Friday, 10 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-4



முஹர்ரீன்' எனும் அரபி வார்த்தைக்கு (உங்களது சேவைக்கு) அர்ப்பணிக்கப்பட்ட, அதாவது இம்மை ஆர்வம் சிறிதுமின்றி மறுமை குறித்த சிந்தனைகள் மட்டுமே கொண்ட 'தீவிர பக்தியுடையவர்' என்று பொருள். உண்மையான சுதந்திரம் என்பது அல்லாஹ்விற்கு சேவகம் புரிவதிலும் அவனுக்கு மட்டுமே அடிபணிவதிலும் மனிதர்களுக்காகவன்றி அல்லாஹ்வுக்காகவே வாழ்வதிலுமே உள்ளது. ஆகையால் தான் மர்யமின் தாயார் தனது கர்ப்பத்தில் உள்ளதை உலக விஷயங்களிலிருந்தும் விடுபட்டு யாருடைய ஒப்புதலும் அவசியமின்றி, அல்லாஹ்விற்காக முற்றிலும் அடிபணிந்து சேவகம் செய்ய விரும்பியதாலேயே அல்லாஹ்விற்காக அர்ப்பணித்து விட்டதாக வாக்குரைத்தார்.

மர்யமின் தாயார் அல்லாஹ்விடம் தமது அனைத்து குழந்தைகளுக்கும் அவனது திருப்பொருத்தத்தையும் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்பையும் வேண்டி துஆ செய்தார்கள். அவரது இம்மனமார்ந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்ட இறைவன் மர்யமை பூரண ஆரோக்கியத்துடனும் அழகுடனும் வளரச்செய்தான். (சூரா 3:37) மர்யம் (அலை) அவர்கள் மிகச்சிறந்த பரிபாலிப்பையும் உயர்ந்த குணநலன்களையும் பெற்று வளர்ந்தார்கள்.

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 11-11-2017

No comments:

Post a Comment