Tuesday, 13 March 2018
சிரியா - வரலாறும் படிப்பினையும் - 01
✍சே.ச.அனிப் முஸ்லிமின்
சிரிய தேசம் இன்று முஸ்லீம்களின் கவலை தேசம்.
இன்று சிரியாவின் நிலை நமக்கு பல பாடங்களை தரக்கூடியது. சிரிய தேசம் குறித்த சில தகவல்கள் இங்கு…
சிரியா
சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானையும், கிழக்கில் , வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே, உலகின் முதல் கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது. நியோலிதிக் காலப்பகுதியில், முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
சிரியாவும் நபிகள் நாயகமும்:
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் இன்றைய சிரியா சியாம் என்று அழைக்கப்பட்டது. முகம்மது நபியவர்களுக்கும், சிரியாவின் மக்கள் மற்றும் கோத்திரங்களுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ஜுலை, 626 இல் துாமதுல் ஜன்தல் படையெடுப்புடன் ஆரம்பித்தது
பல நபி மொழிகள் சிரியா தொடர்பாக இருப்பதை நாம் நபி நூல்களில் காணலாம்.
அவற்றில் மிக முக்கியமான நபிமொழி:
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ”இறைவா! எங்கள் சியாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் “எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)“ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்“ என்று கூறினார்கள்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 15.
ஆனால் இந்த சியாம் இன்றைய சிரியா, லெபனான், பாலஸ்தீன் மற்றும் ஜோர்டான் ஆகிய நான்கு நாடுகளை குறிக்கும்.
இன்னும் நபி ஈஸா அலை அவர்கள் வந்து இறங்கும் வெள்ளை பள்ளியும் உள்ள இடம் இந்த சிரியா.
சிரியாவின் வரலாற்றுச் சிறப்புக்கள்
சிறிய தேசம் பல நபிமார்களையும் பல நபி தோழர்களையும் கண்ட பூமியாகும்.
வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்களை சந்தித்த சிரியாவை கடைசியாக ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிஜ்ரி 12 ல் அபூபக்கர் (ரலி) தலைமையிலான இஸ்லாமிய கிலாபத் ஆட்சியில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமியப் படை சிரியாவின் தென்மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதன் பின் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையிலான படை டமஸ்கஸ் உள்ளிட்ட முழு சிரியாவையும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அன்றைய சிரியாவின் இஸ்லாமிய ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். உமையாக்களின் ஆட்சியில் சுமார் 90 வருடங்கள் சிரியாவின் தலை நகராக டமஸ்கஸ் இருந்தது.
இஸ்லாமிய கிலாபதின் ஐந்தாம் கலீபா முஆவியா அவர்களின் தலைநகரமா கொண்ட பூமி சிரியா. அவரை தொடர்ந்து பல ஆண்டுகள் கிலாபத் மையம் கொண்டு இருந்த பூமி சிரியா ஆகும். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.
பல மார்க்க அறிஞர்களையும் கொண்ட பூமி. இஸ்லாமிய வரலாறை எழுதினால் மக்கா மதினாவுக்கு பிறகு தவிர்க்க முடியாத ஒரு பெயர் சியாம் என்ற சிரியா ஆகும்.
நவீன சிரியா
உமையா ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் சிரியா பிரான்ஸ் நாட்டில் காலனி நாடாக மாறியது. உலக போரின் தாக்கத்தால் சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. இருந்தும் எப்ரல் 16 1946 ல் தான் முழுமையாக சுதந்திரம் பெற்றது.
சிரியாவும் பாத் கட்சியும்
1947 ‘ல் ஹிஸ்ப் அல் பாத் என்பவரால் பாத் கட்சி என்ற சோசியலிச கட்சி தொடங்க படுகிறது. பாத் என்றால் மறுமலர்ச்சி என்று பொருள். இந்த ஒற்றுமை, புரட்சி, சோசியலிசம் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. 1957’ல் நடந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது இந்த கட்சி. 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின. சலாஹ் ஜதீத் சிரிய அதிபராக 1966 முதல் 1970 வரை இருந்தார். அந்த அரசின் ராணுவ அதிகாரத்தை ஹாஃபீஸ் அஸ்ஸாத் பெற்றிருந்தார். 1963 ‘ல் பாத் கட்சியினர் புதிய அரசை உருவாக்கினர்.
இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் 1967 ல் நடந்த யுத்தத்தில் சிரியா எகிப்துக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றியது. அதில் இஸ்ரேலின் பார்வை சிரியா மீது திரும்பி 48 மணி நேரத்தில் சிரியாவை வீழ்த்தியது இஸ்ரேல். இந்த தோல்வி அதிபர் ஜதீதுக்கும் இராணுவ தளபதி அஸ்ஸாதுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
அதன்பின் 1970ல் யாசர் அரஃபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், ஜோர்டானுக்கும் இடையே காஸா பகுதியால் ஏற்பட்ட பிரச்சனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இராணுவ தளபதியான ஹஃபீஸ் அஸ்ஸாத் படைகளை அனுப்பி இராணுவ உதவிகளையும் செய்தது ஜோர்னானின் மன்னர் ஹீசைன் தலைமையிலான படைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஹஃபீஸ் அஸ்ஸாத் பெரும் தலைவராக மாறினார் பின் தனக்கு இருந்த இராணுவ பலத்தை கொண்டு அதிபராக இருந்த ஜதீதிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் பின் நண்பரான ஜதீதையே கைது செய்து சிறையில் அடைத்தார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment