இவ்வாறு நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி சுபச்செய்தி செய்த மலக்குகளிடம் நமது தந்தை இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தை பற்றி தர்க்கம் செய்ய தொடங்கினார்கள். ஏன் ஏன்றால் லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தம்பி மகன் மேலும் தனது மனைவி சாரா அம்மையாரின் சகோதரன் என்பதால் சாரா அம்மையாரும் வருந்த ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் அங்கு வருகைதந்த மலக்குகள் கூறினார்கள் நபி இப்ராஹீமே (அலைஹிஸ்ஸலாம்) நீர் இந்த விசியத்தை புறக்கணித்து விடுவீர்களாக! ஏன் என்றால் அல்லாஹுவின் புறத்திலிருந்து கட்டளை வந்துவிட்டது, நிச்சயமாக அவர்கள் தட்டமுடியாத வேதனை அவர்களை வந்தே தீரும் என்று அவர்கள் கூறி சென்றுவிட்டார்கள்.
மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் தான் நிறைய நபிமார்கள் வந்ததாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு அல்லாஹ் பல இடங்களில் சிலாகித்து குறிப்பிடுகிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவின் கட்டளையை நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவராகவும் மேலும் அல்லாஹுவின் மார்க்க நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல் பெற்றவராக அல்லாஹ் மேலும் மேலும் இவரை சிலாகித்து கூறுகிறான்.
No comments:
Post a Comment