும் அவசியமான படிப்பினையான சம்பவம் அது.....!!!
உம்மு ஸுபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வரலாற்றில் இடம் பெற்ற இந்த நிகழ்வு இன்றும் ஓர் நிகழ்கால அதிசயமாகும்..!!
சுவர்க்கத்திற்கு செல்லும் ஒரு பெண்மணியை நான் தெரிவிக்கட்டுமா? என்று என்னிடம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கேட்டார்கள்....!!
நான்,ஆம் தெரிவியுங்கள் என்றேன்....!!
இதோ இந்த கருப்பு நிற பெண்மணிதான் என்று உம்மு ஸூபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களை சுட்டிக் காட்டினார்கள்....!!
இந்தப் பெண்மணி நபியவர்களிடம் வந்து எனக்க வலிப்பு நோய் ஏற்படுகிறது.,,,
இதனால் என் ஆடைகள் திறந்து கொள்கின்றன. எனவே எனக்காக(என் நோய் நீங்க) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.,,, என்று கூறினார்....!!
அதற்கு கண்மணி நபியவர்கள் (அல்லாஹ் இந்நோயை நீக்கும்வரை) நீ பொறுமையை மேற்கொண்டால் உமக்கு சுவர்க்கம் உண்டு.
நீர் விரும்பினால் உமக்கு நிவாரணம் அளிக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். (நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள்) என்று கேட்டார்கள்...,,,,
அதற்கவர் நான் பொறுமையை மேற்கொள்கிறேன்.(எனக்கு சுவர்க்கம் வேண்டும்) ஆனால் எனக்கு வலிப்பு ஏற்படும் போது ஆடை விலகிக் கொள்கிறது....!!
அவை விலகாமல் இருக்க மாத்திரம் துஆ செய்யுங்கள் என்றார்கள்..,,,
கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் அதற்காக துஆ செய்தார்கள்....!!
அறிவிப்பவர் : அதா பின் ரபாஹ் ரலியல்லாஹூ . நூல் : புகாரி, முஸ்லிம்.
உம்மு ஸூபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தனது நோய் நீங்க வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்று நபியவர்களிடம் கேட்கிறார்கள்....!!
நபியவர்களோ பொறுமையாக இருந்தால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் அல்லாஹ் உனது நோயை இலேசாக்குவான் பொறுமையாக இருக்கிறாயா என்று கேட்கிறார்கள்....!!
அதற்கு அந்தப் பெண்மணி எனக்கு சுவர்க்கம் தான் முக்கியம் அதனால் நான் பொறுமையாக இருக்கிறேன்.,,
ஆனால்,எனது ஆடைகள் விலகுவதினால் அதற்கு மாத்திரம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து,,,,
எனது மானம் காக்க உதவுங்கள் என்கிறார்கள் நபியவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள்...!!
அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய அடிப்படையில் நமது பிரச்சினைகளை சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டு,,,,
இறைவனிடம் பிரார்த்தனை செய்து இம்மை மறுமையில் வெற்றி பெறுவோமாக!
ஸல்லல்லாஹூ அலா முகம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
தனது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள் துயரங்களை தாங்கிக் கொள்ள முடியாத பலரைப் பார்த்திருக்கிறோம்....!!
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவை உடனடியாக நீங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.....!!
இப்படிப்பட்டவர்களுக்கு படிப்பினையாக இஸ்லாமிய வரலாற்றில் மிக அழகான ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளது....!!!
பொறுமையிழந்து இறைவனை மறந்து மாறு செய்யும் மக்களுக்கு மிகவும் அவசியமான படிப்பினையான சம்பவம் அது.....!!!
உம்மு ஸுபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வரலாற்றில் இடம் பெற்ற இந்த நிகழ்வு இன்றும் ஓர் நிகழ்கால அதிசயமாகும்..!!
சுவர்க்கத்திற்கு செல்லும் ஒரு பெண்மணியை நான் தெரிவிக்கட்டுமா? என்று என்னிடம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கேட்டார்கள்....!!
நான்,ஆம் தெரிவியுங்கள் என்றேன்....!!
இதோ இந்த கருப்பு நிற பெண்மணிதான் என்று உம்மு ஸூபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்களை சுட்டிக் காட்டினார்கள்....!!
இந்தப் பெண்மணி நபியவர்களிடம் வந்து எனக்க வலிப்பு நோய் ஏற்படுகிறது.,,,
இதனால் என் ஆடைகள் திறந்து கொள்கின்றன. எனவே எனக்காக(என் நோய் நீங்க) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.,,, என்று கூறினார்....!!
