Saturday, 23 December 2017

அல் அக்ஸாவை மீட்போம் - 8

பாலஸ்தீன ஜெருசலேம்
தலைநகரம் விவகாரம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு தலைநகராக ஜெருசலேமை அறிவித்தது 
பற்றி 

ஜெருசலேமில்தான் உலக இஸ்லாமியர்களுக்கு புனித பள்ளியாக அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ளது,

இஸ்ரேலுக்கு தலைநகர் ஜெருசலேம் என்று அறிவித்ததன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இவர்களின் அரசியல் தந்திரங்கள் தான் அதாவது
 இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேமில் உள்ளவை அனைத்தும் யூதர்களுக்கு மட்டும்தான்,
அங்கு வாழும் பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்கு ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதே இவர்களின் அரசியல் திட்டம், என்பது இவர்கள் அறிவித்த
ஜெருசலேம் தலைநகர் விவகாரத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்,

ஐ.நா சபை 

இப்போது மீடியாக்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது எதிராக  ஐ.நா சபை கண்டனம்
அமெரிக்க அரசுக்கு எதிராக செயல்படுகிறது என்பதுபோல் பொய்யான வேடமாக மீடியாக்களில் பார்த்துவருகிறோம்,
இந்த விடயத்தில் நாம் சிந்திக்க வேண்டும்,
இது உண்மையில் இஸ்லாமியர்களின் கொந்தளிப்பை தணிப்பதற்காக.

அப்படியானால் ஐ.நா சபை  பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு என்றால் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக
ஐ.நா சபை செயல்படுமா?
அப்படி செயல்படுமேயானால் அது கனவு மட்டுமே, அந்த கனவே நாம் இன்று மீடியாக்களில் பார்த்துவருகிறோம்,
ஆனால் உண்மையாக பாலஸ்தீனத்தில் நடப்பதோ வேறுவிதம்,

ஐ.நா சபை பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு என்றால் என்றோ பிரச்சனைகள் தீர்வுக்கு வந்திருக்குமே, அன்றை காலம் முதல் இன்றைய காலம் வரை பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ராணுவர்களால்
தினந்தோறும் துன்புறுத்தபட்டு வருகிறார்கள், ஐ.நா சபை இதை இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதானே?

முடியாது ஏன் என்றால் அந்த அதிகாரமே இஸ்ரேல் அரசிடம் உள்ளது.
இஸ்ரேல் அரசு சொல்வதே அமெரிக்க அரசு செய்து கொண்டிருக்கின்றது, அமெரிக்க அரசு சொல்வதே ஐ.நா சபை செய்து கொண்டு இருக்கின்றது என்பதை இந்த அரசியல் தந்திரங்களை பார்த்தால் புரியும்,

ஒரு பக்கம் இஸ்ரேல், அமெரிக்க அரசாங்கம் இவர்களது அதிகாரத்தை செய்து கொண்டே இருப்பார்கள்,

மறுபக்கம் ஐ .நா சபை அறிவித்த அறிக்கையை கண்டனம் தெரிவித்து கொண்டே இருப்பது போல் பொதுமக்களுக்காக மீடியாக்களில் வந்து கொண்டே இருக்கும், மீடியாக்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவாகவும் தான் அமையும், அப்போது தான் இஸ்லாமியர்கள் கொந்தளிக்காமல், ஐ.நா சபை மீது நம்பிக்கை வைப்பார்கள்.

இதுதான் இந்த ஐ.நா சபையின் நோக்கம்,
ஆக இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, யோசித்து நிதானமாக மீடியாக்கள் கொண்டு வருவதை ஆராயாமல்
மற்றவர்களுக்கு பகிற வேண்டாம், உண்மையில் பாலஸ்தீனத்தில்ந டந்துகொண்டு இருப்பதோ வேறு விதம் என்பது உண்மை.

அமெரிக்க அதிபர் அறிவித்தது
சரிதான், இதற்கு ஐ.நா சபை ஆதரவு, பாலஸ்தீன மக்களுக்கு எதிர்ப்பு இதுபோல் மீடியாக்களில் வந்தால் என்ன ஆகும்?

முக்கியமாக இஸ்லாமியர்கள் கொந்தளிப்பார்கள் இதை தணிக்கவே இதுபோல் அரசியல் சூழ்ச்சிகள் ஐ.நா சபை செய்து கொண்டு இருக்கின்றது,
இதற்காகதான் ஐ.நா சபை
என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டும்,

இவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டே இருக்கின்றார்கள்,“அல்லாஹ்”
சூழ்ச்சிகளுக்கெல்லாம் சூழ்ச்சி செய்பவன்,

அனைத்து அமெரிக்க அதிபர்களும்
 இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனைகளை
தீர்க்க பல விதமாக முயற்சி செய்து கொண்டு வந்துள்ளனர், ஆனால் தீர்க்க முடியவில்லை,
காரணம் இஸ்ரேலின் இரகசியங்கள்
ஆனால் அன்றும் இன்றும் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக மட்டுமே அமெரிக்கா செயல்படுகிறது என்பதை 1947 க்கு
பிறகு வரலாற்றை பார்த்தால் புரியும்.

