Tuesday, 21 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-11

மர்யம் (அலை) பேரித்தம் மரத்தினை உலுக்குதல்

அல்லாஹ்,  மர்யம்  (அலை) அவர்கள் பிரசவ வேதனையின் போது அங்குள்ள பேரித்தம் மரத்தின் கிளையினை உலுக்குமாறு அறிவுறுத்துகிறான்.(அல்குர்ஆன் 19 :25 )

19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

மர்யம் (அலை) தம் சமூகத்தாரிடம்  திரும்புதல்

மர்யம் (அலை) அவர்கள் தாம் பெற்றெடுத்த மகவுடன் தன் சமுதாய மக்களிடம் திரும்பிய பொழுது அவர்கள், இறைவனின் அருளையும் அதிசயத்தினையும் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் அவரை அநாகரீகமான வார்த்தைகளாலும் அவதூறுகளாலும் நோவினை செய்தனர். மர்யம் (அலை) அவர்கள் இம்ரானின் குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தும் அக்குடும்பத்தார் எவ்வாறு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் பயமும் கொண்டவர்கள் என்பதனை அறிந்தும் மர்யம் (அலை) அவர்கள் எவ்வாறு தன்மானம் மிக்கவர்கள் என்பதனை அறிந்தும் அவரின்  நடத்தையில் சந்தேகம் கொண்டனர். அல்லாஹ் பின்வருமாறு இறைமறையிலே அந்த அவதூறுகளைப் பற்றி குறிப்பிடுகின்றான் .

சந்தேகத்திற்கிடமின்றி மர்யம் (அலை) அவர்களுக்கு இது மிகப்பெரிய சோதனை  ஆகும்.

மர்யம் (அலை)அவர்களின் தீர்க்கமான உறுதிமொழி

அல்லாஹ் அவரின் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதில் அளித்தான். மேலும் அவருக்கு மன நிம்மதியையும் அளித்தான். எந்த மனிதரிடமும் பேசுவதில்லை என்று அவதூறு உரைப்பவர்களிடம் தெரிவிக்குமாறு  அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் (அல்குர்ஆன் மர்யம் 19 : 26 )

19:26 “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.

இன்ஷா அல்லாஹ் தெடரும்....

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.

No comments:

Post a Comment