அதற்கு கண்மணி நபியவர்கள் (அல்லாஹ் இந்நோயை நீக்கும்வரை) நீ பொறுமையை மேற்கொண்டால் உமக்கு சுவர்க்கம் உண்டு.
நீர் விரும்பினால் உமக்கு நிவாரணம் அளிக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். (நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள்) என்று கேட்டார்கள்...,,,,
அதற்கவர் நான் பொறுமையை மேற்கொள்கிறேன்.(எனக்கு சுவர்க்கம் வேண்டும்) ஆனால் எனக்கு வலிப்பு ஏற்படும் போது ஆடை விலகிக் கொள்கிறது....!!
அவை விலகாமல் இருக்க மாத்திரம் துஆ செய்யுங்கள் என்றார்கள்..,,,
கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் அதற்காக துஆ செய்தார்கள்....!!
அறிவிப்பவர் : அதா பின் ரபாஹ் ரலியல்லாஹூ . நூல் : புகாரி, முஸ்லிம்.
உம்மு ஸூபைர் ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தனது நோய் நீங்க வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்று நபியவர்களிடம் கேட்கிறார்கள்....!!
நபியவர்களோ பொறுமையாக இருந்தால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் அல்லாஹ் உனது நோயை இலேசாக்குவான் பொறுமையாக இருக்கிறாயா என்று கேட்கிறார்கள்....!!
அதற்கு அந்தப் பெண்மணி எனக்கு சுவர்க்கம் தான் முக்கியம் அதனால் நான் பொறுமையாக இருக்கிறேன்.,,
ஆனால்,எனது ஆடைகள் விலகுவதினால் அதற்கு மாத்திரம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து,,,,
எனது மானம் காக்க உதவுங்கள் என்கிறார்கள் நபியவர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள்...!!
அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய அடிப்படையில் நமது பிரச்சினைகளை சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டு,,,,
இறைவனிடம் பிரார்த்தனை செய்து இம்மை மறுமையில் வெற்றி பெறுவோமாக!
ஸல்லல்லாஹூ அலா முகம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
Sunday, 1 October 2017
சந்தா புதுப்பித்தல் குறித்த முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு
ஆறு மாத சந்தா நிறைவடைந்த சகோதரர்கள் தங்களின் சந்தாக்களை புதுப்பித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆறு மாத சந்தா தொகை:125 ரூபாய்
ஒரு வருட சந்தா தொகை:250 ரூபாய்
மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்ப வேண்டிய முகவரி
முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி,
கியாமத் நாளை நோக்கி மாத இதழ் அலுவலகம்,
பள்ளிவாசல் ரோடு, கீரனூர்
624 617, பழனி தாலுக்கா,
திண்டுக்கல் மாவட்டம்
செல் நம்பர்:8148009583
சந்தா செலுத்துவதற்கான வங்கி கணக்கின் விவரம்.
ACCOUNT NUMBER: 0321104000059963
ACCOUNT NAME: A MOHAMMED SHAFFI
BANK NAME:IDBI BANK
BRANCH: NAMAKKAL
IFSC CODE: IBKL0000321
மேலும் விபரங்களுக்கு:
முஹம்மது முஸ்தஃபா (சென்னை)
தொடர்பு எண்:9486703710
ஆறு மாத சந்தா நிறைவடைந்த சகோதரர்கள் தங்களின் சந்தாக்களை புதுப்பித்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆறு மாத சந்தா தொகை:125 ரூபாய்
ஒரு வருட சந்தா தொகை:250 ரூபாய்
மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்ப வேண்டிய முகவரி
முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி,
கியாமத் நாளை நோக்கி மாத இதழ் அலுவலகம்,
பள்ளிவாசல் ரோடு, கீரனூர்
624 617, பழனி தாலுக்கா,
திண்டுக்கல் மாவட்டம்
செல் நம்பர்:8148009583
சந்தா செலுத்துவதற்கான வங்கி கணக்கின் விவரம்.
ACCOUNT NUMBER: 0321104000059963
ACCOUNT NAME: A MOHAMMED SHAFFI
BANK NAME:IDBI BANK
BRANCH: NAMAKKAL
IFSC CODE: IBKL0000321
மேலும் விபரங்களுக்கு:
முஹம்மது முஸ்தஃபா (சென்னை)
தொடர்பு எண்:9486703710
Subscribe to:
Posts (Atom)