Friday, 10 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-3


மர்யம் (அலை) அவர்களின் பிறப்பு:

இம்ரானின் மனைவி தான் கர்ப்பமுற்றதை அறிந்ததும் அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் தன் மகவை அவனுக்கே முற்றிலும் அடிபணிந்ததாக அர்ப்பணிக்கவும் பிரார்த்தனைப் புரிந்தார். இம்ரானின் சமுதாயத்தினர் தம் ஆண் பிள்ளைகளைப் 'பைத்துல் மக்தஸ்' எனும் புனித பூமிக்குப் பணி செய்வதற்காக நேர்ச்சை செய்பவர்களாக இருந்தனர். அப்பள்ளிக்கு நேர்ச்சை செய்யப்பட்டவர்கள், எந்த வீண் விஷயங்களிலும் ஈடுபாடு காட்டாமல் அதிகமதிக வணக்கத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தனர்.

இம்ரானின் மனைவி, ஒரு பெண் குழந்தையை  மகவாக பெற்றதும்  அவர் அதற்கு மர்யம் (அல்லாஹ்விற்கு முழுமையாக விரும்பிக் கட்டுப்பட்டு வணங்குபவர்) எனப் பெயரிட்டு கேட்ட  பிரார்த்தனையாவது,
(ஆல இம்ரான் 35-36)

3:35 இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 10-11-2017.

No comments:

Post a Comment