Sunday, 26 March 2017

*பொறாமை கொள்ள வேண்டாம் தொடர் -2*


*பொறாமை கொள்ள வேண்டாம் தொடர் -2*



💠பிறரின் வளங்களை, எழுச்சியை பொறாமைக் கண் கொண்டு பார்ப்பதால் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்ற உணர்வு போய், மனக்குறைகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு மன நிம்மதியும், மன அமைதியும் பறிபோய்விடும் நிலை உருவாகலாம்.

😳இந்த மாதிரி தருணங்களில் அல்லாஹ் நமக்கு ஒரேயொரு வாய்ப்பைத் தந்திருக்கின்றான்.

🌴‎‫وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ‬

📖“அல்லாஹ்விடம் அவனுடைய அருள்வளங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்”. ( அல்குர்ஆன்: 4:32 )

🌀நபித்தோழர்களின் வாழ்க்கையை வாசித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைப்போர், வாசித்துப் பார்த்து விட்டு வியப்பின் விளிம்பிற்கே வந்து விடுவார்கள்.

💓அவ்வளவு ஆச்சர்யமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

🌾லட்சத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இருக்க, ”பத்து நபித் தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவர் சுவனத்தில் இருப்பார், இவர் சுவனத்தில் இருப்பார்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்த போது…

✅ஏனைய நபித்தோழர்களில் ஒருவர் கூட “அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மார்க்கத்திற்காக எவ்வளவு தியாகங்களைச் செய்திருக்கின்றேன், எவ்வளவு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றேன், நான் எவ்வளவு இபாதத்களைச் செய்திருக்கின்றேன், நான் இன்னின்னவரை விட எதில் குறைந்து போனேன், ஏன் என்னைக் குறித்தும் நீங்கள் சோபனம் சொல்லவில்லை என்று வினா எழுப்ப வில்லையே?”

♻எந்த ஒரு நபித்தோழரும் வேறெந்த நபித்தோழருக்கு வழங்கப்பட்டிருந்த எந்த ஒன்றைக் கண்டும் எச் சந்தர்ப்பத்திலும் கூட பொறாமை கொண்டதாகவோ, பேராசை கொண்டதாகவோ வரலாற்றின் எந்த ஒரு பக்கத்திலும் நாம் பார்த்திட முடியாது.

🎓அப்படி அப்பழுக்கற்ற, தூய்மையான ஆச்சர்யம் மிக்க வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள்.

⛈எனவே, பேராசையையும், பொறாமையையும் தவிர்த்து ஸஹாபாக்களின் வழியில் நாமும் வாழ முயற்சிப்போம். இவ்வாறான நிம்மதியிழப்பிலிருந்து தவிர்ந்து வாழ அந்த றப்பில் ஆலமீன் நம்மனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்..!

⭕முடிவுற்றது

பதிவு நாள்: *27-03-2017*

🌹☘🌹☘🌹☘🌹☘🌹☘

No comments:

Post a Comment