Tuesday, 21 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-8

ஜிப்ரீல் மர்யம் (அலை) அவர்களின் கலந்துரையாடல் - 1



ஜிப்ரீல் (அலை) நான் அல்லாஹ்விடமிருந்து  அனுப்பப்பட்டுள்ள தூதுவனாவேன் என்று தன்னை அறிமுகப்படுத்தி மேலும், அவன்  உங்களுக்கு ஒரு பரிசுத்தமான மகனை வழங்க வல்லவன் என்றும் கூறினார் (அல்குர்ஆன் 19 - 19 )

19:19 “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.

ஜிப்ரீல் : “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார் (அல்குர்ஆன் 3 : 45 ) என்று நற்செய்தி கூறினார்.

3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

மர்யம் : ஜிப்ரீலிடம் என்னை எந்த ஒரு ஆணும் தொடாமல் இது எப்படி சாத்தியமாகும் நான் பத்தினி பெண் இல்லையா என்று வினவ (அல்குர்ஆன் மர்யம் 19 :20 )

19:20 அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்:

No comments:

Post a Comment