அன்பு இஸ்லாமிய சமுதாயமே அஸ்ஸலாமு அலைக்கும்.....
இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் மிக்க்கொடூரமாக மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளானது மங்கோலியர்களின் (தாத்தாரியர்கள்) தாக்குதலில்தான். அதற்கடுத்து நவீன காலத்தில் அதே மங்கோலியர்களின் வழிவந்த மியான்மார் பவுத்தர்களின் அரக்கத்தனமான தாக்குதலுக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் பலியாகியிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் துயரமாகும். நாம் கேள்விப்பட்டதற்கும் வீடியோ காட்சிகளில் பார்த்தெற்கெல்லாம் அப்பாற்பட்ட துயரத்துக்கு ரோஹிங்கிய முஸ்லிம்கள் ஆளாகியிருப்பதை நேரில் பார்க்கும் போது நமக்கு ரத்தக்கண்ணீர் வரவழைத்தது.
ஆம் தமிழகத்திலிருந்து முதல்முறையாக அடியேனின் தலைமையில் 5பேர் குழு பல்வேறு தடைகளை தாண்டி அல்லாஹ்வின் அளப்பரிய உதவிகளை நேரில் கண்டவண்ணம்
ரொஹிங்கிய மக்களின் இருப்பிடமான காக்ஸ்பஸார் மற்றும் டெக்நாஃப் பகுதிகளுக்கு நேரில் சென்றடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
தங்கள் ஈமானை காப்பாற்றிக்கொள்ள கையில் கிடைத்த தங்கள் குழந்தை குட்டிகளோடு பலநூறு மைல்கள் காடுமேடுகளை தாண்டி உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு கால்நடையாகவே வந்த துயரமும் மரணபயமும் இன்னும் அவர்களின் கண்களில் தெரிந்தது.
இங்கு வந்த பிறகும் எவ்வித அடிப்படை வசதியுமின்றி ஆடு மாடுகளை போன்று அடைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை.
ஒவ்வொருவருக்கு பின்னாலும் இருக்கும் ஒரு துயரச் சம்பவத்தை இங்கு வார்த்தைகளால் வடிக்க இயலாது.(தந்தையின் கையில் கத்தியை கொடுத்து தலையில்துப்பாக்கியை வைத்து ‘உன் குழந்தையை நீயே அறுக்கிறாயா? அல்லது உன்னை சுட்டுக்கொல்லவா?’ போன்ற சித்திரவதைகள் ஒரு உதாரணம்)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து நவீன காலத்து முஹாஜிர்களாக வந்திருக்கும் இவர்களது எண்ணிக்கை சுமார் 15லட்சமாகும். (இதில் சுமார் 8 லட்சம் பேர் 15வயதுக்குட்பட்ட குழந்தை மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
உலக மக்கள் கோடி கோடியாக கொட்டினாலும் இத்தனை லட்ச மக்களின் எந்த தேவையை எத்தனை காலத்திற்கு நிறைவேற்றப்போகிறார்கள் தெரியவில்லை.
இவரகளின் நிலையை நேரில்கண்ட போது உள்ளங்கை நெல்லிக்கனியாக ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது. மனிதன் கொடுத்து மனிதனுக்கு நிறையாது எனவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தான் இவர்களை தன் அருளால் அரவணைத்து இவர்களது அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டி துஆ செய்தோம்.
எதிரிகளிடம் இருந்து தப்பித்து வந்த அம்மக்கள் துரோகிகளிடம் அகப்பட்டு, வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றிய துயரத்தையும் அங்கே காண முடிந்தது.
ஆம்.... ஐநா சபையின் கள்ளப்போர்வையில் ஒளிந்து கொண்டு களமிறங்கியுள்ள கிருஸ்துவ மிஷினரிகள்தான் அவர்கள்
தங்களின் ஈமானை பாதுகாக்க தங்கள் பெற்றோரோடு ஓடிவந்த சுமார் 8 லடசம் மூமினான முஹாஜிர் குழந்தைகளின் ஈமான் அங்கீகாரத்துடன் கிருஸ்துவ மிஷினரிகளால் தங்கள் கண்ணெதிரிலேயே அழிக்கப்பட உள்ளதை கண்டு ரோஹிங்கிய உலமாக்களும் அவரகளுக்காக களப்பணியாற்றி வரும் பங்களாதேஷ் உலமாக்களும் பதறியடித்து வருகின்றனர்.
மியான்மர் புத்த மிருகங்களிடமிருந்து காத்த தங்கள் பச்சிளம் குழந்தைகளின் ஈமான் ஐநா மற்றும் கிறிஸ்துவ மிஷினரி ஓநாய்களிடம் பறிபோய்விடாமல் காக்க ஒரு ஜிஹாதையே நடத்தி வருகின்றனர்
ஆம் இது ஆயுத ஜிஹாத் அல்ல... அறிவு ஜிஹாத்
அம்மக்களின் உணவு, தண்ணீர், மருந்து, உடை, இருப்பிடம், கழிவறை, போன்ற அனைத்து இன்றியமையா அடிப்படை வாழ்வாதார தேவைகளும் ஏதோ ஒரு வழியில் நிறைவேறி வருகின்றன.
ஆனால் யாராலும் கண்டு கொள்ளப்படாத அதே நேரம் இம்மைக்கும் மறுமைக்கும் ஒருங்கிணைந்த அடிப்படையிலும் அடிப்படையான ஒரு தேவையை நிறைவேற்ற நாம் முன்வந்து உதவுவது காலத்தின் கட்டாயமாகும்.
நம் சமகாலத்தில் நம்மருகே ‘வாழ்ந்து’ வரும் இறைப்பாதையில் ஹிஜரத் செய்து இறை உவப்பை பெற்ற இந்த முஹாஜிர்களுக்கு நாம் அன்ஸார்களாக இருக்க வேண்டாமா?
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்;
நிச்சயமாக ஈமான் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களும் அவர்களை அரவணைத்து உதவி ஒத்தாசை செய்யும் அன்ஸார்களும்தான் உண்மையான மூமின்கள் ஆவர்.அவர்களுக்கு கண்ணியமான இரணமும் பாவமன்னிப்பும் உண்டு
அல் குர்ஆன் 8:74
மேலும் முழு விவரங்கள் அறிந்து ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை கண்டு உங்கள் கண்ணீரையும் உதவிகளையும் பகிர்ந்து கொள்ள WhatsApp மூலம் மட்டும் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.7871843646.
No comments:
Post a Comment