Tuesday, 5 March 2019

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1125

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱

📚 குர்ஆனிலிருந்து கேட்கப் பட்ட இரண்டு கேள்விகள் :

கேள்வி 01: ஃபிர்அவ்ன் சூனியக்கார்கள் ஈமான் கொண்ட பொழுது என்ன கூறினான்❓

 பதில்: “நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

🌏ஆதாரம் -: 20 : 71

கேள்வி 02: மூஸா அலை அவர்களின் சமூகத்தை எவ்வாறு சோதித்தான்❓

பதில்: “நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்

🌏 ஆதாரம் 20:85
🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: நபி ஸல் அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம் எவ்வாறு எடுக்கப்பட்டது?

பதில்: ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)' என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது' என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார்கள்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன' என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்' என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.

  🌏 📗ஆதாரம்: புஹாரி :3268

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி - 3

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி - 3 (அட்மின்)

03) யாசர் அரபாத் - காயல்பட்டினம் - ❓

04) முஹம்மது ஹனீபா - சேலம் - 3

05) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி - 3
06) நஜ்முதீன் - கூத்தாநல்லூர் - 2

07) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி - 3

08) அப்துல் மாலிக் முஹம்மது - பந்தர்(தஞ்சை) - 3

09) முஹம்மது முஸ்தபா - சென்னை - 3 (அட்மின்)

10) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  - ❓

11) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம் - 3

12) காதர் ஹூசேன் - மலேசியா  - 3

13) சமீர் - காவக்காரன்பட்டி - 3

14) தாஜூதீன் - B. மேட்டூர் - 3

15) இம்ரான் - சென்னை - 3

16) முஹம்மது - மேலப்பாளையம் - 3

17) ஹமீதுதீன் - தஞ்சாவூர் - 3

18) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி - 3

19) முஹம்மது இர்பான் - பண்டாரவடை -  3

20) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி - 3

21)அப்துல்லா - சென்னை - 3

22)சலீம் ராஜா - தேவகோட்டை - 3

23)முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம் - 3 (அட்மின்)

24) அப்துல் காதர் - திருநெல்வேலி - 3

25)முஜீப் - சென்னை - 3

26) நூர் முஹம்மது அஜீஸ் - தென்காசி - 3

27) உம்ர் - புளியங்குடி - 3

28) முஹம்மது ரஃபி - சென்னை - 3

 29) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி - ❓

30)முஹம்மது பயாஸ் - சென்னை - 3

31)பீர் முஹம்மது - ராஜகிரி - 2

32)முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி - 3

33)ஜாகீர் உசேன் - கோவை - ❓ (அட்மின்)

34)S.ஷம்சுல்லுஹா - மதுரை - 3

35)  ஹபீபுர் ரஹ்மான்  - சென்னை - 3

36))சித்திக் - மண்பறை - ❓

37)ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி - ❓

 38)அன்வர்தீன் - காவக்காரன்பட்டி  - ❓

39)அப்துல் பஃத்தாஹ் - கூத்தாநல்லூர்  - ?

40)அ. முஹம்மது யூசுப் - மேலக்காவேரி - ❓

41)சுல்தான்  - திருநெல்வேலி - ❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி - ❓

43) முஹம்மது ரபிக் - காவக்காரன்பட்டி - ?

44) அபுதல்ஹா - திருநெல்வேலி - ❓

45) MG நிஜாமுதீன்  -     பு,முட்லூர் - ❓(அட்மின்)

46) க. அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர - ❓

47)அப்துல் பாஸித் - கோவை - ?

48)B.முஹம்மது ஃபாதித் -
தாம்பரம் - ?

49)அலாவுதீன் - கருர் - ❓
🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால்
தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ஜுமாதல் ஆஹிரா 24/06/1440 வ
சனிக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள் : 2/ 03/ 2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

No comments:

Post a Comment