Sunday, 14 May 2017

*📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 2📓*

*🎯மனித ஷைத்தான்கள்*


*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*

*وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ*

 *நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே' எனக் கூறுகின்றனர்.*

*திருக்குர்ஆன்  2:14*

🔘மனிதர்கள் நல்வழி செல்லாமல் தடுக்கக் கூடிய, மனிதக் கண்களுக்குத் தென்படாத ஒரு படைப்பு *ஷைத்தான்கள்* எனப்படுகின்றனர். திருக்குர்ஆனில் ஷைத்தான்கள் குறித்து பல வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

🔘ஆயினும் சில வசனங்களில் *ஷைத்தான்* என்ற சொல் அதன் நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்ட மனிதர்களைக் குறிப்பிடு வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. *2:14 2:102, 6:112* ஆகிய வசனங்கள் அது போல் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களாகும்.

♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻
பதிவு நாள்: 14-05-2017.

No comments:

Post a Comment