Saturday, 3 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் -7


நோன்பு - 07

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*நோன்பு தரும் அகமிய விளக்கம்!*

========================

அல்லாஹ்வையன்றி வேறு இலாஹ்
(வஸ்த்து) இல்லை என்றும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள் இறைத்தூதர்
என்றும் உறுதியாக
நம்புதல், தொழுகையை நிலை
நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ்
செய்தல், ரமலான் (மாதத்தில்) நோன்பு
நோற்றல், ஆகிய ஐந்து
காரியங்களின் மீது இஸ்லாம்
நிறுவப்பட்டுள்ளது’
என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: என இப்னு உமர்
றழியல்லாஹு அன்ஹு
அறிவித்தார்கள்.

இஸ்லாம் ஐம்பெரும் அம்சங்கள் கொண்டு
இஸ்திரப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
அவற்றில் ஒன்றையேனும்
நிராகரிப்பதானது
“குப்ரிய்யத்” தை “ரித்தத்தை”
மதமாற்றத்தை ஏற்படுத்தும். என்பதில்
கருத்து வேறுபாடுகள் இல்லை.
ஒருவர் திருக்கலிமா மொழிந்த பின்னர் அதனை
நிராகரித்தாராயின் அவர் இஸ்லாத்தை
விட்டும் வெளியேற்றப்பட்டவராகவே
கருதப்படுவார். ஏனெனில்
திருக்கலிமா என்பது ஒவ்வொரு
வஸ்துவிலும்
இருக்கும் ‘உயிர்” போன்றதாகும்.
றூஹை
கொண்டு சம்பந்தப்பட்ட விடயமே
திருக்கலிமா.

 தொழுகை, ஸகாத்,
நோன்பு, ஹஜ் ஆகியன “அப்ஆலே
அஜ்ஸாமிய்யா” சடம் சம்பந்தப்பட்ட
செயற்பாடுகள்-
உள்ளடக்கப்பட்டவையாகவும், “நப்ஸ்” உடைய தீக்குணங்களைக்
களைந்தெறிந்து,
“றப்” அல்லாஹ் அளவில் பரிசுத்தமடைந்த
நிலையில் முடுகுதல் பெறுவதுமே அவற்றின் நோக்கமாகும்.
மேற்கூறப்பட்டவற்றை ஒருவர் நிராகரிக்காமல்,
மறுக்காமலும், அவற்றை தன் வாழ்வில் கொண்டுவர முயற்சி
எடுக்காமலும் இருப்பாராயின் அவர்
ஒரு போதும் தூய்மை பெறமாட்டார்.
அல்லாஹ்வின்
கட்டளையை செவி சாய்த்துச் செயற்படாத
பாவியாகவும் ஆகிவிடுவார்.

“அப்ஆலே
அஜ்ஸாமிய்யா” அல்லது
“அஃமாலுல் ஜவாரிஹி” எனப்படும்
இன்னான்கு அம்சங்களில் ( தொழுகை,
ஸகாத்,
நோன்பு, ஹஜ் ) மனிதனைப்
புனிதனாக்கி, அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தையும், அன்பையும்,
அவனது திருக்காட்சியையும் அதிகம் பெற்றுத்
தருவதில் அதிக
தொண்டாற்றுவது புனித மிக்க
நோன்பேயாகும்.

மேலும்
நோன்பாகிறது வானங்களின்
அரசாட்சிகளை
(கண்டு கொள்ள) நுழைவதற்கும், சடம்
சார்ந்தவற்றின் , நெருக்கமான ( ﺭﺣﻢ ﻣﻀﺎﻳﻖ
ﺍﻟﺠﺴﻤﺎﻧﻴﺎﺕ ) இடங்களின் அல்லது
விடயங்களின்- கருவறையை
விட்டும் வெளிப் புறப்படுவதற்கு
உதவியாகவும் இருக்கின்றது.

“இரண்டாவது
துவக்கம்” ஆரம்பம் என்றும் ஆரிபீன்களால்
வலிந்துரை தரப்பட்டு
சுட்டிக்காட்டப்பட்டதாகவும்
அந்நோன்பு இருக்கின்றது.

