Thursday, 1 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் -4🌙

நோன்பு - 04

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه


 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*தர்மம் செய்வது*
*செல்வந்தருக்கு* *மட்டுமா*
*உரித்தானது..?*

========================

ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதில்
ஊர் மக்கள் நாம் அனைவருமே,
வெற்றி என்ற எல்லைக்கோட்டை
குறித்த நேரத்தில் அடையும் ஒரே
குறிக்கோளுடன் ஓடுகிறோம்.
அதில் நான்/நீங்கள்/எவரோ ஒருவர்,
ஏதோ ஒரு சுற்றில் தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்.
அப்போது, ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு சக ஓட்டப்பந்தய வீரர் யாராவது
தன் குறிக்கோளை மறந்துவிட்டு
தன்னை கைகொடுத்து
தூக்கிவிடுவார் என்று
எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய
மடத்தனம்..? ஆதலால், தாமாகவே
தட்டுத்தடுமாறி எழ
முயற்சிக்கிறார். ஆனால், அது
முடியாமல் கீழே கிடப்பவரை மிதித்து, அவர் மீதே ஏறி
ஓடுகிறார்கள் மற்றவர்கள்.
இந்நிலையில், திடீரென ஒருசில
கைகள் அவரை அரவணைத்து
தூக்கி நிறுத்தி, காயத்துக்கு மருந்திட்டு தொடர்ந்து ஓட உதவி,
ஊக்கப்படுத்தினால்
விழுந்தவருக்கு எப்படி
இருக்கும்..?

உவமானங்களுக்கெலாம் அப்பாற்பட்ட இது எவ்வளவு பெரிய
அளப்பரியபணி..?
போட்டியின் குறிக்கோளை
தாண்டிய... வேறு ஏதோ ஒரு வெற்றியை தன் குறிக்கோளாக
நாடினால்தானே, இப்படி ஒரு
தன்னலமற்ற மகத்தான உதவியை
இன்னொரு வீரருக்கு செய்ய முன் வருவார்கள் அந்த சக
ஒட்டப்பந்தைய வீரர்கள்..?
மேலே சொல்லப்பட்ட
அவ்வுருவகத்தில்...
குறிக்கோள் - செல்வம் சேர்ப்பது.
ஓட்டப்பந்தயம் - செல்வம் சேர்க்கும்
முயற்சிக்கான ஒரு களம்.
தவறி கீழே விழுபவர் -
அம்முயற்சியில் பின்னடைந்து
ஏழை ஆகுபவர்.
உதவும் கைகள் - தர்மம்..!
...எனக்கொண்டால்...
தர்மத்தின் நோக்கம் அல்லது வேறு
ஏதோ ஒரு வெற்றி => இது என்ன...?
"ஏழையின் சிரிப்பில் இறைவனை
காண்போம்" -என்று தமிழர்களிடம்
பிரபலமான சொற்றொடர்
உண்டல்லாவா..? அதேதான்.
ஏழைகளுக்காக செலவிடல்
இறைவனின் மன திருப்தியை
நாடி இறைவழியில்
செலவிடுவதே..!
தமது செல்வங்களை அல்லாஹ்வின்
பாதையில் செலவிடுவோருக்கு
உதாரணம்...
ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச்செய்கிறது.
ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான்
நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக்
கொடுக்கிறான். அல்லாஹ்
தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும்
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது,
(பொருளாதாரப்போட்டியில் வீழ்ந்து கிடக்கும் தேவையுடைய
மனிதர்களுக்கு தங்கள் தர்மம் மூலம்
கைகொடுத்து
தூக்கிவிடும்போது...) 1×7×100
=700 மடங்கு நன்மைகளை
இறைவன் நமக்கு
அள்ளித்தருகிறான் என்ற உறுதியான நம்பிக்கை
இருந்தாலே தவிர மனிதர்களால்
இப்படி உதவ முடியாது
அல்லவா..? அதுமட்டுமில்லாமல்,
கூடவே கீழ்க்காணும் பயமும் உறுதியாக இருந்தால்...?
எவர் பொன்னையும்,
வெள்ளியையும் சேமித்து
வைத்துக்கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில்
செலவிடாது இருக்கின்றார்களோ
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த
(இறப்புக்கு பிந்தைய மறுமை) நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக்
கொண்டு அவர்களுடைய
நெற்றிகளிலும்
விலாப்புறங்களிலும்,
முதுகுகளிலும் சூடு
போடப்படும் - (இன்னும்) ''இதுதான்
நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள்
சேமித்து வைத்ததை
சுவைத்துப்பாருங்கள்" (என்றும் கூறப்படும்). (அல்குர்ஆன் 9:34 &35)
.
 தர்மம்செய்வது ஏதோ செல்வந்தர்களுக்கு
மட்டும் உரியதுபோல ஒரு பொதுவான புரிதல் நம்மிடையே
உள்ளது. ஆனால் அது
அனைவருக்கும் உரியது!

