Sunday, 12 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-6



ஜக்கரியா (அலை) அவர்களுக்கு ரப்பின் மீது உண்மையான பற்றுதலை வழங்கி அவரை உயர்த்திய அல்லாஹ் அவரை நேரிய வழியில் செலுத்தினான். அல்லாஹ்வின் மீதான அவருக்கிருந்த பயபக்தியையும் அவரது உயரிய குணங்களையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்: (சூரா அல் அன் ஆம்:85 - 87)

6:85 இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

6:86 இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

6:87 இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

மர்யம் (அலை) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தல்:

அவர்களது குடும்பத்தினர் போலவே, மர்யம் (அலை) அவர்கள் இயல்பிலேயே அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுபவர்களாகவும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்து அவனைத் தொழுபவர்களாகவும் இருந்தார்கள். இம்ரானின் குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்த இறைவன் மர்யம் அவர்களையும் மற்ற அனைத்து பெண்மணிகளிலும் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுத்தான். அவரது மேன்மையையும் தூய்மையையும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டு நமக்கு எடுத்தறிவிக்கிறான். (ஆல இம்ரான் 42-43)
Surat at-Tahrim: 12, Surat al-Anbiya': 91

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),

3:43 “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 12-11-2017.

No comments:

Post a Comment