அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
"
📚அல்குர்ஆன் 3:83
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" நான் (ஒரு முறை) உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காக ஒரு பாத்திரம்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர் கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகை(யின் நேரம்) வந்ததும், அதற்காக அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து உள்ளச்சத்துடன் முறையோடு தொழுவாராயின், அந்தத் தொழுகை அதற்கு முந்தைய (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரம் ஆகாமலிருப்பதில்லை; அவர் பெரும் பாவம் ஏதும் செய்தால் தவிர. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்."
🎭அறிவிப்பவர்:
அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்)
📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -387
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
💥💢💥💢4-4-17💢💥💢💥
🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋⛩🕋
No comments:
Post a Comment