நபி ஈஸா عليه السلام
 அவர்கள் இவ்வாறு
கூறுகின்றார்கள்,
இரண்டு முறை
 அவதரிக்காதவர், (பிறக்காதவர்)
வானங்களின் அரசாட்ஷிகளுக்குள்
நுழையமாட்டார் .
எனவே நோன்பானது இறைவனின்
அரசாட்ஷிகளை கண்டு
கொள்வதிலும், அவனைக்கண்டு
கொள்வதிலும் சிறப்பிற்குரியதாக
அமைந்து விடுகின்றது.
அதனால்தான் அல்லாஹ் ஹதீத்
குத்ஸியில் “அஸ்ஸவ்மு லீ வஅன உஜ்ஸா" நோன்பு  எனக்குரியது
அதற்கு நானே கூலியாவேன் என்று
வல்ல அல்லாஹ் கூறிக்காட்டுகின்றான்.
இந்த
நோன்பில் பிரதான தொலிற்பாடாக
செயற்படுவதானது “பசி” ஆகும்.
 மனிதனின் ஏழு (“நப்ஸ்”) மன
இச்சைகளுள் ஆரம்ப படித்தரத்தில் உள்ள
“அன்னப்ஸுல் அம்மாரது பிஸ்ஸூஇ”
தீமையை கொண்டு
 மனிதனை ஏவும்படியான
நப்ஸ் என்று இறைவனால்
வருணிக்கப்பட்ட மிகக் கொடிய நப்ஸ்
“அன்னப்ஸுல் அம்மாரா” வை அதிக
பசியைக் கொண்டு மாத்திரமே கொலை
 செய்யமுடியும்.
பசித்திருப்பது
பல படித்தரங்களை அதிகப்படுத்தும்.
சுவனத்து வாயலை திறக்கும்.
காட்சிக்கு ஓர் வழி
யாகவும் அது அமையும்.
 ஈஸா நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
அல்லாஹ்வுடன் உரையாடும்
சந்தர்ப்பத்தில்,

(ஈஸாவே!) பசித்திருப்பீராக! என்னைக் கண்டு
கொள்வீர் என அல்லாஹ் கூறினான்.
என்று தப்ஸீர் றூஹுல் பயானில்
வந்துள்ளது.
நோன்பை பற்றி அல்லாஹ்
கூறுகின்றான்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு
முன் இருந்தவர்கள் மீது நோன்பு  விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள்  மீதும் (அது)
விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்)
நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
இவ்வசனத்தில்
நோன்பு கஷ்டமான, அல்லது சிரமமான
விடயம் என்பதனை பாரமாக
எடுத்துக்காட்டாமல் ஆசையூட்டும்
விதத்தில் “ஈமான்
கொண்ட விசுவாசிகளே!” என
விழித்து கூறுகின்றான்.
இமாம் ஹஸன் رضي الله عنه அவர்கள்
சொல்கின்றார்கள்…

“ஈமான் கொண்ட விசுவாசிகளே!” என
அல்லாஹ் சொல்ல நீ கேட்டால் உனது
கேள்வியை அதற்காக சீர் தூக்கிவிடு!
ஏனெனில் நிச்சயமாக ஒன்றோ அது
கொண்டு ( இறைவனால் நன்மையை
புரிவது கொண்டு)
நீ ஏவப்படலாம், அல்லது தவிர்ந்து
நடக்கும் படியான விடயத்தை
தொட்டும் தடுக்கப்படலாம்.
என்றும்,

“ஈமான் கொண்ட விசுவாசிகளே!” என
அல்லாஹ் அழைக்கும்
இவ்வழைப்பில் ஒரு இன்பம்
இருக்கின்றது. ( இன்பமான அச்சொல்
கொண்டு) வணக்கத்தின் கஷ்டத்தையும்,
(என்மீது பாரமாகும்
 விடயத்தின்) கஷ்டத்தையும் நான்
 நீக்கிக் கொள்கிறேன். ஒரு அன்பன்
தன்னால்
விரும்பப்பட்ட அன்பிற்குரியவனின்
(மஹ்பூபின்) விடயத்தை எடுத்து
செயற்பட வேண்டும்.
அது தன்னை தீக்கிடங்கில் தூக்கி அவன் போட ஏவி
 இருந்தாலும் சரியே எனவும் அல்லாஹ்
சுட்டிக்காட்டுகின்றான்.
என
இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு
அன்ஹு அவர்கள்
 விளக்கம் கூறுகிறார்கள்.

