Thursday, 9 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர்-2


3:45 மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்."

3:46 “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”

சத்தியமார்க்கத்தை விட்டும் விலகி இணைவைத்து வந்த மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக மர்யம் (அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்த இறைவன், அவரது பிறப்பு, குடும்பம், மகனது பிறப்பு, மக்கள் கூறிய அவதூறுகளை அல்லாஹ்விற்காக அமைதியாகத் தாங்கி நின்ற குணம் ஆகியவற்றை குர் ஆனில் சிறப்பித்து கூறுகிறான்.

இம்ரானின் குடும்பத்தை அல்லாஹ் மேன்மைப்படுத்தல்

ஆல இம்ரான் அத்தியாயத்தின் (33-34 ) வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்:
இம்ரானின் குடும்பத்தினர் ஆதம் (அலை), நூஹ் (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களின் சந்ததியின் நல்லடியார்களாவர். யூதர்கள் மாறு செய்து வந்த சமயத்திலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவன் விதித்த சட்டங்களை உளமாற ஏற்று அவன் மீதே பொறுப்பை சாட்டியவர்கள் அவர்கள். இத்தகைய மேன்மையான குடும்பத்தில் இருந்து தான் மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

3:33 ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.

3:34 (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 10-11-2017

No comments:

Post a Comment