ஆக இந்த அமெரிக்க அரசு இஸ்ரேலை பாதுகாத்து கொள்ளவே ஆகும்,
ஐ.நா சபை பொதுமக்களுக்காக என்ற
அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கி மக்கள் முன்பு மீடியாக்களால் ஆதரவு போல் அன்றும், இன்றும் செயல்பட்டு கொண்டு வருகின்றது,

எத்தனை அமெரிக்க அதிபர்கள் வந்தாலும் சரி எத்தனை ஐ.நா சபை வந்தாலும் சரி இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியாது, ஆனால் இவர்கள் இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள்,
என்பது 1947 இல் இருந்து 2017 வரை வரலாற்றை பார்த்தாலுமா நம் மக்களுக்கு ஐ.நா சபை மீது நம்பிக்கை வரும்?
அப்படி இன்னும் ஐ.நா சபை பார்த்து கொள்ளும் என்றால் அது அவர் அவர்களது மூடத்தனம்,

கடந்த இருபது வருடங்களாக வரலாற்றை பார்ப்போமேயானல் யூதர்களுக்கும் பைத்துல் முகத்தஸுக்கும் சம்மதம் இல்லை,
ஐ.நா சபை தீர்ப்பு (அதிரடி) என்பது போல் மீடியாக்களில் மூலம் தீர்வு அறிவித்து
முழு உரிமை பாலஸ்தீன மக்களுக்கு தான் என்பது போல் பல முறை தீர்பு சொல்லி இருந்துமா... இன்னும் பாலஸ்தீன மக்களுக்கு முழு உரிமை கிடைக்க வில்லை?
 ஆக இந்த ஐ.நா சபையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் என்பது
உறுதிப்படுத்துகிறது,

இதற்கு தீர்வு என்றால் அந்த
தீர்வு ஈசா அலைஸ்லாம் அவர்களின் மூலமே
 “அல்லாஹ் “ நிறைவேற்றுவான்,

இப்போதைய தருணத்தில் பாலஸ்தீன மக்களுக்காக
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் சிறந்த இஸ்லாமிய கலீஃபா பாலஸ்தீனத்தில் ஆட்சி செய்ய வேண்டும்,
இன்ஷா அல்லா நம் தொழுகையில் முழு மனதுடன் இதற்காக “அல்லா”விடம் பிராத்தனை செய்வோம்,


இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
இஸ்ரேல் அரசுக்கு எதிராக உங்களது கண்டனங்கள்,
முற்றுகை போராட்டங்கள் செய்வது வீண் செயல் பயனற்றது ,

கண்டனங்கள் , போராட்டங்கள் ,
செய்வதற்காக கூடிய கூட்டங்கள்
ஒருவனிடம் கேட்க மறந்துவிட்டோமே ,,

“அல்லாஹ்” நாடாமல் நடந்து விடுமா?
அல்லாஹ் நாடாமல் எதுவும் நடப்பதில்லை

ஏன் ஒன்று சேர்ந்து ஒரே நிய்யத்தாக அல்அக்ஸாவிற்காக தொழுகையில் அவனிடம் கேட்டுள்ளோமா?
ஏன் கேட்க தவறி விட்டோம்
“அல்லா”மீது நம்பிக்கை இல்லையா? “இன்ஷா அல்லாஹ்“
என்று வாய் வார்த்தையில் மட்டுமா நாம் பேச வேண்டும்?

நமது கண்டனங்கள் ஆர்ப்பாட்டங்கள்
பயனற்றவையே இந்தியாவில் பாபர் மசூதி பிரச்சனையில் வருடம் வருடம் டிசம்பர் 6 இல் அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் , போராட்டம் எதற்காக ? வெற்றிகிடைத்து விட்டதா ? எங்கே நமது வெற்றி ?
அந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில்
மீடியாக்கள் வரும் வரை
பிறகு அடுத்த வருடம் மீண்டும் இதுபோலவே கண்டனங்கள், போராட்டங்கள்,

அல்அக்ஸாவிற்காகவோ, பாபர் மசூதிகேகாகவோ
ஒன்று சேர்ந்து நாம் “அல்லாஹ்”விடம் துவா கேட்டுள்ளோமா?
ஒவ்வொரு இஸ்லாமியர் உள்ளங்களுக்கு தெரியும் நாம் இதற்காக முழு மனதுடன் ஒன்று சேர்ந்து தொழுகையில் அல்லாவிடம் துவா கேட்ட வில்லை என்று நம் மனசாட்சியே சாட்சி சொல்லும்,

அல்லாஹ்விடம் இதற்காக பிராத்திப்போம்,
அதன் பிறகு கண்டனங்கள், போராட்டங்கள்,
செய்தால் இன்ஷா அல்லா வெற்றி கிடைக்கும் ,

ஆனால் நாம் இதை செய்ய மாட்டோமே,
எனது குடும்பம்,எனது உறவினர்கள்,
நான்,
 எனக்காக , அதாவது உணவு,உடை,இருப்பிடம்,
 நோயற்ற வாழ்வு,செல்வம்,
என்று சுயநலம் தொடர்புள்ளதை மட்டுமே
“அல்லா”விடம் கேட்டு கொண்டு இருக்கின்றோம்,


இது பிறருக்காக இல்லை
நமக்காக,
பிறர் மீது குற்றம் சாற்றுவதை விட ,நான் ,நாம் மட்டுமே காரணம் ,
இஸ்லாமியர் ஒவ்வொருவரும்
 பிரார்த்தனையில் தான் உள்ளது ,

அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக வேண்டும் என்றால்
பாலஸ்தீன நாட்டில் இன்ஷா அல்லா
இஸ்லாமிய  ஆட்சியாக சிறந்த கலீஃபா ஆட்சி செய்ய வேண்டும்
அதற்காக ஒவ்வொரு இஸ்லாமியராகிய நாம்
“அல்லாஹ்”விடம் துவா செய்வோம்.

- சலீம் அமெரிக்கா.

No comments:

Post a Comment