தளர்ந்து விடாதீர்...ஓரங்கட்டப்பட்டாலும்...ஒதுங்கிவிடாதீர்.
சமூக அமைப்புகள் ஜமாஅத் நிர்வாகம்
போன்றவற்றில் பொறுப்பு வகித்து தீவிரமாக
களப்பணியாற்றிய சில சகோதரர்கள்....கருத்து
வேறுபாடுகள் காரணாமாக அந்த பொறுப்புகளில்
இருந்து விலகிய உடன்....அல்லது விலக்கப்பட்ட உடன்...
அதிதீவிர நிலைக்கு ( Extreme End) சென்று
விடுகின்றனர்.
ஒன்று....
பொறுப்பு வகித்த அமைப்பை அதன் தலைமையை
பொது இடங்களில் பகிரங்கமாக விமர்சிப்பது.
சிலருக்கு இதுவே முழு நேர வேலை.
அல்லது
அமைதியாக தாங்கள் உண்டு தங்களது வேலை
உண்டு என்று அனைத்து சமூகப்பணியிலிருந்தும்
முற்றிலுமாக விலகி சென்றுவிடுவது.
முதிர்ச்சி இல்லாமல் எடுக்கப்படும் இதுபோன்ற
முடிவுகளினால் சம்பந்தப்பட்ட நபருக்கு எந்த
பாதிப்பும் இல்லை
பாதிப்புகள் முழுக்க உம்மத்திற்கு தான்.
முறைப்படுத்தப்பட்ட மார்க்கக் கல்வி பயிலாத
இன்றைய தமிழக முஸ்லிம் சமூகத்தில்
கோளாறுகளும் குற்றங்களும் நிறைந்து தான்
இருக்கும் என்பது எதார்த்தம்
அப்படிப்பட்ட குறைபாடுடைய சமூகத்திலிருந்து
அவ்வப்போது அபூர்வமாக வெளிப்படும் சில
ஆளுமைகள்....குற்றம் குறை இல்லாத மலக்குகளாக
இருத்தல் வேண்டும் என்று யாரேனும் நினைத்தால்
அது அறிவீனத்தின் உச்சம்.
மட்டுமல்ல....எதார்த்தத்திற்கு எதிரானது.
எந்த ஒரு சமூகம் தனது அறிஞர்களையும்
ஆளுமைகளையும் ஒதுக்குகிறதோ
கேவலப்படுத்துகிறதோ அந்த சமூகம்
தன் கையால் தன் தலைக்கு தீ வைக்கிறது
என்று பொருள்
அமைப்புகளில் இருந்து ஒதுங்கினாலும்
ஓரங்கட்டப்பட்டாலும் சமூகப் பணி என்பது
உயிருள்ளவரை செய்யவேண்டிய கடமையான
பணி.
தளர்ந்து விடாதீர்....
ஓரங்கட்டப்பட்டாலும்....ஒதுங்கிவிடாதீர்.
பயனுள்ள சமூகப் பணிகளை யார் செய்தாலும்
அவர்களுக்கு ஆதரவாக நில்லுங்கள்.
அவர்களோடு இணைந்து பணியாற்றுங்கள்.
சமூகத்திற்கு செய்ய வேண்டியவை மலையளவு
குவிந்து கிடக்கிறது.
- CMN SALEEM
No comments:
Post a Comment