Tuesday, 10 October 2017

பெற்றோரின் சிறப்பு.


பெற்றோரின் சிறப்பு.
-----------------------------------
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்றார். “உன் தாய்“ என்றார்கள். அவர், “பிறகு யார்?“ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தை“ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி :

அன்பர்களே...
 காலமெல்லாம் நமக்காக உபகாரமாக மட்டுமே வாழ்ந்த , வாழுகிற, இன்ஷாஅல்லாஹ் இனியும் வாழவிருக்கிற
நம் தாய் தந்தையிடம் நாம் எவ்வாறு உறவாடுகிறோம்.

அழகிய முறையில் உறவாடுகிறவர்கள்
ஈருலகிலும் நற்பாக்கியம் பெற்றவர்கள்.

பெற்றோரில் ஒருவரை இழந்து ஒருவரை மட்டும் பெற்றுக்கொண்டோர்
இருவரிடமும் காட்டவேண்டிய அன்பை,உபசரிப்பை,மரியாதையை,
பணிவிடையை மிஞ்சியிருக்கும்[ தாயோ, தந்தையோ]  அந்த ஒருவரிடம் பெரும்பாக்கியம் என்று
மொத்தத்தையும்  காட்டுங்கள்
அருளாலன் அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.

தயவுசெய்து சிந்திப்போம்..

இழந்த பின் அவர்கள் செய்த உபகாரத்தை நினைத்து வருந்துவதில் என்ன பலன் இருக்கப்போகிறது

இருக்கும்போதே அவர்களை மதிப்போமே,
அளவுகடந்த அன்போடு நடந்துகொள்வோமே
அவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோமே
அவர்களுக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திப்போமே.

ரப்பனா ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸஃகீரா..
😭😭😭😭😭😭😭😭😭😭

No comments:

Post a Comment