Sunday, 19 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻

இன்றைய திருக் குர்ஆன் வசனம்:

🌲☘🎋🌿♻🌱🎄🌴🌳🍃🍀🌾

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன் : 30:48)

இன்றைய ஹதீஸ்:

🌲☘🎋🌿♻🌱🎄🌴🌳🍃🍀🌾

6435. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

பதிவு நாள்: 20-03-2017.

No comments:

Post a Comment