Tuesday, 21 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-10

மர்யம் (அலை) அவர்களின் பிரசவம்

அல்லாஹ்  மர்யம் (அலை ) அவர்களை அவரின்  சமுதாயத்தினரிடமிருந்து பல காரணங்களுக்காக விலக்கி வைத்திருந்தான் . உதாரணமாக ,மக்கள்  மர்யம் (அலை)அவர்களின் அற்புத நிலைமையை புரிந்து கொள்ளாமல் அவரை விமர்சனத்திற்குள்ளாக்கினர். எனவே  அவர்களை அங்கிருந்து விலக்கி தொலைவில் வாழ வைத்தான். இதனால்  அவருடைய பிரசவிக்கும் வரையில் அவருக்கும் அவருடைய கருவிற்கும் மன நிம்மதியும் சமாதானமும் கிடைத்தது.

அல்லாஹ்வின் உதவியும், நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும்

அல்லாஹ், மர்யம் (அலை) அவர்களின் கர்ப்பகாலம் முழுவதும் அவருக்குத் துணைபுரிந்தான். இவை எல்லாவற்றையும் விட உதவிக்கென மருத்துவரோ ,மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் தனியாகத் தானே பிரசவிப்பது என்பது  ஓர் அசாத்தியமான அனுபவமாகும். இருப்பினும், மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது தனக்கே உண்டான தனது முழு நம்பிக்கையையும் வைத்தார்.  பிரசவ வலியில் சொல்லொன்னா துயரில் துடித்து அலறிய மர்யம் (அலை ) அவர்கள் எனக்கு "இவ்வேதனைக்கு பதிலாக மரணித்து விடக் கூடாதா" என்று கதறினார்கள். அவ்வேளையில் அல்லாஹ், "இவ்வேதனைக்குப் பகரமாக நாம் உங்களின் பாதங்களுக்கு கீழே ஒரு ஆற்றினையும் பேரித்த மரங்களையும் உருவாக்கியுள்ளோம். அந்த ஆற்றின் நீரினையும், மிகச் சுவையான பேரித்தம் பழங்களையும் நீங்கள் உண்டு பருகுவீர்கள். அது உங்கள் கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியாக அமையும்" என்று நற்செய்தி கூறுகின்றான். இதன் விளைவாக அவர்கள் பிரசவம் எளிதாக நிகழ்ந்தது .(அல்குர்ஆன் : 19 : 23 - 26 )

19:23 பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.

19:24 (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்

19:25 “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

19:26.“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் இந்த சூழ்நிலையில் நாம்  தெளிவாக காணக்கூடியதாக அமைகின்றது.  உண்மையில், அவனுடைய ஆலோசனை நவீன அறிவியல் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்த ஆலோசனைகளை நாம் இப்பொழுது சில விளக்கங்களின் மூலம் காண்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 21-11-2017

No comments:

Post a Comment