Wednesday, 8 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் -1

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀


சிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்களுக்குத் தாயாராக இறைவன் தேர்ந்தெடுத்தான். மனித, ஜின் இனங்களிலேயே சிறந்த இனத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதர்கள் (2:47) பின்னாளில் அல்லாஹ்விற்கு மாறு செய்து வரம்பு மீறலாயினர். அவனது மார்க்கத்தை தம் மனோ இச்சையின்படி நடந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து அவனது அருட்கொடைகளுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்டனர்.

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
அல்லாஹ்வினால் அனுப்பபட்ட நபிமார்களின் தூதுச்செய்திகளை ஆணவத்துடன் மறுத்து, நபிமார்களைக் கொலை செய்தும் வந்தனர்.  அவர்களது வரம்புமீறல்களை அல்லாஹ் (சூரா மாயிதா:70) வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

5:70. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.

இத்தகைய குழப்பங்களிடையேயும் யூதர்கள் தமது வேதங்களில் சொல்லப்பட்ட இரட்சிப்பவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தான் மர்யம் (அலை) அவர்கள் பிறந்தார்கள். நல்லடியாராக இவரைத் தான் தேர்ந்தெடுத்ததை அல்லாஹ் தன் திருமறையில்
( சூரா ஆல இம்ரானில் 3:45,46 ) கூறுகிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 09-11-2017

No comments:

Post a Comment