Tuesday, 21 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-7

ஜிப்ரீல் மர்யம் (அலை ) அவர்களைச் சந்தித்தல்


மர்யம் (அலை) அவர்கள் அவருடைய வாழ்நாள் முழுவதுமே எண்ணிலடங்கா அதிசயங்களை சந்தித்திருந்தார். தாம் வாழ்ந்த குடும்பம், சமூகத்தை விட்டு  வெளியேறி கிழக்கு நோக்கி சென்று வாழ்ந்து வருபவராகத் திகழ்ந்தார். அங்கு ஜிப்ரீல் (அலை) அவர்களை மர்யம் (அலை) அவர்கள் நல்லதொரு திடகாத்திரமான மனித உருவத்தில் சந்தித்தார் .

19:16 (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

ஜிப்ரீலை கண்டதும் மர்யம் (அலை) அவர்கள் , நான் உங்களை யாரென்று அறிந்திருக்கவில்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால், என்னை நெருங்காதீர்கள் என்று அவரை எச்சரிக்கை செய்தார் (சூரா மர்யம் 19). இவ்வார்த்தைகள் மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதனையும், தனது கற்பு மற்றும் இறைவனுக்கான தனது அச்சம்  எவ்வளவு முக்கியமானது என்பதனையும், மேலும் முக்கியமாக யாரென்று அறியாத ஒருவரையும் அல்லாஹ்வை அஞ்சவும் கண்ணியப்படுத்தவும் தூண்டின என்பதனையும் தெளிவாகக் கூறுகின்றன .

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-11-2017

No comments:

Post a Comment