Wednesday, 24 May 2017

மாவீரர் அல்ஹாஜ் ஷஹீத் பழனி பாபா

*மாவீரர் அல்ஹாஜ் ஷஹீத் பழனி பாபா*

இஸ்லாமிய மக்களுக்கும் ,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்
பிற்ப்படுமத்தப்பட்ட மக்களுக்கும்
இறைவனின் பரிசாக கிடைத்த
மா வீரர் ஷஹீத் போராளி

19 வயதில் ஆரம்பித்து…
வீரமரணம் அடையும் வரை…

தன் வாழ்க்கை,
இளமை,
சொத்துக்கள்,
உறவுகள்,
உறக்கங்கள்…

இறுதியில்….
தன் இன்னுயிரையும் தந்து

இங்குள்ள…
முஸ்லிம் மக்களுக்காகவும்
ஏனைய தாழ்த்தப்பட்ட
பிற்ப்படுத்தப்பட்ட நம்
உறவுகளுக்காகவும்….

தன்….
அனைத்தையும் அர்பணித்து
அதற்கான கூலியை….

நான் மறுமையில்
அல்லாஹ்விடத்தில்
பெற்றுக்கொள்வேன்….என்று
மேடை தோறும் முழங்கிய…
அஞ்சா நெஞ்சம் கொண்ட
மாவீரர்…..

136 வழக்குகள்
அதில் 4 தேசியபாதுகாப்புசட்டம்
1 தடா சட்டம்…
126 சிறைகள்…
அனைத்தும் நமக்காக..
நம் உரிமைகள் பாதுகாக்கப்பட,

பார்ப்பன…
அத்துமீறல்களுக்கு எதிராக,

காலம்காலமாக
ஒதுக்கிவைத்த மக்களுக்காக…!

ஆயினும்….
ஒரே ஒரு வழக்கில் கூட…
குற்றவாளி என…

இந்தியாவின்
எந்த நீதிமன்றத்தாளும்
நிரூபிக்க முடியாத….

சட்டத்தையும் சிறைபிடித்த…
ஷஹீத் சிறப்புக்குரியவர்.

இஸ்லாம்,
கிறிஸ்தவம்,
இந்துமதம்,
புத்தமதம்,
ஜெய்னமதம்,
சீக்கியம் போன்ற மதங்களிலும்,
அதன் வேதங்களிலும்….
நன்கு புலமை பெற்றவர்.

இந்திய தேசத்தின்…
அப்போதைய பிரதமர்
இந்திராகாந்தியை…

முன்னனுமதி வாங்காமல்
சந்திக்கும் செல்வாக்கு மிக்கவர்..

ராஜீவ்காந்தியின் திருமணத்தில்
சாட்சி கையெழுத்திட்டவர்..

அம்பேத்கரின் புத்தகத்திற்கு
படம் வரைந்து கொடுத்தவர்,

எம்.ஜீ.ஆர்,
கருணாநிதி,
ஜானகி,
வீரமணி,இன்னும்….
மூத்த அரசியல்வாதிகளின்
நாணயமான நண்பர்..

பசும்பொன்
முத்துராமலிங்கதேவரின்….
அபிமான நண்பர்,

பாட்டாளி மக்கள் கட்சி
என்ற ஒன்று இவரின் மூலமே
மதிக்கப்பெற்றது.

புருனே நாட்டு அதிபரின்
நெருங்கிய நண்பர்,

சவுதி அரேபியா அரசு….
தானாக முன்வந்து….
தங்கள் நாட்டு குடிமகன் உரிமை
கொடுக்கும் பண்பானவர்,
இன்னும் பல…..

சிங்கப்பூர்
மலேஷியா
புருனே
இந்தோனேசியா,
இலங்கை,
ஈராக்,
துபாய்,
சவுதிஅரேபியா,
பாலஸ்தீன்
அமெரிக்கா, மற்றும்…
ஜரோப்பிய நாடுகளுக்கும்
அன்றைய காலகட்டத்திலேயே

பயணத்தில்….
தன் மார்க்க தேவைகளை
தெளிந்து கொண்டவர்.

முக்குல முரசு,
அல் முஜாஹித்,
புனிதப்போராளி….போன்ற
வார இதழின் நிறுவன ஆசிரியர்.

இவரின்….
புத்தகங்களும் ,
பேச்சுகளும்
அனல் தெறிக்கும்
புரட்சி கருத்துக்கள் நிரம்பியது.

