தம் தந்தையின் ஆணைப்படி கன்ஆன் நாடு சென்று ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்தனர். அங்கு தம் மாமன் மகள் ருபக்காவையும் மணமுடித்து வாழ்ந்தனர். 80 வயதாகியும் பிள்ளைப்பேறு இவர்களுக்கு இல்லை.
பின்னர் இத்தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. முதலில் பிறந்த குழந்தையின் குதிகாலை கொழுகிக் கொண்டு அடுத்த ஆண்பிள்ளை பிறந்தது. முன்னால் பிறந்ததற்கு முன்னால் பிறந்தது என்று பொருள்படும் ஈசு என்றும், அடுத்தற்கு குதிகாலில் கொழுகி கொண்டு வந்தது என்று பொருள்படும் யஃகூப் என்றும் பெயரிட்டனர்.
தாம் இறைவனைத் தொழுதுவந்த பள்ளியை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தங்களது 180வது வயதில் மறைந்தனர். இவர்களின் அடக்கவிடம் இவர்களின் பெற்றோர்களின் அண்மையில் உள்ளது.
No comments:
Post a Comment