ஜிப்ரீல் மர்யம் (அலை) அவர்களின் கலந்துரையாடல் - 2
ஜிப்ரீல் : அல்லாஹ் எதையேனும் நடந்தேற விரும்பிவிட்டால் அவன் அதை படைத்துவிடுவான். அவன் முடிவெடுத்துவிட்டால் அதை தடுப்பவர் எவருமில்லை என்று கூறுகிறார் (ஆல இம்ரான் :47),
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
மேலும் இது அவனுக்கு மிகவும் சுலபமாதாகும் . அவன் இக்குழந்தையை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும் பரக்கத் நிறைந்தவராகவும் அந்த ஆண் மகவை ஆக்கவுமுள்ளான். இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விசயமாகும் என்றும் கூறினார். இதற்குப் பின்பு மர்யம் (அலை) அவர்கள் அந்த கருவைச் சுமந்த வண்ணமே வேறு ஒரு ஊருக்கு தொலைவில் சென்று வாழ்ந்து வந்தார். (அல்குர்ஆன் : 19 : 21 - 22)
19:21 “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
19:22 அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017
No comments:
Post a Comment