Thursday, 1 June 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 13📓

*🎯தடுக்கப்பட்ட மரம்*
*📖அல்குர்ஆன்

*وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ*

*"ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்'' (என்றும் கூறினான்)*

*திருக்குர்ஆன்  7:19*

*🔘"இந்த மரத்தை நெருங்காதீர்கள்"* என்று *திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120* ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

🔘 ஆனால் திருக்குர்ஆனிலும், நபி மொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென்பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை.

🔘 எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம் (அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதும் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

 🔘திருக்குர்ஆனிலும், நபிமொழியிலும் கூறப்படாததைக் கூறுவோர் இறைவன் பெயரில் இட்டுக் கட்டிய குற்றத்தைச் செய்தவர்களாவர்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 01-06-2017

No comments:

Post a Comment