“நோன்பு உங்கள் மீது
விதியாக்கப்பட்டுள்ளது” ﻛﺘﺐ ﻋﻠﻴﻜﻢ ﺍﻟﺼﻴﺎﻡ
என்ற அருள் மறை வசனத்திற்கு விளக்கம்
தரும் தப்ஸீர் றூஹுல் பயான் ஆசிரியர்
 பின்வரும் கருத்துக்களை
சொல்லிக்காட்டுகின்றார்கள்....
நோன்பு வெளிரங்க
 ஒவ்வொரு உறுப்புக்கள்
மீதும், உள்ரங்க ஒவ்வொரு தன்மையின் மீதும்
 விதிக்கப்பட்டுள்ளது.  நாவு,கண், கேள்வி, நப்ஸ், கல்ப், றூஹ், சிர்ரு ஆகியன நோன்பு நோற்கின்றன.
அவற்றில்
‘நாவுடைய” நோன்பாகிறது: பொய்,
கெடுதி, புறம் பேசுதல் (நாவினால்
ஏற்படும் தீய சொற்கள்) போன்றவற்றை
விட்டும் தற்காத்துக் கொள்வதாகும்.
“கண்கள்” நோற்கும் நோன்பாகிறத: மறதி,
மற்றும் சந்தேக கண் கொண்டு
பிறர் வெறுக்கும் படியான விடயத்தை
உறுதியின்றி கெட்ட எண்ணம் கொள்ளல்
(அல்லது தவறாக உற்று நோக்குதல்.)
போன்றவற்றை விட்டும் தடுத்திருத்தல்.
“கேள்வி”யுடை
நோன்பாகிறது: தடுக்கப்பட்ட வீணான
 விடயங்களை கேட்பதை விட்டும்
 தடுத்திருத்தல்.
“நப்ஸ்” உடைய
 நோன்பாகிறது: பேரெண்ணம்,
பேராசை, மனோ இச்சைகள்
போன்றவற்றை விட்டும் தன்மனதைத்
தடுத்தல்.
“கல்பு” டைய நோன்பாகிறது:
துன்யாவுடைய
ஆசை அதன் சுகபோக அழகிய அலங்கார
வாழ்க்கை போன்றவற்றை தன் உள்ளம்
விரும்பாமல்
தடுத்திருத்தல்.

“றூஹு” டைய
நோன்பாகிறது: மறுமையில்
கிடைக்கப் பெறும் நிஃமத்தை விட்டும்,
அதன் ஏனைய இன்பங்களை விட்டும்
 தடுத்திருத்தல்.
(தன் ஆத்மா
எனப்படும் றூஹுடைய சூக்குமத்தின்
உள்ளே இருக்கும்) “சிர்ரு” என்பது
நோற்கும் நோன்பாகிறது: அல்லாஹ் அல்லாத
 உள்ளமையை (வேறு
எவருக்கும்,
எதற்கும்) தரிபடுத்தல், அல்லாஹ் அல்லாத
 உள்ளமையை காணுதல்.
ஆகியவற்றை விட்டும் தடுத்திருத்தல்.
நாம் உள்றங்க நோன்பு நோற்க முடியாமல்
போனாலும் ஆரம்பமான படித்தரத்தில்
உள்ள வெளிரங்க
நோன்புகளை சரிவர நோற்கப் பழகிக்
கொள்ள வேண்டும். சடங்காக அல்லது
அவர் என்னை நோக்கி
“இவன் ஒரு நல்ல நோன்பாளி” என்று
சொல்ல வேண்டும்
என்பதற்காக நோன்பு நோற்க கூடாது.
அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட
நோன்பாக இருக்க
இயலாது.  மாறாக
அப்படியான நோன்பை
எம் “முகங்கள்” மீது நாளை கியாமத்தில்
திருப்பியடித்து
வீசப்படும். காரணம் அதில் “முகஸ்துதி”
கலந்திருக்கின்றது என்று.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment