Thursday, 16 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண் 379:🕋 *


*🕋 மார்க்க கேள்வி எண் 379:

🎯 *அ) அல்லாஹ் எப்போது நம்மை பார்க்கிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:211-220"*

✅பதில்:
 வணங்குவதற்காக நிற்கும் பொழுது.

ஆதாரம்:-
*அல்குர்ஆன்: 26:218 & 219*

📒அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
(அல்குர்ஆன் : 26:218)

📝இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
(அல்குர்ஆன் : 26:219)

🎯 ஆ) *தலைமையினுடைய கட்டளைக்கு எப்போது கட்டுப்படக்கூடாது என பெருமானார்  கூறினார்கள்❓*

✅பதில்:
 தலைமை இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதோ அதற்குக் கட்டுப்படுவதோ கூடாது.

ஆதாரம்:- *புகாரி: 7144*
*முஸ்லிம்: 3751*

📕7144. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
ஸஹீஹ் புகாரி.

📋3751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்ட ளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1.பஷீர் - திருப்பூர் 2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை)1
4. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
5. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
6. முபாரக் - சென்னை 1
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
9. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
10. ஹக்கிம் - தென்காசி 2
11. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
12. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஜமேஷா முபீன் - கோயம்புத்தூர் 2
2. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. ஹுசைன் - நாகர்கோவில் 2
10. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை )2
11. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
12. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *17-02-2017*

No comments:

Post a Comment