"தர்மம் செய்வது எல்லா
முஸ்லிம்களின் மீதும்
கடமையாகும்" என்று
 நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறியபோது மக்கள்,
"ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை
என்றால் என்ன செய்வது?" என்று
கேட்டார்கள். அதற்கு நபி صلى الله عليه وسلم
அவர்கள், "அவர் தம் இரு கைகளால்
(அவர்) உழைத்து தாமும்
பயனடைவார். தர்மம் செய்(துபிறரையும் பயனடைய
செய்)வார்!" என்று கூறினார்கள்.
அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க
உடலில்) தெம்பு
இல்லையென்றால் அல்லது அவர்
அதைச்செய்யா(செய்ய
இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர். நபி صلى الله عليه وسلم
 அவர்கள் "பாதிக்கப்பட்ட
தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள். மக்கள்,
" (இதையும்) அவர் செய்ய (இயல)
வில்லையென்றால்?" என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم  அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள்
செய்யும்படி பிறரை ஏவட்டும்!"
என்றார்கள். "இதையும் அவர்
செய்யாவிட்டால்?" என்று மீண்டும்
கேட்டதற்கு, நபி صلى الله عليه وسلم  அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு
செய்யாமல் இருக்கட்டும். அதுவே
அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்
அரீ رضي الله عنه , புஹாரி -1445 & 6022.
என்னவொரு விரிவான, அழகிய,
புதிய, நல்லதொரு விளக்கத்தை
இஸ்லாம் தர்மத்திற்கு
அளிக்கின்றது..!
உடல் ஊனங்களோ, பலவீனங்களோ,
முதுமையோ, வறுமையோ
ஒருவர் தர்மம் செய்து நன்மைகள்
பெற தடையாக நிற்காது என்றும்,
நல்லதைச்செய்ய தன்னால்
இயலவில்லை என்றாலும், பிறரை
அதற்காக ஏவுதலும்
உபதேசித்தலும் கூட தர்மத்தின்
நன்மையை பெற்றுத்தர வல்லவை
எனும் உன்னதமான நல்வழியை
இஸ்லாம் சமூகத்திற்குக்
கற்றுத்தருகிறது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
ஒருவருக்கு எதுவுமே
இல்லையென்றாலும், தன் சொல்லாலும் செயலாலும்,
உள்ளத்தாலும் பிறருக்கு தீங்குகள்
ஏற்படுத்தாமல் விலகி இருப்பதும்
கூட தர்மம் ஆகும் என்று இஸ்லாம்
உபதேசிக்கிறது.
தர்மம் என்பது, 'பணத்தையும்,
பொருளையும் கொடுத்து உதவுவது
 மட்டுமே!' என்று
விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய
கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ
1425 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித
 சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட
 இறுதி இறைத்தூதர்
மூலம் இறைவனால் மிகவும் அழகான
 முறையில் தர்மத்தின்
விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபிமொழி மூலம்,
சில்லறைகளை எடுத்து
வறியவருக்கு இறைத்து
விடுவதுதான் தர்மம் என்று பலர்
கருதுவது எவ்வளவு தவறான
கண்ணோட்டம் என்பதை உணர்த்தி,
மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து
 வந்த தர்மம் குறித்த
தவறான புரிதல்கள் இறைவனால்
அழகாக அகற்றப்படுகின்றன.

"தர்மம் செய்வது
பொருளாதாரத்தின் மூலம்
செல்வந்தர்களாக இருப்பவர்கள்
மட்டுமே செய்யும் காரியம் அல்ல"
என்பதை இந்நபிமொழி மூலம் தெளிவாக அறியலாம்.
 மேலும்...
“பேரீத்தம் பழத்தின் சிறு
துண்டையேனும் (தர்மம் செய்வதை)
 கொண்டாவது நரக
நெருப்பில் இருந்து (உங்களை)
பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:அதீ இப்னு ஹாத்திம் رضي الله عنه , புஹாரி 1417

 எல்லாம் வல்ல
இப்பிரபஞ்சத்திற்கான ஏக
இறைவனாகிய அல்லாஹ் நமக்கு
அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள்
புரிய எந்நேரமும் அயராமல்
பிராத்திப்போமாக. நமக்கு
கிடைத்த செல்வங்களின் மூலம்
தர்மம் செய்து ஈருலகிலும் நாம்
வெற்றி பெற்று மற்றவர்களையும்
வெற்றிபெறச்செய்ய ஒரு கருவியாக
 இருப்போமாக..! ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு.....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

No comments:

Post a Comment