இவரின்…
பைபிள் மற்றும் கிறிஸ்தவமதம்
பற்றிய ஆங்கில புத்தகம்…

இவருக்கிருந்த…
ஆங்கில புலமையை…
நிரூபிக்கும் சான்று.

1980 காலகட்டத்திலேயே
அமெரிக்கா வரை சென்று

அங்குள்ள….
பைபிள் வேதத்தில் கரைகண்ட
கிறிஸ்தவ பாதிரிமார்களுடன்

நேருக்கு நேர் தனி ஒரு மனிதராக

தனி ஒரு தமிழனாக…
விவாதம் மேற்கொண்டு

இறுதியில்….
அவ்விவாதத்தில் வென்று…
62 கிறிஸ்தவ பாதிரிமார்களை
முஸ்லிமாக்கியவர்.
வீடியோ ஆதாரங்களுடன்.

இந்துமத வேதங்களிலும்…
நல்ல தேர்ச்சி பேற்றவர்.

அவரின்…
“இந்து மதமும் இஸ்லாமும்”
என்ற தலைப்பில்…
அவரின் புத்தகமும் பேச்சும்
சாட்சி கூறும்.

இந்திய ஜனாதிபதி மீது…
வழக்கு தொடர்ந்த….

ஒரே துணிச்சலான இந்தியர்,

அதிலும்…. டெல்லி
உச்ச நீதிமன்றம் வரை சென்று
வாதாடி வழக்கில் வென்று…
அனைவரையும்…
புருவத்தை உயர்த்தி பார்க்க
வைத்தவர்.

இஸ்லாமியர்களின்
ஒற்றுமைக்காகவும்,

தாழ்த்தப்பட்ட நம் உறவுகளின்
ஒருங்கிணைப்பாளராகவும்…

எந்தவித சுயநலமும் இல்லாமல்

தூயமனதுடன் போராடிய
அல்லாஹ்விற்கு மட்டுமே பயந்த
நேர்மையான போராளி.

13206…
அனல் தெறிக்கும் பேச்சுகள்,

அதிகாரவர்க்கத்தின்
அடக்குமுறைகளை
அச்சமின்றி எதிர்த்த துணிச்சல்,

எந்த இடத்திலும்….
மார்க்கத்தை விட்டுத்தராத ஈமான்,

ரஸூல் ஸல் அவர்கள்மீது
அளவுகடந்த நேசம்,

தர்கா வழிபாடு,
அணாச்சாரங்கள்,
பித்அத்கள்,
மூட பழக்கங்களை
கடுமையாக சாடியவர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட
ஹஜ் செய்தவர்,

பத்துக்கும் மேற்பட்ட
உம்ரா நிறைவேற்றியவர்.

டெல்லி,
ஈராக்,
சவுதிஅரேபியா
பல்கலைக்கழகங்களில்பயின்றவர்.

“எம் ஏ பி எல் “….மற்றும்…
மூன்று “பி ஹெச் டி ”
பட்டங்கள் பெற்றவர்.

இந்திய
அரசியல் அமைப்புச்சட்டத்தின்
ஒரு Authority மனிதர்.

தன் வாழ்வில் கண்ட
ஏழைகளுக்கும்,
வசதியில்லாதவர்களுக்கும்
தன்னால் இயன்ற உதவிகளை
மறைத்து செய்து வந்தவர்.

காவல்துறையினரின்
அராஜகத்தால்….

பல முஸ்லீம் இளைஞர்கள்
சிறை சென்றபோது…

அவர்களின் குடும்பங்களை
கணக்கெடுத்து மாதாமாதம்
குடும்ப செலவிற்கு உதவிய
இரக்க குணம் அருளபெற்றவர்.

ஒரு முறை….
சகோதரர் பி.ஜே வை
ஜிஹாத் கமிட்டியை சேர்ந்தவர்கள்
சிலர் தாக்கிவிட்டார்கள்….என
கேள்விப்பட்டு அவர்களை மிக
கடுமையாக எதிர்த்தவர்.

ஆர்.ஆர்.எஸ்,
இந்து முன்னணி போன்ற

நாட்டுக்கு கேடான
பயங்கரவாத இயக்கங்களை
கதிகலங்க வைத்ததுடன்….

அவர்களை போல
சூழ்ச்சிகள் செய்யாமல்
மேடைதோறும் பகிரங்கமாக
களமாடியர்.

No comments:

Post a Comment