Saturday, 11 November 2017
மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-5
மர்யமின் தாயாருக்கிருந்த அல்லாஹ்வின் மீதான பற்றுதலையும் அனைத்து காரியங்களையும் அவன் மீதே பொறுப்பை ஒப்படைத்து சாட்டிவிடுதலையும் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த படிப்பினையாக உள்ளது.
ஜக்கரிய்யா (அலை) அவர்களை பாதுகாப்பாளராக நியமித்தல்:
மர்யமின் தாயார் கேட்ட துஆவிற்காக, மர்யமைத் தான் பொறுப்பெடுத்துக் கொண்டதாக அல்லாஹ் கூறுகிறான். அவர் தன் நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு தன் குழந்தையை பைத்துல் மக்தஸிற்கு விட்ட பிறகு, பெண்ணாக இருப்பதால் மர்யமை யார் பொறுப்பெடுப்பது என்ற கேள்வி எழுந்தது.
இறைநாட்டத்தால் ஜக்கரியா (அலை) அவர்கள் தாம் மர்யமிற்குக் கல்வி பயிற்றுவிப்பவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமக்கு வழங்கப்பட்ட பணியினை மிகச்சிறப்பாகச் செய்பவர்களாக இருந்தார்கள். மர்யமின் சகல விஷயங்களையும் அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். மர்யம் (அலை) பைத்துல் மக்தஸிலேயே தங்கி பக்குவமான பெண்ணாக வளர்ந்தார்கள். மர்யமின் வாழ்வில் நிகழ்ந்த பல இறை அற்புதங்களுக்குச் சான்று பகர்பவர்களாகவும், அனைவரது பிரியத்திற்குட்பட்டவராகத் திகழ்ந்ததை நேரில் கண்டவராகவும் ஜக்கரிய்யா(அலை) அவர்கள் இருந்தார்கள் (சூரா 3:37).
3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 11-11-2017.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment