Wednesday, 29 November 2017

தொழுகையாளிகளே இது உங்களுக்கு..

ஸலபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரான ஹாதிமுல் அஸ்ம் என்பவரிடம் ‘நீங்கள் எவ்வாறு தொழுகின்aர்கள்? என்று வினவப்பட்டது. அப்போது அவர், நான் தக்பீர் கட்டும்போது மிகவும் பேணுதலோடு கட்டுவேன்.

மிகவும் ஒழுங்காக சூறாக்களை ஓதுவேன். அவ்வாறே உள்ளச்சத்தோடு ருகூஉ செய்வேன். மிகவும் பணிந்தவனாக ஸ¤ஜுது செய்வேன். சுவனம் எனது வலது பக்கத்திலும், நரகம் எனது இடப் பக்கத்திலும் ‘ஸிராத்’ எனும் பாலம் என் பாதங்களின் கீழ் இருப்பதாகவும், கஃபா எனது புருவங்களுக்கு மத்தியில் இருப்பதாகவும் நினைத்துக்கொள்வேன்.

எனது தலையின் மீது இஸ்ராயீல் (அலை) இருப்பதாகவும் எனது பாவங்கள் என்னை சூழ்ந்திருப்பதாகவும் இறைவன் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்றும் எண்ணிக்கொள்வேன்.

எனது வாழ்க்கையில் நான் தொழும் இறுதித் தொழுகை இதுதானென்றும் கருதிக்கொள்வேன். என்னால் முடியுமான அளவு தொழுகையில் தூய்மையைக் கடைப்பிடிப்பேன். இறுதியாக ஸலாம் கொடுத்து முடித்து விடுவேன். என்றாலும் எனது இந்தத் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்வானோ?

அல்லது இந்தத் தொழுகையை நிறைவேற்றியவனின் முகத்தில் எறிந்து விடுங்கள் என்று அல்லாஹ் மறுமையில் கூறி விடுவானோ! என்று அஞ்சுகிறேன் என்று கூறினார்.

இவ்வாறுதான் ஓர் உண்மை முஸ்லிமின் பண்பும் அமைய வேண்டும். எனவே தொழுகையின்போது இறைவனின் முன்னிலையில் நிற்கின்றேன் என்ற உணர்வோடு நாமும நின்று, எமது தொழுகைகளையும் உயிரோட்டமுள்ள தொழுகைகளாக அமைத்துக் கொள்வோமாக!

No comments:

Post a Comment