Thursday, 14 November 2019
இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 4
அபூபக்கர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்
முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்தபோது அதனை ஜீரணிக்க முடியாமல் ஸஹாபாக்கள் அங்கு வீற்றிருக்க உமர் (ரழி) அவர்கள் உருவிய வாளோடு யாராவது நபியவர்கள் மரணித்ததாகச் சொல்லும்வரை காத்திருந்தார்கள் தலையைக் கொய்தெடுக்க. இந்த நேரத்தில் அங்குவந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் நிலைமையை அழகான முறையில் சீர்செய்தார்கள். உமர் பொட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசின் பொறுப்பை நபி (ஸல்) அவர்களின் பின் யார் ஏற்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும் அதனால் தோன்றவிருந்த மிகப்பெரிய சமூகப் பிளவையும் அபூபக்கர் (ரழி) அவர்கள் யாருக்கும் அநியாயம் நேர்ந்துவிடாமல் யதார்த்த நிலையை எடுத்து முன்வைத்து அந்த பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்கள்.
நபியவர்கள் மரணித்ததும் அன்னாரின் உடலை முஹாஜிர்கள் மக்காவிலும் அன்ஸாரிகள் மதீனாவிலும் அடக்கம் செய்யவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு உருவாகிவிட்டது. இதன்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் நபிமார்கள் எங்கு வஃபாத்தானார்களோ அதே இடத்தில்தான் அடக்கம் செய்யப்படவும் வேண்டுமென்ற நபிமொழியை நினைவூட்டி அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் இரண்டு வருடங்களே ஆட்சிசெய்தார்கள் என்பதால் பெரியளவில் சச்சரவுகள் தோன்றி அவற்றுக்குத் தீர்ப்புகள் வழங்க காலம் இருக்கவில்லை.
ஆனாலும் அதன் பின்பு கலீஃபாவாக வந்த உமர் (ரழி) அவர்கள் சுமார் பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்கள் என்பதாலும் அவரது காலப்பிரிவிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவுபட்டதென்பதாலும் பல்வேறு வழக்குகளை விசாரிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆரம்பத்தில் அமீருல் முஃமினீன் அவர்களே தோன்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலும் சாம்ராஜ்யம் விரிவுபடவே அப்பொறுப்பை நீதிவான்களுக்கும் சிலபோது காழிமார்களுக்கும் வழங்கினார்கள்.
எனவே உமர் அவர்களின் காலத்திலிருந்து நீதி முறைமைகளுக்கான நடைமுறை நிகழ்வுகளை அதிகமாகவே இங்கே எடுத்துக்காட்ட முடியும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:14-11-2019
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment