இதன்பின் மர்யம் (அலை) அவர்கள் இந்த குழந்தை அல்லாஹ்வின் அருளால் தனக்கு வழங்கப்பட்டது என்றும் இவர் வளர்ந்து நம்பிக்கையாளர்களில் ஒருவராக இருப்பார் என்றும் கூறினார்கள் (அல்குர்ஆன் ஆல இம்ரான் 46).
3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
இந்நிலையில் அல்லாஹ் தனது அதிசயத்தினை நிகழ்த்திக் காட்டினான். தாம் அல்லாஹ்வினால் இஸ்ரேலியர்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதுவன் என்றும் அக்குழந்தை கூறியது .
அப்பொழுது எப்படி பிறந்த குழந்தை பேசுமென்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு, தான் இறைவனின் தூதுவன் என்றும் எனக்கென்று தனியாக ஒரு இறைமறையும் இறைவன் வழங்கியுள்ளான் என்றும் தன்னை நபியாகவும் ஆக்கியுள்ளான் என்றும் குழந்தை ஈஸா கூறினார் . மேலும் தான் அவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்யவேண்டுமென்றும் ஜக்காத்தினை சரியாக வழங்கவும், தன் தாயின் மீது கருணை பொழிய வேண்டுமென்றும் இறைவனால் பணிக்கப்பட்டுள்ளதாக கூறினார் . இறைவன் என்னை அரக்கனாகவும் அராஜகம் புரிபவனாகவும் படைக்கவில்லை என்றும் , நான் பிறந்தது முதல் இறக்கும் வரை என் மீது அமைதியையும் சமாதானத்தையும்
பொழிந்துள்ளான் என்றும் கூறினார் . மேலும் தான் அவனளவில் உயர்த்தப்பட்டு மீண்டும் வாழ்விக்கப்படுவேன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 : 29 - 34 )
19:29 (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
இந்த அதிசயத்தக்க நிகழ்வினை அல்லாஹ் பின்வருமாறு இறை மறையிலே கூறுகின்றான் (சூரா அன்பியா 91 ), மேலும் இறைவன் மர்யம் (அலை) மற்றும் அவரின் மகன் ஈஸா (அலை)அவர்கள் இருவரையும் மக்களிலேயே உயர்வானவர்களாக்கி வைத்தான் . மர்யம் (அலை) அவர்களை அவதூறு கூறியவர்களின் முன் குழந்தை ஈஸா அவர்களின் பேச்சானது மர்யம் (அலை) அவர்களின் புனிதத் தன்மையையும் கர்ப்பினையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்தியது .
21:91 இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017.
No comments:
Post a Comment