Thursday, 15 March 2018
ஐவேளை தொழுகையின் அவசியம்
✍நஸீமா இப்ராஹிம்
1.தொழுகை தீமையை தடுக்கும்:
நிச்சயமாகத் தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் (தொழுபவரைத்) தடுக்கும். (சூரா அல் அன்கபூத்:45)
2.தொழுகையாளிக்கு கடந்த காலத்தைப் பற்றிய பயமுமில்லை. வருங்காலத்தை பற்றிய கவலையுமில்லை.
நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(சூராஅல் பகரா:277)
3.மரணம் வருவதற்கு முன் தொழுது கொள்ளுங்கள்:
(உண்மையாக) நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களுக்கு; எந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் (பலனளிக்கக் கூடியதாக) இல்லையோ, அந்த ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, தொழுகையை அவர்கள் கடைப்பிடிக்கவும்; அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்யவும்' என்று (நபியே,) நீர் கூறுவீராக!
(சூரா இப்ராஹீம்:31)
4.தொழுகையை நிலைநாட்ட துஆ:
என்னுடைய ரப்பே என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாயக! எங்களுடைய ரப்பே! (இந்த) என்னுடைய பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொள்வாயாக!
(சூரா இப்ராஹீம்:4)
5.தொழுகை நேரங்கள்:
(நபியே,) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர், அஸர், மஃரிப், இஷா முதலிய) தொழுகையையும் இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை (மலக்குகளின்) வருகைக்குரியதாக இருக்கிறது. (பனீஇஸ்ராயீல் :78)
6.வெற்றியாளர்கள் யார்?
இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது கவனமுள்ளவர்கள். (அல்முஃமினூன்:9)
7.பாங்கு சொல்லப்பட்டவுடன் பள்ளிக்கு விரையுங்கள்:
விசுவாசங் கொண்டோரே, வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள்; இன்னும் அந்நேரத்தில்) வாணிபத்தை விட்டுவிடுங்கள் - நீங்கள் (இதன் பலனை) அறிந்தவர்களாயிருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(அல்ஜூமுஆ:9)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment