Sunday, 16 April 2017

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 4

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 4

💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈💈

🎓நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தனது குடும்பம் நினைவுக்கு வந்தவுடன் தனது சகோதரர்  தன் மீது கோபத்துடன் இருப்பதால், நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அதில் ஒரு அடிமையையும் தனது ஆடுகளில் சிலவற்றையும் தனது சகோதரர்  ஈசுவிடம் கொண்டு செல்லுமாறு கூறினார்.

💈மேலும் அவர் உன்னை யார் என்று கேட்டால் நான் உங்களது அடிமை என்று கூறு. மேலும் உன்னை யார் அனுப்பியது என்று கேட்டால் உங்களுடைய அடிமை யாகூப் அனுப்பி வைத்தார்கள் என்று கூறு என்று அந்த அடிமையை அனுப்பினார்கள். இவ்வாறு ஈசு கேட்க தனது தம்பி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேல் உள்ள கோபம் தணிய யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரரை காண வந்து அவரை கட்டியணைத்து ஏழு முறை மன்னிப்பு கேட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.

🐠மேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  மற்ற மனைவி மூலம் 10 குழந்தைகள் பிறந்தார்கள். ராகில் என்ற அம்மையாரின் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்தவர்   நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாவதாக புன்யாமின் என்பவர். இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில்   ராஹீல் அம்மையார் பிரசவத்தில் இறந்துவிடுகிறார்   புன்யாமீன் மீதும் மிகவும் பாசமாக இருந்தார்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment